என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

“கோக்” கும் பன்றியின் இறைச்சியும்.

>> Tuesday, November 11, 2008



إِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنزِيرِ وَمَا أُهِلَّ بِهِ لِغَيْرِ اللّهِ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَلاَ عَادٍ فَلا إِثْمَ عَلَيْهِ إِنَّ اللّهَ غَفُورٌ رَّحِيمٌ 173


தாமாக செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்கு தடை செய்துள்ளான் வரம்பு மீறாமலும், வழியச் செல்லாமலும், நிர்பந்திக்கப்படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன், நிகரற்ற அன்புடையவன் திருக்குர்ஆன்.2:173




اَلسَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكةُ
உலக பொதுமறை திருக்குர்ஆனில் அல்லாஹ் நன்கு அறிந்தவவன், ஞானம் மிக்கவன் என்ற சொல்லை அதிக இடங்களில் அல்லாஹ் இடம் பெறச் செய்துள்ளான். ஒவ்வொரு வசனத்தின் முடிவிலும் மேற்கானும் சொல்லுடன் நிறைவு பெற்று அடுத்த வசனத்திற்குச் செல்வதை காணலாம்.



...அல்லாஹ் அறிந்தவன் ஞானம் மிக்கவன்.4:26

அல்லாஹ் ஒவ்வொருப் பொருளையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.4:32

...அல்லாஹ் அறிந்தவனாக, நன்கு அறிந்தவனாகவும் இருக்கின்றான்.4:35 ...அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானம் மிக்கவனாகவும் இருக்கிறான்.4:92

எல்லாம் அறிந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மனித இனம் உண்பதற்கு, உறங்குவதற்கு, மன அமைதி கொள்வதற்கு இன்னும் பிற இயற்கை தேவைகள் மற்றும் உபாதைகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் புவியில் ஏற்படுத்திக் கொடுத்தான்.

அதில் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது எது ? தவிர்க்க வேண்டியது எது ?
மன அமைதிக்கு சிறந்தது எது ? தவிர்க்க வேண்டியது எது ?

என்றத் தகவலையும் புள்ளி விபரத்துடன் தனது திருமறை மூலம் எச்சரிக்கை விடுத்தான்.
இன்னும் அதில் சிலவற்றை பகிரங்க தடை செய்து உத்தரவிட்டான். அல்லாஹ் ஒன்றைக் கூறி தடைவிதித்ததில் சுகம் கிடைப்பதாகவும், ஆரோக்கியம் இருப்பதாகவும் மனித வர்க்கத்திற்கு ஷைத்தான் ஆசையைத் தூண்டி விடுவான். இதற்கு ஆதம்(அலை) அவர்களும், ஹவ்வா (அலை) அவர்களும் உதாரணமாகும்.

எல்லாம் அறிந்த அல்லாஹ் ரப்புல்ஆலமீன் மருத்துவம் உலகுக்கு வராத காலகட்டத்தில் மனிதர்களுக்கு தடை செய்தவற்றில் உள்ள தீமையை ( கொடிய நோய்களை ) இன்று மனித சமுதாயம் கண்டறிந்து அவற்றை உலகுக்கு அறிவித்தள்ளது.

உதாரணத்திழற்கு விபச்சாரத்தை எடுத்துக் கொள்ளலாம்.

விபச்சாரத்தை நெருங்காதீர்கள் அதில் தீமை இருக்கிறது என்றுக்கூறி மனித சமுதாயத்திற்கு தடைவிதித்தான் ஆனாலும் அல்லாஹ்வுடைய தடை உத்தரவை ஷைத்தான மீறச்செய்தான் அதனால் மனிதர்கள் ஆண்,பெண் பாகுபாடின்றி ஷைத்தானுடைய தூண்டுதலினால் மனோ இச்சைக்கு உட்பட்டு விபச்சாரத்தில் வீழ்ந்து அதை நாகரீகமாகவும், பொழுதுப் போக்காகவும் மாற்றிக் கொண்டார்கள்.

அல்லாஹ்வுடைய தடை உத்தரவை மீறி விபச்சாரத்தை நாகரீகமாகவும், பொழுதுப் போக்காகவும் மாற்றிக் கொண்டவர்களுடைய நாடுகளில் எயிட்ஸ் எனும் தீராத, தீர்க்க முடியாத நோய் பரவியது.

விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்! அது வெட்கக்கேடானதாகும். தீயவழியாகவும் இருக்கின்றது. திருக்குர்ஆன் 17:32.

விண்ணில் கால் பதித்து சாதனைப் படைத்தவர்களால் மண்ணில் உருவான எயிட்ஸூக்கு மருந்து கண்டுப் பிடிக்க முடியாமல் விழிப்பிதுங்குகிறார்கள். அறிந்தவனும், ஞானம் மிக்கவனுமாகிய அல்லாஹ் விபச்சாரத்தை நெருங்காதீர்கள் அது தீயவழியாக இருக்கிறது என்றுக் கூறியதை பொடுபோக்காக எடுத்துக் கொண்ட சமுதாயத்தவர்களால் எயிட்ஸ் எனும் நோயை விலக்க சக்தியற்றவர்களாக இருப்பதைக் காண்கிறோம்.

நோய் கிருமிகளை உருவாக்கும் கால்நடைகளின் மாமிசத்தில் உள்ள தீமைகள்.

மனிதர்கள் உண்டு புசித்து உடலில் ஆரோக்கியம் பெறுவதற்காக கால்நடைகளைப் படைத்து அதனுடைய பாலை அருந்துவதற்கும், அதனுடைய இறைச்சியை உணவாக உட்கொள்வதற்கும் அனுமதி அளித்தான்.

கால்நடைகளில் உங்களுக்கு படிப்பினை உள்ளது. அதன் வயிற்றில் உள்ளதிலிருந்து உங்களுக்கு பருகத் தருகிறோம் அவற்றில் உங்களுக்கு ஏராளமான பயன்களும் உள்ளன அவற்றை உண்ணுகின்றீர்கள். திருக்குர்ஆன் 23:21.

அதே கால்நடைகளில் மனிதனுடைய உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கிழைக்கக் கூடிய சில கால்நடைகளை அறிந்தவனும், ஞானம் மிக்கவனுமாகிய அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தடைசெய்தான் அதில் முக்கியமாக பன்றியின் இறைச்சியைக் கூறி தடை செய்தான் பார்க்க

திருமறை வசனங்கள். 4:3, 5:60, 6:145, 16:115 மனித சமுதாயத்திற்காக அல்லாஹ் தடைசெய்த ஒன்றில் நிச்சயமாக தீங்கு இருக்கவேச் செய்யும்.

அல்லாஹ்வுடைய கட்டளைக்கு எதிராக மக்களை தூண்டுவதில் தீவிரமாக செயல்படும் ஷைத்தான் இதில் முஸ்லிம் சமுதாயத்தில் தோல்வியுறவே முஸ்லீமல்லாத சமுதாயத்தினரை (அதிகமாக கிருஸ்தவ சமுதாயம்) தூண்டி விட்டான்.

இஸ்லாமிய எழுச்சியால் மற்ற எந்த மத்ததை விடவும் பெரும் வீழ்ச்சியை தழுவியது கிருஸ்தவ மதம் என்பதால் அதிகபட்சம் இஸ்லாமிய சட்டங்களுக்கு மாற்றமாக நடப்பதை அன்றிலிருந்து இன்றுவரை அவர்கள் கொள்கை(?)யாகக் கொண்டுள்ளனர். அவர்களது கொள்கை(?)யின் அடிப்படையில் அல்லாஹ் தடுத்த விபச்சாரத்தை வெட்க உணர்வுகளை உதிர்த்து விட்டு பகிரங்கமாகச் செய்து அதைப்பார்த்து பிறரும் செய்வதற்காக உலகு முழுவதும் பல்கி பரவச்செய்வதற்கு ஊடகத் துறையை பயன்படுத்தினர்.

அல்லாஹ் தடுத்த பன்றியின் மாமிசத்தை உண்டு புசித்து அதன் மூலம் மூலைக் காய்ச்சல் போன்ற கொடிய நோய்களை உலகுக்குப் பரவச் செய்ததிலும் பெரும் பங்கா(?)ற்றி சாதனை படைத்தவர்கள்.

அவர்கள் கடவுள் என்றும் நாம் இறைத்தூதர் என்றும் கூறுகின்ற ஈஸா(அலை) அவர்கள் உலகுக்கு மீண்டும் வரும் பொழுது பல சீர்திருத்தங்களை செய்வார்கள் அதில் முக்கியமாக பன்றியை கொல்வார்கள் என்று சத்திய தூதர்(ஸல்) அவர்கள் கீழ்கானுமாறு கூறினார்கள் மர்யமின் குமாரர்(ஈஸா) அவர்கள் நீதி செலுத்தும் நடுவராக உங்களிடையே இறங்குவார்கள். அவர்கள் வந்தவுடன் சிலுவையை உடைப்பார்கள், பன்றியைக் கொல்வார்கள், 'ஜிஸ்யா' வரியை(ஏற்க) மறுப்பார்கள். எவரும் பெற முன்வராத அளவுக்கு செல்வம் பெருகி வழியும். இவையெல்லாம் நடக்காதவரை உலக முடிவு (மறுமை) நாள் வராது. என்று இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள். ஆதாரநூல் புகாரி 2476.


அறிந்தவனும், ஞானம் மிக்கவனுமாகிய அல்லாஹ் ரப்புல் ஆலமீனுடைய கட்டளையை மீறி மேல்படி மாமிசத்தை உண்ணுகின்ற சமுதாயத்து மக்களைக் கொண்டே அதனுடைய தீமைகளை கண்டுப் பிடித்து உலகுக்கு அறிவிக்கச் செய்தான்.

1. மேல்படி கால்நடையின் மாமிசத்தில் புழுக்கள் உற்பத்தியாவதை அவர்களே கண்டுப் பிடித்து முதலில் அறிவித்தனர்.

மேல்படி புழுக்களைக் கொண்ட மாமிசம் மனித உடலுக்குள் சென்றதும் மாமிசம் முழுவதும் இரப்பைக்குள் சென்று செரிமானம் அடைந்து விடுகிறது ஆனால் அதனுள் இருக்கும் புழுக்கள் மட்டும் சாகாமல் தங்கி விடுகின்றது. அவ்வாறு தங்கிக் கொண்ட அந்த புழுக்கள் எண்ணற்ற நோய் கிருமிகளை உருவாக்குகிறது அதில் முக்கியமாக மூலை காய்ச்சலை ஏற்படுத்தி மரணத்தை தழுவச் செய்கிறது.

அதற்கடுத்து

1. மேல்படி மாமிசத்தை ஒருப் பாத்திரத்திலிட்டு நன்றாக கொதிக்க விட்டு ஆய்வு செய்த வகையில் மொத்த மாமிசமும் கரைந்து பஸ்பமாகிய பின் கொதித்துக் கொண்டிருக்கும் வெந்நீரில் மாமிசத்தில் இருக்கக்கூடிய புழுக்கள் மட்டும் வீரியமாக நெளிந்து கொண்டிருந்ததை இரண்டாவது கட்டமாக அவர்களே உலகுக்கு அறிவித்தார்கள்.

இன்றும் நமது நாடுகளில் பன்றிகள் வளர்க்கும் இடங்களைச் சுற்றியுள்ள மக்களை மூலை காய்ச்சல் தாக்கி அதிகமான பேர் இறப்பதை அவ்வப்பொழுது ஊடகங்கள் வாயிலாக அறிந்து வருகின்றோம். மூலைகாய்ச்சல் அதிகரிக்கும் பொழுது பன்றிகளை ஒழிக்க ஊராட்சி துறை உத்தரவு பிறப்பிக்கும், இன்றும் இந்தியாவில் ஊராட்சி துறை துப்புரவுத் தொழிலாளர்களுக்கு ஊரின் ஒதுங்குப் புறங்களில் வீடுகளை கட்டிக் கொடுப்பதற்கு முக்கிய காணரம் அவர்கள் பன்றிகளை வளர்ப்பதுவேயாகும்.

ஆசிய நாடுகளில் வளரும் பன்றிகள் மனித கழிவுகளை உண்பதாலும் சேரு, சகதிகளில் உருண்டுப் புரளுவதாலுமே மூலைகாய்ச்சல் போன்ற நோய் கிருமிகளைப் பரப்புகிறது. ஆனால் மேலை நாடுகளில் பன்றிகளுக்கு தனி தொழுவம் அமைக்கப்பட்டு உயர்தர தீவணங்களிட்டு வளர்க்கப்படுவதால் அதனுடைய மாமிசத்தை உண்டு வருகின்றோம் என்றக் கருத்தை பன்றியின் மாமிசத்தை உண்ணும் சமுதாயத்தவர்கள் கூறுகிறார்கள்.

மேலை நாடுகளில் அவ்வாறு தனித்தொழுவம் அமைக்கப்பட்டு உயர்தர தீவணங்களிட்டு வளர்க்கப்படுவதை நாமும் ஊடகங்கள் வாயிலாக கண்டு வருகிறோம் மறுக்கவில்லை அவ்வாறு வளர்க்கப்படுவதால் மட்டும் அதனுடைய இறைச்சியில் வளரும் புழுக்களை ஒழித்து ப்யூர் மட்டனாக மாற்ற முடிந்ததா ? முடியவில்லை ! முடியாது !

என்ன தான் கழுவி குளிப்பாட்டினாலும் காகம் கொக்காகாது உயிரினங்களின் மீது இறைவனுடைய இயற்கை அமைப்பை இதுவரை எவர் மாற்றி அமைத்து சாதனைப படைத்தார்கள் ? கூற முடியுமா ?

2. சமீபத்தில் மேல்படி மாமிசத்தில் இரண்டு பீஸ்களை ஒருத் தட்டிலிட்டு அதன் மேல் 'கோக்' பாணத்தை ஊற்றியதும் மாமிசத்தின் உள்ளே இருந்த புழுக்கள் நெளிந்து மேல் நோக்கி வருவதை வீடியோ மூலம் பதிவு செய்து மூன்றாம் கட்டமாக அதை உண்பவர்களே உலகுக்கு அறிவித்தள்ளார்கள்.

அதன் கிளிப்பை இத்துடன் இணைத்துள்ளோம்.

மனிதர்களின் கைகள் செய்தவற்றின் காரணமாக அவர்கள் செய்தவற்றில் சிலவற்றை அவர்களுக்கு சுவையாகச் செய்வதற்காகவும், அவர்கள் திருந்துவதற்காகவும் கடலிலும், தரையிலும் சீரழிவு மேலோங்கி விட்டது. திருக்குர்ஆன் 30:41.


மேற்கானும் வீடியோ கிளிப்பின் மூலம் மனித சமுதாயத்திற்கு இரண்டு படிப்பினைகள் இருப்பதை கவனிக்கலாம்.

· பன்றியின் மாமிசத்திற்குள் இருக்கும் உயிருக்கே உலை வைக்கும் புழுக்கள்.
· நாம் தினந்தோறும் பருகும் 'கோக்' வகை பாணங்களில் இருக்கும் அமிலத்தன்மையின் வீரியம்.

மேல்படி மாமிசத்தின் மீது ஊற்றும் கோக் பாணத்தின் அமிலத் தன்மையில் எந்தளவுக்கு வீரியம் இருந்தால் உள்ளுக்குள் இருக்கும் புழுவால் நிலை கொள்ள முடியாமல் மேல் நோக்கி வந்திருக்கும் ?

அந்தளவுக்கு அதிகப்பவர் உள்ள அமிலம் கலந்த பெப்சி, கோக் போன்ற மனித வர்க்கத்தை அழித்து பணம் பண்ணும் யூத தயாரிப்புகள் உடல் நலத்திற்கு பெருங்கேடு விளைவிக்கக் கூடியது என்பதை அதனுடைய அமிலத் தன்மைகளின் அளவைக் கண்டு பிடித்து ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதால் இந்தியாவில் தடை செய்யபபடவிருந்ததை மேல்படி யூத கம்பெனிகள் அப்போதைய அமைச்சர் சுஷ்மிதா சுவராஜை முறையாக கவனித்து தடை உத்தரவை வாபஸ் பெறச் செய்தார்கள்.

மேல்படி கோக் தொழிற்சாலையை கேரளாவில் அமைக்கவிருந்ததை கேரள மக்கள் முணைப்புடன் எதிர்த்து ஓட ஓட விரட்டி அத்தார்கள் என்பதை ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம்.

இஸ்ரேல், அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்காத வகையில் கோக் பாணங்களில் அமிலத்தன் அளவைக் குறைத்து தயாரிக்ப்படுவதையும் ஊடகங்களின் வாயிலாக அறிந்தோம்.

இதில் கொடுமை என்னவென்றால் இஸ்ரேல், அமெரிக்கா, ஐரோப்பாவை விட அரபுநாடுகளில் கோக் வகை பாணங்கள் விற்பனையில் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது என்றால் மிகையாகாது.

அவர்கள் செய்து வந்த தீய செயல்களை விட்டும் ஒருவரை ஒருவர் தடுக்காதிருந்தனர் அவர்கள் செய்தது மிகவும் கெட்டது. திருக்குர்ஆன் 5:79


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104

இதன் தொடர்ச்சியை அல்லாஹ் நாடினால் எழுதுவோம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்


மேலும் படிக்க...Read more...

பயங்கரவாதத்தின் நிறம் காவி! - ஞாநி

பயங்கரவாதத்தின் நிறம் காவி! - ஞாநி

இந்தத் தலைப்பில் இருக்கும் ஆச்சரியக் குறி உண்மையில் தேவையற்றது. காவி பயங்கரவாதம் அல்லது ஹிந்து பயங்கரவாதம் என்பது ஒன்றும் புதிதானதோ ஆச்சரியகரமானதோ அல்ல.
.
ஆனால் பயங்கரவாதத்தின் நிறம் இஸ்லாமியர்கள் பயன்படுத்தும் பச்சை அல்லது இடதுசாரிகளின் சிவப்பு என்று மட்டுமே நம் மனங்களில் பத்திரிகைகளும் ஊடகங்களும் நீண்ட காலமாகப் பதியவைத்து வந்திருக்கின்றன. காவியையும் பயங்கரவாதத்தையும் தொடர்புபடுத்தியதே இல்லை.

காவி, சிவப்பு, பச்சை எல்லாமே நல்ல நிறங்கள். மனிதர்களின் தவறுக்காக நாம் நிறங்களை இழிவுபடுத்துகிறோம்.

இந்த வாரம்தான் சில ஆங்கில செய்தி சேனல்கள் பயங்கரவாதத்தின் நிறம் காவியாக மாறுகிறது என்றெல்லாம் தலைப்பிட்டு செய்தித் தொகுப்புகள் வழங்கியிருக்கின்றன.

காரணம் மாலேகாவ்ன். மகாராஷ்டிர மாநிலத்தில் நாசிக் மாவட்டத்தில் இருக்கும் இந்தச் சிறுநகர், மதக் கலவரங்களுக்கும் மோதல்களுக்கும் குண்டு வெடிப்புகளுக்கும் தொடர்ந்து பெயர் வாங்கிய இடம். 2006ல் இஸ்லாமியர் வாழும் பகுதிகளிலும் மசூதி, கல்லறைப் பகுதிகளிலும் சைக்கிள்களில் வைக்கப்பட்ட குண்டுகள் வெடித்ததில் 37 பேர் இறந்தார்கள். நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர். இந்த கொடூரத்துக்குக் காரணமானவர்கள் என்று சொல்லி இஸ்லாமிய மாணவர் அமைப்பான சிமி உறுப்பினர்களை காவல்துறை கைது செய்தது.

இப்போது ஒரு மாதம் முன்பு செப்டம்பர் 29 அன்று மோட்டார் சைக்கிளில் வைத்த குண்டு வெடிப்பில் ஆறு பேர் இறந்தனர். சுமார் 30 பேருக்குக் காயம் ஏற்பட்டது.

இந்தக் கொடூரத்தைச் செய்தவர்கள் ஹிந்து பயங்கரவாதிகள் என்று இப்போது காவல்துறை அறிவித்திருக்கிறது. கைதாகியிருக்கும் நால்வரில் ஒருவர் பெண் `சாது'!

சாத்வி பூர்ண சேத்னானந்த் கிரி (வயது 38). இரு வருடம் முன்பு சந்நியாசினி ஆனவர். அதற்கு முன் ப்ரத்ஞா சிங்காக இருந்தபோது விஸ்வ ஹிந்து பரீக்ஷத் அமைப்பில் பொறுப்பில் இருந்தார். அதற்கு முன்னால் 18 வருட காலம் பி.ஜே.பி.யின் மாணவர் பிரிவான அகில பாரத வித்யார்த்தி பரீக்ஷத்தில் உறுப்பினராக இருந்தவர். மீதி நான்கு கைதிகளும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர். குண்டு வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் சாத்விக்குச் சொந்தமானது.

மாலேகாவ்னில் குண்டு வெடித்த அதே நேரத்தில் குஜராத்தில் மொடாசா என்ற ஊரிலும் மோட்டார் சைக்கிள் குண்டு வெடித்தது. அங்கே 16 வயதுச் சிறுவன் இறந்தான். பத்துப் பேர் காயமடைந்தனர். இந்தக் கொடூரத்திலும் சாத்வி கோஷ்டிதான் தொடர்புடையது என்று காவல்துறை கருதுகிறது. இரு நிகழ்ச்சிகளிலும் ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து பயன்பட்டிருக்கிறது.

விஸ்வ ஹிந்து பரீஷத், பஜ்ரங் தளம் போன்ற பல்வேறு ஆர்.எஸ்.எஸ். அவதாரங்களையெல்லாம் மீடியா அதிகபட்சமாக மதவாத அமைப்புகள் என்று சொல்லுமே தவிர, பயங்கரவாத அமைப்புகளாக வர்ணித்ததில்லை. வெடிகுண்டு, ஆர்.டி.எக்ஸ். கொடூரங்கள் செய்பவர்கள் முஸ்லிம் பயங்கரவாதிகள்தான் என்ற கருத்தையே மீடியா பரப்பி வந்திருக்கிறது.

ஆனால் ஆயுதப் பயிற்சி முதல் வெடிகுண்டுத் தயாரிப்பு வரை பல சம்பவங்களில் ஆர்.எஸ்.எஸ். அவதாரங்கள் ஈடுபட்ட செய்திகள் வெளிவந்தபோதும் அவை அடக்கி வாசிக்கப்பட்டன. 2006-ல் மகாராஷ்டிரத்தில் நாந்தெத் நகரில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகரும் ஓய்வு பெற்ற அரசு இன்ஜினீயருமான லக்ஷ்மண் ராஜ்கொண்டவார் வீட்டில் குண்டு வெடித்ததில் அவர் மகனும், இன்னொரு ஆர்.எஸ்.எஸ் ஊழியரும் இறந்தார்கள். நான்கு பேருக்குக் காயம் ஏற்பட்டது. காயமடைந்த ஒருவர் தப்பி ஓடி பின்னர் கைதானார். எல்லாரும் வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள்.

ஆகஸ்ட் 2008-ல் கான்பூரில் குண்டு தயாரித்துக் கொண்டிருக்கும்போது ராஜீவ் மிஸ்ரா, பூபேந்திர சோப்ரா என்ற இரு ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள் வெடிவிபத்தில் இறந்தார்கள். சுமார் நான்கைந்து வருடங்களாகவே மகாராஷ்டிராவில் இஸ்லாமியர்களின் மசூதிகளுக்கருகே குண்டுகள் வெடித்த பல நிகழ்ச்சிகளில், ஆர்.எஸ்.எஸ்.சின் வெவ்வேறு அவதார புருஷர்கள் சம்பந்தப்பட்டிருப்பது காவல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டது.

தமிழ்நாட்டிலேயே தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டு வெடிப்பு நிகழ்ச்சியில், குண்டு வைத்ததே ஆர்.எஸ்.எஸ்.சின் தமிழக அவதாரமான இந்து முன்னணிதான் என்பது அம்பலமாகிவிட்டது. ரவி பாண்டியன் என்ற இந்து முன்னணிக்காரரும் இன்னும் 7 இந்து முன்னணியினரும் இதில் கைதானார்கள். 2002-ல் ஈரோடு மாவட்டத்தில் சதுமுகை என்ற கிராமத்தில் அம்மன், விநாயகர், முனீஸ்வரன் சிலைகள், கோயில்கள் நாசப்படுத்தப்பட்டன. இதைச் செய்தது பெரியார் திராவிடர் கழகத்தினர் என்று காவல்துறையில் மாவட்ட இந்து முன்னணியினர் அதிகார பூர்வமாகப் புகார் செய்தார்கள். கடைசியில் துப்புத் துலக்கியதில் நாசவேலை செய்ததே இந்து முன்னணியைச் சேர்ந்த செல்வகுமார், மஞ்சுநாதன் என்ற இருவர்தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது போன்ற செய்திகள் சில சமயம் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் வந்தாலும், அவற்றுக்கு தொப்பியும் தாடியும் வைத்த பயங்கரவாதிகள் சம்பந்தமுள்ள நிகழ்ச்சிகளுக்கு சமமான முக்கியத்துவம் தரப்படுவதில்லை.

இஸ்லாமிய சிமி அமைப்பினர் கைதுகள் எல்லா தினசரிகளிலும் 4 காலம், எட்டுக் காலம் தலைப்புகள், முதல் பக்கச் செய்திகள். சாத்வி பூர்ண சேத்னானந்த் கிரி கைது ஒரு தினசரியிலும் முதல் பக்கத்தில் இல்லை. உள்ளேயும் சின்னதாக ஒரு மூலையில். ஹிந்து மத வெறி அமைப்பினர் குஜராத்தில் முஸ்லிம்களையும் ஒரிசாவில் கிறிஸ்துவரையும் கொத்துக் கொத்தாக கொன்றபோதும் சரி, இப்போது ஓரிரு சாமியார்கள் சிக்கும் போதும் சரி இதையெல்லாம் ஹிந்து பயங்கரவாதம் என்று வர்ணிக்கத் தயங்கும் நிலைதான் இருக்கிறது.

தவிர, பயங்கரவாதம் என்பது வெடிகுண்டும் ஆர்.டி.எக்ஸும் துப்பாக்கித் தாக்குதலும் மட்டுமா ? மனித மனங்களுக்குள் துவேஷத்தை வளர்ப்பது, அதை வளர்ப்பதற்காக வன்முறையில்லாமலே எல்லா விஷமங்களையும் செய்வதும் பயங்கரவாதம்தான்.

தன் வீட்டுக்குத் தானே தீ வைத்துக் கொண்டு பங்காளி மீது பழி போடுவது முதல், ஒருவர் கைதானதும் அவர் எங்கள் அமைப்பில் இல்லை எப்போதோ விலகிவிட்டார் என்று சமாதானம் சொல்வது வரை எல்லாமே விஷமமான உத்திகள்தான். காந்தியைக் கொல்வதற்கு முன்பாக கோட்சே ஆர்.எஸ்.எஸ்.சிலிருந்து விலகியதும் இஸ்மாயில் என்று கையில் பச்சை குத்திக் கொன்டதும் ஒன்றும் கருத்து வேறுபாட்டால் விலகவில்லை. அது ஒரு விஷமத்தனமான உத்தி.

மதவெறி பயங்கரவாதம் பல வருடங்களாக இந்தியாவில் இருந்து வருகிறது. மேலை நாடுகளில் மத வெறி என்பது அரசியல் ஆட்சி நிர்வாக அமைப்பிலிருந்து பிரிக்கப்பட்ட பின்னர்தான் அங்கே இன்று காணப்படும் பொருளாதார, வாழ்வியல் மேம்பாடுகள் ஏற்பட்டன.இந்தியாவில் அரசியலுடன் மதத்தைப் பிணைப்பதையே கோட்பாடாகக் கொண்டு இயங்கிய ஹிந்து மகாசபாவின் தொடர்ச்சியாகவே ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி. முதல் முஸ்லிம் லீக், அல் உமா வரை பார்க்க வேண்டும்.

தமிழ்நாட்டில் இந்து முன்னணியும் பிள்ளையார் ஊர்வலங்களும் 90_களில் வருவதற்கு முன்னால் அல் - உமா இல்லை. ஒரு மதத்தில் இயங்கும் மதவெறி அமைப்புதான் இன்னொரு மதத்தின் மதவெறி அமைப்பை போஷித்து வளர்க்கும் சத்துணவு.

இன்று மதவெறியர்களின் பயங்கரவாதத்தின் முகம் மாறி வருகிறது. பாபர் மசூதியை இடிக்கத் திரண்ட கும்பலின் முகங்களைப் பார்த்தாலே தெரியும். படிப்பறிவு இல்லாமல், அடித்தட்டு வாழ்க்கையில் பொருளாதார நலிவுற்ற முகங்கள். இந்த முகங்களுக்கும் இஸ்லாமிய பயங்கரவாதிகளாகக் கைதாகும் முகங்களுக்கும் வேறுபாடுகள் இல்லை. ஒரே வேறுபாடு தொப்பியும் தாடியும்தான். ஏழ்மையும் படிப்பறிவின்மையும் பொதுத் தன்மைகள்.

ஆனால், நாம் எப்போதும் எய்தவர்களை விட்டுவிட்டு அம்புகளையே துரத்திக் கொண்டு இருக்கிறோம். மத வெறி பயங்கரவாதத்தின் அசல் முகம் இந்த அம்புகளல்ல. இரு தரப்பிலும் அடிமட்டத் தொண்டர்களை உணர்ச்சிவசப்படுத்தி நாச வேலைகளுக்கு மூளைச் சலவை செய்து அனுப்பி வைக்கும் முகங்கள், வளமான சொந்த வாழ்க்கை உடையவை. பெரும் பல்கலைக்கழகங்களில் உயர்படிப்புப் படித்து நவீன தொழில்நுட்ப அறிவுடன் இயங்கும் முகங்கள். முகத்தைப் பார்த்து இவர்கள் பயங்கரவாதிகள் என்று சொல்ல முடியாத முகமூடிகள் அணிந்த முகங்கள். வள்ளுவர் இதைத்தான் `மக்களே போல்வர் கயவர்' என்று குறித்திருக்கிறார்.

இன்று இணையதளத்தில் ஒரு வாரம் உலவினால் போதும். இந்த முகங்களைத் தரிசித்துவிடலாம்.

ஹிந்துத்துவா, பெரியாரியம், தமிழ் தேசியம், இஸ்லாமிய சர்வதேசியம், முழுமுச்சான முதலாளித்துவம், அதி தீவிர மார்க்சியம், என்று பல வகைக் கோட்பாடுகளை முன்வைக்கும் குரல்களின் ஊடே கலந்து ஒலிக்கும் பயங்கரவாதக் குரல்களும் உண்டு. எழுதக் கூசும் வசைச் சொற்கள் முதல் எல்லா கேவலமான உத்திகளையும் கருத்துப் பரப்பலுக்காகப் பயன்படுத்தும் குரல்களின் சொந்தக்காரர்களின் முகங்கள் நேர்த்தியானவை. அமைதியானவை. உயர் படிப்பும் தொழில்நுட்ப அறிவும் இணைந்த மூளைகளைச் சுமக்கும் முகங்கள்.

பல பத்திரிகை, ஊடக அலுவலகங்களில் நான் சந்தித்திருக்கும் உயர் பொறுப்பினரில் சிலரின் தனிப் பேச்சுக்களில் மத, சாதி வெறிகள் எப்போதும் இழையோடுகின்றன. அவரவர் சாமர்த்தியத்துக்கு ஏற்ப இது பேச்சில் நாசூக்காகவோ, அல்லது கொச்சையாகவோ வெளிப்படும்.

பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்கள் இவைதான். நம் மனங்கள்தான். மீண்டும் வள்ளுவரைத்தான் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. மனத்துக் கண் மாசிலன் ஆதல்தான் முதல் தேவை. மாசு படிந்த மனங்கள்தான் பயங்கரவாதத்தின் விதைகள். பயங்கரவாதத்துக்கென்று தனி நிறம் ஏதுமில்லை. அது ஒரு பச்சோந்தி. எல்லா நிறங்களிலும் வரும். அது காட்டுவது நிறமே அல்ல; கறை.

இந்தக் கறையை நீக்கக்கூடிய ஒரே சோப்புத்தூள், மதம்&கடவுள் முதலியவற்றை அதிகபட்சம் வீட்டுக்குள்ளே மட்டும் வைத்துக் கொள்ளும் சமூகத்தை உருவாக்குவதுதான். உடனடியான தேவை பாரபட்சம் இல்லாமல் எல்லா மதங்களின் வெறி அமைப்புகளையும் தடை செய்யும் நடவடிக்கைதான். இதை ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி.யிலிருந்து தொடங்க வேண்டும்..

நன்றி: குமுதம்

மேலும் படிக்க...Read more...

அன்புடன் ஆசா

Type your summary here
1.ஊராட்சி போனது : உலக வங்கி ஆட்சி வந்தது. .

2.பேச்சு சுதந்தரம்… இல்லை போச்சு சுதந்தரம்… வீணாப் போச்சு சுதந்தரம்

1.ஊராட்சி போனது : உலக வங்கி ஆட்சி வந்தது.

திருப்பூர்,தூத்துக்குடி,வேலூர் நகராட்சிகள் அடுத்தடுத்து மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. பெரும் பொருட்செலவில் இவற்றின் தொடக்க விழாக்கள் கோலாகலமாக நடத்தப்பட்டுள்ளன. நவீன பாதாளச் சாக்கடைத் திட்டங்கள்,சாலைகளை அகலப்படுத்துவது,திடக்கழிவு மேலாண்மை எனப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வரும் தி.மு.க. அரசு, நகர்ப்புற மக்களுக்கு வசதிகளைச் செய்து கொடுத்து மேம்படுத்துவதாக மக்களும் கருதுகின்றனர்.

மாநகராட்சிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்திருப்பதன் பின்னணியைப் புரிந்து கொள்ள முதலில் நாம் "மூன்றாவது தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் திட்டம்' (த.நா.ந.வ.தி.) பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும்.

47 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் நகரங்களில் வாழும் தமிழ்நாட்டில்தான் நகரமயமாக்க வேகம் இந்தியாவிலேயே அதிகம் என்பதால், இம்மக்களுக்கு தரமான சேவை செய்திடவும் உள்கட்டுமானங்களை வலுவாக்கிடவும் இத்திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தினை உருவாக்கி அதற்கு 8.5 சதவீத வட்டியுடன் 20 ஆண்டுகளில் திருப்பச் செலுத்தும் வகையில் ரூ. 1200 கோடி கடன் தந்திருக்கிறது, மறுகட்டுமானம் மற்றும் வளர்ச்சிக்கான பன்னாட்டு வங்கி.

2005இல் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்ட இத்திட்டம் மூன்று முக்கிய நோக்கங்களைக் கொண்டுள்ளது. ஒன்று, மாநில, மைய அரசுகளின் பிடியில் இருந்து நகர்மன்றங்களை விடுவித்து, அவற்றை வலிமையான நிறுவனங்களாக்குதல்¢ இரண்டு, எவ்விதக் கட்டுப்பாடுமின்றி தனியார் மூலதனங்கள் வாயிலாக நகர உள்ளாட்சியின் தேவைகளை விரைவில் பூர்த்தி செய்தல்¢ மூன்று, உள்ளாட்சியும் தனியாரும் இணைந்து நலத் திட்டங்களை நிறைவேற்றுதல்.

பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் இந்திய நகர வளர்ச்சிக்காகத் தேவைப்பட்ட 28 ஆயிரம் கோடி ரூபாயைக் கடனாக வழங்க வேண்டுமானால், உள்ளாட்சி அமைப்புகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, அவை மைய, மாநில அரசுகளிடம் இருந்து விடுவிக்கப்பட்டு, உலக நிதி மூலதனத்தை நேரடியாகக் கையாள வகை செய்யப்பட வேண்டும் என உலக வங்கி நிபந்தனை விதித்து, அதன்படி த.நா.ந.வ.தி. வடிவமைக்கப்பட்டது.

இத்திட்டத்தின்படி த.நா.நகர்ப்புற வளர்ச்சி நிதி ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இந்த அமைப்புக்கு நேரடியாக உலக வங்கி கடன் தந்தது. வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழகமெங்கும் உள்ள நகராட்சிகளில் பாதாளச் சாக்கடைகள், குடிநீர் வழங்கல், திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றுக்கு ரூ. 440 கோடி இந்நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டது.

நகராட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கடன்கள் மட்டுமல்லாமல், திட்டத்தை வடிவமைத்துத் தருவதிலும் பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்த வகை செய்யப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, தூத்துக்குடியின் புதிய பாதாள சாக்கடைத் திட்டத்தை வடிவமைத்தது ""வில்பர்ஸ்மித் அசோசியேட்ஸ்'' எனும் அமெரிக்க நிறுவனம். நாமக்கல்லுக்கான திட்டத்தை வடிவமைத்தது ""தலால்மாட் மெக்டொனால்டு'' எனும் பிரிட்டன் நிறுவனம்.

திண்டுக்கல், விருதுநகர், நீலகிரி, இராமநாதபுரம், கடலூர் ஆகிய நகராட்சிகளுக்கும் இவ்வாறான கழிவுநீர் வடிகால் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. வளர்ச்சி நிதியில் இருந்து, வைகை அணையில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டுவர ரூ.10 கோடியும், மதுரையில் திடக்கழிவு மேலாண்மைக்கு ரூ.11.48 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
புதிய மாநகராட்சிகளான வேலூருக்கு முறையே ரூ.10 கோடியும் ரூ.9 கோடியும் கடனாக வழங்கப்பட்டுள்ளன.

உள்ளாட்சிதனியார் கூட்டுத் திட்டங்களுக்காக த.நா.நகர வளர்ச்சி நிதியில் ஐ.எல்.எப்.எஸ். நிறுவனமும், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியும், ஹெச்.டி.எப்.சி.யும் பங்குதாரர்களாகச் சேர்க்கப்பட்டன. (ஹெச்.டி.எப்.சி. வங்கியில் உள்ள உலக வங்கியின் பங்கு ரூ. 400 கோடி). கரூரில் அமராவதி ஆற்றைக் கடக்க உதவும் பாலம் இக்கூட்டுத் திட்டத்தின் கீழ்க் கட்டப்பட்டு, அதனைப் பயன்படுத்துவோரிடமிருந்து சுங்கம் வசூலிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டது.
இதற்காக தமிழ்நாடு சுங்க வசூல் சட்டம் திருத்தப்பட்டு, உள்ளாட்சிகள் தனியாருடன் இணைந்து சாலைகள், பாலங்கள் கட்டிச் சுங்கம் வசூலிக்க வகை செய்யப்பட்டது.

இதன்படி மதுரை புறவழிச்சாலை, சென்னைவளசரவாக்கம் மழை நீர் வடிகால் திட்டம் வடிவமைக்கப்பட்டன. திடக்கழிவு மேலாண்மையிலும் தனியார் கூட்டுத் திட்டம் ஆலந்தூரில் அறிமுகமாகியுள்ளது. ஒவ்வொரு குடும்பமும் மாதந்தோறும் ரூ.150 தரவேண்டுமென அதன் திட்ட அறிக்கை கூறுகிறது.

முதல் நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் 1996இலேயே தொடங்கப்பட்டு விட்டது. அதற்கும் உலக வங்கிதான் மூளை. இத்திட்டத்தின் மைய நோக்கமே தாராளமயம் என்பதால், அதற்கு ஏற்றபடி உள்ளாட்சி ஊழியர்களுக்கும், தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும், புதிய முறைக்கு ஏற்றபடி கணினி மென்பொருள், புதிய தொழில்நுட்பம், நிதி வசூல் திட்ட மேம்பாடு போன்றவற்றில் பயிற்சிகள் தொடர்ச்சியாகத் தரப்பட்டு வருகின்றன.

2006–07இல் இதற்காக ரூ. 5.44 கோடி ஒதுக்கப்பட்டு, மக்கள் பிரதிநிதிகள் பயிற்சிக்காக வெளிநாடுகளுக்குக் கூட அனுப்பப்பட்டனர். 2004இல் பொன்னம்பட்டி ஊராட்சித் தலைவி சல்மா (எழுத்தாளர்) பாகிஸ்தானுக்குப் போய் வந்ததும் இத்தகைய திட்டத்தின்கீழ்தான்.
தற்போது தமிழ்நாட்டிலிருக்கும் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளும் புவியியல் தகவல் அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டு திட்டமிடல், வருவாய் வகைகள் உயர்த்தப்படல், கட்டிடங்கள், நிலங்கள் குறித்த தகவல்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக மதுரை, கோவை, திருச்சி, இராசபாளையம், கோபிச்செட்டிபாளையம் ஆகிய உள்ளாட்சி அமைப்புகள், உலகவங்கி மீளாய்வு செய்வதற்கு வசதியாக இணையம் மூலம்
இணைக்கப்பட உள்ளன.

கொடுத்த கடன்களை எல்லாம் எவ்வகைகளில் உலக வங்கி திரும்பப் பெறும்? அதற்கான வழிமுறைகளையும் அவ்வங்கியே திட்டத்தில் சொல்லியிருக்கிறது. ரூ.46.4கோடி மதிப்பிலான தூத்துக்குடி திட்டத்தில் உலக வங்கியின் கடன் ரூ.26 கோடி. இதனை வசூலிக்கும் வகையில், இத்திட்டத்திற்கு ஒவ்வொரு குடும்பமும் ரூ.3 ஆயிரமும், பள்ளி, கடைகள் ரூ.7500மும், தொழிலகங்கள் ரூ. 10 ஆயிரமும் தர வேண்டும்¢

இத்திட்டத்தில் இணைக்கப்பட உள்ள மொத்த வீடுகள் 42,955. இவர்களிடமிருந்து மாதம் ஒன்றுக்கு ரூ. 26 லட்சம் வசூலிக்கப்பட வேண்டும்¢ இத்திட்டத்தின் கட்டுமானப்பணிகள் முடிந்த பின்னர் நகராட்சி பராமரிப்பையும் கழிவு நீர் சுத்திகரிப்பையும் தனியாரிடம் விட்டுவிடலாம் என்கிறது திட்ட அறிக்கை.

த.நா.ந.வ.தி. அறிக்கையில் ஏற்கெனவே பத்துக்கும் மேற்பட்ட நகராட்சிகள் சிறப்புப் பிரிவின்கீழ் வகைப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றிற்கு வழங்கப்பட்ட கடனும் பிற நகராட்சிகளை விட மிகவும் அதிகம். அப்பட்டியலில் இருக்கும் திருப்பூர், தூத்துக்குடி, வேலூர் நகராட்சிகள்தான் தற்போது மாநகராட்சிகளாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தரம் உயர்த்துவதன் மூலம், சொத்து வரி போன்ற மாநகராட்சி வருவாய் பல மடங்கு உயரும்.

அதாவது, இனி இந்நகரங்களில் குடியிருக்கும் மக்கள் முன்பைவிட அதிகமாக வரி செலுத்த நேரிடும்.
ஆக, அரசின் கட்டுப்பாட்டிலிருந்து தமிழக நகரங்களின் நிர்வாகங்களைப் பறித்தெடுத்து உலக நிதிமூலதனத்திடம் கொடுக்கும் வேலையைத்தான் மாநில உள்ளாட்சித் துறை செய்துவருகிறது. கடன் வலையில் உள்ளாட்சிகள் சிக்கி உலக வங்கியின் எடுபிடிகளாக அவை மாற்றப்படுவதுதான் நல்லாட்சியா?

இந்த "நல்லாட்சியின்' உண்மையான நிர்வாகி யார்? மு.க.ஸ்டாலினா? உலகவங்கியா?· புதிய ஜனநாயகம்

2.பேச்சு சுதந்தரம்… இல்லை போச்சு சுதந்தரம்… வீணாப் போச்சு சுதந்தரம்

வாளைவிட விட கூர்மையானது பேனா… இதற்குச் சான்றுகள், பல நேரங்களில் பலமுறை வரலாற்றின் ஏடுகளில் செதுக்கப்பட்டுள்ளன. சென்ற நூற்றாண்டில், பல நாடுகளில் அடிமைச் சங்கிலியை உடைத்தெறிந்து சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கச் செய்தது, போராளிகளின் கையில் கிடைத்த பேனாக்கள்தாம். நவீன யுகம் என்று அதிகாரவர்க்கத்தினரால் இன்றைய மக்களிடையே மூளைச்சலவை செய்யபட்டுள்ள இந்த நூற்றாண்டிலோ, அதே பேனாவானது சைத்தான்களின் கைளில் சிக்கி அல்லல்படுகிறது.

அந்த சைத்தானியப் பேனாக்கள், “பத்திரிக்கை சுதந்தரம்” என்று பெயரில் உலகெங்கும் தனது கோரமுகத்தை காட்டி மனித மனங்களை சிதைத்து ரணமாக்கி சமுதாய ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிக்க ஆரம்பித்துவிட்டது.

செப்டம்பர் 30, 2005 – ம் ஆண்டு “ஜெய்லண்ட் போஸ்டன்” என்ற டென்மார்க்கிய பத்திரிக்கை முகம்மது நபி (ஸல்) அவர்களின் கேலிச்சித்தரத்தை வெளியிட்டு “பேச்சுச் சுதந்தரத்திற்கு” புதிய வரையறையை உலகுக்கிற்கு சொல்லிக்கொடுக்க முயன்றது. சிந்தனையாளர்களிடம் எடுபடுமா அந்த சப்பைக் கட்டு? பற்றி எரிந்தது ப+கோளப் பந்து.

“பேச்சு சுதந்தரத்திற்கு” தடை ஏன் என்று ஃபரெஞ்சு பத்திரிக்கைகள் டென்மார்க் பத்திரிக்கைக்கு ஆதரவாக களத்தில் குதித்தன. பத்திரிக்கை சுதந்தரத்தையும் பேச்சுச் சுதந்தரத்தையும் “கட்டி காப்பாற்றிய” மேற்கத்திய நாடுகளில் தவறு செய்தவர்களை துளியும் தட்டிக்கேட்கவில்லை. கேலிச் சித்திரம் வரைந்த பத்திரிக்கையாளர்கள் சுதந்தரமாக உலவிக் கொண்டுள்ளனர். அந்த விசமிகளுக்கு சாமாரம் வீசிக்கொண்டிருந்தது அந்த “சிந்திக்கத் தெரிந்த.(.?) " நாகரீக சமுதாயம்.

ஆனால் எதிர்த்தவர்களையோ அநாகரிமாக சித்தரித்தனர் அந்த கற்ற மேதாவிகள்.
இவர்களுக்கு நாங்கள் என்ன இளப்பமா என்று தன் பங்குகிற்கு விசத்தைக் கக்க ஆரம்பித்துள்ளது தினமலர் பத்திரிக்கை. ஏற்கனவே முஸ்லிம் விரோதப் போக்கை தனது கொள்கையாக பின்பற்றி வரும் இந்த சமுதாய விரோதி பத்திரிக்கைக்கு, முஸ்லிம்களை பிரச்சனையின் முகங்களாகக் காட்டுவது கைவந்த கலை. இந்து பயங்கரவாதிகளைப் பற்றி வாயைத்திறக்காது தனது “நடுநிலைமையை” கட்டிக்காத்துவரும் உலகில் கோடானகோடி கேடிகளில் தினமலரும் ஒன்று என்று எல்லாரும் அறிந்ததே...!

செப்டம்பர் 2, 2008 ஆம் நாள், தினமலரில் துர்நாற்றமெடுக்கும் மலமாக வெடித்த அந்த விசமத்தனமும், பேனாக்கள் இன்னும் சைத்தானியர்களின் கிடிக்கிப்பிடிக்குள் தான் உள்ளன என்பதை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. அசிங்கம் பிடித்த இந்த பத்திரிக்கைக்கு தினமலர் என்ற பெயரை விட தினமலம் என்ற பெயரே சாலப் பொருத்தம். இந்த கேலிச்சித்திரம் வெளியிடுவது சர்சையைக் கிளப்பக் கூடும் என்பது தெளிவாக தெரிந்திருந்தும், விமத்தனமாக செய்துள்ளது தினமலம்.

சங்பரிவார அமைப்புகள் மேற்கத்திய பாணியில் தினமலம் பத்திரிக்கையின் பத்திரிக்கைச் சுதந்தரத்தை கட்டிக்காக்க முற்பட்டுள்ளன. அந்த மலத்தின் உரிமையாளர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் அந்த முறையற்றச் செயலைத் தட்டிக்கேட்டவர்களுக்கு தடியடி பரிசு.

ஜான் கென்னடியின் கடைசி தம்பி 1969 ம் ஆண்டு சக பெண் ஊழியருடன் பார்ட்டி முடிந்து திரும்புகையில் அப்பெண் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். இது ஒருபுறம். டேவிட் இர்வின் என்ற வரலாற்று நிபுணர் ஹோலோகாஸ்ட் என்ற ய+தப் படுகொலைகள் ஹிட்லரின் காலத்தில் நடைபெறவே இல்லை என்று வாதிடுபவர்.

இதனால் ய+தர்கள் இர்வின் மேல் ஒரு காட்டமாகவே இருந்தனர். எத்தனை ய+தர்கள் விசவாயு அறையில் அடைத்துக்கொல்லப்பட்டனர் என்று ஒருமுறை கேட்டதற்கு, இர்வின் அளித்த பதில் “எட்வர்ட் கென்னடியின் காரின் பின் இருக்கையில் உயிரிழந்த பெண்களின் எண்ணிக்கையானது, “ஆவ்ஸ்விட்ச்” என்ற நாஜி கேம்ப்பில் விசவாயு அறையில் உயிரிழந்த யூதர்களின் எண்ணிக்கையை விட அதிகம்” என்பதுதான்.

இதற்கு அர்த்தம் ய+தர்கள் யாரும் (அவ்வளவாக) கொல்லப்படவில்லை ஆகும். இதற்காக டேவிட் இர்வின் கைது செய்யப்பட்டார். காரணம் ய+தர்களின் மனதை புண்படுத்தியதாலாம். இதனைக் கூறியதற்காக, 2006 – ம் ஆண்டிலிருந்து இன்று வரை ஆஸ்திரிய சிறையில் வாடும் டேவிட் இர்வினுக்கு பேச்சு சுதந்தரம் கிடையாதா?

அதைப்பற்றி மேற்கத்திய பத்திரிக்கைகள் ஏன் வாயைத்திறக்கவில்லை? புண்பட்ட மனம் யூதர்களுடையது என்பதாலா? அவருக்கு மட்டும் ஏன் 3 ஆண்டுகள் சிறைவாசம்? இது இஸ்லாமியர்களின் நபிகள் முகம்மதுவை தாக்கி வரையப்பட்ட கார்ட்டுனை விட மனதை புண்படுத்தும் வாசகமா?; என்று கேட்கிறார் தி ஸ்கெப்டிக்ஸ் மேகஸின் ஆசிரியர் மைக்கேல். நியாயம் தானே?

டேவிட் இர்வின்
தினமலம் பத்திரிக்கை என்றைக்காவது இர்வினைப் பற்றி தனது வாயைத்திறந்திருக்குமா? நல்ல எண்ணங்கள் என்றாவது நிழலாடியிருந்தால் நல்ல விசயங்கள் எழுதியிருப்பார்கள். அவர்களின் திருவாய் நாற்றமெடுக்கும் கால்வாய் அல்லவா? அதனால் தான் கீழ்தரமான முறையில் விளம்பரம் தேடி வியாபாரம் செய்கிறார்கள். தமிழகத்தில் தனது விற்பனையைக் அதிகப்படுத்த எளிதில் உணர்ச்சிவசப் படக்கூடிய சிறுபான்மையினத்தோரின் மனங்களுடன் விளையாடிப் பார்த்துள்ளனர்.

தினமலர் எடிட்டர்
பத்திரிக்கைச் சுதந்தரம், பேச்சுச் சுதந்தரம் என்று சொல்லிக்கொண்டு ஏதுமறியா அப்பாவிகள் போல் நடிப்பதும், அந்தப் போர்வையில் இருந்துகொண்டு தவறுகளைத் தெரிந்தே செய்தவதும் அதிகமாகிக் கொண்டுவருகின்றன. கேட்பதற்கும் பதில் தாரது கோழைகளாகி, கிணற்றில் போட்ட கல்லைப் போல் பதுங்கிக் கொண்டு காவல்துறை என்று மற்றவர்களை “அடியாட்களாக” அனுப்பி அராஜகம் செய்கிறார்கள்.

ஆனால் அதனைத் தட்டிக்கேட்பவர்களுக்கு கலகக்காரர்கள் என்று பெயரிட்டு கண்டனங்களும் தடியடிகளும் பரிசுகளாகக் கிடைக்கிறன. ஆகவே இது போன்ற விசக்கிருமிகளை சமுதாயத்தில் செயல்பட விடாது தடுப்பதே சிறந்தது. அத்தகைய பத்திரிக்கைகளுக்கும் ஆதரவினை நாம் யாரும் தராது விலகியிருப்பது மிகவும் சிறந்தது. வெட்கம் மானம் உடைய எவரும் இந்த விசமப் பத்திரிக்கைகளுக்கு ஆதரவு தரக்கூடாது. அவ்வாறு ஆதரவு தரும் முஸ்லீம்களையும், மனசாட்சியுடைய நல்ல முஸ்லிம்கள் தடுக்கவேண்டும்.

மேலும் படிக்க...Read more...

மருத்துவம் பகுதி 5.

>> Saturday, November 8, 2008

மருத்துவம் பகுதி 5.

8. X’ ray எடுக்கனுமா? இதை கொஞ்சம் படியுங்கள்
7. மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்
6. உணவில் கறிவேப்பிலை சேர்ப்பது ஏன்? 29/10
5.``எந்தெந்த உடல் உறுப்புகளை தானம் செய்யலாம்” 26/10
4. இஸ்லாத்தின் நம்பிக்கையும் மருத்துவத்தின் உண்மையும் 22/10
3.தொற்றுநோயைத் தவிர்க்கும் பழம்-காய்கறிகள்
2.மீன் சாப்பிட்டால் இதய நோய் வராது
1.தேளின் நஞ்சும் மருந்தாகிறது

8. X’ ray எடுக்கனுமா? இதை கொஞ்சம் படியுங்கள்

`எக்ஸ் கதிர்களால் ஏற்படும் புற்றுநோய் வாய்ப்பு, அணுகுண்டால் ஏற்படும் புற்று நோய் வாய்ப்பை விட அதிகம்' John Goffman மருத்துவர், குறைந்தபட்ச கதிர்வீச்சு பாதிப்பு வல்லுநர்.
2005-ல் அமெரிக்க பொது சுகாதாரத்துறை சனவரி 31-ல் எக்ஸ் கதிர்கள் புற்றுநோய் ஏற்படுத்தும் தன்மை கொண்டவை (Careinogen) என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்தது. (Hindu, மார்ச் 31, 2005).

எந்த வயதில்‘X’ ray எடுக்கப்படுகிறது என்பது மிக முக்கியம். சிறு குழந்தைகளுக்கு புற்றுநோய் (குறிப்பாக இரத்தப் புற்றுநோய், தைராய்டு) ஏற்படும் வாய்ப்பு அதிகம். இள வயதினருக்கு குறிப்பாக பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். வயது வந்தவர்களுக்கு (பெரியவர்களுக்கு) நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
இந்தியாவில் `‘X’ ray பாதுகாப்பு விதிமுறைகளை கையாளுவது என்பது நடைமுறையில் முறையாக அமல்படுத்தப்படுவதில்லை என்பதை திரு. பார்த்தசாரதி (Hindu June முன்னாள் செயலர்) வேதனையுடன் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள புள்ளி விவரங்கள் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

அவை
1. IAEA (International Atomic Energy Agency) 12 வளரும் நாடுகளில் செய்த ஆய்வில் 53% எக்ஸ்ரேக்கள் சரியாக எடுக்கப்படவில்லை என்றும், அதனால் மீண்டும் ‘X’ ray எடுக்க வேண்டியிருப்பதால் மக்கள் தேவையற்ற அதிக கதிர்வீச்சிற்கு ஆளாகி பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்பு அதிகம் இருப்பதை American Journal of Roentgenology, June 2008 குறிப்பிட்டுள்ளதை சுட்டிக் காட்டுகிறார்.

இந்தியாவில் AERB (Atomic Energy Regulatory Board) க்கு ‘X’ ray தொடர்பான அனைத்து பாதுகாப்பு விதிமுறைகள் தெரிந்திருந்தும் அதை நடைமுறைப்படுத்துவதில் போதிய அக்கறை காட்டவில்லை என்பதையும் தெளிவாக அவர் எழுதியுள்ளார்.
2. இந்தியாவில் 175 ‘X’ ray எடுக்கும் இடங்களை ஆய்வு செய்ததில், அவற்றில் 12% இடங்கள், நோயாளிகளை 200% மேல் தேவையற்ற கதிர்வீச்சு பாதிப்புக்கு ஆளாக்கியது தெரிய வந்துள்ளது. ‘X’ ray எடுக்கும் முறை சரியாக இல்லாமல் இருப்பதே இதற்குக் காரணம் எனவும் தெரிய வந்துள்ளது.

3. மார்பக (Breast) புற்றுநோய் இருப்பதை அறிய Mainmo graphy எனும் பரிசோதனை செய்யும் மும்பையில் உள்ள 30 மருத்துவமனைகள் நோயாளிகளை தேவையற்ற கதிர்வீச்சு பாதிப்புக்கு உட்படுத்தியது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
1994_ல் AERB செய்த ஆய்வில் 30% ‘X’ ray உபகரணங்கள் (30,000 உபகரணங்களை பரிசோதித்ததில்) 15 வருடங்களுக்கு மேல் பழைமையானவை என்பதும், அதன் காரணமாக நோயாளிகள் அதிக கதிர்வீச்சு பாதிப்புக்கு உள்ளானார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் CT Scan பரிசோதனைகள் செய்யப்படுபவர்களில் 9% குழந்தைகள். 71 CT Scan பரிசோதனைக் கூடங்களை ஆய்வு செய்ததில் அவற்றில் 32 இடங்களில் குழந்தைகள் மிகவும் அபாயகரமான கதிர்வீச்சிற்கு தேவையற்று ஆளாகி இருப்பது தெரிய வந்துள்ளது.

குழந்தைகளுக்கு CT Scan எடுக்கும் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு முறைகள் மீறப்பட்டதே இதற்கு முக்கியக் காரணம். மேலும், இந்தியாவில் எடுக்கப்படும் ‘X’ ray க்களில் 20% குழந்தைகள் மீதானவை என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் 2500 CT Scan மையங்கள் இருக்கின்றன. அவற்றின் எண்ணிக்கை வளர்ந்தாலும், CT Scan மூலம் பெறப்படும் படங்களின் தரம் உயர்வது சரியாக நடைபெறவில்லை.

இதற்குத் தீர்வாக, அவர் ‘X’ ray எடுக்கும்போது மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகளை Atomic Energy (Radiation Protection) Rules 2004 தெளிவாக குறிப்பிட்டுள்ளது என்றும், அதை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், அதைக் கண்காணிக்கும் நிறுவனங்கள் மையப்படுத்தப்பட்ட ஒன்றாக இல்லாமல் அதிகாரம் பரவலாக்கப்பட்ட 5 நடைமுறை படுத்தப்படும் மையங்கள் அமைய வேண்டும் என்றும் ஆலோசனை தெரிவித்துள்ளார். AERB ‘X’ ray பாதுகாப்பு விதிமுறைகளை நடைமுறைப்படுத்த மாநில அளவில் உள்ள சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் விழித்துக் கொண்டால் மட்டுமே தேவையற்று நிகழும் கதிர்வீச்சு பாதிப்புகளை குறைக்க முடியும்.

மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கிறதா? என பார்ப்போம்.

(‘X’ ray எடுத்து 40 ஆண்டுகள் கழித்தபின் புற்றுநோய் ஏற்பட்டது மருத்துவ ஆய்வுகளில் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதை இங்கே சொல்லியாக வேண்டும்).

ஆக, தேவையற்ற ‘X’ ray எடுப்பதை தவிர்ப் பதே சிறந்தது. ‘

X’ ray எடுப்பதால் பெரும் பாதிப்பு வராது என கூறும் மருத்துவர்கள் தனது மகளுக்கு பேறு காலத்தில் சிறு குழந்தைகளுக்கு ‘X’ ray எடுக்கத் தயாரா?

கதிர்வீச்சை பொறுத்தமட்டில் இந்த அளவிற்கு மேல்தான் அபாயம் என்பதை சொல்வதற்கில்லை. (There is no safe dose) என்பது மனதில் கொள்ள வேண்டும். மிகச்சிறிய அளவும் பாதிப்பை உண்டாக்கலாம் என்பதை உணர்ந்து செயல்படுவதே சிறந்தது.

7.மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

வாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் – கே.எஸ்.சுப்ரமணி

மூளைக்குச் சரியான உணவு கிடைத்தால்தான் ஞாபக சக்தி, ஒருமுகக் கவனத்துடன் செயல்படும் ஆற்றல் முதலியன நமக்குக் கிடைக்கும்.

மூளைக்கு உதவும் சரியான உணவைத் தேர்ந்தெடுக்க ஓர் எளிய வழி உண்டு. பளபளப்பாக ஒளிரும் நிறத்தில் இருக்கும் உணவு வகைகள் பெரும்பாலும் மூளையின் பசியைப் போக்கும் முக்கிய உணவுகளாகும். ஏனென்றால் இந்த உணவு வகைகளில் போதுமான அளவு வைட்டமின்கள், தாது உப்புகள், பைட்டோ கெமிக்கல்கள் முதலியன உள்ளன.

இவை மூளையின் செயல் திறமை பாதிக்கப்படாதபடி பராமரித்து வருகின்றன. திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, காரட், செர்ரிப் பழங்கள் முதலியன இந்த வகையில் மூளைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் நல்ல உணவுகளாகும். இவற்றில் மூன்று M-கள் உள்ளன.

நல்ல மனப்பாங்கு (Mood) எப்போதும் செயல் நோக்கமாயிருத்தல் (Motivation) மன உறுதியாக எடுத்ததைச் செய்து முடித்தல் (Mental Performance) ஆகிய செயல் விளைவுகளை இந்த உணவுகள் ஏற்படுத்தியே தீரும்.

ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்த போது, காரட் சாப்பிட்டவர்களின் அறிவாற்றலும், ஆர்வமும் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது வர்ஜீனியா பல்கலைக் கழகத்தின் மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள்.

இந்த உணவுகள் மூலம் மூளையில் செரோட்டனின், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பதால் மேற்கண்ட மூன்று M-களும் நம்மிடம் எப்போதும் தொடரும்.

மூளைக்கு எப்போதும் ஞாபக சக்தித்திறன் இருக்க வேண்டும். அதற்குத் தேவை கொழுப்பு. வெண்ணெய், நெய் முதலியவற்றிலிருந்து கிடைக்கும் கொழுப்பு தீங்கானது.

மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என்-3 என்ற கொழுப்பு அமிலமே தினமும் தேவை. மீன் உணவு சாப்பிட இயலாது எனில், மீன் எண்ணெய் மாத்திரை இரண்டு மட்டும் சாப்பிடுவது நல்லது என்கிறார் ஒரிகான் உடல்நல விஞ்ஞானப் பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறைப் பேராசிரியர் வில்லியம் கான்னர் என்பவர்.

மூளையில் ஏற்படும் ஓட்டையைத் தையல்காரர்போல் சிறப்பாகதத் தைத்து மூளையை ஒழுங்காகச் செயல்படுத்துபவை, மீனும் மீன் எண்ணெயும் என்கிறார் இவர்.

திடீர் முடிவுகளை எல்லோருக்கும் நன்மையாக முடியும் விதத்தில் எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம்.

'மீனா? உவ்வே!' என்பவர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தி வந்தால் போதும்.

உடலில் எந்த உறுப்பையும்விட அதிகமாக ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்வது மூளைதான். எனவே, மூளையின் செல்கள் அழிந்துவிடாமல் இருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை.

இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த்தாக்குதல், அல்ஜிமெர்ஸ் என்ற ஞாபக மறதிநோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி, ஏ, ஈ ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை.

இவற்றை எல்லாம் பார்த்துச் சாப்பிடவும் ஓர் எளிய வழி உண்டு.

மிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சர்க்கரை உதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும்.

அரிசி, ரொட்டி, கோதுமை, உருளைக்கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டுபடுத்திவிடும்.

மூளையைச் சரியாக, பாதுகாப்பாக பராமரிப்பதுடன் நல்ல மனப்பாங்கையும், காரியத்தைச் செய்து முடிக்கும் விடா முயற்சியையும், பெர்சி மற்றும் செர்ரி பழங்கள், அப்ரிகாட், பீச், அவரைக்காய் முதலியன தந்துவிடுகின்றன.

மனதை அமைதிப்படுத்தி, தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு. மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை.

ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்கின்றன.

எனவே, ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல் சாப்பிடவும்.

மேற்கண்ட உணவு வகைகள் தினமும் இடம் பெற்றால் வைட்டமின்களுடன் உடலுக்கு பைட்டோ கெமிக்கல் என்ற இராசயனப் பொருளும் கிடைக்கும். அறிவாற்றல் பத்து வயதில் இருந்து எண்பது வயதிலும் கூட மிகச்சிறப்பாக இருக்கும்.

எனவே, சோர்வான மனநிலை தொடர்ந்தால் மூளைக்குப் பசி எடுக்கிறது என்று தெரிந்து கொண்டு மேற்கண்ட உணவு வகைகளை எல்லா வயதுக்காரர்களும் பின்பற்றுவார்கள்.


6.உணவில் கறிவேப்பிலை சேர்ப்பது ஏன்?

கறிவேப்பிலை - பெயரைக் கேட்டதுமே சமையலில், உணவுப் பதார்த்தங்களில் நறுமணத்திற்காக சேர்க்கப்படுவது என்று தான் பலரும் நினைப்பார்கள்.

ஆனால், அதிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் இருப்பது எவ்வளவுப் பேருக்குத் தெரியும்? அதனால்தான் காலங்காலமாக கறிவேப்பிலையை முன்னோர்கள் உணவில் பயன்படுத்தி வந்துள்ளனர்.

தேவைப்படும் போது பயன்படுத்திக் கொண்டு, உணவு தயாராகி சாப்பிடு கையில், கறிவேப்பிலையை பலர் தனியாகத் தூக்கி வைத்து விடுவதைப் பார்த்திருக்கிறோம்.

பொதுவாக காரியம் ஆகும்வரை காலைப் பிடித்துக் கொண்டு, அவர்களின் காரியங்கள் அனைத்தும் முடிந்ததும், நம்மை புறக்கணித்து விடுவோரைப் பார்த்து, கறிவேப்பிலை போன்று பயன்படுத்திக் கொண்டார்களே என்று வேடிக்கையாகக் கூறுவதுண்டு.

கறிவேப்பிலையில் உள்ள மருத்துவ குணங்கள் நிறைந்த சாறு, உணவில் முழுவதுமாக இறங்கி உணவுக்கு சுவை கூட்டுவதுடன், உடலுக்கு ஜீரணசக்தியை அளித்து பித்தம், வாயு, கபம் போன்றவற்றையும் போக்குகிறது.

எந்த உணவானாலும், கடைசியாக அவற்றை தாளிக்கும் தருணத்தில், ஒன்றிரண்டு கறிவேப்பிலைகளை கிள்ளிப் போட்டு இறக்கி வைப்பார்கள்.
மலச்சிக்கலை தவிர்த்து, தேவையான பசியைத் தூண்டும் வேலையையும் கறிவேப்பிலை செய்கிறது.

கறிவேப்பிலையுடன் சிறிது உளுந்து மற்றும் வெந்தயத்தை வறுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து, மிளகாய் மற்றும் தேவையான உப்பைச் சேர்த்து சட்னியாக செய்து இட்லி, தோசை போன்றவற்றுக்கு தொட்டு சாப்பிடலாம்.

கறிவேப்பிலை சட்னி சுவையைத் தருவதுடன் உடல் எடையை சீராக வைப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது.

கறிவேப்பிலையையும், பச்சைக் கொத்தமல்லியையும் சேர்த்தும் இதுபோன்று துவையல் அரைத்து சாப்பிடலாம். கறிவேப்பிலையைப் போலவே, மல்லி இலையும் ஜீரண சக்திக்கு முக்கியப் பங்காற்றக்கூடியது.

தவிர, கறிவேப்பிலை இலையை அரைத்து காய வைத்த பின், தேங்காய் எண்ணெய் அல்லது தலைமுடிக்கு உபயோகிக்கும் எண்ணெயில் போட்டு சில நாட்கள் ஊற வைத்து, அந்த எண்ணெயைத் தேய்த்து வர,நரை முடி நம்மை நெருங் காது. மேலும் முடி உதிர்தலையும் இந்த எண்ணெய் தடுத்து நிறுத்தும்.

உணவில் மட்டுமல்லாது, நமது புற ஆரோக்கியத்திற்கும் கறிவேப்பிலையின் பங்கு குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது.

5.``எந்தெந்த உடல் உறுப்புகளை தானம் செய்யலாம்”


``உடல் உறுப்பு தானம்'' என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலில் நின்று கொண்டு பரிதவிக்கும் ஒருவருக்கு, தாமாக முன்வந்து தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதாகும்.

நம் உடலில் தானம் செய்யக்கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்விகளுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் அருணா ராமகிருஷ்ணன்.

"பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டு வித தானங்கம் தான் அதிக அளவில் இருந்து வருகின்றன. வேறு எந்தமாதிரியான உடல் தானங்கள் கொடுக்கப்படுகின்றன என்பதை சொல்லலாமே?''

"உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முதலாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இரண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது.

"உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன?''

"ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகுதி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.''

"இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?''
"இரண்டு சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், நுரையீரல், குடல் முழுவதும், கண் விழித்திரை (கார்னியா).''

"யார் யார் உடல் உறுப்புக்களை தானமாக தரமுடியும்?''
"நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெபடைடீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாதவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.''

"உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா?''
"18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள்,அது ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி தாமாக முன் வந்து தானம் செய்யலாம்.''

"உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதி முறைகள் உள்ளனவா?''
"ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்யலாம். என்றாலும் அதற்கென்று சில விதி முறைகள் உள்ளன.'' 1954 ஆம் ஆண்டு முதல் கடை பிடிக்கப்படும் விதிகள்:-

1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18 வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மாமா, அத்தை, சித்தப்பா, அவர்களுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்தங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம்.

2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர்கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்பவர்கள், பக்கத்து வீட்டிலும்ளவர்கள் போன்ற நெருக்கமானவர்களும் தரலாம்.

3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர்களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்தாமல், மற்றொரு நோயாளிக்கு பொருந்துமேயானால் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் சிறுநீரகங்களை பரிமாறிக் கொள்ளலாம்.

"தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா?''
"பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொம்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபாடீஸ் தான் காரணம்.
ஆனால் தானமாக பெற்ற உறுப்பை பொருத்துவதற்கு முன்னால் ``ப்ளாஸ்மா பெரிஸிஸ்'' என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார்கள். அவ்வாறு, மாற்று உறுப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்ணீரலையும் (SPLEEN) எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப் படுவதில்லை.''

"உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தானம் செய்பவருக்கு ஏதாவது ஆபத்து இருக்கிறதா?''

"பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதில்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும் போது, இரண்டு உறுப்புகள் செய்ய வேண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும்,

ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகிவிடும். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொம்ளலாம்,பாதிப்பு இருக்காது. கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்த பின், தானாகவே மறுபடியும் வளர்ந்து விடும்.

நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமுள்ள பகுதிகம் சீராக வேலை செய்ய தடை இல்லை.

ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும்.

ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக்கூடாது, ஆன்டிபயாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட்டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோகப்படுத்தி இருக்கக்கூடாது, மது அருந்தி இருக்கக்கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பிட்டிருக்கக் கூடாது,

உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாகவோ இருக்கக்கூடாது. ரத்த சோகை இருக்கக்கூடாது, குறைந்தது மூன்று மாதங்களுக்கும் ரத்தானம் செய்திருக்கக் கூடாது. மற்ற அனைவரும் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும்.''

"வேறு என்னென்ன உறுப்புகளை தானமாக தர முடியும்?''
"கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ்ஜை (போன் மாரோ), ரத்த நாளங்கள், தோல், இதயம், இதயத்திலுள்ள வால்வுகள்,கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அனைத்தையும் தானமாக தரலாம்.

ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர்களுக்கு தன் உறுப்புக்களை தானமாக தர முடியும்.

ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது நுரையீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோனரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருதயம் மட்டும் துடித்துக் கொண்டிருந்தால் (பிரயின் டெத்), அவர்களுடைய நெருங்கிய உறவினரின் சம்மதம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், எடுத்து தேவையானவர்களுக்கு பொருத்தலாம்.
எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந்தாலும், எடுத்து மற்றவர்களுக்கு பொருத்தலாம்.

ஆனால் உடல் உறுப்புக்களான, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதாவது மூளை செயல் இழந்து,உயிர் மட்டும் ஊசலாடிக் கொண்டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன்படும்.''

"ஒருவரின் மூச்சு - சுவாசம் நின்ற பின்னர் என்ன மாறுதல் மூளையில் ஏற்படுகிறது?''
"ஒருவரின் சுவாசம் நின்றவுடன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளையின் செல்கள் செயல் இழந்து போகின்றன.

மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது.
பத்தாவது நிமிடத்தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படுகின்றன
நோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.''

"உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்?''
"உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படுத்துவதற்கு உபயோகப்படும் ரசாயன கலவையை அந்த உறுப்புகளுக்கு செலுத்தி, அந்த குளிர்ந்த திரவத்தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக்கும்படி செய்கிறார்கள்.

கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன்படுத்தலாம். எடுக்கப்பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி,குடுவை அல்லது பாத்திரத்திலோ, ஐஸ் பெட்டியிலோ வைக்கப்படுகின்றது.

அந்த பாத்திரத்தை சுற்றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந்த தண்ணீரையும் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகம் விறைத்தும் போகக்கூடாது.

இதற்கென்று சில ரசாயன கலவைகம் உள்ளன. அவை ``வயாஸ்பான் திரவம்'', ``ïரோ கால்லின்ஸ்'' திரவம், ``கஸ்டோயியல்'' திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன.

சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்புக்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நிலையில் வைத்தாலே போதும்.''

"முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது?''
"நம்மிடையே உம்ள ஆதாரங்களின்படி 1902 ஆம் வருடம் முதன் முதலாக ``அலெக்ஸில்'' கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முதலாக ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணைத்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.''
1905 ஆம் வருடம் டிசம்பர் மாதம், டாக்டர் எட்வர்ட் ஸிம் என்பவர் முதன் முதலாக கார்னியா கண் அறுவை சிகிச்சை செய்தார்.
1918 ஆம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது.
1954 ஆம் ஆண்டுதான், அமெரிக்காவின் ``பாஸ்டன்'' நகரில் டாக்டர். ஜான் முர்ரே, முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தார்.

1954 ஆம் ஆண்டு பீட்டர் பெண்ட் மருத்துவமனையில், ரிச்சர்ட், ரோனால்ட் என்ற இரட்டையரில், ரொனால்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டிற்கு பொருத்தினார்கள்.
1960 ஆம் ஆண்டு - ஐரோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார்.
1963 ஆம் ஆண்டு ``கொலராடோ'' விலும்ள டென்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

1965 ஆம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்தவரின் உறுப்புக்களை மாற்று அறுவை சிகிச்சைக்காக உபயோகித்தார்கள்.
1967 ஆம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தென் ஆப்பிரிக்காவின் ``கேப்டவுன்'' நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன் முதலாக ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார்.``டென்னிஸ் டார்வெல்''என்பவரின் இதயத்தை``லூயிஸ் வாஷ்கேன்ஸ்க்கி'' என்பவருக்கு பொருத்தினார்.

1968 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.
1983 ஆம் ஆண்டு ``சர். மாக்டியா கூப்'' என்பவர் ஐரோப்பாவிலுள்ள மருத்துவமனையில், நுரையீரலையும், இதயத்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய்தார்.
1986 ஆம் ஆண்டு நுரையீரல் மட்டும் எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
1994 ஆம் ஆண்டு முதன் முதலாக, உயிருடன் உம்ள ஒருவர் தன் கல்லீரலை தானமாக தந்தார்.

2001 ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டின் டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன், இதய துடிப்பு நின்ற பின்னர் நுரையீரலை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்தார்.
2005 ஆம் ஆண்டு முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புக்களை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைதான் முதன் முதலாக நடைபெற்ற மனித உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சை.

***
உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம்?
சிறு நீரகம் - 72 மணி நேரம் வரை
கல்லீரல் - 18 மணி நேரம் வரை
இதயம் - 5 மணி நேரம் வரை
இதயம்/ நுரையீரல் - 5 மணி நேரம் வரை
கணையம் - 20 மணி நேரம் வரை
கண் விழித்திரை (கார்னியா) - 10 நாட்கம் வரை
எலும்பு மஜ்ஜை - கால அளவு மாறும்
தோல் - 5 வருடம், அதற்கு மேலும்
எலும்பு - 5 வருடம், அதற்கு மேலும்
இதயத்தின் வால்வுகள் - 5 வருடம், அதற்கு மேலும்
பொதுவாக, பாதுகாத்து வைத்து, உபயோகப்படுத்தலாம். NANDRI TO : DINATHANDHI
-----------------------------------------------------------
4. இஸ்லாத்தின் நம்பிக்கையும் மருத்துவத்தின் உண்மையும்.
உலகினை உருவாக்கி அதில் தன் கலிபாவாக மனிதனை எவன் ஒருவன் உருவாக்கம் செய்தானோ அந்த ஓர் இறையின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.

இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்தும் ஒவ்வொரு செயலும் மனிதவாழ்வின் நலத்திற்கும் வளத்திற்கும் வழிகாட்டும் சிறப்பிற்குரியதாகும். தனது இறுதி மறையின் மூலம் மனித குலத்திற்கு நல்வழிகாட்டும் வல்லோன் மார்க்கத்தின் அடிப்படை கடமைகளான ஐந்தில் ஒன்றான நோன்பு என்பதின் தாக்கமும் அதன் அறிவுசார் மற்றும் அறிவியல் வெளிப்பாடு மருத்துவ உண்மைகள் என்ன என்பதை அலசி ஆராய்வோம்.

மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் நேரான வழியை தெரிவிக்ககூடியதாகவும் நன்மை தீமைகளை பிரிதறிவிக்க கூடியதாகவும் உள்ள திருக்குர்ஆன் என்னும் இறைவேதம் அருளப்பட்ட ரமளான் மாதத்தை நீங்கள் அடைந்துவிட்டால் அதில் நோன்பு நோற்கவும். (அல்குர்ஆன் 2:185)

ஆதமுடைய மக்களின் இரத்தம் ஓடுகின்ற இடங்கள் அனைத்திலும் ஷைத்தானும் சேர்ந்தே ஊடுருவுகிறான் அதனால் அவன்செல்லும் பாதையை நோன்பின் (பசியின்) மூலம் அடைந்துவிடுங்கள் (நபிமொழி)

புனித வேதம் இறங்கிய காலத்தில் நோன்பு நோற்க்கப்படுவதால் மனிதனுக்கு உடல் ஆரோக்கியம் ஆசைகளை கட்டுப்படுத்துதல் மனோ இச்சைகளை ஒழித்துக்கட்டுதல் ஆகியவைகள் வெளிப்படையாகக் கிடைக்கும் பொருட்டு இவைகள்தான் நோன்பின் நோக்கங்கள் என நம்பப்பட்டுவந்தாலும் உண்மையான இறையச்சநோக்கம் என்ன என்பதை அல்-குர்ஆன் கீழ்கண்டவாறு தெளிவாக அறிவிக்கின்றது

நம்பிக்கை கொண்டோரே நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டதுபோல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டது நோன்பின் நோக்கம் - நோன்பு நோற்பவரை அது இறையச்சம் உள்ளவராக ஆக்கிவிடும் என்பதாகும்.

ரமளான் நோன்பிற்கு முன் ஒருவர் இறையச்சம் இல்லதவராக இருந்து புனித ரமளான் நோன்பிpருந்து இறையச்சமுள்ளவராக ஆகாவிட்டால் அவர் நோற்றது நோன்பே அல்ல.(ஆதாரம் : சிவகங்கை மாவட்ட உலமா சபை 2005 ல் வெளியிட்ட ரமளான் சிறப்புமலர் – பக்கம் 20 பத்தி 04)

இதையே இன்னும் சரியாக சொன்னால் நோன்பாளிகள் பலருக்கு அவர்களின் நோன்பின் பலன்களிருந்து பசித்திருப்தை தவிர வேறெதுவும் கிடைப்பதில்லை (நபிமொழி)

சஹர்(நோன்பு துவக்குவதற்கு சாப்பிடுவது) இஃப்தார் (நோன்பு திறப்பதற்கு சாப்பிடுவது) உணவுகளை எளிமையான உணவாக உட்கொள்வதும் குறைந்த அளவே உட்கொள்வதும் அறிவுடைமையாகும்.

அதுவே நோன்பின் குறிக்கோளை நிறைவு செய்வதாகவும் அமையும். மனித உறுப்புகள் இயங்கி அதனதன் பணிகள் நிறைவேற மனிதனுக்கு சுமார் 2500 கலோரி சக்தி தேவைப்படுகின்றது.

இதனை நாம் தினசரி சாப்பிடும்போது நமது உணவிலிருந்து பெற்றுக்கொள்கிறோம். சக்திகள் தேவைக்கு அதிகமாக கிடைத்துவிட்டால் அவைகள் கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் தேக்கி வைக்கப்படுகின்றது. தேவைப்படும்போது அக்கொழுப்பில் இருந்து மீண்டும் தேவையான அளவு சக்தியை பெற்றுக்கொள்கின்றது நமது உடல்.

நோன்பு காலங்களில் சுமார் 13 அல்லது 14 மணிநேரம் உணவும் தண்ணீரும் தவிர்க்கப்படும்பொழுது உடலுக்கு ஊறு ஏற்படாமல் உடல் தன்னை அமைத்துக்கொள்வதுடன் மேலே கூறப்பட்ட கொழுப்பிலிருந்து அந்த நேரதேவைக்காண சக்தியை உடல் பெற்றுக்கொள்கின்றது. மேலும் உடல் அதன் வெப்பத்தை தனித்தும் தசைகளின் விரைப்பை குறைத்தும் உடலியக்க சக்திக்கு தேவையான அளவை குறைத்துக்கொள்கிறது. எனவே உடல்பணிகள் தொய்வின்றி தொடர்கின்றன.

நோன்பு நோற்றிருக்கும் நேரத்தில் குளுக்கான் அளவு சற்று அதிகமாகவே காணப்படுவதால் அந்த நேரத்தில் நோன்பாளிகளுக்கு கேடு விளைவிக்கும் மற்றங்கள் எதுவும் ஏற்படுவதில்லை.

நோன்புடைய நேரத்தில் வயிற்றில் சுரக்கும் அமிலங்களின் நொதிகள் குறைந்த அளவே சுரக்கின்றன. எனவே ஜீரண சக்தி குறைந்தே காணப்படும். இதனால்தான நோன்பு திறப்பதற்கு தண்ணீரையும் பேரீத்தம் பழத்தையும் அண்ணலார் பயன்னடுத்தினார்கள்.
தண்ணீர் காய்ந்து கிடக்கும் வயிற்றுக்கு இதமாக அமையும் பேரீத்தம் பழம் அனைத்து சக்திகளும் பொதிந்த முழு உணவாகி ஜீரணப்பணிகளை மெல்லத்தூண்டும் பிறகு சற்று நேரம் கழித்து உணவு உண்பதால் எளிதில் ஜீரணிக்க ஏதுவாக அமையும்.

உடல் நோயிற்றிருக்கும் போது உணவை தவிர்ப்பதால் நிவாரணம் ஏற்படுகின்றது என்பதால்தான் பட்டினி ஒரு சிறந்த மருந்து (லங்கனம் பரம ஓளஷதம்) என்ற முதுமொழி வழக்கிலுள்ளது இதனையே இஸ்லாம் நோன்பு என்ற கட்டாயக்கடமையாக்கியுள்ளது.

இதை எங்குசென்றும் நாம் தெரிந்து கொள்ளவேண்டியதில்லை. ஆறறிவு அற்ற (Sixth Sense) பிராணிகள் நோயிற்றிருக்பொழுது அவை இரை திண்ண மறுப்பதை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.

ஒரு மாத ரமளான் நோன்பின் போது ஜீரண உறுப்புக்கள் பணி ஓய்வு பெற்று செப்பனிட்டு புதுப்பிக்கப்படுகின்றன வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரப்பது குறைந்து வயிற்றில் ஏற்படும் புண்கள் விரவில் குணமாக நோன்பு உதவுகின்றது இதனை தெளிவு செய்ய எங்கும் போகவேண்டாம்

மனித சக்தியால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அறிவியல் உபகரணங்கள் மோட்டார் வாகனங்கள் பெரிய தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் எந்திரங்கள் இவைகளை இத்தனை மணிநேரம் ஓடவிட்டால் இத்தனை கீ.மீ தூரம் ஓடிவிட்டால் சர்வீஸ் செய்துகொள்ளுங்கள் என்கிறோமே அதே போல்தான் 11 மாதங்கள் ஓடிய உடலுறுப்புகளை 1 மாதம் சுத்தம் செய்து நோன்பு என்ற போர்வையில் சாவீஸ் செய்து கொள்கிறோம்.

உடல் பருமன் உள்ளவர்கள் நோன்பிருப்பதால் கட்டுப்பாடான உணவினால் உடலைக்குறைத்துகொள்வதுடன் நோன்பு இரத்த நாளங்களின் மென்தன்மையை நீடிக்க செய்வதால் இரத்த நாளங்கள் தடித்து உயர் இரத்த அழுத்தம் மாரடைப்பு முதலிய கடுமையான நோய்களில் இருந்து பாதுகாப்பு பெறலாம்.

தொடர்ந்து ஆண்டுதோறும் 1 மாத காலம் நோன்பிருப்பவரின் ஆயட்காலம் அதிகரிப்பதுடன் உயர்ந்த இறையுணர்வு வழங்கி உணவிலும்; உறக்கத்திலும் கட்டுப்பாட்டை தோற்றுவித்து ஒழுக்கத்தையும் புலனின்பங்களை வென்றுவிடும் மன வலிமையை தந்து மனித வாழ்வை சிறக்க செய்கின்றது.

இதனால்தான் அண்ணல் நபி(ஸல்) அருளியுள்ளார்கள்.
நோன்பு என்பது மனித குலத்திற்கு ஓர் கேடயமாகும் (நபி மொழி)

1. நோன்பு பசியையும் தாகத்தையும் முறியடித்து ஐம்புலன் ஆசைகள் என்ற கோட்டையையும் தகர்த்து விடுகின்றது (அல்லாம இக்பால்)
2. நோன்பு நோற்பதால் மனநிம்மதி கிடைக்கின்றது இச்சைகளின் வேகம் குறைகின்றது கெட்டவைகளும் பாவங்களும் விலகிச்செல்கின்றன(டாக்டர் மைக்கேல்)
3. நோன்பு ஆத்ம நோய்களுக்கு பரிகாரம் அது ஆத்மாவை பரிசுத்தம் அடைய செய்கிறது. (டாக்டர் சாமுவேல்)
4. இஸ்லாமிய நோன்பு மனிதனை எதையும் தாங்கும் இதயம் உள்ளவராக மாற்றுகின்றது. அதேசமயம் வறுமையில் வாடும் ஏழைமக்களின் பசி உணர்வு இவைகளை அறிய துணைபுரிகின்றது. (டாக்டர் ராபர்ட் ஜான்)

மேலே கண்ட அறிஞர்களின் கருத்துபடியும் நமது கட்டுரையில் கண்டுள்ள ஆய்வின் படியும் நோன்பு என்பது அறிவியல் வெளிப்பாட்டுடன் கூடிய மனநிறைவான தாக்கமே என புலனாகிறது அதனால்தான் இஸ்லாம் மனித குலத்திற்கு நோன்பை கட்டாயக்கடமையாக்கியுள்ளது எனக்கூறி எனது சிற்றறிவிற்கு தெரிந்த ஒரு சில விஷயங்களை இக்கட்டுரையின் மூலம் சமர்ப்பிப்பதில் பெருமைகொள்கிறேன். இன்ஷாஅல்லா கட்டுரைகள் பல இன்னும் தொடரும் . . . . . . வ ஆகிரிதாவன ரப்பில் ஆலமீன் T.S.. ஜாகிரா தஸ்னீம் ......T.S.. ஜாகிரா தஸ்னீம், இளங்கலை பட்டம், கணினியுடன் வணிகவியல், இரண்டாம் ஆண்டு, 22 பெரியமீரான் தெரு, இளையான்குடி – 630702

கட்டுரை எழுதியிருக்கும் T.S.. ஜாகிரா தஸ்னீம் ) சகோதரியும், தூங்காலயன் அப்துல் ரசாக் ஷானவாஸ் - ஆமத்தூரான் அப்பாஸ் ரஹ்ம்த்னிஷா தம்பதியரின் குமாரத்திகளில் ஒருவர் .

3.தொற்றுநோயைத் தவிர்க்கும் பழம்-காய்கறிகள்

பழங்கள், காய்கறிகளை அதிகம் சாப்பிடுவதால்,அவற்றில் காணப் படும் குவர்சடின் எனும் வேதிப் பொருள் நமது உடலில் `ஃப்ளூ' போன்ற தொற்றுநோய்கள் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைப்பதோடு, மன அழுத்தத்தை தாங்கக்கூடிய சக்தி யையும் அளிக்கிறது.

தடகள வீரர்கள், ராணுவத்தினர் உள்ளிட்ட படையினர் கடுமையான பயிற்சியில் ஈடுபடும்போது இந்த வேதிப்பொருள், அவர்களின் உடலுக்கு தாங்கும் திறனைக் கொடுக்கிறது. திராட்சை உள்ளிட்ட பல்வேறுவகை பழங்களிலும், சிவப்பு வெங்காயம் மற்றும் காய்கறிகளிலும், தேநீரிலும் குவர்சடின் வேதிப்பொருள் காணப்படுகிறது.


எலிகளை வைத்து நடத்தப்பட்ட சோதனையின் அடிப்படையில் குவர்சடின் வேதிப்பொருள் மனிதர்களுக்கும் செயல்படக்கூடியது என்பதால், பழங்கள்-காய்கறிகளை அதிக அளவில் சாப்பிடுவோருக்கு நோய்த் தாக்குதல் குறைவு என்று தெரியவந்துள்ளது.

எலிகளை தீவிர சோதனைக்குட்படுத்தி, அவற்றை குவர்சடின் உள்ள பொருட்களை உணவாகக் கொடுத்து ஒரு பிரிவாகவும், குவர்சடின் இடம்பெறாத உணவுப் பொருட்களைக் கொடுத்து வேறு ஒரு பிரிவாகவும் பிரித்து சோதிக்கப்பட்டது.

அந்த எலிகள் அனைத்தும் ஹெச்1என்1 வைரஸ் செலுத்துதலுக்கு உட்படுத்தப்பட்டு சோதித்துப் பார்க்கப்பட்டன. இதில் குவர்சடின் வேதிப்பொருள் கொண்ட உணவைச் சாப்பிட்டதுடன் கடுமையான உடற்பயிற்சிக்கு உட்படுத்தப்பட்ட எலிகளுக்கு வைரஸ் நோய் தாக்குதல் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

2.மீன் சாப்பிட்டால் இதய நோய் வராது

மீன் உள்ளிட்ட கடல் வகை உணவுகளைச் சாப்பிட்டால் இதய நோய் வராது என்பது அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மீன் உள்ளிட்ட கடல் உணவு வகைகளை தொடர்ந்து நாம் சாப்பிட்டு வந்தால் இதய ரத்த நாளங்களில் கொழுப்பு படியாது என்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க காலேஜ் ஆப் கார்டியோலோஜி பத்திரிகையில் இந்த ஆய்வு குறித்து விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடல் வாழ் மீன் வகைகளில் உள்ள ஒமேகா3 எண்ணெய் இதயத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. ஜப்பானில் இதய நோய் மற்றும் மாரடைப்பு மிக மிகக் குறைவாக இருப்பதற்கு அவர்களது அன்றாட உணவில் மீன் இடம் பெறுவதே காரணம்.

40 வயதிலிருந்து 49 வயதுக்குள்பட்ட 868 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில்281 பேர் ஜப்பானைச் சேர்ந்தவர்கள். 306 பேர் வெள்ளையர்கள். 281 பேர் அமெரிக்காவில் வசிக்கும் ஜப்பானியர்கள்.

இவர்களுக்கு ரத்த பரிசோதனை உள்பட அனைத்து சோதனைகளும் செய்யப்பட்டன. இதய ரத்த நாளங்களின் அடர்த்தி, கொழுப்புச் சத்து ஆகியவை கணக்கிடப்பட்டன.

அதுபோல் ரத்தத்தில் கால்சியத்தின் படிவு எவ்வளவு என்பதெல்லாம் சோதனை மூலம் பதிவு செய்யப்பட்டது. இதில் மீன்களை அதிகம் சாப்பிடும் ஜப்பானியர்கள் உடலில் இதய நோய்களைத் தடுக்கும் ஒமேகா 3 எண்ணெய் மற்றவர் களை விட இரண்டு மடங்கு அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

வெள்ளையர்களுக்கும் அமெரிக்காவில் வாழும் ஜப்பானியர்களுக்கும் ஒமேகா 3 எண்ணெய் ஒரே அளவில் தான் இருந்தது. எனவே மீன்களை அதிகம் சாப்பிடும் ஜப்பானியர்களுக்கு ரத்தத்தில் ஒமேகா 3 எண்ணெய் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

1.தேளின் நஞ்சும் மருந்தாகிறது

தேளின் நஞ்சு கட்டிகளைக் குணப்படுத்தும் மருத்துவ குணம் உள்ளதாம். கட்டிகள் என்றால் புற்று நோய்க் கட்டிகள். அதிலும் குறிப்பாக அறுவை செய்து அகற்ற முடியாத கட்டிகளைக் குணமாக்கும் ஆற்றல் உள்ளதாம். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செல்களை மட்டும் இந்த நஞ்சு தாக்குமாம். நல்ல நிலையில் உள்ள செல்களைத் தாக்காதாம்.

தேளின் நஞ்சு மனிதர்களைக் கொல்லக் கூடிய அளவு நச்சுத் தன்மை கொண்டது அல்ல. மார்பு, தோல், மூளை, நுரையீரல் ஆகிய இடங்களில் பாதிக்கும் புற்றுநோய் செல்களைத் தாக்கும் நச்சுத் தன்மை உள்ளது என்பதை ஆய்வுகள் வெளிப் படுத்துகின்றன. இதன் நஞ்சை 59 நோயர்களுக்குச் செலுத்திப் பார்த்ததில், நோயால் இறந்துவரும் காலத்தை விடக் கூடுதலாக 3 மாதங்கள் உயிருடன் இருந்திருக்கிறார்கள். இந்த ஆய்வை மாசசூசட்ஸ் ஆய்வு நிலையம் செய்து பார்த்துள்ளது.

சிகாகோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் பலவிதப் புற்றுநோயர்களுக்குச் செலுத்திப் பரிசோதனை செய்து வருகின்றனர். அதேபோல, கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் நோயர்களுக்கு தேளின் நஞ்சை கீமோதெரபி மருந்துடன் சேர்த்து செலுத்தி ஆய்ந்து வருகின்றனர்.

தொடக்க நிலையில் இருந்து வரும் ஆய்வுகள் மேலும் நம்பிக்கையைத் தரும் வகையில் அமைந்திருப்பதால், ஆய்வுகள் தொடர்கின்றன. மருந்தே கண்டுபிடிக்க முடியாத இந்த நோய்க்கு முடிவைத் தரும் மருந்தை மருத்துவ அறிவியல் கண்டுபிடித்து மனித குலத்தைக் காப்பாற்றும் என நம்பிக்கை துளிர்க்கிறது.

மேலும் படிக்க...Read more...

மருத்துவம் பகுதி 4

Type your summary here
மருத்துவம். வாஞ்ஜுர்

உயிர்வாழ உண்ணுங்கள்! உண்பதற்காக வாழாதீர்கள்!!
உணவே மருந்து! மருந்தே உணவாவதைத் தவிர்த்திடுவீர்!

1 • அதிர்ஷ்டம் என பலர் நம்பும்(!)மாறுகண் பார்வை குறைபாட்டுக்கு சிகிச்சை என்ன?
2. உடல் உள்ளுறுப்புகளை பாதுகாக்கும் சீரகம்
3. சருமத்தை பாதுகாக்கும் பழங்கள்
4.குழந்தைகள் எலும்புகள் வலுவாக கால்சியம் சத்து அவசியம
5. ரூபாய் நோட்டு மூலம் தொற்று நோய்!
6. காக்கா வலிப்பு நோய்க்கு மருந்தே கிடையாதா?
7. இதயமே...இதயமே...
8. பெண்களுக்கு ஏன் இதயநோய்?
9.நேஷல் அலர்ஜி (அலர்ஜியுடையசுவாச பாதை.)
10.தொடை, கால், பாதம் போன்ற பகுதியில் வலி

1• அதிர்ஷ்டம் என பலர் நம்பும்(!)மாறுகண் பார்வை குறைபாட்டுக்கு சிகிச்சை என்ன?

மாறுகண் பார்வை அதிர்ஷ்டத்தின் அடையாளம் என்பது கிராமப் புறங்களில்பரவிக்கிடக்கும் பல்வேறு மூடநம்பிக்கைகளில் ஒன்று. அது கண்ணில் உள்ள ஒருவகை குறைபாடுஎன்பதையும், அதற்கான சிகிச்சையைஉரிய நேரத்தில் மேற்கொள்ளாவிட்டால் அது குழந்தைகளின் எதிர்காலத்தையே இருட்டடிப்பு செய்துவிடும்என்பதையும் பெரும்பாலானவர்கள் அறிந்து வைத்திருப்பதில்லை.

அப்துல் ஐந்து வயது சிறுவன். அவன் வீட்டிற்கு அவன் தந்தையின்நண்பர் வந்திருந்தார். சற்று நேரம் அவனோடு பேசிக் கொண்டிருந்தார். நண்பர் அப்துல் இடம்ஒரு சாக்லெட் பாக்கெட்டை கொடுத்தார். அப்துல் சாக்லெட் டப்பாவை நேராகப் பார்க்காமல்தலையை சாய்த்து, ஒரு கண்ணால் மட்டுமேபார்த்தவாறு வாங்கினான்.

அதனை கவனித்த நண்பர்;அப்துலின் தந்தையிடம் அப்துலுக்கு மாறுகண் பார்வை பிரச்சினை இருக்கும்போல் தெரிகிறது.உடனே கண் மருத்துவரிடம் அழைத்துச் சென்று உரிய ஆலோசன பெறுவது நல்லது என்று அறிவுறுத்தினார்.

அதற்கு அவன் தந்தையோ அப்துலுக்கு மாறுகண் பார்வை என்பது அவன்ஆறு மாத குழந்தையாக இருக்கும்போதே தெரியும். அவன் பாட்டி இது அதிர்ஷ்டத்தின் அடையாளம்என்று சொன்னதால் அப்படியே விட்டுவிட்டோம்.

இது ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லையே! என்று சொல்ல, நண்பரோ மிகவும் வேதனயுடன் நீங்கள் செய்வதுதவறு. மாறுகண்ணுக்கும் அதிர்ஷ்டத்திற்கும் எத்தகைய தொடர்பும் கிடையா.து மாறுகண் உள்ளஎல்லோருமே அதிர்ஷ்டசாலிகளா? கிடையாது.உண்மையில், மாறுகண் ஒரு கண் நோய்ஆகும். குழந்தைப் பருவத்திலேயே கவனிக்காவிடில் பின்னர் பல பிரச்சினகள் வரலாம்.

குழந்தைப் பருவத்திலேயே கண் மருத்துவரின் ஆலோசனப்படி பயிற்சிகளோஅல்லது ஆபரேஷனோ மேற்கொண்டால் எதிர்காலத்தில் பிரச்சினை ஏதுமின்றி நல்ல பார்வையுடன்திகழலாம் என்று ஆலோசனை கூறினார்.


நண்பரின் ஆலோசனப்படி அப்துலை குழந்தைகள் கண் சிகிச்சைப் பிரிவிற்குஅழைத்து வந்தார் அவர் தந்த. முழுமையான பரிசோதனக்குப்பின் மாறுகண் சரிசெய்தல் (Squint Correction) எனப்படும் எளிமையானஆபரேஷன் செய்யப்பட்டது. இப்போது அப்துல் பொருட்களை நேராக தெளிவாகப் பார்க்கிறான்.

ஆக, மாறுகண் பார்வை என்பது சிறு வயதிலேயே கவனிக்கப்பட வேண்டிய ஒரு குறைபாடு என்பதை நாம் சரியாக புரிந்துகொள்ளவேண்டும்.

மாறுகண் என்றால் என்ன?

பொதுவாக இரண்டு கண்களும் ஒரே நேரத்தில் ஒரே பொருளை தெளிவாகப்பார்க்கவேண்டும். அதுவே சிறப்பான பார்வை எனப்படுகிறது. நம் ஒவ்வொரு கண்ணையும் ஆறு தசைநார்கள் தாங்குகின்றன. இரண்டு கண்களுமே நேரான பார்வையப் பெறுவதற்கு வசதியாக, ஒரே இலக்கினை நோக்கிப் பார்ப்பதற்கு வசதியாகஅமைந்துள்ளது.

ஒரு பொருளைப் பார்க்கும்பொழுது, பார்க்கும் பொருளிலிருந்து வரக்கூடிய ஒளிக்கதிர்கள்இரண்டு கண்களிலும் உள்ள கார்னியாவில் குவியவேண்டும். கார்னியாவில் குவிந்த ஒளிக்கதிர்கள் கண்ணின் உள்ளே பின்புறச் சுவரான விழித்திரையில் குவிந்து பிம்பம் உருவாக வேண்டும்.


அப்போதுதான் நாம் தெளிவான பார்வையப் பெறமுடியும். இரண்டு கண்களும்தாம் பார்க்கும் பொருளின் படத்தை மூளயில் உள்ள பார்வை மண்டலத்திற்குச் சற்றே வித்தியாசமானகோணங்களில் அனுப்புகின்றது. பார்வை மண்டலத்தில் இரண்டு படங்களும் இணந்து ஒரே முப்பரிமாணபடமாக, பார்வை என்ற தீர்க்கமானபுலனாக நமக்கு வெளிப்படுகிறது.

அதற்கு இரண்டு கண்களின் தசை நார்களும் ஒரே சீராக அமந்திருப்பதால்தெளிவான பார்வைய நாம் பெறும்படியாக நம் கண்கள் செயல்படுகின்றன.

ஒரு வேளை இரண்டு கண்களின் தசை நார்களும் ஒரே சீராக இல்லையெனில், அவற்றின் இயக்கமும் ஒரே சீராக இருக்காது.இந்நிலையில், ஒரு கண் மட்டுமே பார்க்கும்பொருளிலிருந்து ஒளிக்கதிர்கள பெற்று விழித்திரையில் பிம்பம் பதிவாகும்படி சிறப்பாகச்செயல்படுகிறது.
தசை நார்கள் சரியாக அமையாத கண், பார்க்கும் பொருளிலிருந்து ஒளிக்கதிர்கள்பெற்று விழித்திரையில் பிம்பம் பதிவாவதை சரிவர செய்வதில்லை. இந்நிலயே ஒன்றரைக்கண் பார்வைஅல்லது மாறுகண் எனப்படுகிற.து ஆங்கிலத்தில் ஸ்ட்ராபிஸ்ம்யுஸ் (Strabismus) என்கிறார்கள்.

மாறுகண் பிரச்சினைக்குக் காரணங்கள் என்ன?
பொதுவாக, இந்தப் பிரச்சினைகுழந்தைகளிடமே அதிகம் காணப்படுகிறது. சிலருக்கு இளமைப் பருவத்திலும் வரலாம். மாறுகண்பிரச்சினைக்கு இதுதான் காரணம் என்று குறிப்பிட்டுச் சொல்லமுடிவதில்லை.

- பரம்பரை மூலக்கூறியல்காரணங்கள்.
- பிரசவத்தின்போது குழந்தையின்கண்ணில் காயம் ஏதாவது ஏற்பட்டிருந்தால்.
- நம் கண்ணின் அசைவுக்குக்காரணமாக இருக்கக்கூடிய ஆறு தசை நார்களும் நமது மற்றொரு கண்ணின் ஆறு தசைநார்களோடு ஒருங்கிணந்துஒரே நேர்கோட்டில் செயல்பட முடியாத சூழ்நிலை இந்த பிரச்சினக்கு ஒரு முக்கியக் காரணமாகிறது.சில நேரங்களில் நரம்புத்தளர்ச்சியும்; (Nerve Palsy) இந்தப் பிரச்சினைக்குக் காரணமாகிறது.

- சில நேரங்களில் தூரப்பார்வைக்குறைபாடு போன்ற பார்வைக்குறைபாடு உடையவர்களுக்கு ஒளிக்கதிர்கள் செல்லும் பாதை உள்நோக்கிமாறும்போது மாறுகண் குறைபாடு ஏற்படலாம்.
- கண் புரை போன்ற குறைபாடுகள்இருந்தாலும் மாறுகண் குறைபாடு ஏற்படலாம்.
- வேறு உடல் நலக்குறைகாரணமாகக்கூட மாறுகண் குறைபாடு ஏற்படலாம்.

எனவே உங்கள் குழந்தைக்கு மாறுகண் குறைபாடு இருக்குமேயானால் முழுமையான கண் பரிசோதனை அவசியம் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

பைனாகுலர் (Binocular Vision பார்வை என்றால் என்ன?
பொதுவாக, இரண்டு கண்களும்ஒருங்கிணைந்து நல்ல பார்வைத் திறனுடன் இருக்கும்பட்சத்தில், நாம் ஒரு பொருளைப் பார்க்கும்பொழுது, நாம் பார்க்கும் பொருளிலிருந்து வரக்கூடியஒளிக்கதிர்கள் இரண்டு கண்களின் விழித்திரையிலும் குவிந்து பிம்பம் உருவாகிறது.
ஆக இரண்டு கண்களும் தாம் பார்க்கும் பொருளின் படத்தை மூளையில்உள்ள பார்வை மண்டலத்திற்கு சற்றே வித்தியாசமான கோணங்களில் அனுப்புகின்றது.

பார்வை மண்டலத்தில் இரண்டு படங்களும் இணந்து ஒரே முப்பரிமாணபடமாக தீர்க்கமான புலனாக நமக்கு வெளிப்படுகிறது. இதனயே சிறப்பான பார்வை அல்லது பைனாகுலர்பார்வை என்கிறோம்.

மாறுகண் குறைபாட்டினால் வரக்கூடிய பிரச்சினைகள் யாவை?
இரண்டு கண்களும் ஒருங்கிணந்து செயல்படாதபொழுது ஒரு பொருளைப்பார்க்கும்பொழுது இரண்டு கண்களும் இரு வேறு பொருள்களைப் பார்தது அவற்றிலிருந்து வரக்கூடியஒளிக்கதிர்கள் விழித்திரையில் குவிந்து மூளையில் உள்ள பார்வை மண்டலத்திற்கு செய்திகளஅனுப்புகிறது.


அங்கே இரண்டு விதமான பிம்பங்களின் பிரதிகள் தெரிவதால் குழப்பம்ஏற்படுகிறது. இக்குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஒருங்கிணந்து செயல்படாத குறைபாடுடய கண்ணிலிருந்துபெறப்பட்ட பிம்பம் தவிர்க்கப்பட்டு சரியாக செயல்படக்கூடிய கண்ணிலிருந்து வரக்கூடியபிம்பத்தை மட்டுமே பார்வை மண்டலம் பெற்றுக்கொண்டு செயல்படுகிறது.

எனவே இக்குறைபாடுடய குழந்தை தீர்க்கமான பார்வை எனும் புலனை பெறஇயலாமல் போகிறது. இந்நிலயில், குறைபாடுடையகண்ணை குழந்தைகள் பயன்படுத்துவதைத் தவிர்த்து விடுகிறார்கள். எனவே அந்த கண் சிறப்பாகசெயல்பட முடியாமல் நாளடைவில் சோம்பேறியாகிறது. இதனை ஆம்பிளியோப்பியா என்கிறோம்.

ஓரளவு வளர்ச்சியடைந்தவர்கள் இரண்டு கண்களிலிருநது;ம் பெறப்படுகின்ற பிம்பத்தை தவிர்க்கமுடியாமல்பொருட்கள் இரண்டிரண்டாக தெரியும் அனுபவத்தைப் பெறுகிறார்கள். இதுவே இரட்டைப் பார்வைஅல்ல ஆங்கிலத்தில் Double Vision எனப்படுகிறது.

மாறுகண் குறைபாட்டின் அறிகுறிகள் எவை?
குழந்தைப் பருவத்தில் பெற்றோர்களே இரண்டு கண்களும் இணநது; செயல்படாமல் வித்தியாசமான கோணத்தில் பார்ப்பதைகவனிக்க முடியும். இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், பிறந்த குழந்தைகளின் கண்கள் எப்போதாவதான்ஒருங்கிணந்து ஒரே கோணத்தில் செயல்படாமல் இருக்கும். எனவே சில நேரங்களில் குழந்தைக்குமாறுகண் இருப்பதுபோல தெரியும்.


ஆனால் மூன்று முதல் நான்கு வாரங்களுக்கு பின்னர், முழுமையாக தீர்க்கமான பார்வையப் பெறும் வண்ணம்இரண்டு கண்களும் ஒரே கோணத்தில் இணந்து செயல்படும். ஒரு வேளை அவ்வாறு இணந்து செயல்படாமல்இருந்தால் அந்தக் குழந்தக்கு, ஒரு கண் மருத்துவரின்முழுமையான ஆலோசனை தேவை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
இளஞர்கள் இரட்டைப் பார்வைக் குறைபாடுகளோ அல்லது இரண்டு கண்களும்ஒரே கோணத்தில் செயல்படாமல் சிரமப்படுவதை அறிகுறியாக உணரமுடியும்.

மாறுகண் நோய் எவ்வாறு கண்டுபிடிக்கப்படுகிறது?
மாறுகண் குறைபாட்டின ஒரு கண் மருத்துவரே குறிப்பிட்டு கண்டறியமுடியும். கண் மருத்துவர் சில குறிப்பிட்ட பரிசோதனகள செய்து மாறுகண் குறைபாட்டினை உறுதிசெய்கிறார்.


முதலில் மாறுகண் குறைபாட்டிற்குப் பார்வைத்திறன் (Refractive Error) காரணமாக இருக்கிறதாஎன்பதை அறிய பார்வைத்திறன் குறைபாட்டை அறியும் பரிசோதனை செய்யப்படுகிறது.

சிலருக்குப் பார்வைக் குறைபாட்டின் காரணமாக, மாறுகண் பிரச்சினை வரலாம். எனவே அதற்கு முதலில்சிகிச்சையளிக்கப்படுகிறது. சில வகை மாறுகண் பிரச்சினைக்குப் பார்வைக் குறைபாட்டை சரிசெய்தாலேபோதுமானதாக அமைகிறது.


மாறுகண் குறைபாடு காரணமாக ஆம்பிளியோப்ரியா எனப்படும் சோம்பேறிக்கண் பிரச்சினை இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து அதற்கு முதலில் சிகிச்சையளிக்கப்படுகிறதுஅதன்பின்னரே ஆபரேஷன் தேவைப்படுமேயானால் ஆபரேஷன் செய்யப்படுகிறது.
பொதுவாக, குழந்தைகளப்பொருத்தமட்டில் பெற்றோர்களுக்குச் சிகிச்சையின் முக்கியத்துவம் தீவிரமாக எடுத்துரைக்கப்படுகிறது.ஏனெனில் பெற்றோர், குழந்தை அனைவருடயஒத்துழைப்பே சிசிச்சையின் வெற்றி விகிதத்தை நிர்ணயிக்கிறது.

மாறுகண் பிரச்சினைக்கான ஆபரேஷன் ஒரு கண்ணிலோ அல்லது இரண்டு கண்களிலுமோதேவைப்படுமானால் செய்யப்படுகிறது. இந்த சிகிச்சையின்போது இரு கண்களும் ஒருங்கிணந்துசெயல்படுவதை தடுக்கும் தசையானது ஆபரேஷனின்போது வலுவடைவதோ அல்லது வலுக் குறைவதோ, தசை நார்கள் சமமாகச் செயல்படுவதற்கேற்ப அமைக்கப்படுகிறது.

சிலருக்கு இரட்டைப் பார்வை இருக்கும்பட்சத்தில் முப்பட்டக (Prism) கண்ணாடி வழங்கப்படுகிறது.
மேலும், இக்குறைபாட்டிற்கானகாரணத்தை அறியவும் முயற்சி செய்து எந்த அளவிற்கு குறைபாடுடைய கண் நல்ல கண்ணோடு இணைந்துசெயல்பட முடியாமல் மாறுபடுகிறது என்பதனை கண்டறிகிறார். சிலருக்கு நாசித்துவாரங்களின்அமைப்பு மாறுகண் உள்ள போன்ற பொய்த் தோற்றத்தை உருவாக்கலாம்.

ஒரு கண் மருத்துவர் மட்டுமே மாறுகண் போன்ற பொய்த் தோற்றத்திற்கும்(False Squint) உண்மையாகவே பாதிக்கப்பட்டமாறுகண் (True Squint) பிரச்சினக்கும் உள்ள வித்தியாசத்தை கண்டறிய முடியும்.

மாறுகண் பிரச்சினைக்குச் எப்போது சிகிச்சை தேவை?
- குழந்தைகளைப் பொருத்தமட்டில்மாறுகண் பிரச்சினக்கும் அது சார்ந்த ஆம்பிளியோப்பியா பிரச்சினக்கும் எவ்வளவு விரைவாகசிகிச்சையளிக்கப்படுகிறதோ அதுவே மிகச் சிறந்ததாகும்.
- பொதுவாக ஆம்பிளியோப்பியாமற்றும் மாறுகண் பிரச்சினைக்கான சிகிச்சை, குழந்தைப்பருவத்திலேயே வழங்கப்படும் பட்சத்தில் மட்டுமே பார்வையைப் பாதுகாப்பதற்கான வாய்ப்புஅதிகரிக்கிறது.

- நினவிருக்கட்டும்.மாறுகண் நாளடைவில் குழந்தை வளரும்போது சரியாகிவிடும் என்பது தவறு.
- சிகிச்சையளிப்பதில்தாமதம் ஏற்பட்டால், பார்வையை மீட்கவும்இரண்டு கண்களும் மிக சீராக இணந்து செயல்படும் வாய்ப்பும் குறையலாம்.
மாறுகண் பிரச்சினக்குச் சிகிச்சையளிக்க வேண்டியதன்முக்கியத்துவம் என்ன?
- நமது அல்லது நம் குழந்தைகளின்பார்வையப் பாதுகாப்பதற்கும் அல்லது இழந்த பார்வையை மீட்டுத்தருவதற்கும் மாறு கண் பிரச்சினக்குச்சிகிச்சை அவசியம்.

- இரண்டு கண்களையும்ஒருங்கிணந்து செயல்பட வைப்பதற்கு சிகிச்சை அவசியம்.
- பைனாக்குலர் பார்வைஎனப்படும் தீர்க்கமான பார்வையை மீட்டுத் தருவதற்கு சிகிச்சை அவசியம்.

சிகிச்சைக்குப் பின்னர் கண்ணாடி அணிவது அவசியமா?
அவசியமே. ஏனெனில் ஆபரேஷன் கண்ணாடி அணிவதற்கு மாற்றாக முடியாது.ஒரு வேளை குழந்தைகளுக்கு குறிப்பிடத்தக்க பார்வைக் குறை இருக்கும் பட்சத்தில் கண்ணாடிஅணிவது மிகவும் அவசியமே. சில குழந்தைகளுக்கு கண்ணாடி அணிவதால் மாறுகண் பிரச்சினை சரியாவதுஉண்டு. சில குழந்தைகளுக்கு கண்ணாடி அணிவதால் மட்டுமே பொருள்களைத் தெளிவாகப் பார்க்கமுடியும்.


இந்தத் தெளிவான பார்வை மட்டுமே ஆம்பிளியோப்பியா எனப்படும் பிரச்சினைக்குச்சிகிச்சையளிப்பதற்கும் இரண்டு கண்களும் ஒருங்கிணந்து செயல்படுவதற்கும் ஆபரேஷனுக்குபின்னர் உதவி செய்யும். நினவிருக்கட்டும். மாறுகண் அதிர்ஷ்டத்தின் அடையாளம் அல்ல. அதுகுழந்தைகளின் எதிர்காலத்தையே இருட்டடிப்பு செய்யக்கூடிய கண் நோய். மாறு கண் குழந்தைகளுக்கு, அடிப்படைத்தேவை குழந்தைகள் கண் நல நிபுணரின்ஆலோசனை.

அது ஒரு பள்ளிக்கூடம்.
இரண்டாம் வகுப்பு மாணவ_மாணவிகள்ஆசிரியை கரும்பலகயில் எழுதிய பாடத்தைப் பார்த்து தங்கள் நோட்டுகளில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.நான்காவது வரிசயில் அமர்ந்திருக்கும் குமரன் மட்டும் எழுதாமல் கரும்பலகயையே பார்த்துக்கொண்டுஅமர்ந்திருக்கிறான். ஆசிரியை அவனருகே வந்து அவன பாடத்தை எழுதுமாறு அறிவுறுத்திவிட்டுமற்ற மாணவர்களக் கவனிக்கிறார்.


ஆனால் குமரன் மட்டும் எழுதவேயில்ல. ஆசிரியை அவனருகே வந்து மீண்டும்சற்று தன் குரல உயர்த்தி அவன பாடத்தை எழுதுமாறு சொல்கிறார். அவன் தலய ஆட்டிவிட்டு எழுதமுயற்சிக்கிறான்இ ஆனால் எழுதவில்ல. ஆசிரியைக்குச் சற்று கோபம் வருகிறது.

''ஏன் எழுதாமல் இருக்கிறாய்?'' மாணவன் பதில் சொல்லவில்ல.
''உன்னத்தானே கேட்கிறேன்ஏன் எழுதாமல் இருக்கிறாய்?''


மாணவன் தலையக் குனிந்தவாறு நிற்கிறான். உனக்கென்ன இவ்வளவு திமிராநீ பாடத்தை எழுதிவிட்டுத்தான் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று அவனக் கட்டாயப்படுத்கிறார்ஆசிரியை. பள்ளி வேலைநேரம் முடிந்து மற்ற மாணவ மாணவியர் அனவரும் வீட்டிற்குக் கிளம்பிவிட்டார்கள்.அவன் மட்டும் தனியே அமர்ந்திருக்கிறான். வகுப்பறய சுற்று முற்றும் பார்க்கிறான். அவனத்தவிரஇஆசிரிய உள்பட எல்லோரும் வெளியேறி விட்டார்கள். அவன் மெவாக எழுந்து முதல் வரிசக்குச்செல்கிறான். இப்போது கரும்பலகயப் பார்க்கிறான். நோட்டில் பாடத்தை வேகமாக எழுகிறான்.

தினசரி இந்தச் சம்பவம் தொடர்கிறது.
ஒரு நாள் ஆசிரியை சற்று ஆச்சரியத்டன் கண்காணிக்க அவருக்கு விஷயம்புரிந்தது. குமரனனின் கண்ணில் ஏதோ பிரச்சின இருக்கலாம் என்று சந்தேகத்துடன் அவன பெற்றோரவரவழத்து சொன்னார். குமரனப் பரிசோதித்த டாக்டர் ''குமரனப் போல சொல்லத் தெரியாமல் அல்ல சொல்வதற்குப் பயந்துகொண்டுஅல்ல இதான் இயல்பான பார்வ என்று நினத்து சிரமமான வாழ்க்க வாழ்ந்து கொண்டிருக்கக்கூடியகுழந்தகள் ஏராளம்'' என்கிறார்.

ஆம் குமரனுக்குக் கிட்டப்பார்வக் கோளாறு. ஒரு நல்ல ஆசிரிய கிடத்தகாரணத்தால் உரிய நேரத்தில் குமரனுக்கு கண் பரிசோதன செய்யப்பட்டுஇ தற்போது கண்ணாடி அணிந்வருகிறான். மிக நன்றாகப் படிக்கிறான்.


கண்ணே கண்மணியே என்று குழந்தகளக் கொஞ்சி மகிழும் நாம் நம் குழந்தகளின்கண் நலம் குறித்து முறயான விழிப்புணர்வப் பெற்றிருக்கிறோமா? கேள்விக்கு விட தேவயான விழிப்புணர்வு இல்ல என்பதே.

குழந்தைகள் தங்களுக்கு கண்ணில் குறபாடு இருக்கிற என்பத அவர்களாகவே புரிந் கொள்ளமுடியாது. உதாரணமாக கண்ணில் குறபாடு உள்ள குழந்தகள் அந்த குறபாடுகளுடனேயேதமது வேலகளை இதுதான் இயல்பான பார்வ என்ற எண்ணத்துடன் செய்கின்றனர். இதன பெற்றோர்களும்ஆசிரியர்களும் மட்டுமே கவனித்து தேவயான உதவியை குழந்தகளுக்குச் செய்யலாம். குழந்தகளின்கண் நலத்தில் குழந்தகளின் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மிக முக்கியமான பங்குஇருக்கிற.த

2. உடல் உள்ளுறுப்புகளை பாதுகாக்கும் சீரகம்

தினமும் வீடுகளில் பல வகைகளில் சமையலுக்குப் பயன்படும் 'சீரகம்', வாசனைப் பொருட்களில் தனி இடம் பெற்றுத் திகழ்ந்தாலும், ஒரு சிறந்த இயற்கை மருந்தாக அனேக வழிகளில்நமக்கு உபயோகப்படுகிற.து இத்தாவரத்தின் விதைகள்தான் நாம் பயன்படுத்தும் சீரகம். பண்டக்காலத்திலிருந்தேஇந்தியாவில் சீரகம் எளிய மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறத

பெயர் வந்த விதம்: நம உடம்பின் உள்ளுறுப்புகளில் ஏற்படும் பலவகசீர்கேடுகளச் சரிசெய்யும் குணம்கொண்ட வாசனைப் பொருள் Spice என்பதால், இதற்கு தமிழில் 'சீரகம்' என்று தாவர இயல் நிபுணர்கள் பெயர் வைத்தார்கள். சீர்-அகம் ஸ்ரீசீரகம். அகத்தைச் சீர் செய்யும் ஓர் ஒப்பற்ற இயற்கை மருந்து சீரகம்.

சத்துப் பொருட்கள்: நூறு கிராம் சீரகத்தில் அடங்கி உள்ள சத்துப்பொருட்கள் கீழ்க்கண்டவாறு உள்ளன. புரதம் 17.7 கிராம், கொழுப்பு 23.4 கிராம், பொட்டாசியம்2.1 கிராம், சுண்ணாம்புச் சத்து 0.9 கிராம், பாஸ்பரஸ் 0.5 கிராம், சோடியம் 0.2 கிராம், இரும்புச்சத்து48.1 மில்லி கிராம், தயாமின் 0.8 மில்லிகிராம், ரபோஃபிளேவின்0.4 மில்லிகிராம், நியாசின் 2.5 மில்லிகிராம், அஸ்கார்பிக்அமிலம் 17.2 மில்லிகிராம், வட்டமின் ஏ 175 ஐ.யு.


பொதுப் பயன்கள்: சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது.பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் உபப்பொருளாக பங்கு வகிக்கிற.து சூப் வகைகள், சாஸ் வகைகள், ஊறுகாய் வகைகள் தயாரிக்க இதுவும் இடம் பெறுகிறது.மிட்டாய், கோக், ரொட்டி வகைகள் செய்வதற்கும் பயன்படுகிறது.

செரிக்காமை, வாயுத் தொல்லஇவைகளுக்கு மாமருந்.து பித்தத்தை மொத்தமாகப் போக்கும். பசியைத் தூண்டும். குடல் கோளாறுகளக்குணப்படுத்தும் எளியமருந்து வயிற்றுப் பொருமல்,உடல் அசதி போக்கும். நரம்புகளை வலுப்படுத்தும்.

மருத்துவப் பயன்கள்:

சீரகக்குடிநீர்: தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டுநன்கு கொதிக்கது வத்து 'சீரகக் குடிநீர்' தயார் செய்து வைததுக் கொள்ளவும். இதை, நாள்முழுதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம்பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும் தன்மையும் ஆகும் இந்தச் சீரக நீர்.

- சிறிது சீரகத்தை மென்றுதின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.
- மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.

- சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக்கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம்மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக்குணமாகும்.

- சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலிஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராகஇயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும்.எனவே, வாரம் ஒருமுற தடுப்புமுறையாகக் கூட (Prophylactive) (இதைச் சாப்பிடலாம்.

- உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்குஉண்டு. எனவே, தினம் உணவில் சீரகதi;த ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்வோம்.

- திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்தநோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்தஅழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.


- சிறிது சீரகம், நல்லமிளகு பொடிதது;, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.

- அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டிபொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம்மாறும். ஆரம்பநில மனநோய் குணமாகும்.

- சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டுசிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாகசாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.

- சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டுவர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சிகுணமாகும்.

- சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.

- சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.

- ஓமத்துடன் சிறிதுசீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.

- பெண்களுக்கு ஏற்படும்வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன்சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில்கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும்.

- சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.
- சீரகத்தை தேயிலைத்தூளுடன் சேர்தது கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணமாகும்.
- கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்துசாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும்.
- மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால்உடல் எடை குறையும்.

3. • சருமத்தை பாதுகாக்கும் பழங்கள்
வைட்டமின்கள்-ஏ நிறைந்த பப்பாளிப் பழத்தின் தோலைசீவி அதை நன்குகூழ் போல ஆக்கி முகத்தில் 'பற்று"போலப் போட சருமத்தின் நிறம் கூடும். சருமம் பட்டுப்போல மென்மையாகும்.


ஆப்பிள் பழம் வைட்டமின் ;நிறைந்தது. இதையும் தோல் சீவி கூழ்போல ஆக்கி முகத்தில் 'பற்று" போல போட முகத்தில் வரும் கரும்புள்ளிகள் நீங்கும்.

சாத்துக்குடி பழமும் சி-வைட்டமின் செறிந்தது தான். இதன் மேல்தோல்- உள்தோல் இரண்டையுமே உரித்து அதை நன்கு பிசைந்து அதை முகத்தின் மீது அப்படியேவைக்கலாம். அல்லது இதன் சாற்றை முகத்தில் தடவலாம். முகத்தில் அதிகம் உள்ள எண்ணெய் பசையைஇது நீக்கி- சருமத்தைப் பாதுகாக்கும்.

ஆரஞ்சு(கமலா) பழமும் வைட்டமின்-சி நிறைந்தது. இதைசாத்துக்குடியைச்செய்வது போலச் செய்யலாம். இதன் சாறு சருமத்திற்கு பளபளப்பு தரும்.


கொய்யாப்பழமும் வைட்டமின்-சி அதிகம் கொண்டது. இதை நன்கு கூழ்போலஆக்கி முகத்தில் ஆகப் போட முகம் பளபளக்கும். நிறம் மேம்படும். எல்லா காலங்களிலுமே கிடைக்கும். வாழைப்பழம் உலர் சருமத்திற்கு மிகவும் நல்லது. இதை கூழ்போல ஆக்கி முகத்தில் பேக் போலப் போட வேண்டும். உலர் சருமம் உடையவர்களும், 40 வயது தாண்டியவர்களும்இதைப் பயன் படுத்தலாம்.


இந்த 'பேக்கு"களைபருக்கள் இருக்கும் போது கூட பயன்படுத்தலாம். இதைப் போட்ட பின்பு சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊறி பின்பு வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவலாம்.பழங்களைப் போலவே நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளையும் கூட நாம் சருமத்திற்குப்பயன்படுத்தலாம்.

வாழை இலையில் சாப்பிட்டால் தோல் பளபளப்பு உண்டாகும். கபம், வாதம் தீரும், பித்தத்தை சமப்படுத்து

4.குழந்தைகள் எலும்புகள் வலுவாக கால்சியம் சத்து அவசியம

எலும்புகள் மற்றும் பற்கள் வலுவாக இருக்க கால்சியம் சத்து மிகவும்அவசியம். ஆனால் தற்போது பெரும்பாலான குழந்தைகளுக்கு கால்சியம் சத்துக் குறைவாக உள்ளது.சின்ன வயதில் இப்படி காணப்படும் குழந்தைகள்,வயது வந்த பருவத்தில் எலும்பு முறிவுகளுக்கு எளிதாக ஆளாகிறார்கள்.

லேசாக அடிபட்டால்கூட கை - கால் மற்றும் இடுப்பு எலும்புகள் முறிந்துபோகும். ஆஸ்டியோபோராசிஸ் எனப்படும் எலும்பு நோய் எளிதாக தாக்கும் வாய்ப்பு உள்ளது.
குழந்தைப் பருவத்தில் முதல் 2 வயதில் தாய்ப்பால் மூலம் கால்சியம் சத்து கிடைக்கிறது. ஆனால்பிற்பாடு என்ன மாதிரியான உணவுகளை சாப்பிடுகிறார்கள் என்பதைப் பொறுத்தே கால்சியம் சத்துகிடைக்கிறது. பண்ணைப் பொருள்கள் மூலம் கால்சியம் சத்து தாராளமாக கிடைக்கும் என்று கருத்து உள்ளது.

ஆனால் காலி பிளவர் போன்றகாய்கறிகளுடன் ஒப்பிடும் போது பண்ணைப் பொருள்கள் பெரிய விஷயமே அல்ல. இதனால் சின்ன வயதிலிருந்தேகுழந்தைகளை காய்கறிகளை விரும்பிச் சாப்பிட பழக்க வேண்டும்.


கால்பந்து, கைப்பந்து, கபடி,ஓட்டம், நீச்சல் போன்ற விளையாட்டுகள்மூலம் கால்சியம் சத்து அதிகரித்து, எலும்புகளும்வலுவாகும். ஆனால் பெண் குழந்தையாக இருக்கும்பட்சத்தில் பூப்பெய்திய பிறகு மாத விலக்குமூலம் இழப்பை வைட்டமின் டி தான் வகை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

5. ரூபாய் நோட்டு மூலம் தொற்று நோய்! மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை
தொற்றுக் கிருமிகளை கண்டுபிடித்து உடனுக்குடன் முன்னெச்சரிக்கைநடவடிக்கை எடுக்க புது வழிகளை கையாள மருத்துவ வல்லுநர்கள் முடிவு செய்துள்ளனர். ரூபாய்நோட்டு மூலமும் கண்டுபிடிக்கலாம் என்று கூறியுள்ளனர். லண்டனில் இருந்து வெளிவரும் ஆன்லைன்மருத்துவ இதழான, 'நியூ சயின்டிஸ்ட்"என்ற இதழில் இதுகுறித்து கூறியிருப்பதாவது:

தொற்றுக்கிருமிகள் எப்படி பரவுகின்றன என்று லண்டன் பல்கலைக்கழககுயின்மேரி கல்லூரி மருத்துவ ஆராய்ச்சி வல்லுநர் குவாங்காங் ரென் ஆராய்ச்சி செய்துள்ளார்.அவர் சில வித்தியாசமான தகவல்களை கூறியுள்ளார் தன் ஆய்வுக் குறிப்பில்...

தொற்றுக் கிருமிகள் என்பது பல வழிகளிலும் மனிதர்களை தொற்ற முடியும்.காற்று மூலம் பரவும் தொற்றுக் கிருமிகள் குறைவுதான் என்றாலும், சில வானிலை பருவ காலங்களில் இப்படிக் காற்றுமூலம் பரவும் தொற்றுக் கிருமிகள் மிகவும் மோசமானதாக இருக்கும்.
சில இ.டங்களில் தொடர்பு ஏற்படுவதன் மூலம் கூட தொற்றுக் கிருமிகள்தொற்ற வாய்ப்புண்டு. குறிப்பாக சொன்னால், வங்கிகள்அளிக்கும் ரூபாய் நோட்டுகளில் இருந்துகூட தொற்றுக் கிருமிகள் வர வாய்ப்புண்டு. அதனால், அவற்றில் வைரஸ் தாக்குதலை தடுக்கும் 'ஆன்ட்டி வைரஸ் கோட்டிங்" தருவது முக்கியம்.அப்படி தந்தால், தொற்றுக்கிருமிகளைதடுக்க ஓரளவு முடியும

இத்தோடு தானியங்கி 'வெண்டிங்மிஷின்கள்" எங்கும் வந்துவிட்டன. ரயில் டிக்கெட் முதல் காண்டம்கள் வரை தானியங்கி'வெண்டிங் மிஷினில்" இருந்துதான்நாம் பெற்றுக் கொள்கிறோம். இவற்றில் கிருமிகளைத் தடுக்க, வெண்டிங் மிஷின்' பட்டன் பகுதியில், ஆன்டி வைரஸ் கோட்டிங்" தரலாம். அதுபோலத்தான், அலுவலகங்களில் பயன்படுத்தும் பேக்ஸ் பேப்பர்களும், அதன்மூலமும் இப்படி தொற்றுக் கிருமிகள் பரவவாய்ப்புண்டு. அதனால் அதிலும் இந்தத் தடுப்பு முறையை பயன்படுத்தலாம்.

மெட்டல் கோட்டிங், மெட்டல் ஆக்சைடு, செராமிக் நானோ பார்ட்டிக்கல்ஸ் போன்ற ரசாயனகலவைமூலம் 'ஆன்டி வைரஸ் கோட்டிங்"முறையை நடைமுறைப்படுத்தலாம். காற்றுமூலம் பரவும் தொற்றுக் கிருமிகளைத் தடுக்கவும், "நானோ மெட்டிரியல்" மூலம் புதுமுறைகளைநாம் கையாள வேண்டும். நானோ டெக்னாலஜி மூலம் பல வகையில் நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைஎடுப்பது முக்கியம்.

6. காக்கா வலிப்பு நோய்க்கு மருந்தே கிடையாதா?இதைக் குணப்படுத்த வாழ்க்கை முழுக்க மருந்து சாப்பிட்டுக் கொண்டேஇருக்கவேண்டுமா? வலிப்பு வரும் என்பதைமுன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியுமா?"

சென்ன அப்பல்லோ மருத்துவமனையின் நரம்பியல் மருத்துவர் டாக்டர்பன்னீர் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார்.


"இந்த நோய் பற்றி மக்களிடம்பல தவறான கருத்துக்கள் உலாவுகின்றன. மக்கள் இந்தத் தவறான கருத்துக்கள திருத்திக் கொள்ளவேண்டும்.


முதலில் காக்கா வலிப்பு என்று சொல்வதே தவறு. கால் கை வலிப்புஎன்று அழகாக, தெளிவாக சொல்லப்பட்டுவந்த விஷயம், காலப்போக்கில் மருவிகாக்கை வலிப்பு என்று மாறி, இப்போது காக்காவலிப்பு என்றாகிவிட்ட.து காக்கைக்கு வலிப்பு வருவதில்ல. எனவே, இனிமேலும் அதை யாரும் காக்கா வலிப்பு என்றுசொல்ல வேண்டாம்.

கால் கை வலிப்பு ஏன் ஏற்படுகிறது என்கிற உணi;மயான காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டால் எளிதாகக்குணப்படுத்திவிடலாம். இதற்கு தீர்வே இல்லை; மருந்தே இல்லைஎன்று வருத்தப்பட்டு மூலையில் கிடந்த அந்தக் காலம். இப்போது மருத்துவம் எவ்வளவோ முன்னேறிவிட்டது.

கால் கை வலிப்புக்கு முக்கியமான காரணம், சரியாகத் தூங்காமல் இருப்பது சரியாகச் சாப்பிடாமல்இருப்பது ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி கவலப்படுவது. நடப்பதயெல்லாம் நன்மைக்கே என்கிறமனநிலயோடு எந்த விஷயத்தையும் அதிர்ச்சியும்,வருத்தமும் அடையாமல் வேளாவேளைக்கு நன்கு சாப்பிட்டு, தூங்கி எழுந்தாலே போதும்; கால்கை வலிப்பு உங்களை அண்டாது.

இந்த நோய் வந்தவர்கள் மது, போதை பொருட்களை உட்கொள்வது கட்டாயம் கூடாது. டீ, காப்பி சாப்பிடக்கூடாது சத்தான உணவுகள சாப்பிட்டு, நிறைய ஒய்வு எடுக்க வேண்டும்.
கால் கை வலிப்புக்கு டாக்டர்கள் கொடுக்கிற மருந்தை காலந்தவறாமல்சாப்பிடுவது அவசியம்தான். அதற்காக வாழ்க்கை முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டும் என்கிறஅவசியம் இல்ல.

உங்கள் உடலைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கவனித்து வந்தாலே போதும்; உங்கள் உடலில் ஏற்படும் சில மாற்றங்களை வைத்து, உங்களுக்கு வலிப்பு வரப் போகிறதா, இல்லயா என்று முன்கூட்டியே கண்டுபிடித்துவிடலாம்.அப்போது மட்டும் வெகுதூரம் செல்லாமல், பழக்கமானநன்கு தெரிந்த ஒருவரை துணைக்கு அழைத்துக் கொண்டு செல்வது நல்லது."
- நரம்பியல் மருத்துவர்டாக்டர் பன்னீரசென்னை அப்பல்லோ மருத்துவமனை, சென்னை.

7. இதயமே...இதயமே...கேட்பதற்கே ஆச்சரியமாக இருக்கிறது.
'இருபத சதவீத இந்தியப்பெண்கள் ஏதேனும் ஒரு இதய நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களின் வயது ஐம்பதக்கும்குறைவு" என்கிறது சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வு.

இதற்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகின்றன. நகர வாழ்ககை, வாழ்க்கை முறையில் மாற்றம், அலுவலகங்களில் ஏற்படும் மனஅழுத்தம், குறிக்கோளை அடைய எடுக்கப்படும் அசாதாரண முயற்சிகள்இப்படிப் பல காரணங்கள்.
பொதுவாகவே இதய ரத்தக் குழாய்களில் ஏற்படும் பாதிப்புகளப் பற்றிப்பெண்கள் அவ்வளவாகக் கண்டு கொள்வதேயில்லை. மாறாக, மார்பகப் புற்றுநோய்க்குத்தான் மிகவும் கவலைப்படுகிறார்கள்.

இதனைத் தவறென்று சொல்ல முடியாது. இருப்பினும் கணவருக்கோ குடும்பத்திலுள்ளமற்ற ஆண்களுக்கோ மாரடைப்பு வரும்போது அழுது ஆர்ப்பாட்டம் பண்ணும் பெண்கள், தங்களுக்கு மார்பில் வலி வரும்போது மட்டும், அதைக் கண்டு கொள்வதேயில்லை. அலட்சியப்படுத்திவிடுகிறார்கள். இதான் தவறு.

இளம் வயதில் பெண்களவிட ஆண்களுக்கே இதய பாதிப்பு வருவதற்குரியஆபத்து அதிகம். , பெண்களுக்கு இயற்கையின்கொடை, பெண்களின் உடலில்சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் ஆகியவை தான் இதற்குக் காரணம். இந்த ஹார்மோன் நல்ல கொலஸ்ட்ரால்அளவை அதிகம் சுரக்க உதவுகிறது பெண்களிடம் மாதவிலக்கு நிற்கும்வரை இந்த ஹார்மோன் சுரப்பதுதொடரும். அதனால் மெனோபாஸ் வயதுவரை பெண்களிடம் மாரடைப்பு உள்ளிட்ட இதயநோய்கள் உண்டாகவாய்ப்பில்ல.

என்னதான் ஹார்மோன் சுரந்தாலும் மன அழுத்தம் தொடர்ந்தால் பிரச்னதான்.இதய பாதிப்புக்கு முக்கிய காரணமாக இருப்பது இந்த மனஅழுத்தம் தான். அலுவலகம், வீடு,வேல என பரபரப்பாக இருப்பவர்களிடம் மன அழுத்தம் ஏற்படுதது;ம் தாக்கம் அதிகம். இதன் விளவாக உயர் ரத்தஅழுத்தம் உண்டாகிற. விளவு? இதயநோய் வருவஉறுதி" என்று எச்சரிக்கிறார்கள் இதய நிபுணர்கள்.

உயர் ரத்த அழுத்தம் 130 ஃ 85 என்ற அளவில்இருப்பது நல்லது. அதேபோல் உணவு எடுத்துக் கொள்ளாமல் இருக்கும்போது ரத்தத்தில் சர்க்கரையின்அளவு நூறைத் தாண்டக் கூடாது. இந்த இரண்டின் அளவும் மீறும்போதுதான் பிரச்னயே.


உடல் எடைக்கும் இதய நோய்க்கும் சம்பந்தமுண்டு. உடல் எடை அதிகமிருப்பவர்களுக்கு மாரடைப்பு ஆபத்தும் அதிகம். எண்ணெய், கொழுப்புநிறைந்த உணவுகள், புகை, டி.வி. முன் உட்கார்நது; நீண்ட நேரம் சாப்பிடுவது, இவைதான் உடல் எடை கூடுவதற்கு முக்கியக்காரணங்கள்.எடை கூடுவது இடுப்பில் தெரியும் என்பார்கள். ஆண்களின் இடுப்பளவு தொண்ணூறு செ.மீ. வரைஇருக்கலாம். எந்தப் பாதிப்பும் இருக்காது.

ஆனால் பெண்களின் இடுப்பளவு தொண்ணூறு செ.மீட்டருக்கு மேல் போனால்மாரடைப்பு ஆபத்து உண்டு. எச்சரிக்கை தேவை. வேலக்குப் போகும் பெண்களுக்கு இடுப்பளவுஅதிகரிக்கும் வாய்ப்பு குறைவுதான். ஆனால் இல்லத்தரசிகளுக்கு?

பெரும்பாலும் வீட்டிலிருக்கும் பெண்கள் உடற்பயிற்சி செய்வதில்ல.சமைக்க, துவைக்க இயந்திரம்வந்விட்டது. போதாதற்கு வீட்டிற்கே கொண்டு வநது;உணவு 'டெலிவரி" செய்யும்வசதி என மாறிவரும் நகரவாழ்க்கையில் உடல் பெருததுவிட அதிக வாய்ப்பு உண்டு. இப்படி உடலுழைப்புஇல்லாமலிருப்பது பெண்களிடம் இதய நோய் ஏற்பட அதிக காரணமாகிறது.

பெரும்பாலான பெண்கள் மார்பில் வலி வரும்போது, அதனை ஏதோ தசைப் பிடிப்பு என்று விட்டுவிடுகிறார்கள்.டாக்டரிடம் காண்பிக்காமல் அவர்களே சிகிச்சை செய்து கொள்கிறார்கள். இந்த வலி மாரடைப்புக்கானஅறிகுறி என்று அவர்கள் உணர்வதில்ல்லை.


முதன் முதலில் மாரடைப்பின் போதே பெண்கள் உயிரிழக்கும் வாய்ப்புஅதிகம். இதற்கு அவர்களது ரத்த நாளங்கள் தான் காரணம். மாரடைப்பின்போ ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.அப்போது இந்தச் சிறிய ரத்த நாளங்கள் வழியாகச் செல்லும் ரத்தத்தின் அளவால் அவை உடந்துபோக வாய்ப்பு உண்டு. அதற்கு உடனடி சிகிச்சை அவசியம். தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்துதான்.


"மெட்டபாலிக் சிண்ட்ரோம்"(எம்.,.டி.எஸ்.) இந்த முறையின்மூலம் இதய பாதிப்பு வருமா, இல்லயா என்பதைத்தெரிந்து கொள்ள முடியும். இதற்கு ஒருவரது இடுப்பளவு, குறைந்த அளவு, அதிகமான அளவுடிரகிளிசரடுகள், உணவின்றி இருக்கும்போதுஉடலில் சர்க்கரையின் அளவு, உயர் ரத்தஅழுத்தம் போன்ற காரணிகளை ஆராய வேண்டும்.

இவற்றில் மூன்று பிரச்னகள் இருந்தால், மாரடைப்பு ஆபத்து அதிகம். அதனால் பெண்கள்தாங்களே சுயபரி சோதன செய்து கொள்ளாமல், டாக்டரிடம்போய்விடுவது பிரச்னயை எளிதில் தீர்க்க உதவும்.


8,பெண்களுக்கு ஏன் இதயநோய்?

நிரந்தரமான, நிறைய பிரச்னகள்.
பெண்களுக்கு சிறிய ரத்தக்குழாய் என்பதால் சீக்கிரமே தடைப்பட்டுப்போகும்ரத்த ஓட்டம்.
உயர் ரத்த அழுத்தம

மார்புவலி, மூச்சுவிடுவதில்சிரமம் போன்ற அறிகுறிகளக் கண்டுகொள்ளாமல் விடுவது.
மனச்சோர்வுக்கும் இதயத்தமனி நோய்களுக்கும் தொடர்பு இருப்பது.

டாக்டரை எப்போது தொடர்பு கொள்வது?
மூச்சுவிட முடியாமலிக்கும்போதும் அதிக இதயத்துடிப்பு இருந்தாலும்.
நெஞ்சுவலியானது மார்பு,தாடை, நுரையீரல் அல்லதுமேல் வயிற்றுக்கும் பரவும்போது.
ஓய்வின்றிப் பரபரவென்று இருக்கும் நிலயில், வாந்தி வரும்போது.
அடிக்கடி மயக்கம் வந்தால்.
உங்களின் உடல் எடையக் குறக்க முடியாத பட்சத்தில்.

9. நேஷல் அலர்ஜி (அலர்ஜியுடைய சுவாச பாதை.)

ஒருவருக்கு ரன்னிங் நோஸ், தும்மல் என்று ஆரம்பித்து கடைசியில் வாசனை அறியும் சக்தியையும்இழந்துவிட்டார். மாத்திரைகள் சாப்பிட்டால் குணமாகிறது. நிறுத்தினால் மீண்டும் வந்துவிடுகிறது.ஸ்கேன் அது, இது என்று எவ்வளவோசெலவழித்துவிட்டார். ஒன்றும் பலனில்ல. இவருக்கு என்ன பிரச்சின?

"அவருக்கு ஏற்பட்டிருப்பதுடஸ்ட் அலர்ஜி என்று சொல்வதைவிட நேஷல் அலர்ஜி என்று சொல்வதான் சரியாக இருக்கும். மூக்கில்ஏற்படும் சிறுசிறு ஒவ்வாமையினைத்தான் நேஷல் அலர்ஜி என்று சொல்கிறோம். நேஷல் அலர்ஜிக்குப்பல காரணங்கள் இருக்கலாம். சில வகையான சாப்பாடு ஒத்துக்கொள்ளாமல் இருக்கலாம். மீன், ஆட்டுக்கறி போன்ற உணவுகளினால் கூட, அந்த ஒவ்வாமை ஏற்படலாம்.


சிலருக்கு சில மாதிரியான வாசனையினை முகர்ந்தாலே அலர்ஜி ஆகிவிடும்.சிலருக்கு செண்ட் ஒத்துக் கொள்ளாது. எதனால் அலர்ஜி ஏற்படுகிற என்பதை முதலில் கண்டுபிடிக்கவேண்டும்.

இந்த அலர்ஜி எப்போதாவது வந்தால் சமாளித்துவிடலாம். ஆனால், அடிக்கடி வந்தால் உடனே மருத்வரை அணுகுவது நல்லது.


நம்முடைய உடம்பில் பலவிதமான நோய் எதிர்ப்புச் சக்திக் கூறுகள்உண்டு. இதில் ஐ.ஜி.இ . என்கிற நோய் எதிர்ப்புச் சக்தி மிக அதிகமாக இருந்தாலும், இந்த ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புண்டு என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.எனவே, அது தேவையான அளவுக்குமட்டுமே நம்முடய உடலில் இருக்கும்படி செய்ய வேண்டும்."

10.தொடை, கால், பாதம் போன்ற பகுதியில் வலி

வயதாக ஆக அறிவும், அனுபவமும்அதிகமாகிறதோ இல்லையோ முதுகெலும்பைச் சுற்றியுள்ள மூட்டுகள் எல்லாமே பெருத்து, திசுக்களின் எலாஸ்டிக் தன்மை கடினமடைகின்றது.மேலும் எலும்புகளின் அடர்த்தி குறைந்து அதிர்வுகளைத் தாங்கும் சக்தி குறைகிறது என்பதும்உண்மை.


இதன் காரணமாக முதுகெலும்பின் நடுவில் உள்ள தண்டுவடத்திலிருந்துநரம்பு வெளியேறும் துவாரங்கள் தடைப்படுகின்றன. இதைத் தொடர்ந்து அந்த நரம்புக்கு வந்துசெல்லும் ரத்தத்தின் அளவும் குறைகிறது. எனவே தொடை, கால்மூட்டின் பின்புறம் ஆகியவை இழுத்தது போல் வலியுடன் கொஞ்சம்மரத்தும் போகிறது.

இந்த வலிக்குப் பலரும் காலில் கட்டுப் போட்டுக் கொண்டு தன்னையேஏமாற்றிக் கொள்கிறார்கள்.


சில சமயம் கால் மரத்துப் போவது போல் இருக்கும் போது தாங்களாகவேநியூரோபியான் போன்ற மாத்திரைகளை விழுங்கி ஏமாந்தவர்களும் உண்டு. இது தங்களது சர்க்கரைநோயினால் ஏற்பட்ட நிலை என்று தவறாக எண்ணும் மக்களும் உண்டு. (அப்படி எண்ணி சில மருத்துவர்களும்தவறான சிகிச்சை அளித்திருக்கிறார்கள்!).

காலிலோ தொடையிலோ வலியுடன் மரத்துப் போனால் காலில் கட்டுப் போடுவதுஅபத்தம். இதனால் அவஸ்தைகள் அதிகரிக்கும். உங்கள் காலுக்கு வந்து செல்ல வேண்டிய ரத்தஓட்டம் தடைப்படுகிறது.

டெலிபோன் கேபிளுக்கும் மின்சார கேபிளுக்கும் வித்தியாசம் உண்டு.தொலைபேசிக்கான கேபிள் நேரடியாக இணைப்பகத்தில் இருந்து ஒவ்வொரு தொலை பேசிக்கும் பிரத்யேகமாகஇணைக்கப்படுகிறது. மின்சார கேபிள் அப்படி பிரத்யேகமானது அல்ல.
நம் உடலில் மூளை தொடங்கி கால் நுனி வரை ஒவ்வொரு பாகத்துக்கும்குறிப்பிட்ட நரம்புகள் செல்கின்றன. தொலைபேசி கேபிள் போல பிரத்யேக இணைப்புகள்!

தொடை, கால், பாதம் போன்ற பகுதியில் வலி என்றால் அங்குஉணர்ச்சிகளை எடுத்துச் செல்லும் குறிப்பிட்ட நரம்பு ஏதோ ஒருவித அழுத்தத்தைச் சந்திக்கிறதுஎன்று அர்த்தம்.

இந்த அழுத்தம் ஓரளவுக்கு மேல் அதிகமானால் அதைக் காலில் வலியாகஉணர்கிறீர்கள். இந்த நிலையில் வலி ஏற்படும் பகுதியை அழுத்தமாகக் கட்டுப் போட்டுக் கொண்டால்அங்கு வரும் ரத்த சப்ளை குறைந்தோ - ஏன் நின்றோ கூட போய்விடலாம். காலில் பச்சிலைக் கட்டிக்கொண்டாலோ ஏதாவது ஆயின் மெண்ட் தேய்த்துக் கொண்டாலோ இந்த வலி மறைவதில்லை. குறைவதுமில்லை.களிம்பு தயாரிக்கும் நிறுவனத்தைத் தவிர வேறு யாருக்கும் லாபம் இல்லை. பின் என்னதான்செய்வது?

பரிசோதனைக்குப் பிறகு எக்ஸ்ரேயில் முதுகு, இடுப்புக்கட்டு ஆகியவற்றைப் பார்க்கும்போதுமூட்டுப் பிடிப்பு நோயினால் வரும் தொடை வலியா அல்லது இடுப்புமூட்டுத் தேய்மானத்தால்வந்த வலியா என்பதைப் பெரும்பாலும்; கண்டுபிடித்துவிட முடியும்.
இடுப்பு மூட்டு தேய்மானத்தின் காரணமாகத் தொந்தரவு என்றால் தொடையின்உள்பகுதியிலோ, கால்மூட்டின் உள்ளேயோவலி ஏற்படக்கூடும். ஆனால் தொடை வலியுடன் மரத்துப் போகாது. நின்றாலும், நடந்தாலும், உட்கார்ந்தாலும் அங்கே பிடித்துக் கொள்வதுபோல் இருந்து நடக்க நடக்க வலி அதிகமாகலாம

ஆனால் முதுகுச் சிக்கலால் ஏற்பட்டால் தொடையிலிருந்து கால் வரை'சுரீர்"என்று இழுக்கும் உணர்வுஏற்படும். கணுக்கால் வரை பரவும். முதுகைச் சற்று திருப்பினாலோ குனிந்து வேலை செய்தாலோஇது அதிகமாகும்.

ஸியாடிகா எனும் இந்த வலி இருமினாலோ தும்மினாலோ அதிகரிக்கும்.படுத்த பிறகு கொஞ்சம் குறைந்து, புரண்டு விட்டுஎழுந்திருக்கும் போது இந்த வலி அதிகரிக்கும். காலில் "ஜிவ்' எனத் தோன்றிய இந்த வலி, காலைச் சற்று மடித்து வைத்தால் குறைந்ததுபோல் இருக்கும். முதுகுக்கு பிஸியோதெரபி தருவது மூலமாகவோ, மாத்திரைகள் மூலமாகவோ இந்த வலியைக் குறைக்கமுடியும்.


வலி குறைந்தவுடன் தொப்பை இருப்பவர்கள் அதைக் குறைக்க வேண்டும்.முன்பு வலி ஏற்பட்டதே என்பதையே நினைத்துக்கொண்டு சோம்பலாக இருக்காமல் வேலைகளை இயன்றஅளவு சுறுசுறுப்பாகப் பார்த்து ஊளைச்சதையை ஏற்றிக் கொள்ளாமல் இருந்தாலே சிலருக்குத்தானாகவே சரியாகிவிடும்.

மேலே குறிப்பிட்ட அத்தனையையும் செய்து, கால் வலியும் தொடர்ந்தால் சிறப்பு சிகிச்சைதான்செய்தாக வேண்டும். முன்பெல்லாம் முதுகில் ஊசியால் குத்தி, மைலோகிராம் எனப்படும் ஒருவித வேதனையான சோதனையைச்செய்வது தவிர்க்க முடியாததாக இருந்தது.
எந்த ஒரு சோதனையும் வலிக்கு மாற்றாக அமைய வேண்டுமே தவிர அதுவேஅதிக வலியை அளிப்பதாக இருந்துவிடக் கூடாது.


நல்லவேளையாக இப்போது எம்.ர்.ஐ. தொழில்நுட்பம் வந்துவிட்டது.முதுகெலும்பின் உள்ளே உள்ள நரம்புகள், தசை மற்றும்தசைநார்களின் தன்மையை இதன் மூலம் அறிய முடியும். நரம்புக்குள்ளும் பாதிப்பு இருந்தாலோ, நரம்புக் குழாயின் அளவு குறித்தோ இதன் மூலம்கண்டறிய முடியும்.

ஜவ்வு மிகவும் விலகி இருந்தாலோ, நரம்புக்குள் ரத்த ஓட்டம் குறைந்து தண்டுவடத்தில் கட்டி போல் உருவாகியிருந்தாலோ எம்.ர்.ஐ. ஸ்கானின் மூலம் துல்லியமாகக் கண்டுபிடித்துவிடலாம். இலேசான வலி என்றால் முதுகில் எபிட்யூரல் ஸ்டீராய்ட் எனும் ஊசி மருந்தைச் செலுத்தி சிலரது கால் வலியைக் குறைக்க முடியும்.

ஆனால் தொடைவலி அல்லது கால் வலி மிகவும் அதிகமாகப் போய்த் தூங்கமுடியாத அளவுக்கு வலி அதிகமானாலோ கூடவே கால் மரத்துப் போனாலோ கீழ்முதுகில் ஒரு சிறியபரேஷன் செய்வது அவசியமாகிறது.


நகர்ந்து போன ஜவ்வை அகற்ற வேண்டியிருக்கும். அல்லது முதுகெலும்பிலிருந்துகுறிப்பிட்ட நரம்பு வெளியேறும் துவாரத்தை அடைத்திருக்கும் திசுக்களை அகற்ற வேண்டி இருக்கும்.அப்போது தான் கால் மற்றும் இடுப்பு வலி குறையும்.

மேலும் படிக்க...Read more...

மருத்துவம் பகுதி 3

Type your summary here
மருத்துவம். வாஞ்ஜுர்

உயிர்வாழ உண்ணுங்கள்! உண்பதற்காக வாழாதீர்கள்!! உணவே மருந்து! மருந்தே உணவாவதைத் தவிர்த்திடுவீர்!!

ஆப்பிள் பயன்கள-- .குழந்தை நோஞ்சானா?-- வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?-- தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?-- வேனல் கட்டி தொல்லையா?-- இளநீர்-- சர்க்கரை வியாதிக்கு எளியவைத்தியம் தெரியுமா?-- இன்சுலினுக்கு இணையான பாகற்காய்.-- பத்து மிளகிருந்தால் பகைவர் வீட்டிலும் உண்ணலாம்-- வாயுத் தொல்லை-- டிப்ஸ்...டிப்ஸ்...--பூண்டு-- எலுமிச்சம் பழம்--விரட்டுவோம் குறட்டையை--பப்பாளி--பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலே சிறந்த உணவு!

ஆப்பிள் பயன்கள.

ஆப்பிள் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குப் படுத்தும். வைட்டமின்குறைவால் ஏற்படும் நோய்களை குணப்படுத்தும். உடல் செயல்களை ஒழுங்குபடுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும்.

ஆப்பிளை எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். அப்படியே கடித்துஉண்ணலாம். பழத்தை நறுக்கி மிக்ஸியிலிட்டு கூழாக்கி தேன் சேர்த்தோ, பால் சேர்த்தோ அருந்தலாம். பழச்சாறாக்கி தேவையானஇனிப்பு, ஒரு ஏலக் காய் சேர்த்துஅருந்தலாம். ஜாம் பழக்கூழ் செய்து பயன்படுத்தலாம். பழுக்காத ஆப்பிள் காயை கொண்டு சட்டினி செய்யலாம்.

எவ்வடிவில்உண்டாலும் அனைத்து சத்துக்களும் தாராளமாகக் கிடைக்கும். ஆப்பிள் தோலிலும் சத்து உள்ளதால்தோலை சீவி எறிந்துவிட வேண்டாம்.

குழந்தைகளுக்கு ஆப்பிளை கொடுத்துவர அவர்களின் எலும்பு வளர்ச்சிக்கும், பற்களின் உறுதிக்கும் உதவுகிறது. ஆப்பிள்சாறு அருந்திவர தோல் சுருக்கம் மாறி உடல் பளபளப்பாகும்.

இளைஞர்களைவிட வயதானவர்களுக்கு அதிக சக்தி ஊட்டக் கூடிய கனி ஆப்பிளாகும்.ரத்த விருத்தியை அதிகப்படுத்தும் ஆப்பிளுக்கு தோல் சுருக்கத்தைகுறைக்கும் ஆற்றலும் உண்டு.

சிலவகையான நோய்களை வர விடாமல் செய்கின்ற சக்தியும் ஆப்பிளுக்குஉள்ளது. நீரிழிவு, வலிப்பு நோய், ஆஸ்துமா, நுரையீரல் புற்றுநோய் போன்றவற்றை வர விடாமல் செய்யும்.ஆப்பிள் பழத்தை நறுக்கி சுத்தமான தேனில் நனைத்துச் சாப்பிட வேண்டும்.சில வாரங்களாவது சாப்பிட வேண்டும். அதன் பிறகு உங்கள் கண்கள் அழகு பெறுவதோடு சிறந்த ஒளியையும் பெறும்.

ஆப்பிளில் உள்ள பெக்டின் என்ற நார்ப்பொருள், கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது.

குழந்தை நோஞ்சானா? கவலை வேண்டாம்.

சோயா மாவில் பூரி, சப்பாத்தி செய்து கொடுங்கள். உடல் எடை அதிகரிக்கும்.குழந்தைகளுக்கு பாசிப்பருப்பு அல்லது பொட்டுக்கடலை மாவு முறுக்கு, உருண்டை, கேப்பை ரொட்டி, வேர்க்கடலைமுதலிய வற்றை தினமும் கொடுத்து வந்தால் திடகாத்திரமாக வளருவார்கள்.

வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?

எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும், வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய்துர்நாற்றம்நீங்கும்.

தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?

வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில் ஒரு நெல்லை வைத்து விழுங்க, முடி வெளியேறி பேதியும் நிற்கும்.

வேனல் கட்டி தொல்லையா? வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீதுதடவி வர அது உடையும்.தினமும் சப்போட்டா பழம் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் அண்டாது.

பொன்னாங்கண்ணி கீரையைத் துவையல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். உடம்பில் உள் சூடும் குறையும்.இக்கீரையின் தைலத்தை தலை முழுகப் பயன்படுத்தி வந்தால் கண் நோய் அண்டாது. உடல் சூடுதணியும். அரைக் கீரை தைலமும் உடல் சூட்டைத் தணிக்கும்.

பாகற்காய் வற்றலை உணவுடன் உண்டு வந்தால் மூலம், காமாலை நோய் தீரும்.

ஹோட்டல்களில் சாப்பிடுவதால் ஏற்படும் நாக்குப் பூச்சித்தொல்லை, சிறுவர்களுக்குஏற்படும் வயிற்றுப் பூச்சித் தொல்லை நீங்க சுண்டைக்காயை உணவுடன் சேர்த்துக் கொடுக்கவேண்டும்.

இரவு உணவில் சுண்டைக்காய் வற்றலை சேர்த்து வந்தால் ஆஸ்துமா, நெஞ்சு சளி, காச நோய் நீங்கும். வயிற்றுப் போக்கும் நிற்கும்.கற்கண்டு, இஞ்சி சாறு சேர்த்து அருந்திவர நீரிழிவு நோய் கட்டுப்படும்.

இஞ்சி ஊறுகாய் ஜீரணத்துக்குப் பயன்படும். பித்தத்தைத் தணிக்கும்.

மருதாணி இலையை எலுமிச்சைச் சாற்றில் கலந்து அரைத்துகட்டினால் குதிகால் வாதம், பாத எரிச்சல் தீரும்.துளசி இலையை வாயில் போட்டு மென்று தின்றால் பல் வலி, கூச்சம் நீங்கும். சில இலைகளைக் கசக்கி முகர்ந்து பார்த்தால் மூக்கடைப்பு நீங்கும்.

வேப்பிலையை அரைத்து கட்டி வந்தால் ஆறாத ரணமும் ஆறும்.உடையாத பழுத்த கட்டியும் உடையும்.


இளநீர்
உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில் சேர வேண்டிய தாதுஉப்புக்களைச்சேர்த்து, உடலின் செயல்திறனைஊக்குவிக்கிறது.இளநீர், இயற்கை அளித்தஇனிய பானம் மட்டுமல்ல.. பிணிகளைத் தீர்க்கும் மாமருந்தும் ஆகும்.

இருதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் மற்றும் இரத்த நாளங்களில் உஷ்ணம் ஆதிக்கம் அடையாமல் இருக்க உறுதுணையாகிறது.

மூல நோயாளிகள், நாட்பட்ட சீதபேதி, ,ரத்த பேதி, கருப்பை ரணம், குருதிப் போக்குக் காரணமாக வரும் இரத்த சோகை, உற்சாகமின்மை ஆகியவற்றிற்கு இளநீர் மிகச்சிறந்த நிவாரணம் அளிக்கின்றது.

பேதி, மயக்கம், அசதி ஏற்படும்போது டாக்டரிடம் செல்வதற்குமுன் 2 டம்ளர் இளநீர் சாப்பிடுவது என்பது1 பாட்டில் சலைன் வாட்டர் ஏற்றுவதற்குச் சமமாகும்.

நீர்க்கடுப்பு மே, ஜூன் ஆகியஇரு மாதங்களிலும் வெயில் தகிக்கும். அப்போது வியர்வை ஏராளமாக வெளியேறுவதால் சிறுநீரகம்வற்றித் தடித்துச் சிவந்து சொட்டு சொட்டாகப் போகும். அப்போது 2 டம்ளர் இளநீர் பருகிட 1 மணி நேரத்திற்குள் சிறுநீர் தாராளமாகப் போகும்.

சிறுநீர்த் தாரையில் சில நேரம் புண்ணாக இருந்தால் PUS CELLS அதிகமாகி எரிச்சல், கடுப்பு உண்டாகும். அதற்கு இளநீரில் வெந்தயம்அரைக்கால் ஸ்பூன் தூள் செய்து கலந்து பருகிவர,5 நாளில் அவை நீங்கும்..

பெண்களின் மாத விலக்கின் போது அடிவயிறு வலிக்கும். அதற்கும் இளநீரே மருந்து.

உடம்பெல்லாம் அனல்போல் தகித்தால் இளநீர் 8 மணிக்கொரு முறை பருகிவரத் தேக அனல் தணியும்.பேதி, சீதபேதி,இ,ரத்த பேதிஆகும்போது மற்றெல்லா உணவுகளையும் தவிர்த்துவிட்டு உடனடியாக இளநீர் பருகிவர, உடல் அசதி, மயக்கம் வராது.

சிறுநீரகக்கல், சதையடைப்பு URINARYINFECTION; போன்ற கோளாறுகள் வந்துவிட்டால்முதல் மருந்தே இளநீர் தான்.

கோடைகாலம் மட்டுமின்றி எல்லாக் காலங்களிலும் அருந்தக் கூடியஇனிப்பும் குளிர்ச்சியும் கொண்ட இளநீரை அருந்தி வந்தால் உடல் வளமை பெற்று நோயற்று, புண்,ரணம் ஏதுமின்றி ஆரோக்கியத்துடன் வாழலாம்.

கூல்டிரிங்க்ஸ், ஐஸ்கிரீம்ஆகியவற்றை விட உடலுக்குப் பல மடங்கு நலம் தருமஇளநீரை இயற்கைப் பானமாக பயன்படுத்துவதே ஆரோக்கியமான வழி.

டைபாய்டு, மலேரியா, மஞ்சள் காமாலை, அம்மை நோய்கள், டிப்தீரியா, நிமோனியா, வாந்திபேதி, வயிற்றுப்புண், மலச்சிக்கல், சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றால் பாதிக்கப்படும் போது இளநீரைத் தாராளமாகக் குடிக்க வேண்டும்.

அறுவை சிகிச்சைகளுக்குப் பின் திரவ ஆகாரம் மட்டுமேசாப்பிட வேண்டிய சமயங்களில் இளநீருக்கு முன்னுரிமை வழங்கி உபயோகித்தால் அறுவைச் சிகிக்சைபபுண் OPERATION SORE சீக்கிரம் ஆறிவிடும்..

உணவு எளிதில் ஜீரணமாவதற்கு இளநீரில் உள்ள தாதுக்கள் பயன்படுவதால்ஜீரண உறுப்புக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு வாந்தி வரும்போது இளநீர் கொடுத்தால்வாந்தி கட்டுப்படும். நாக்கு வறட்சி நீங்கும

நீரழிவு நோயாளிகள் சர்க்கரை வியாதிக்கு எளியவைத்தியம் தெரியுமா?

தினமும் ஒரு முறை அல்லது இரு முறை வெந்தயத்தூள் சாப்பிட வேண்டும்.சளித் தொல்லை உடையவர்கள் வெந்தயம் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளலாம்.காய வைத்த வெந்தயத்தை பொடியாக்கி கொள்ளுங்கள்.

காய்ச்சி ஆறிய தண்ணீரில் பொடியை போட்டு கலக்கி, தினமும் குடித்துவந்தால் சர்க்கரை வியாதிக்கு டாடா காட்டி விடலாம்.

வெந்தயத்தை நன்கு பொடியாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியை3 தேக்கரண்டி அளவு எடுத்து அரை டம்ளர் வெது வெதுப்பான நீரில் கலந்து களிபோல் ஆக்கி காலை, இரவு வெறும் வயிற்றில் உண்டு வர மூன்று வாரத்தில் நீரீழிவு நோய்கட்டுப்படும்.

இதனுடன் தொடர்ந்து நீரீழிவு நோய்க்கான மாத்திரைகளை மூன்று வாரம்சாப்பிட்டு வந்து பின் மாத்திரை களை நிறுத்திவிட்டு வந்தயப் பொடியை உட்கொண்டும், நீரீழிவு நோய்க்கான யோகாசனங்களையும் செய்துவர நீரீழிவு நோய் கட்டுப்படுவதுடன் இந்த நோயைதொடர்ந்து வரும் மற்ற நோய்களில் இருந்தும் நம்மை காத்துக் கொள்ளலாம்.

வெந்தயத்தில் அதிக அளவு நார்ச்சத்து காணப்படுவதாகவும், இதை சாப்பிடுவதால் பசி மந்தப்படுவதாகவும்நிரூபித்து உள்ளார்கள். நீரீழிவு நோயாளிகளுக்கு உணவு கட்டுப்பாடு மிக முக்கியம். இந்தவெந்தயமானது பசியை மந்தப்படுத்தி உணவை கட்டுப்படுத்துவதால் நீhயீழிவு நோயையும் கட்டுப்படுத்தும் என்பதில்எள்ளளவும் சந்தேகமும் இல்ல

இன்சுலினுக்கு இணையான பாகற்காய். பாகற்காயில், இன்சுலின்போன்ற ஒரு பொருள்சுரந்து, மனிதனின்சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாக பிரீட்டனில் கண்டு பிடித்துள்ளனரஃ தினசரீ காலையில் வெறும் வயிற்றில் நாலைந்து பாகற்பழங்களை பிழிந்துசாறு எடுத்து சாப்பிட்டுவர, இன்சுலினைகுறைத்துக் கொள்ளலாம்.

வாரம் 1 நாள் சமைத்துண்ண நீரிழிவைத் தடுக்கலாம். வாரம் 2 நாள் - 3 நாள் பாகற்காய் சாறு, சூப் சாப்பிட்டு வர,நீரிழிவைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம

ரத்தத்தில் அதிகப்படியாக உள்ள சர்க்கரையினை க்ளைகோஜன் என்னும்சேமிப்புப் பொருளாக மாற்றுவதற்கு உதவி புரிகின்றது.ரத்தத்தில் அதிகப்படியாக உள்ள சர்க்கரையினை ஆற்றலாகச் செலவிடும் திறனை அதிகரிக்கின்றது.

நீரிழிவு நோயினை உடைய அன்பர்களே பாகற்காயினை உங்கள் உணவில் சேர்த்துக்கொண்டு நீரிழிவு நோயினை வெல்லுங்கள். சாப்பிட வேண்டிய காய்கறிகள் : கத்தரீக்காய், அவரைக்காய், வெண்டைக்காய், கொத்த வரங்காய், வெண் பூசணி, வெள்ளை முள்ளங்கி, முருங்கைக்காய், புடலங்காய், பலாக்காய், பாகற்காய், வெங்காயம், காலிபி;ளவர், முட்டை கோஸ், வாழைத்தண்டு, வாழைப்பூ, சிவப்பு முள்ளங்கி, சுரைக்காய்போன்றவை.

முருங்கைக் கீரையை நாள் தவறாமல் கொண்டு வந்து நெய்விட்டு வதக்கி பொரியல் செய்து பகல் உணவில் சாப்பிட்டுவர சர்க்கரை நோயாளிக்கு உடம்பில் சர்க்கரை நோய் நீங்கி சுகம் பெறலாம்.

1 மண்டலம் முதல் 2, 3 மண்டலம் நோய்க்குத் தக்கபடி சாப்பிட்டு வருவது சிறப்பு.சாப்பிடக்கூடாத காய்கறிகள் : வாழைக்காய், உருளைக்கிழங்கு, காரட், பீட்ரூட், கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சர்க்கரைப் பூசணி, கிழங்கு வகைகள், பீன்ஸ்..ஃசர்க்கரை நோயாளிகள்,பச்சைக் காய்கறிகளையே முழுவதும் உண்டால்,மிகுந்துள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும

சாப்பிட வேண்டிய பழங்கள் :ஆப்பிள், வாழை,ஆரஞ்சு, பேரீக்காய், பப்பாளி, வெள்ளரீப்பழம், கொய்யாப்பழம்.

சாப்பிடக்கூடாத பழங்கள் : பேரீச்சம் பழம், பலாப்பழம், உலர்ந்த பழ வகைகள், பெரீய வாழைப்பழம், டின்னில் அடைக்கப்பட்ட பழ வகைகள், பெரீய ஆப்பிள், பெரீய மாம்பழம், பெரீய கொய்யாப்பழம், சப்போட்டா.

அருந்த வேண்டிய பானங்கள் : சர்க்கரையில்லாத காபி, டீ,பால், சர்க்கரை சேர்க்காதஎலுமிச்சைஜூஸ், தக்காளி சூப், சோடா. .சாப்பிடக்கூடாத பானங்கள் : சர்பத் வகைகள், சர்க்கரை வகைகள், இளநீர், தேன், மதுவகைகள், ஆப்பிள் ஜூஸ், ஐஸ்கிரீம், பாதாம், கற்கண்டு, வெல்லம், பாயாசம், முந்திரி, கடலை,கேக் முதலியவை.

இன்சுலின் வழக்கத்துக்கு மாறாக நிறம் மாறி இருந்தால் பயன்படுத்த வேண்டாம்.

வெங்காயத்தின் முக்கியமான பயன் இன்சுலினைத் தூண்டுவது. இதனால்சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

பச்சையாக வெங்காயத்தை சாப்பிடவேண்டும். அதாவது வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி 100 கிராம் அளவுக்கு எடுத்து தயிரீல் பச்சடியாகதயார் செய்து சாப்பிட வேண்டும். அல்லது கேழ்வரகு, கோதுமை போன்ற கஞ்சிகளில் கலந்தும் சாப்பிடலாம்.நீரீழிவு நோயாளிகள் பொதுவாக அளவுச் சாப்பாடு சாப்பிட வேண்டும்.உடற்பயிற்சிகள் செய்தல் வேண்டும். உணவில் கசப்பையும், துவர்ப்பையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்

பத்து மிளகிருந்தால் பகைவர் வீட்டிலும் உண்ணலாம்

அந்தக் காலத்தில் ஒருவர்க்கொருவர் சண்டையிட்டு பகையாளியாகி விட்டால்விருந்துகளில் நஞ்சு கலந்து கொன்று விடுவார்களாம். அவ்வாறு நேராதிருக்க பங்காளி, பகையாளி வீடுகளில் விருந்துக்குச் செல்லும் போது 10 மிளகை தூள் செய்து 1 வெற்றிலையில் வைத்து மென்று விழுங்கி விடுவார்களாம்.

அப்போது அந்த விருந்தில் ஏதாவது நஞ்சு இருந்தால் அது முறிந்துஉயிரைக் காப்பாற்றி விடுமாம்.

உண்மை சம்பவம். -1952ல் என் சிறிய தங்கை5 வயதில் அறியாது கடுமையானதொரு எலி பாஷாணத்தை உட்கொண்டு விட்டார்.துடி துடித்து செய்வதறியாது அருகில் குடியிருந்த கருத்த தம்பி பாவலர் அவர்களடைம் தங்கையை தூக்கிச் சென்றேன்.அவர்கள் உடனே 10 மிளகை தூள் செய்து தேனில் குழைத்து ஊட்டச் சொன்னார்கள்.அதன்படி செய்ததில் எல்லாம் வல்ல இறையவனின் நல்லருளால் என் தங்கைக்கு நலம் கிட்டியது.--வாஞ்ஜுர்]

எல்லாம் நஞ்சுமயம் நம்முடைய இன்றைய வாழ்வில் நஞ்சுமயம் என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது.குடிக்கின்ற தண்ணீரில் நஞ்சு. இழுக்கின்ற மூச்சில் நஞ்சு . சாப்பிடுகின்ற உணவில் நஞ்சு.

இப்படி முக்கால் மூணு வீசம் நஞ்சுமயமாகிவிட்ட நம் அன்றாட வாழ்வில் .இதன் பாதிப்பு- உடலில் இரத்தமும் நஞ்சுமயமாகி இறுதியில் வயிறு, இதயம், கல்லீரல், மூளை, சிறுநீரகம் என்று முக்கிய உறுப்புகளில் நஞ்சுசேர்ந்து அவை சிர்குலைகின்றன.

இவற்றை இணைத்துச் செயல்பட வைக்கும் இரத்தக் குழாய்களில் இந்த நஞ்சுகள் உப்புப் படிவம், கொழுப்புத் திரட்சிகளாகப் படிந்து இறுதியில் இதயம், சிறுநீரகம், மூளை ஆகியவற்றை சேதமுறச் செய்கின்றன.

ஆக மெல்லக் கொல்லும் இந்த நஞ்சுகளை அவ்வப்போது அகற்ற வேண்டும்.அதற்கு என்ன மருந்து சாப்பிட வேண்டும் என்று கேட்கின்றீர்களா?

அதைச் சாப்பிட்டால் இரத்தத்தில் நஞ்சு முறியும். அது என்ன?

பத்து மிளகைத் தூள் செய்து தினசரி மோரிலோ, தேனிலோ அல்லது 1 பிடி சாதத்துடனோ பிசைந்து சாப்பிட்டால் போதும்.காலை - இரவு என இப்படி தினசரி இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சேரும் எல்லாநஞ்சுகளும் முறியும

வாயுத் தொல்லை வாயுத் தொல்லை பல காரணங்களால் ஏற்படலாம். நாம் உணவைச் சாப்பிடும்போது சிறிது வாயு நம் வயிற்றுக்குள் செல்கிறது. தவிர, சில வகை உணவுப் பொருட்கள் சிறுகுடலில் சரியாகச்செரிமானம் ஆகாமல், பெருங்குடலுக்குச்செல்கையில் புளித்து நுரைக்கும். அப்படியும் கியாஸ் உருவாகும்.

வாயுத் தொல்லையை விரட்டிட இதோ சில வழிகள்:1. வாயுப் பிரச்சினைஉள்ளவர்கள் செரிக்க எளிதான உணவுகளை, சாவகாசமாகமென்று சாப்பிட வேண்டும்.2. உருளைக்கிழங்கு, வாழைக்காய், காலிஃப்ளவர் போன்ற வாயுப் பதார்த்தங்களைத் தவிர்க்கலாம்.3. டென்ஷன் தவிர்க்கவேண்டும்.

பதற்றமும், படபடப்பும் அஜீரணத்தைஏற்படுத்தும். அஜீரணத்தால் வாயுத் தொல்லை உருவாகும்.

4. காலையில் வெறும் வயிற்றில் 2 டம்ளர் நீர் அருந்தி வந்தால், வாயுத் தொல்லை நீங்கும். வாயுத்தொல்லை உள்ளவர்கள் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

மலச்சிக்கல் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.இயற்கையான உணவு வகைகளை அதிகம் சேர்த்து உண்ண வேண்டும். உணவில் அதிகம் பூண்டு சேர்த்துக்கொள்ள வேண்டும்.

5. ஒரு டம்ளர் மோரில்ஒரு மிளகு அளவு பெருங்காயத்தை கரைத்துக் குடித்தால் வாய்வு மற்றும் வயிற்று வலி குணமாகும்.

மகிழ்ச்சியான மனநிலை உள்ளவர்களுக்கு வாயுத்தொல்லை வராதாம்.

டிப்ஸ்...டிப்ஸ்...

பசி இல்லாதவர்களுக்கு...• உணவில் சுக்கு, சீரகம் இவைகளைப் பயன் படுத்த வேண்டும். • வாழைப்பழம் அதிகம்சாப்பிட்டால், நன்றாக பசி எடுக்கும்!

பசி எடுக்காமல்,வயிறு மந்தமாக உள்ளதா ?• பெருங்காயத்தை குழம்பில் சேர்த்து சாப்பிடவேண்டும்! • வெந்தயக்கீரை சாப்பிட, அகோர பசி எடுக்கும்!

வயிற்றுப்பிரச்சினைகளுக்கு...• தயிரில் உள்ள பாக்டீரியாக்கள், குடல் மற்றும் இரைப்பைக் கிருமிகளை அழிக்கிறது.• பாகற்காயை வாரம் ஒருமுறை குழம்பு வைத்து சாப்பிட்டால், வயிற்றுப் பூச்சி உண்டாகாது. • குடல் புண்கள் உள்ளவர்கள், வாழைக்காயை குழம்பு வைத்துச் சாப்பிட்டால், குணமாகும். • வயிற்றுப் புண்கள் குணமாக, தினமும் மதியம் கெட்டித் தயிர் சாப்பிடலாம்.

பூண்டு

1 .பூண்டையும் உப்பையும்சேர்த்து கசக்கி சாறெடுத்து தடவ அளுங்கு, மேல்தோல்சரிவு குணப்படும். 2 காது மந்தமாக இருப்பவர்களுக்குதொடர்ந்து பூண்டு சாறினை காதில் ஊற்றி வரலாம்.

3 பூண்டு சாறினை வலிப்புவருகிற குழந்தைகளுக்கும், இருமல், சளி தொந்தரவு இருப்பவர்களுக்கும் கொடுத்துவர மெல்ல மெல்ல குணம் பெறலாம். 4 இரைப்பு, இருமல், வயிற்றில் பூச்சி இருப்பவர்களுக்கு பூண்டு சாறுகளை சில துளிகள்உள்ளுக்கு சாப்பிட கொடுக்க குணம் எளிதில் கிடைக்கும்.

5 டான்ஸில் என்கிறஉள்நாக்கு வளர்ந்திருப்பவர்கள்-அந்த வளர்ந்த உள்நாக்கு சதை வளர்ச்சியின் மீது தடவ பூண்டுசாறினை தடவி குணம் கிடைக்கும். 6 பூண்டை பாலில் வேகவைத்துசாப்பிட கொழுப்பு (கொலஸ்ட்ரால் குறையும்) ரத்தக் கொதிப்பு, ஹைபவர் டென்ஷன் போன்ற பாதிப்புள்ளவர்களுக்குபூண்டு நல்ல மருந்து.

7 பூண்டில் பலவித மானசத்துக்கள் இருந்தாலும் அதிகமாக இருப்பது கால்சியம் சத்துத்தான். எனவே பூண்டை அதிகமாகசமையலில் பயன் படுத்துவதன் மூலமாக நாம் நமது எலும்பிற்கு வருகின்ற கேடுகளிலிருந்துதப்பித்துக் கொள்ளலாம். 8 பூண்டை வறுத்து சாப்பிடுவதைவிடவேக வைத்து சாப்பிடுவதே நல்லது.

9 பூச்சிக்கடி, உள்ள இடத்தில் பூண்டை வைத்து தேய்த்து விடலாம.10 பூண்டு சாறும், எலுமிச்சை சாறினையும் கலந்து தேமல் உள்ள இடங்களில்போட தேமல் காணாமல் போய் விடும்.11 வெள்ளைப்பூண்டை தினமும்சாப்பிட்டு வந்தால் கொழுப்புக் குறையும். 12 பூண்டு சாப்பாட்டின்வாய் துர் நாற்றம் இருப்பது உண்மை. எனவே பூண்டை தவிர்க்காதீர்கள்.

பூண்டை சாப்பிட்டவுடன்கொஞ்சம் அரிசி சாப்பிடுங்கள். பூண்டு நாற்றம் போய் விடும்.13 சளிப்பிடிக்கக் கூடியவர்களுக்குபூண்டை உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் விட்டுத் தெளிக்க வைத்து சூப் கொடுங்கள். சளி போயே போச்சு.14 வெள்ளைப் பூண்டைபாலில் வேகவைத்து காலை, மாலை அருந்தலாம்.வெங்காயத்தை நெய்யில் வதக்கியும் காலை மாலை சாப்பிட்டு வரலாம். உடல் நலம் பெறும்.

15 பூண்டு கொஞ்சம் எடுத்துஅதே அளவிற்கு வெற்றிலையும் வைத்துச் சேர்த்து அரைத்து எச்சில் தழும்பின் மீது பூசிவைத்திருந்து நன்கு ஊறவிட்டுக் கழுவிவிட்டு,மறுபடியும் போட வேண்டும். மூன்றே நாளில் எச்சில் தழும்பு மறைந்தே விடும்.16 பூண்டை உணவில் அதிகம்சேர்ப்பவர்களுக்கு, மலேரியா நோய் வராத17 வெள்ளைப்பூண்டை உணவில்சேர்த்தால் கொழுப்பு குறையும்.1

8 கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டுக்குள்இருக்க, தினமும் காலை, 4 வெள்ளைப்பூண்டுத் துண்டைச் சாப்பிடலாம19 பூண்டு பல மருத்துவநன்மை கொண்டு இருப்பினும்கூட மூலம், பௌத்திரம், பாதிப்பு இருப்பவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும். ஏன் எனில் பூண்டு ஒரு வெப்ப உண்டாக்கி. எனவே மூல பௌத்திர பாதிப்புகளை அதிகப்படுத்திவிடும்.

எலுமிச்சம் பழம் 1. எலுமிச்சையில் காய், பழம்,தோல் முதலியவை மருந்தாகும். உலர்ந்த எலுமிச்சம் பழத் தோலை சீயக்காய், உலர்ந்த கறிவேப்பிலை, வெந்தயம், பச்சைப் பயறு ஆகியவற்றுடன் கலந்து அரைத்து தலையில் நன்கு தேய்த்துக்குளித்து வர பொடுகு நீங்குவதுடன் தலைமுடி வளர் வதற்கும், கருமையாவதற்கும் உதவும்.

உடலில் தேய்த்துக்குளிக்க மேனி அழகு பெறும். 2. இது பித்தத்தைப் போக்கும்.எலுமிச்சம் பழத்தைத் துண்டுகளாக்கி துணியில் பொட்டலமாகக் கட்டிக் காய்ச்சிய நல்லெண்ணெயில்தொட்டு ஒத்தடம் கொடுக்க எலும்பு இணைப்புகளில் உண்டாகும் வலி போகும்.

3. அஜீரணத்தால் உண்டாகும் வாந்திக்கும், கர்ப்பமுற்று ஆரம்பநிலையில் ஏற்படும் வாந்திக்கும் எலுமிச்சம் பழம் அரு மருந்து. மூல நோய், வயிற்றுக் கடுப்பு, பித்தநோய் ஆகியவற்றையும் இது போக்கும்.

இளநீரில் புதிதாகப் பிழிந்த எலுமிச்சம்பழ ரசத்தைச் சேர்த்துக்கொடுத்து வர டைபாய்டு காய்ச்சலில் குணம் தெரிவதுடன் வாந்தி எடுப்பது போன்ற உணர்ச்சியும்தடைபடும்.4. எலுமிச்சம் பழச்சாற்றில்இரண்டு, மூன்று துளி வீதம்காலை மாலை காதில் விட்டு வந்தால் காது குடைச்சல் குணமாகும்.

5. எலுமிச்சைச் சாற்றுடன்சர்க்கரை கலந்து தினமும் சாப்பிட்டு வர, மஞ்சள் காமாலை, கண் நோய்கள் கட்டுப்படும 6. எலுமிச்சையால் அடங்கும் காமம் ஏப்பத்தை அடக்கும் ஓமம் -என்ற மூலிகை ஆத்திச்சூடியால் இப்பழத்தின் பண்பை நாம் உணரலாம்.

காமத்தை கட்டுப் படுத்தி விட்டால் விலைமகள் உறவு இல்லை. விலைமகள் உறவு இல்லையெனில் எய்ட்ஸ் வரவு இல்லை.நூறு மில்லி நீரில் அரைமூடி எலுமிச்சம்பழத்தை பிழிந்து சிறிதளவுஉப்பு சேர்த்து குடிக்க காமம் கட்டுப்படும்.

7. மேலும் நோய்களைத் தடுக்கும் சக்தி இப்பழத்தில் அதிகம் உள்ளது. இதிலுள்ள சிட்ரிக் அமிலம் கிருமிகளை எளிதில்கொல்லும். 8. எலுமிச்சம் பழச்சாறு, தக்காளிப் பழச்சாறு, தேன் கலந்து தினசரி ஒருவேளை வீதம் தொடர்ந்துகுடிக்க நாசம் பண்ணும் காசம் கட்டுப்படும்.

9. பேதி, சீதபேதி, இரத்தபேதி, இரத்தப் போக்குஉள்ள காலங்களில் வியாதியை விரைவில் கட்டுப்படுத்த காய்ச்சிய நூறு மில்லி பாலில் அரைமூடிஎலுமிச்சம் பழச் சாறு கலந்து, வடிகட்டியபாலை மட்டும் குடிக்கவும்.10. உடல் எரிச்சல் உள்ளவர்கள்குளிக்கும் நீரில் கொஞ்சம் எலுமிச்சை சாறை சேர்த்து குளித்தால் உடல் எரிச்சல் நீங்கும்.

11. எலுமிச்சையை பிழிந்து, குளிக்கும் நீரில் சில சொட்டுக்கள் விட்டுக்கொண்டால், சருமம் பளபளப்பாகும12. எலுமிச்சைச்சாறு 10 தேன் கலந்து முகத்தில் தடவி அரை மணி நேரம்ஊறவைத்து முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவினால் கரும்புள்ளிகள், முகவாட்டம் நீங்கி முகம் பளபளக்கும்.

13. எலுமிச்சைச் சாறுவல்லாரைக் கீரை அல்லது மஞ்சள் கரிசலாங் கண்ணி ஆகிய வற்றை தவறாமல் உணவில் சேர்த்து வந்தால்வெண் புள்ளிகள் விரைந்து குணமாகும்.14. எலுமிச்சைச் சாற்றை பசி வந்தால் நாளடைவில் முழங்கையில் உள்ள கருமை நிறம் மறையும்.

15. எலுமிச்சைச் சாறில்சிறிது தேன் கலந்து முகத்தில் ப+சிக் கொண்டு சிறிது நேரம் களித்து முகம் கழுவி வர தோல்சுருக்கம் மறையும். 16. எலுமிச்சை பழத்தைப்பிழிந்ததும் தோலின் உட்பறத்தை வெளிப்பறமாக வரும்படி செய்து முழங்;கை பின் கழுத்து போன்ற இடங்களில் தேய்த்துவந்தால் கரு நிறம் மறைந்து விடும்.

விரட்டுவோம் குறட்டையை டாக்டர் ரவி ராமலிங்கம்

சாதாரணமாக நோயாளிதான் 'எனக்கு இப்படிஇருக்கு டாக்டர் இங்கே வலிக்குது டாக்டர்" என்று தனக்குள்ள பிரச்சினையைச் சொல்வார்.ஆனால், குறட்டையைப்பொருத்தவரை நோயாளி எதையும் சொல்லமாட்டார். உடன் வருகிறவர்கள்தான் அவர் விடுகின்ற குறட்டையால்அதிகம் பாதிக்கப்பட்டு "இவர் ரொம்ப குறட்டை விடுறார் டாக்டர். இவர் நல்லா தூங்கிடுறாரு.

எங்களுக்குத்தான் தொந்தரவா இருக்கு" என்பார்கள்.உண்மையில் குறட்டை விடுகிறவர்கள் நிம்மதியாகத் தூங்குகிறார்களா? என்றால் அதுதான் இல்லை.
நாக்கு அண்ணம் ஆகியவை நாம் அசந்து தூங்குகிறபோது இறுக்கம் தளர்ந்துசுவாசக் குழாய் மேல் படிந்து அழுத்துகிறது. இதனால் சுவாசம் தடைப்பட்டு அதிர்வு உண்டாகிசப்தம் வருகிறது.

ஆக குறட்டை விட்டால் சரியான சுவாசம் இருக்காது. ஒருவிதத் தடங்கலோடுதான்தூங்க வேண்டியதிருக்கும் என்கிறார் டாக்டர் ரவி ராமலிங்கம். அவர் மேலும் கூறியதாவது:-பொதுவாக நமக்கெல்லாம் குறட்டை ஒரு விளையாட்டான விடயமாகத்தான்தெரிகிறது. ஆனால், குறட்டையை விளையாட்டாகஎடுத்துக் கொள்ள முடியாது. குறட்டையினால் உயிரே கூடப் போயிருக்கிறது.

குறட்டை விடும்போதுசுவாசம் தடைப் படுவதோடு மட்டுமல்லாமல், சில சமயம்மூச்சுத் திணறல் உண்டாகிவிடும்.

குறட்டை விட்டுத் தூங்குபவர் அலறியடித்து திடீரென்று எழுவதுஇதனால்தான். விழித்ததும் சுவாசம் திரும்பக் கிடைத்து விடுகிறது. இவ்வாறு உண்டாகிற மூச்சுத்திணறலை "ஸலீப் அப்னியா சிண்ட்ரோம்" என்கிறோம்.

ஒருவர் ஏழு மணிநேரம் தூங்குகிறார் என்றால், அதில் குறைந்தது 30 தடவை மூச்சுத் திணறல் ஏற்படுகிறது என்றாலோ, "ஹீரோயிக் ஸ்னோரிங்" என்கிற தீவிர குறட்டைவிடுகிறவர்களாக இருந்தாலோ, விட்டுவிட்டுத்தூங்கக் கூடியவராக இருந்தாலோ அதாவது இரவில் தூக்கம் இல்லாமல் பகலில் தூக்கமும் தலைவலியோடு விழிப்பது, உற்சாகமாக இல்லாமல்இருப்பது போன்ற பாதிப்புள்ளவர்களாக இருந்தாலோ "ஸ்லீப் அம்னீசியா சிண்ட்ரோம்"வர வாய்ப்புகள் உள்ளன.

மூளையில் இருக்கிற "தூக்கம் சம்பந்தப்பட்ட செல்களில் கோளாறுஏற்பட்டாலும் அதனால் சுவாசம் சரியாக நடைபெறாமல் சுவாச நிலையும் பாதிக்கப்பட்டு அதனாலும் இந்த சிண்ட்ரோம் வரலாம்.

குழந்தைகளைப் பொருத்தவரை டான்சில் மற்றும் அடினாய்டு சதை வளர்ச்சியால்சுவாசப் பாதை தடைப்பட்டு குறட்டை வரலாம். சிலருக்குத் தாடை சின்னதாக இருக்கும். நாக்குபெரியதாக இருக்கும். வாயில் இடம் போதாமல் சுவாசப் பாதை அடைத்துக் கொண்டிருக்கும். இதனாலும்குறட்டை வரும்.

தவிர, மூக்குச்சம்பந்தப்பட்ட பிரச்சினைகளான மூக்கு எலும்பு வளைந்து இருத்தல், பாலிப் சதை வளர்ச்சி, மூக்கடைப்பு போன்றவையாலும் தொண்டை மற்றும்குரல் வளையில் ஏற்படுகிற அடைப்புகளாலும் குறட்டை வரும்.சாதாரணமாக ஒருவர் விழித்துக் கொண்டிருக்கும்போது அவருடைய ரத்தத்தில்நூறு சதவிகிதம் ஆக்சிஜன் இருக்கிறது என்றால்,அவர் தூங்குகிற வேளையில் 90 சதவிகிதஆக்சிஷன் தான் இருக்கும்.

இது சாதாரண நிலையில். ஆனால், ஒருவர் குறட்டை விட்டுத் தூங்குகிறார் என்றால், சுவாசம் தடைப்பட்டு அவருடைய ரத்தத்தில் ஆக்சிஜன்அளவு எழுபது சதவிகிதமாகக் குறைந்துவிடும்.

இப்படியே தொடர்ந்து குறட்டை விட்டுக் கொண்டிருந்தால், குறைச்சலான ஆக்சிஜனால் மூளைத் திறன் குறைந்து, மறதி,எரிச்சல், கோபம் போன்ற பாதிப்புகள்ஏற்படு கிறது. ஆக்சிஜன் குறைவினால் இதயம் செயலிழந்து போகும் அபாயம் ஏற்படுகிறது.

தவிர குறட்டை விடுவது தொடர்ந்தால் ரத்தக் கொதிப்பு, நெஞ்சு வலி, பக்க வாதம் போன்றவையும் ஏற்படலாம். குறட்டை விடுவதைச் சரி செய்தாலே இவற்றையெல்லாம் சரி செய்துவிடலாம்."ஸ்லீம் - லே-பரட்டரி" என்று இப்போது நிறைய வந்துவிட்டன. நோயாளியின் குறட்டைஎந்த அளவுக்குப் பாதிப்பை உண்டாக்கக் கூடியது என்பதை இங்கே கணித்துச் சொல்கிறார்கள்.

நோயாளியை இங்கே ஓர் இரவு தூங்கக் கூறி அந்த சமயத்தில் அவருடையகுறட்டை அளவு, இதயத் துடிப்பு, மூளையின் செயல்பாடு, கண்,அடிவயிற்றின் அசைவு, மூக்கு மற்றும்வாய்ப் பகுதிகளில் காற்றின் போக்கு, நாடித் துடிப்பு, ரத்தத்தில் இருக்கிற ஆக்சிஜன் அளவு, எத்தனை முறை மூச்சுத் திணறல் உண்டாகிறது இப்படிபலதரப்பட்ட விடயங்களைக் கவனித்து அந்த நோயாளியின் குறட்டை தூக்கத்தை அக்கு வேறு ஆணிவேறாக அலசி விடுகிறார்கள்.

அந்த முடிவை வைத்து அவருடைய குறட்டையின் வலிமையை உணர்ந்து சிகிச்சைதரப்படுகிறது. லேப்களில் கண்டுபிடிக்கிற இந்த அக்குவேறு ஆணி வேறு அலசலை "பாலிசோம்னோகிராம்"என்கிறோம்.

பப்பாளி சம்மர்ல பல இடங்களில் பப்பாளிப் பழத்தை துண்டுகளாக வெட்டி வண்டியில்வைதது விற்கிறார்கள். ஆனால் பொதுவாக பப்பாளி சூடு என்று சொல்லப்படுகிறது. வெயிலுக்குபப்பாளி நல்லதா?

'பப்பாளியை நாம் எந்தக்காலத்திலும் எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம். இது ஒரு திகட்டாத பழம் என்பதால், நாம் அளவுக்கதிகமாக சாப்பிட்டு விடுவோம்.அப்பொழுதுதான் பிரச்னை. அளவோடு சாப்பிடும் வரை இது அபூர்வமான பழம்.பெண்கள் இந்தப் பழத்தைச் சாப்பிடக் கூடாது என்று சொல்வார்கள்.அதுவும் தவறு.

பெண்களுக்கு மாதவிலக்கு நின்றபின் எடை கூடி, இரத்த அழுத்தம், முதுகு, இடுப்பு, மூட்டுகாளில்வலி ஏற்பட்டு நடக்க சிரமப்படுவர். அவர்கள் தினசரி இரண்டு கீற்று பப்பாளி சாப்பிட்டால்எடை சடசடவென குறயும். மூட்டு வலி குறையும்.

முகெலும்பு பிதுக்கம் அல்ல நழுவல் காரணமாக வரும் கடுமயான வலிக்குபப்பாளியில் உள்ள 'கமோ பாப்பன்' என்ற கெமிக்கல் நல்ல குணமளிப்பதாக அமெரிக்காவில்ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளனர்.

பொவாகவே பப்பாளி தலைமுடி, சருமம், கண்பார்வை, தொண்டை, வயிறு, சிறுநீரகம்அனைத்துக்கும் மிகவும் ஏற்றது. எக்காரணத்தைக் கொண்டும் பப்பாளியை நாம் தவிர்த்தால், நம் ஆரோக்கியத்தை நாம் தவிர்க்கிறோம் என்றுதான்அர்த்தம்."

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலே சிறந்த உணவு!

பாலூட்டும் தாய்மார்களுக்கு அதுகூட்டும் அழகு!!குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்துக்கான சத்து தாய்ப்பாலில்தான் இருக்கிறது. அதனால் ஒவ்வொரு தாயும் தன் கடமையை உணர்ந்து பாலூட்டுவதைஎக்காரணத்தைக் கொண்டும் தவிர்க்கக் கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள்.

தாய்ப்பாலின்பெருமையும், குழந்தைக்கும் தாய்க்கும் எவ்வாறு பயன்படுகிறது என்பதையும் விளக்குகிறார் குழந்தை நல மருத்துவர் கீதா.

தாய்ப்பாலில் ஆண்டிபாடிஸ் இருப்பதால் பிறந்த குழந்தைக்கு எந்தவிதவைரஸ் மற்றும் பாக்டீரியல் இன்ஃபெக்ஷன்கள் ஏற்படாமல் பாதுகாக்கும். அதுவும் எந்த பாட்டிலிலும் போடாமல் நேரடியாக குழந்தைக்குக் கொடுக்கப்படுவதால் கலப்படமில்லாத பரிசுத்தமான பால்குழந்தைக்குக் கிடைத்துவிடுகிறது.

மேலும் இந்தப் பாலில் கொழுப்புச் சத்து, சர்க்கரை, தண்ணீர், புரதச் சத்துதேவையான அளவில் இருப்பதால் குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், மூளை வளர்ச்சிக்கும் தேவையான சத்துக்கள் கிடத்துவிடுகிறது.

தாய்ப்பால் சாப்பிடும் குழந்தைதக்கு உடலில் எந்தவித ஒவ்வாமைஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு. அப்படி ஒவ்வாமை ஏற்பட்டாலும் அது தாய் எடுத்துக்கொண்ட உணவுப் பொருட்கள் ஏதோ ஒன்றின் ஒவ்வாமையினால்தான் இருக்கக் கூடும்.

தாய்ப்பால் சாப்பிடும் குழந்தைகள் வெயிட் போடாமல் ஒல்லியாகத்தான்இருப்பார்கள். ஆனால் ஆரோக்கியமாக இருப்பார்கள். சில தாய்மார்கள் குழந்தை எடை கூட வில்லையேஎன்று மிக விரைவில் தாய்ப்பாலுடன் பாட்டில் உணவுகளுக்கு மாறிவிடுவார்கள். இப்படிச் செய்வது குழந்தையின் உடல்நலத்துக்கு நல்லது கிடையாது.பாட்டில் பாலில் கொழுப்புச் சத்து சற்று அதிக சதவிகிதத்தில் இருப்பதால் எடை கூடத்தான்செய்யும்.

ஆனால் ஆரோக்கியமானதல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மேலும்குழந்தைகள் எதிர்காலத்திலும் அதிக வெயிட் போடாமல் ஆரோக்கியமாக இருப்பார்கள். தாய்ப்பால்குழந்தைகளிடம் ஓபிஸிட்டிக்கான ரிஸ்க் மிகவும் குறைவு. அதே போல குழந்தையின் எலும்புவளர்ச்சிக்கும் தாய்ப்பால் முக்கியப் பங்கு வகிக்கிறது.

எவ்வளவு நாட்களுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டுமென்றால், குழந்தை பிறந்த சில மணி நேரங்களிலிருந் ஒருவருடம் வரை குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்குத் தாய்ப்பால் கட்டாயம் தேவை. இந்தஒரு வருட காலத்தில் முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும்.

ஒரு நாளைக்கு எட்டு ஃபீடிங் கொடுக்கலாம். அடுத்த ஆறு மாதங்களில்மற்ற உணவு முறைகளுடன் தாய்ப்பாலும் கொடுக்கப்படவேண்டும். சிலர் மற்ற உணவுகள அறிமுகப்படுத்தியவுடன் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிடுகிறார்கள்.

அப்படிச் செய்யாமல் மற்ற டின் ஃபுட் கொடுக்கத் தொடங்கிய பின் எட்டு ஃபீடிங்கக் குறைததுக் கொள்ளலாம்.

இரவு நேரங்களில் ஃபீடிங் கொடுத்தால் தாயின் உடலில் ஹார்மோன்களின்செயல்பாடு அதிகரித்து பால் சீராகச் சுரக்கும். அதிகமாக பால் சுரக்கும்போது குழநi;தக்கு ஃபீட் செய்தால் உரிஞ்சி எடுக்க முடியாமல்குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படும்.

அதனால் இந்தச் சமயத்தில் தாய்ப்பாலபை; பிழிந்து எடுத்து சுத்தமான பால் புட்டியில்போட்டுக் கொடுக்க வேண்டும்.தாய்ப்பால் கொடுக்கும்போது தாய்க்கு சில அசௌகரியங்கள் ஏற்படத்தான்செய்யும். அதை சில எளிய வழிகளில் சரிப்படுத்தலாம். தாய்ப்பால் கொடுக்கும்போது மார்பகத்தில்வலி ஏற்படும்.
ஆனால் போகப் போக உடல் இதற்குப் பழகிவிடும்போது சரியாகிவிடும்.

தாய்ப்பால் கொடுக்கும் முன்பு மார்பகங்களை இளஞ்சூடான துணியால் மென்மையாக ஒத்தி எடுங்கள்.தாய்ப்பால் கொடுக்கும் முன்பு இளஞ்சூடான தண்ணீரில் குளித்தால் பால் சுரப்பது கொஞ்சம் ஈஸியாகிவிடும்.

ஒரே பொஸிஷனில் ஃபீட் செய்யாமல் உங்கள் நிலையைக் கொஞ்சம் மாற்றியும்தாய்ப்பால் கொடுத்துப் பழகலாம். வலி நிவாரணிகள் மருத்துவரின் ஆலோசனப்படியே எடுத்துக்கொள்ள வேண்டும். தாய்ப்பால் கொடுத்து மார்பக நிப்பிள்களில் வெடிப்பு ஏற்பட்டால், செயற்கயான மாய்சுரஸர்கள் பயன்படுத்தத் தேவையில்ல.

தாய்ப்பாலே மாய்சுரஸராக வெடிப்ப ஆற்றிவிடும். தாய்ப்பால் கொடுக்கத்தொடங்கும் தாய்மார்களுக்கு ஆரம்பத்தில் உடல் அளவிலும், மனசிலும் சில அசௌகரியங்கள் ஏற்படும். மருத்துவரின் ஆலோசனப்படியும், வீட்டில் உள்ள பெரியவர்களின், குறிப்பாக அம்மாவின் யோசனைகள்படி நடந்து கொண்டால் தாய்ப்பால்கொடுப்பது சுலபமாகப் பழகிவிடும்.

சரி.. தாய்ப்பாலினால் குழந்தைக்கு மட்டும்தான் நன்மை கிடக்குமா? தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும்சமபங்கு நன்மைகள் கிடைக்கும்.- பாலூட்டும் தாய்மார்களுக்குஆக்ஸிடாஸின் என்ற ஹார்மோன் வெளிப்படுவதால் பிரசவத்தின் போது விரிந்த கருப்பை நார்மலானஅளவுக்குச் சுருங்கத் தொடங்கும்.- பிரசவ காலத்தின்போதுஉடலில் சேர்ந்துள்ள அதிகப்படி கொழுப்புச் சத்து குறைந்து உடல் எடை இளைத்து சிக்கென்று திரும்புவார்கள். இவை இயற்கை ஏற்படுத்திக் கொடுத்த வரப்பிரசாதங்கள்.

- மாதவிடாய் தள்ளிப்போடப்படுவதால் இயற்கையான முறையில் கரு உண்டாவது தடுக்கப்படுகிறது.- தொடர்ந்து இருபத்து நான்கு மாதங்கள் தாய்ப்பால் கொடுத்த பெண்களுக்கு ஓவரியன் மற்றும் மார்பக புற்று நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் குறைவு.- பாலூட்டுவதால் உடல்எடை இளைத்து அழகுகூடுமே தவிர, எந்தவிதத்திலும் தாயின் அழகு பாதிக்கப்படாது என்பதை உறுதியாகச் சொல்லாம்.- பாலூட்டும் தாய்மார்களுக்கு குழந்தையின் மனதளவில் நெருங்கி ஒரு அரவணைப்பு கொடுக்க இயலும். குழந்தைக்கு ஒருவித பாதுகாப்பு உணர்வு இதனால் ஏற்படுகிறது என்பது உண்மை.

- பாலூட்டுவதால் மனதளவில்ஏற்படும் டிப்ரஷன்கூட குணமாகி இழந்த உற்சாகத்தைத் திரும்பிப் பெற முடியும்.டி.பி., ஹெபாடிடிஸ், எய்ட்ஸ் நோயாளிகள் மட்டும் பாலூட்டுவதைத் தவிர்க்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். பாலூட்டும் தாய்மார்கள் எந்த மாத்திரகள் எடுத்துக் கொண்டாலும் மருத்துவரின் ஆலோசனையின்றி எடுத்துக் கொள்ளக் கூடாது.

சில மருந்துகள் தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுத்திவிடும். தாய்ப்பாலின் பெருமையை உணர்ந்து குழந்தைகளுக்குப் பாலூட்டி வந்தால் ஆரோக்கியமான குழநi;தகளை இந்த சமுதாயத்துக்கு அளிக்கலாம்.

சமீபத்தில் சில ஆராய்ச்சியாளர்கள் குழந்தைகளிடம் ஐக்யூ டெஸ்ட் எடுத்துப் பார்தார்கள். இதில் தாய்ப்பால் சாப்பிட்டு வளர்ந்த குழந்தைகளின் ஐக்யூ லெவல் தாய்ப்பால் அளிக்கப்படாத குழந்தகைளவிட சற்றே அதிகமாக இருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு முக்கியப் பங்கு வகிக்கும் தாய்ப்பாலின்பெருமையை ஒவ்வொரு பெண்ணும் உணர வேண்டும்.

தாய்-தந்தை உறவைப் பொறுத்தே குழந்தைகளின் மன நலம் அமையும்.. பெற்றோருக்கும்இ குழந்தைக்கும் இடையிலான உறவைப் பொறுத்தே குறிப்பிட்டகுழந்தையின் மன நலம் அமையும் என்பது உளவியலாளர்களின் கூற்று. ஆனால் புதிதாக நடந்த ஆய்வு இந்த விவகாரத்தில் மாறுபட்ட தகவலை தெரிவித்துள்ளது..

அப்பா - அம்மா இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பு காட்டி அன்னியோன்யமாகநடந்து கொண்டால்இ அவர்களின் குழந்தைகள் பாதுகாப்பான உணர்வை பெறுகிறார்கள். பிற்பாடுஅவர்கள் சமுதாயத்துடன் இணைந்து பழகுவதற்கும் மன நலத்துடன் இருப்பதற்கும் இதுதான் காரணமாக அமைகிறது என்கிறது அந்த ஆய்வு.

குழந்தைகள் மீது அன்பு காட்டுவதில் பெரும்பாலான பெற்றோர் எந்தகுறையும் வைப்பதில்லை. ஆனால் தங்களுக்கிடையே ஏற்படு;ம் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் கருத்து வேறுபாடுகளுக்காக ஆவேசமாக மோதிக் கொள்கிறார்கள். குழந்தைகள் கண் எதிரில் இதுபோல நடந்து கொள்வதால் அவர்கள் மனதளவில் வெகுவாக பாதிக்கப்படுவார்கள்;. சண்டை- சச்சரவுகளின்போது பெற்றோர் பயன்படுத்தும் வார்த்தைகள் கூட அவர்களை காயப்படுத்தும்.

இத்தகைய சூழ்நிலையை சந்திக்கும் குழந்தைகள் பெற்றோர் மீதான மதிப்பைகுறைத்துக் கொள்ள ஆரம்பிப்பார்கள். இதனால் பெற்றோர் சொல்லுக்கு கட்டுப்பட மறுத்து தங்கள் மனம் போன போக்கிலேயே நடக்கத் தொடங்குவர். தாங்கள் செய்வதுதான் சரி என்ற எண்ணம் அவர்கள் மனதில் ஆழமாக வேரூன்ற ஆரம்பிக்கும்.

இது கெட்ட சகவாசம் கெட்ட பழக்கங்களுக்கு அடி கோலும். தாய்- தந்தை இடையிலான வெறுப்பு முடிவுக்கு வராத கோபதாபங்கள் ஆகியவை குழந்தைகளைத்தான் பாதிக்கும்.சண்டைக்கோழிகள் போல மல்லுக்கு நிற்கும் பெரும்பாலான பெற்றோர்இதாங்கள் சண்டை போட்டுக் கொண்டால் அது குழந்தைகளின் மென்மையான உள்ளத்தை காயப்படுத்தும் என்பதை உணர மறுக்கிறார்கள்.

குழந்தைகள் வளர்ந்த பிறகுதான் எல்லாவற்றையும் தெரிந்து கொள்கிறார்கள்என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் இது மிகவும் தவறானது. அனைத்து வகையான உணர்வுகளும் குழந்தைப் பருவத்திலேயே முளை விட தொடங்கி விடும்.

அம்மாவை அப்பா அடிக்கும் போதும் அல்லது ஆவேசமாக திட்டும்போதும் கைக்குழந்தைகள் வீறிட்டு அழுவது இதனால்தான். இந்நிலையில் அவர்கள் வளர வளர உணர்வுகளும் வளர்ந்து தெளிவடையும் என்பதால் தாய்- தந்தை இடையிலான பிணக்கு அவர்களை இன்னும் கடுமையாக பாதிக்கும். ஒழுக்கமான நெறிகளில் இருந்து பல்வேறு குழந்தைகள் வழி தவறிச் செல்வதற்கு இதுதான் காரணம்.

இதனால் பெற்றோர்களே!!! உங்களுக்கு இடையில் தகராறு- சண்டை சச்சரவுஇருந்தால் தாரளமாக வெளிப்படுத்தலாம். ஆனால் குழந்தைகள் அங்கே இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதுதான் ரொம்ப முக்கியம்.

மேலும் படிக்க...Read more...

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.




Animated avatar.



"இளையாங்குடி கல்லூரி தந்தை"



மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.








"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்கு







இளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்



உண்மை விளங்கும்.





.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP