என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

நீரழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் ஊசி வேண்டாம் இனி வருகிறது இன்ஹேலர்.

>> Wednesday, March 31, 2010

டயபடீஸ் நோயாளிகள் (நீரழிவு நோய்) இனி, வலி தரும் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ள வேண்டியிருக்காது.

இன்ஹேலர் வடிவில் இன்சுலின் விரைவில் விற்பனைக்கு வருகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த மேன்கைண்ட் கார்ப்பரேஷன் நிறுவனம், ‘அப்ரீசா’ என்ற பெயரில் இன்சுலின் இன்ஹேலரைத் தயாரித்துள்ளது
 

அது பற்றி அந்நிறுவன ஆராய்ச்சிக் குழுத் தலைவர் ஆண்ட்ரியா லியோன் பே கூறியதாவது:

நீரழிவு நோயாளிகள் அடிக்கடி இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வது கொடுமையாகும். அவர்களுக்கு இனி எளிய மருத்துவம் கிடைக்கப் போகிறது.

அப்ரீசா இன்ஹேலர், வழக்கமான இன்சுலின் ஊசியை விட வேகமாக செயல்படக் கூடியது.

ரத்தத்தில் சர்க்கரை அளவை நார்மலாக உடனடியாக மாற்றக் கூடியது. அதேநேரம், சர்க்கரை அளவு குறிப்பிட்ட அளவுக்கு மேல் குறையக்கூடிய ஆபத்து இல்லாதது.

இந்த இன்ஹேலரில் டெக்னோஸ் பியர் என்ற புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. வாய் மூலம் உள்ளிழுக்கப்படும் இன்சுலின் பவுடர், நுரையீரலுக்கு சென்று உடனடியாக ரத்தத்தில் கலக்கும். உடனடியாக செயல்படத் தொடங்கும்.

இன்ஹேலரை உறிஞ்சிய 12 நிமிடங்களில் நோயாளிக்கு நிம்மதி கிடைக்கும். அதேபோல, இன்சுலின் ஊசி ரத்தத்தில் செயல்படுவதைவிட கூடுதல் நேரம் செயல்படும்.

அப்ரீசா இன்ஹேலர் இப்போது அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் அனுமதிக்காக காத்திருக்கிறது. அது கிடைத்ததும் உலகம் முழுவதும் விற்பனைக்கு வரும் என்றார்.

சர்க்கரை நோய்க்கு இன்சுலின் இன்ஹேலர் அறிமுகமாவதை மருத்துவ நிபுணர்கள் வரவேற்றுள்ளனர். அமெரிக்க டயபடீஸ் ஆராய்ச்சி பவுண்டேஷன் இயக்குனர் சஞ்சய் தத்தா கூறுகையில், “அப்ரீசா" தயாரிப்பில் தேவையான பாதுகாப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதில் நோயாளிக்கு பக்கவிளைவுகள் ஏதும் இருக்காது என்று நம்புகிறோம். இன்சுலின் ஊசியைவிட இன்ஹேலர் பயன்படுத்துவது டயபடீஸ் நோயாளிகளுக்கு எளிதாக இருக்கும்” என்றார்.
THANKS TO: http://tvcode.blogspot.com/2010/03/blog-post_26.html
www.thiruvai.com

0 comments:

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.




Animated avatar.



"இளையாங்குடி கல்லூரி தந்தை"



மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.








"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்கு







இளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்



உண்மை விளங்கும்.





.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP