என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

கணினியில் இருந்து கண்களைக் காக்க !

>> Sunday, September 6, 2009


1.கணினியில் இருந்து கண்களைக் காக்க !
2.இணையத்தின் வயது 40 - சில ஆச்சரிய தகவல்கள்
3.பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்
4,கவுண்டமணி,செந்தில் ஆரம்பிக்கும் ப்ளாக்


1.கணினியில் இருந்து கண்களைக் காக்க !

கணினியில் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு கண்கள் உலர்ந்து பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு விடுகிறது. அதாவது, கணினியில் வேலை செய்யும்போது கண் இமைகள் இமைப்பது குறைந்து விடுகிறது. இதனால் கண் வறண்டு போகிறது. இதனைத் தவிர்க்க ஒரு மணிக்கொரு முறை கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.

அந்த சமயத்தில் கண்களை உள்ளங்கையின் அடிப்பாகத்தால் லேசாக அழுத்தி விட வேண்டும். மற்றும் பச்சை அல்லது நீல நிறத்தில் உள்ள பொருள்களை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருக்கலாம். இந்த நிறங்கள் கண்களுக்கு இதமானவை.

2 மணி நேரத்திற்கு ஒரு முறை கண்களை சுழல விட வேண்டும். அவ்வப்போது கண் இமைக்கப்படுகின்றதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதிக நேரம் கணினியில் வேலை செய்ய வேண்டி வந்தால் அவ்வப்போது எழுந்து பச்சையான மரங்களைப் பார்த்துவிட்டு வந்து அமர்ந்து பணியாற்றலாம்

2.இணையத்தின் வயது 40 - சில ஆச்சரிய தகவல்கள்

நமது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகிவிட்ட
இணையத்தின் வயது 40.நாற்பது ஆண்டுகளுக்கு முன்
இரண்டு கணினிக்கு தகவல் பரிமாற்றம் செய்யத் தொடங்கி
இன்று அபார வளர்ச்சி அடைந்து இருக்கின்றது.

இணையத்தின் வளர்ச்சி படிகள் - சில ஆச்சரிய தகவல்கள்

1969 :செப்டம்பர் 2-ஆம் தேதி ,கலிபோர்னியா பல்கலைகழகத்தில்
இரண்டு கணினிகள் சில தகவல்களை பரிமாறிகொண்டன.
இது Arpanet ,ராணுவத்தின் சோதனை இணையமாகும்.

1972:Ray Tomilinson மின்னஞ்சலை மற்ற கணினிகளுக்கு அனுப்பும்
முறையை கண்டுபிடித்தார்.

1973 :Arpanet மூலம் இங்கிலாந்து மற்றும் நார்வே நாடுகளில்
வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.

1974 :Viant Cerf and Bob kahn தகவல் தொடர்பில் ஒரு புரட்சியான
TCP உருவாக்கினர்.இதன் மூலந்தான் உண்மையான இணையம்
உருவானது.

1983 :வலைத்தளங்களுக்கு Domain Name System கொண்டு வரப்பட்டது
".com".அடுத்த வருடங்களில் ".gov" and ".edu" அறிமுகபடுத்தபட்டது.

1988 :இணையத்தை தாக்கியது Internet Worm Morris ,ஆயிரக்கணக்கான
கணினிகள் சேதமடைந்தன.

1990 :Tim Berners-Lee World Wide Web (WWW) உருவாக்கினர்.

1994 :Andreessen மற்றும் குழுவினர் உலகின் முதல் கமர்ஷியல்
இணைய உலாவியான Netscape-ஐ உருவாக்கினர்.

1998 :Larry Page and Sergey Brin கூகுளை உருவாக்கினர் Stanford பல்கலைகழகத்தில்.

1999 :Napster ஒரு பெரும் புரட்சியை இசை கோப்புகளை பரிமாறுவதிலும்
வாங்குவதிலும் ஏற்படுத்தியது.

2000 :இணைய தளங்கள் அதிகமாக தொடங்கியது.

2004 :Mark Zuckerberg Facebook-ஐ உருவாக்கினர் Harvard பல்கலைகழகத்தில்.

2005 : வீடியோ படங்களை பகிர்ந்து கொள்ள உதவும் Youtube உருவானது .

2007 :Apple Iphone-ஐ வெளியிட்டது ,இதன் மூலம் லட்சகனக்கனர்வர்கள்
இணையத்தை உபயோகப்படுத்த தொடங்கினர்.

2008 :Twitter உதயம்...

உலகம் முழுவதும் இணையம் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை:
1. China - 29.8 கோடி (22.4%)
2. USA - 22.7 கோடி (74.7%)
3. Japan - 9.4 கோடி (73.8%)
4. India - 8.1 கோடி (7.1%)
5. Brazil - 6.8 கோடி (34.3%)
6. Germany - 5.5 கோடி (67%)
7. UK - 4.8 கோடி (72%)
8. France - 4.1 கோடி (66%)
9. Russia - 3.8 கோடி (27%)
10. S.Korea - 3.7 கோடி (76%)
11. Australia - 1.7 கோடி (80.6%)
(Figures in brackets denotes percentage of nations population who use internet)

உலகம் முழுதும் இணையம் உபயோகிப்பவர்கள்:
1. 1999 - 2.5 கோடி
2. 2002 - 50 கோடி
3. 2006 - 100 கோடி
4. 2008 - 150 கோடி
நன்றி:Times of India

3.பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்

பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் விண்டோசை ஜன்னல்
என்றுஅழைத்திருப்பார்கள். அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்.

Save = வெச்சிக்கோ
Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ
Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ
Help = ஒதவு
Find = பாரு
Find Again = இன்னொரு தபா பாரு
Move = அப்பால போ
Mail = போஸ்ட்டு
Mailer = போஸ்ட்டு மேன்
Zoom = பெருசா காட்டு
Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு
Open = தெற நயினா
Close = பொத்திக்கோ
New = புச்சு
Old = பழ்சு
Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு
Run = ஓடு நய்னா
Execute = கொல்லு
Print = போஸ்டர் போடு
Print Preview = பாத்து போஸ்டர் போடு
Cut = வெட்டு - குத்து
Copy = ஈயடிச்சான் காப்பி
Paste = ஒட்டு
Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு
Delete = கீச்சிடு
anti virus = மாமியா கொடுமை
View = லுக்கு உடு
Tools = ஸ்பானரு
Toolbar = ஸ்பானரு செட்டு
Spreadsheet = பெரிசிட்டு
Database = டப்பா
Exit = ஓடுறா டேய்
Compress = அமுக்கி போடு
Mouse = எலி
Click = போட்டு சாத்து
Double click = ரெண்டு தபா போட்டு சாத்து
Scrollbar = இங்க அங்க அலத்தடி
Pay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு
Next = அப்பால
Previous = முன்னாங்கட்டி
Trash bin = கூவம் ஆறு
Solitaire = மங்காத்தா
Drag & hold = நல்லா இஸ்து புடி
Do you want to delete selected item? = மேய்யாலுமே தூக்கிறவா?
Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா?
Do you want to save selected item? = மெய்யாலுமே வெச்சிக்கவா?
Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு
Yes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ?
General protection fault = காலி
Access denied = கை வச்ச... கீச்சுடுவேன்!
Unrecoverable error = படா பேஜார்பா
Operation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்
Windows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு

4,கவுண்டமணி,செந்தில் ஆரம்பிக்கும் ப்ளாக்

கவுண்டமணி ஒரு ப்ளாக் ஆரம்பித்து எழுதி வருகிறார்.அதை எப்படியோ கேள்விப்பட்டு கெடுக்க வருகிறார் செந்தில்.
செந்தில் - அண்ணே,அண்ணே என்ன செய்றீங்க ?
கவுண்டமணி - வட தட்டிக்கிட்டு இருக்கிறேன்..உனக்கு கொஞ்சம் வேணுமா ?
செந்தில் - அண்ணே விளையாடாதீங்க..
கவுண்டமணி - ஆமா,நீ எம் மாமம் பொண்ணு பாரு..புதுசா சமஞ்சி இருக்க..உங்கிட்ட விளையாடிட்டாலும்..

செந்தில் - உங்க ப்ளாக் பேர சொல்லுங்க..
கவுண்டமணி - ஏன் வைரஸ் அனுப்பலாம்னு பாக்குறியாடா கொப்புரத் தலையா..
செந்தில் - இல்லண்ணே படிக்கத்தான்..
கவுண்டமணி - நீ வந்தாலே வைரஸ் வந்த மாதிரி தான்..என் ப்ளாக் பேரு ஆல்-இன்-ஆல்.ப்ளாக்ஸ்பாட்.காம்..
செந்தில் - அது என்ன இப்படி ஒரு பேரு..

கவுண்டமணி - அது பாரு மண்டையா.. நானே பதிவு போடுவேன்..நானே படிப்பேன்..ஹிட்ஸ் நானே ஏத்துவேன்..நானெ பின்னூட்டம் போடுவேன்..நானே ஃபாலோயர் ஆகுவேன்..எல்லாம் நானே..
செந்தில் - அழகுராஜாவ ஏன் போடல..

கவுண்டமணி - ஏன் உன்ன மாதிரி பன்னிங்க வந்து நீ அழகுராஜாவா இல்ல..அழுக்குராஜாவா.. கேட்க ஒரு சான்ஸ் கிடைக்கும்னு நினைக்கிறியா..அப்படி ஒரு ஆசை இருந்தா அழிச்சிரு..
செந்தில் - அப்ப யாரும் படிக்க மாட்டாங்களா..
கவுண்டமணி - தெரியுதுல அப்புறம் என்ன கேள்வி..ஒரு நக்கலான சிரிப்பு வேற..பேச்சப் பாரு..லொள்ளப் பாரு..பழமையப் பாரு..

கவுண்டமணி செந்தில் எட்டி இரண்டு மிதி மிதிக்கிறார்.

செந்தில் - எனக்கும் ஒரு ப்ளாக் ஆரம்பிக்கனும்..நீங்கதான் அதையும் செய்ய்யணும்..
கவுண்டமணி - என்ன பேரு வைக்கணும்..மண்டையன்.ப்ளாக்ஸ்பாட்.காம் இது ஒகேவா..
செந்தில் - அண்ணே வேணாமுண்ணே..வேற ஏதாவது பேரு..இப்படி வைங்க..புய்பம்.ப்ளாக்ஸ்பாட்.காம்..
கவுண்டமணி - அது புய்பம் இல்ல..புஷ்பம்..எங்க சொல்லு பாப்போம்..
செந்தில் - புய்பம்..

கவுண்டமணி - கோவத்த கிளப்பாம போயிரு..
செந்தில் - சரி விடுங்க..இந்த பேரு எப்படி இருக்கு பாருங்க..மேண்டில்.ப்ளாக்ஸ்பாட்.காம்..
கவுண்டமணி - அன்னைக்கும் இப்படிதான் மேண்டில உடச்ச..இன்னைக்கும் சிஸ்டத்த உடைக்கலாம்னு ஐடியாவா..மவனே பிச்சிருவேன் பிச்சி..

கவுண்டமணி சிஸ்டத்தைப் பத்திரமா பாத்துக்க சொல்லிட்டு ஒண்ணுக்கு போகிறார்.செந்தில் பலான படங்களை ஒரு பதிவாகப் போட்டு விடுகிறார்.கவுண்டமணி வந்து பார்க்க ப்ளாகில் அலைமோதும் கூட்டத்தைக் கண்டு துள்ளிக் குதிக்கிறார்.

கவுண்டமணி - டேய் எல்லாம் நீ வந்த ராசிடா மண்டையா..கூட்டம் அம்முது..

கவுண்டமணியைத் தேடி ஒரு கூட்டம் வருகிறது.

கூட்டதில் ஒருவன் - நீங்கதான் ஆல்-இன்-ஆல் ப்ளாக் ஒனரா ?
கவுண்டமணி - ஆமா..நான் அப்படி ஒன்னும் சாதனை பண்ணல..எனக்கு விருது எல்லாம் வேண்டாம்..

கூட்டம் - எங்க பொண்ணுங்க படத்தையெல்லாம் போட்டு அசிங்கப்படுதிட்டு விருது வேற வேணுமா உனக்கு..அடிங்கடா இவன..

தர்மயடி அடித்து விட்டு போகும் போது (கோரஸாக) இனிமே ஒரு பதிவு போட்டா உனக்கு அடுத்தப் பதிவு போட கை இருக்காது..
(செந்திலைக் காட்டி) அந்த பையன் மாதிரி நல்லவனா இரு..

கவுண்டமணி (மனதுக்குள்) - இவனுக்கு எப்படியாவது ஆப்பு வைக்கனும்..

சிஸ்டம் இருக்கும் மேஜையில் கண்ணில் படுமாறு ஒரு உண்டியல் போல இருக்கும் வெடியை வைக்கிறார்.செந்தில் அதை லவட்டி விடுகிறார்.கொஞ்ச நேரம் கழித்து..

செந்தில் - அண்ணே,அண்ணே..
கவுண்டமணி - என்னடா இங்க என்ன பண்ற..
செந்தில் - என்னை மன்னிச்சிடுங்க..நான் உங்க வீட்டில திருடிட்டேன்..
கவுண்டமணி - நீ எப்பவும் பண்றதுதானே..புதுசா என்ன மன்னிப்பு..பரவாயில்ல அது உங்கிட்டையே இருக்கட்டும்..
செந்தில் - மனசு கேட்கல..அதான் எடுத்த இடத்துலயே வைச்சுடேன்..

சொல்லிமுடிக்கும் சமயம் உள்ளே எல்லாம் வெடித்து சிதறுகிறது.

கவுண்டமணி (அதிர்ச்சி விலகாமல்) - சரி வா எல்லாம் போச்சு..தலை முழுகிட்டு வருவோம்..
குளத்திற்கு வந்தவுடன்..

கவுண்டமணி - உனக்கு நீச்சல் தெரியுமா..
செந்தில் - தெரியாது..எனக்கு சொல்லித் தர முடியுமா..

கவுண்டமணி எட்டி உதைத்து தண்ணீரில் செந்திலைத் தள்ளி விடுகிறார்.

செந்தில் - அண்ணே..எனக்கு நீச்சல் தெரியாது..காப்பாத்துங்க..
கவுண்டமணி - அப்படியே போ..நடுகடல்ல உங்க தாத்தா பதிவு எழுதிகிட்டு இருப்பார்..உங்க அப்பன் உன் வாய் மாதிரி இருக்கும் பின்னூட்டப் பெட்டியில் பின்னூட்டம் போட்டுகிட்டு இருப்பான்..நீ போய் ஃபாலோயரா சேர்ந்திரு..அந்த பரதேசி பசங்க என்னை அடிச்சது கூட வருத்தம் இல்ல..உன்னப் போய் நல்லவன்னு சொல்லிடாங்க..அதான் என்னால தாங்க முடியல..ஐயோ அம்மா..

1 comments:

Unknown September 7, 2009 at 3:34 PM  

கணினியில் அதிக நேரம் வேலை செய்பவர்கள் 6 மாதத்திற்க்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.




Animated avatar.



"இளையாங்குடி கல்லூரி தந்தை"



மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.








"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்கு







இளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்



உண்மை விளங்கும்.





.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP