என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

மருத்துவம் பகுதி 1.

>> Saturday, November 8, 2008

மருத்துவம். வாஞ்ஜுர்.

உயிர்வாழ உண்ணுங்கள்! உண்பதற்காக வாழாதீர்கள்!!

உணவே மருந்து! மருந்தே உணவாவதைத் தவிர்த்திடுவீர்!!


இருபது வயதுக்கு மேல் முளைத்து படாதபாடு படுத்தும் ஞானப்பற்கள் WISDOM TOOTH தேவைதானா? இவற்றை பல் டாக்டரிடம் சென்று எடுக்கமுடியுமா?

துன்பம் தரும் தும்மல்

அலர்ஜியால் ஏற்படும் நோய்கள் என்னென்ன?

தும்மலில் பல வகைகள் உண்டென்கிறார்களே, இது உண்மைதானா?

அலர்ஜியினால் வரும் தும்மல் நோய்ப் பற்றி?

முள்ளங்கி: என்னென்ன நோய்க்கு முள்ளங்கி மருந்தாகிறது?
கருச்சிதவைத் தடுக ்க:

பற்களின் ஆரோக்கியம்

பற்களை கையில் தேய்ப்பது நல்லதா? பிரஷைக்கொண்டு தேய்ப்பது நல்லதா? பற்பொடியை விட பற்பசை சிறந்ததா?

அயோடின் உப்பின் அவசியம் அறிவீரோ?

சர்க்கரை வியாதியால் கண்களில் ஏற்படும் விழித்திரைநோய், அதற்கான அறிகுறிகள் மற்றும் தீர்வுகள்

இருபது வயதுக்கு மேல் முளைத்து படாதபாடு படுத்தும் ஞானப்பற்கள் WISDOM TOOTH தேவைதானா? இவற்றை பல் டாக்டரிடம் சென்று எடுக்கமுடியுமா?

பொவாக பதினெட்டு வயது முதல் இருபத்தந்து வயதுக்குள் ஞானப்பல்முளைக்கும். நமக்கு நன்கு விபரம் தெரிந்து முளைக்கும் பற்கள் இவை என்பதால், இதை ஞானப்பற்கள் என்று சொல்கிறார்கள். மூன்றாவது கடவாய் பல்லான ஞானப் பற்கள் கீழ்த்தாடையில் இரண்டும், மேல்தாடையில் இரண்டும் வளரும்.


ஞானப்பற்கள் எல்லோருக்கும் முளைக்கும் என்று சொல்லமுடியாது.சிலருக்கு முளைக்கும். சிலருக்கு முளைக்காமலே போகும். சிலருக்குப் பாதி முளைத்து, மீதி தாடைக்குள்ளேயே தங்கிவிடும். சிலருக்குப் பல் வெளியே வர முடியாதபடிக்கு எலும்பு தடுத்துவிடும்.

இதனால் எல்லாம் பிரச்னை இல்லை. ஞானப்பல் வளரும்போது கோணலாக வளர்ந்து புற்று நோய்க்கு ஒரு காரணமாகவும் மாற வாய்ப்புண்டு. எனவே, ஞானப்பல் வளரும் பட்சத்தில் தாடையில் ஏதாவது வலி ஏற்பட்டால், உடனடியாக ஒரு பல் மருத்துவரை அணுகுவது நல்து உங்களுக்குப் பிரச்னயை ஏற்படுத்தும் ஞானப்பல்லைப் பிடுங்கி விடலாமா அல்லது மருத்துவ சிகிச்சைகள் மூலம் சரி செய்துவிடலாமா என்பதை அந்த டாக்டரே முடிவு செய்வார்.


துன்பம் தரும் தும்மல்

அன்றாட வாழ்க்கையில் நாம் காணும் பல நோய்களுக்கு ஒவ்வாமை எனப்படும்அலர்ஜிதான் காரணம். தினந்தோறும் பயன்படுத்தப்படும் பலவகையான சோப்பு, பவுடர், பேஸ்ட், வாசனைப் பொருட்கள், எண்ணெய், சாக்ஸ், ஆடைகள், அணிகலன்கள் போன்ற பொருட்கள் முதல் தும்பு, தூசிகள், நெடி, உணவு வகைகள், காய்கறிகள், பழங்கள், சாதாரண தலைவலி மாத்திரைகள் போன்றவை வரை எது வேண்டுமானாலும் ஒருவருக்கு அலர்ஜியைத் தோற்றுவிக்கக்கூடும்.


இதன் காரணமாகவும், நாளுக்குநாள் அதிகரித்துவரும் தொழிற்சாலைக் கழிவு, சுற்றுச்சூழல்கேடுபோன்றவற்றாலும், அலர்ஜியைப் பற்றிஅதிகமாகத் தெரிந்கொள்ள வேண்டும் என்ற ஆவல் அண்மைக் காலமாக நம் மக்களிடையே அதிகரித்துவருகிறது.


அலர்ஜியால் ஏற்படும் நோய்கள் என்னென்ன?
அலர்ஜி அறிகுறிகள் ஒருவருக்கொருவர், நேரத்திற்கு நேரம் மாறுபடும். உதாரணமாக, ஒருவருக்கு ஒரு அலர்ஜிப் பொருள் மூக்கில் தும்மல், மூக்கடைப்பு, ஜலதோஷம், நமைச்சல், வீக்கம், அரிப்பு போன்றவற்ற ஏற்படுத்தும். இன்னொருவருக்கோ மூச்சு முட்டி திணறல் ஏற்படும்.

வேறு சிலர் வாந்தி, குமட்டல், வாயு பிரிதல், வயிற்றுப்போக்கு போன்றவை.

அதே அலர்ஜிப் பொருளால்உணவுப்பாதை பாதிப்படைந்து, இதுபோன்றகோளாறுகளால் அதிகம் துன்பப்படுவார்கள். ஆக இந்த அறிகுறிகளக் கொண்டு பொதுவாக அலர்ஜிநோய்கள், தும்மல் நோய், விஷக்கடி, அலர்ஜி, ஆஸ்துமா என்று மூன்று பெரும் பிரிவுகளாக வகைப் படுத்தப்படுகின்றன.


உடல் அங்கங்கு சிவந்து செம்மை படர்தல், ஆகாத பொருட்களால் தோலில் ஏற்படும் தொடுதோல்அழற்சி நோய், கரப்பான் எனப்படும் எக்சிமா என்னும் தோல் நோய், மன அழுத்தச்சோர்வு நோய், தசைவலிகள், மூட்டு வீக்கம் மற்றும் வலிகள், கண்களில் அரிப்பு, நீர் வடிதல், சிவத்தல், காகளில் சீழ்வடிதல், அரிப்பு, தற்காலிகமாகச் செவி கேளாமை போன்றனவும், அலர்ஜியின் அசாதாரண அறிகுறிகளாக வெளிப்படும் பல்வேறு நோய்களாகும்.


தூக்கமின்மை, தலைவலி, படுக்கையில் சிறுநீர்கழித்தல், சிறுநீர்பை தொந்தரவுகள், நெஞ்சுவலி, படபடப்பு, கை, கால்கள் சில்லிட்டுப்போதல், எப்போதும் பரபரப்புடன் இருத்தல், பிறப்பு உறுப்புகளில் நமைச்சல், அளவிற்கு அதிகமாக சுறுசுறுப்பு, வெட்டுவாதம் போன்றனவும் அரிதாகச் சிலருக்கு அலர்ஜியினால் ஏற்படும் அறிகுறிகளாகும்.


பிறப்பு உறுப்புகளில் அதிகமான அரிப்பு, எரிச்சல், புண் போன்ற அலர்ஜி அறிகுறிகளைக் கொண்டுதான் முதன் முதலில் சர்க்கரைநோய், பலவகைக் காளான், பால் வினைத் தொற்று நோய்கள் உடலில் மறைந்துஇருப்பது கண்டுபிடிக்கப்படுகின்றன.


தும்மலில் பல வகைகள் உண்டென்கிறார்களே, இது உண்மைதானா?

இந்த முக்கிய அறிகுறிகளக் கொண்டு தும்மல் நோயை அலர்ஜியால் வரும்தும்மல்நோய், அலர்ஜி இல்லாமல் வரும்தும்மல்நோய் மற்றும் வேறு காரணங்களால் வரும் தும்மல்நோய் என்று இலண்டனில் 1994 ஆம் வருடக் கருத்தரங்கில் இந்த நோயைப் பிரித்துஅணுகி, ஆராயவேண்டும் என்றுபரிந்துரைக்கப்பட்ட.து இதன் அடிப்படயில் தும்மல் நோய் பலவகப்படுகின்றது.


அலர்ஜியினால் வரும் தும்மல் நோய்ப் பற்றி?

பொதுவாக பெரும்பாலான சமயங்களில் பல்வேறு புல், பூண்டு, மரம் செடிகளின் மகரந்தத் துகள்களினாலேயே இத்தும்மல் நோய் ஏற்படுகின்றது.பல்வேறு மகரந்தத்துகள்கள், பல்வேறு காலங்களில், பல இடங்களுக்குக் காற்றில் பரவுவதால் இத்தும்மல் நோய் உண்டாகின்றது.
எனவே, ஆண்டின் குறிப்பிட்ட மாதங்களில் மட்டும் உதாரணமாகபனி, பூ பூக்கும் காலங்களில்மட்டும் இந்நோயால் பாதிப்படைந்தவர்கள் தும்மிக்கொண்டே இருப்பார்கள்.

வருடத்தின் மற்றமாதங்களில் இந்நோய் அறிகுறிகள் எதுவும் தெரியாமலேயே இருக்கும். எனவேதான் இது ஒவ்வாமை பருவக் கால மூக்கழற்சி நோய் (Allergic SeasonalRhinitis) என்றழைக்கப்படுகின்றது. இத்தும்மல் நோய் பெரும்பாலும் இளவயதிலேயேஆரம்பிக்கும். சிறுவர்கள் இளைஞர்கள், இளம் பெண்களேநடுத்தர மற்றும் வயதானவர்களை விட அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

இளங்காலை அல்லது விடியற்காலை மற்றும் மாலை வேளைகளில் காற்றில் மகரந்தத்துகள்களின் அளவு அதிகம் இருப்பதால் இவ்வகையான மூக்கு அலர்ஜி இருப்பவர்களில் பெரும்பாலோர் படுக்கையிலிருந்து எழுந்து குளித்து முடிக்கும் காலம் வரை பல மணித்துளிகளுக்குத் தொடர்ந்து தும்மிக் கொண்டே இருப்பார்கள்.

குறைந்தது 50 முதல் 100 தும்மலாவது தொடர்ந்து தும்முவார்கள். பின்புநல்ல வெயில் வந்தவுடன் வழக்கம்போல் எந்த பாதிப்புமின்றி தங்கள் பணிகளைச் செய்வார்கள்.இது மிதமான தும்மல்நோய் ஆகும்.

இந்நோயால் துன்புறும் சிலரின் மூக்கில் கடுமையான எரிச்சல் அல்லஅரிப்பு இருந்துகொண்டே இருக்கும். சில சமயங்களில், வாயின் மேற்புறத்தில் உள்ள அன்னச்சதையும் எரியும். அல்லது அங்குநமைச்சல் ஏற்படும்.

எனவே நாக்கைக் கொண்டு அவ்வப்போது மேல் அன்னத்தைத் தடவிக் கொண்டோஅல்ல சப்புக் கொட்டிக் கொண்டோ இருப்பார்கள்.

பல சமயங்களில் தொண்டையும் எரியும். இவற்றைத் தொடர்ந்து பலமானதொடர் தும்மல்கள் ஏற்படும். தும்மித்தும்மித் துவண்டு விடுவதுமுண்டு. மூக்கிலிருநது; வெறும் நீர் வடிந்தவண்ணம் இருக்கும். கண்களிலும்அதன் ஓரங்களிலும் அதிக நமைச்சலுடன் கூடிய ஒருவித எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும்.கண்களில் நீர் தேங்கி நின்று, கண்கள் வீங்கிச்சிவந்துவிடும்.


சிலர் வருடம் முழுவம் தும்மல் நோயால் துன்பப்படுவார்கள். அவர்களின்மூக்கு எந்நேரமும் அடைப்பட்டிருப்பதால் இவர்கள் வாய் திறந்தபடியே மூச்சுவிடுவார்கள்.இரவு நேரங்களில் உற்பத்தியாகும் சளி தொண்டைக்கும் இறங்குவதாலும், எந்நேரமும், மூக்கு அடைபட்டுக் கிடப்பதாலும், இவர்கள் தூங்கும்போது குறட்டைச் சத்தமும் கேட்கும்.

தொண்டைக்குள் சளி அடைப்பதால் அவ்வப்போது தூக்கமும் கெட்டு, எழுந்து உட்கார்ந்து, சளியைத் துப்பியபின்பு, சிறிது நிவாரணம் பெறுவார்கள்.

பகல் நேரங்களில்தொண்டையில் சளி சேர்வதால், தொண்டைக்கும், காதுக்கும் இடையே உள்ள காற்றைச் சமன்படுத்தஉதவும். உட்செவிக் குழல் Eustachian tube)) அடைத்துக் கொண்டு காதும் சரிவர கேட்க முடியாமல்போய்விடும். எனவே அவ்வப்போது வாயைத் திறந்து திறந்து மூடுவார்கள். இதனால் காது கேட்கும் திறன் சற்றுக் கூடுதலாகும்.


இந்நோய்க்கான முறையான சிகிச்சயை மேற்கொள்ளாவிடில் காற்றறைகளிலும், நடுக்காதுகளில் சளித் தேங்கி Allergic மற்றும் இது போன்ற நோய்கள் ஏற்பட்டு தலைவலி, காதுகளில் சீழ்வடிதல் போன்ற தொல்லைகள் ஏற்படுவதுடன் சிலர் இருமலாலும், தோல் தடிப்பாலும் ஆஸ்துமா இழுப்பாலும் கஷ்ட்டப்படுவார்கள்.


இலேசான குளிர்காற்று,பனி, வெயில், தூசி,புகை, விரல்கள் போன்றன மூக்கில்பட்டாலே முன்பு சொன்ன அனைத் அறிகுறிகளும் படிப்படியாகக் காலை நேரங்களில் மட்டுமல்லாது மற்ற நேரங்களிலும் ஆரம்பித்த பின்பு நாட்கள்,வாரங்கள், மாதங்கள், ஆண்டுகள் தொடர்நது நீடிக்கும்.

இவ்வகையான தும்மல் நோய்க்கு வருடம் முழுவதும் இருக்கும் அலர்ஜித் தும்மல்நோய் Perennial allergicrhinitis என்று பெயர்.எனவே இந்நிலை ஏற்படாமல் இருக்க முதலிலேயே தங்கள் குடும்ப மருத்துவரின் வழியாக நல்ல அலர்ஜி ஆஸ்த்மா சிறப்பு மருத்துவரின் ஆலோசனப் பெறுவதே நல்லதாகும்.

இந்நோய்க்கு என்னென்ன பரிசோதனகள் முக்கியமாகச் செய்யவேண்டும்?

பொதுவாக அலர்ஜிப் பிணியாளர்கள் கூறும் நோய்க்குறி குணங்களைக் கொண்டு, மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.

தும்மல் நோயைப் பொறுத்தவரை நோய் தோன்றியவிதம், இந்நோயின் ஆரம்ப அறிகுறிகள், எந்தெந்த மாதங்களில் நோய் தீவிரமடைகிறது, வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் பூந்தோட்டங்கள், மரம்,செடிகள் உள்ளனவா, சாதாரண ஜலதோஷத்திலிருநது இவ்வகையான தும்மல் நோய் எவ்வாறு வேறுபடுகின்றது, எந்தச் சீதோஷ்ண நிலைகளில் இந்நோய் குறைகிறது,

இதனுடன் மற்ற அலர்ஜி நோய்களாலும் துன்புறுகின்றனரா, பெற்றோர்கள் மற்றும் அவர்கள் வழி வந்தவர்கள்ஆஸ்துமா, கரப்பான், தோல் அலர்ஜி தொடர்பான நோய்க்குக் குணங்களக் கொண்டிருக்கின்றனரா, அவர்கள் செய்யும்தொழில் என்ன என்பது போன்ற மிகவும் விரிவாக Care history மேற்கொள்ளப் படவேண்டும்.


மூக்குச்சளிச் சோதனை,சாதாரண இரத்தப் பரிசோதனைகள், சிறுநீர், மலம்,சைனஸ், மார்பு எக்ஸ்ரே போன்ற ENT பரிசோதனகளுடன் முக்கியமான தோல் அலர்ஜி டெஸ்டுகளையும் செய்ய வேண்டும்.

பல்வேறு புல், பூண்டு, மரம் செடிகளின் மகரந்தத்துகள் அடங்கிய வெவ்வேறு வகையான, இதற்கென்றே பிரத்யேகமாகத் தயார் செய்யப்பட்டுள்ள கரைசல்களில் ஒரே ஒரு துளியை எடுத்து தோலின் மேலோட்டமாக வலியேதும் இன்றிச் செய்யப்படும் இவ்வகையான modified prick allergens test மூலமாகத் துல்லியமாகத் தும்மல் நோய்க்கான காரணங்களை அறியலாம். இதை முறையுடன் அலர்ஜி ஆஸதுமா சிறப்பு மருத்துவரின் முதலுதவி வசதிகள் கொண்ட மருத்துவமனையிலேயே செய்து கொள்வது மிக மிக முக்கியம்.


முக்கியமான சிகிச்சை மற்றும் தவிர்க்கும் வழிகள் என்னென்ன?
இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட தோல் அலர்ஜி டெஸ்டுகளின் மூலம் கண்டறியப்பட்டஉடலுக்கு ஒத்துக் கொள்ளாத பொருட்கள முறையாகப் பட்டியலிட்டுத் தவிர்க்க முடிந்தவற்றத்தவிர்த்து முடியாத பலவகை மகரந்தத்துகள்கள், காளான், முடi;டகள், வீட்டுத் தூசி, சாலைத் தூசி, கரப்பான், பாச்சான், வீட்டுத்தூசி பூச்சி போன்றவற்றிற்கு முறையாக அலர்ஜித் தடுப்பூசிகள் போட்டுக் கொள்ளவேண்டும்
.

இவ்வகையான தடுப்பூசி சிகிச்சை முறை, அலர்ஜியினால் வரும் அனத்துவகைத் தும்மல் நோய்களை முழுமையாகக் குணப்படுத்வடன் மற்ற அலர்ஜிகளால் வரும் ஒவ்வாமை ஆஸ்துமா, ஆண்டு முழுவதும் ஆட்டிப்படைக்கும் அர்டிகேரியாநோய்களும் வராமல் தடுக்கப் பெரிதும் உதவுகின்றது. Oral nonsedative antihistamine H2 blockers மாத்திரைகள் போன்றவை தற்காலிக நிவாரணம் தந்தாலும், தும்மல் நோய்க்கான மூல காரணங்களுக்கு முறையாக சிகிச்சை மேற்கொள்வது நீண்டகால அல்ல முழுமயான சிகிச்சை முறையாகும்.


பனி, பூ பூக்கும்காலங்களில் வீட்டை விட்டு வெளியே வருவது, பிரயாணங்கள், தோட்டப்பணிகள் போன்றன கட்டாயம் தவிர்க்கப் படவேண்டும். குறிப்பாக, அலர்ஜி தன்மையுடய சிறுவர் காலையிலும், மாலையிலும் வெளியேநீண்ட நேரம் விளயாடுவதைக் குறைத்தல் நல்லது.

படுக்கை அறையில் ஜன்னல்கள் இதுபோன்ற காலங்களில் மூடி இருப்பதே பயன் தரும். குறைந்த பொருட்களுடன் கூடிய படுக்கை அறையே இவர்களுக்குக் குதூகலத்தைக் கொடுக்கக்கூடியது வீட்டைச் சுற்றி புல், பூண்டுகள், பூந்தோட்டம், மரம்,செடிகொடிகள் இல்லாமல் சுத்தமாக வைத்துக்கொள்வதே இவர்களைப் பொறுத்தவரை சுகமளிக்கக்கூடியது. சுகாதாரமானது.


முள்ளங்கி:கருச்சிதவைத் தடுக்க -
ஆண்மை சிறப்பாகச் செயல்பட.


காய்கறிகளை சமையலுக்குத் தேர்வு செய்யும்போது, எப்பொழுதும் கிடைக்கக் கூடியதாகவும் எங்கும்கிடைக்கக் கூடியதாகவும், சத்துக்கள்நிறைந்ததாகவும் விலை மலிவானதாகவும் உள்ளதைத் தேர்ந்தெடுத்து, அன்றாடம் பயன்படுத்துவதே சிறப்பானதாகும்.இக்காய்களில் மருத்துவக் குணம் நிறைந்தவற்றைப் பார்த்து வாங்கினால், பல நன்மைகளை அடைய முடியும். அவ்வாறு தேர்வுசெய்ததில் ஒன்றுதான் முள்ளங்கி.


இந்த முள்ளங்கியின் கிழங்கு, இலை, விதை ஆகியவற்றில்மருத்துவ குணங்களும்; உடலைப் பாதுகாக்கும் சத்துப்பொருள்களும் அடங்கியுள்ளன.
முள்ளங்கியில், சிவப்பு, மஞ்சள், வெள்ளை ஆகியவை தற்பொழுது பயன்படுத்தப்படுகிறது. முள்ளங்கி வெப்ப வீரியமும் கார்ப்புச் சுவையும் கொண்டதாகும்.


மருத்துவ குணங்கள்: முள்ளங்கியில் வெள்ளை முள்ளங்கிதான் மருத்துவகுணங்கள் அதிகம் உடையதாகும். முள்ளங்கியில் புரதம், கொழுப்பு, மணிச்சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் உள்ளன.
உயிர்ச்சத்துக்களான, கரோட்டிண், பி.1,ரிபோபிளேவின், நியாசின், சி. வைட்டமின்களும், மெக்னீஷியம், செம்பு, மேங்கனீஸ், ஜின்க், குரோமியம் ஆகிய சத்துக்களும் உள்ளன.


என்னென்ன நோய்க்கு முள்ளங்கி மருந்தாகிறது?

முள்ளங்கியைத் தினமும் சாப்பிடலாம். உணவு நல்ல முறையில் செரிமானம்ஆக உதவுகிற.து குடலில் ஏற்படும் எரிச்சலைத் தணிக்கிறது குடல் சம்மந்தமான அனைத்துக் கோளாறுகளயும் போக்குகிறது.

மூலக் கடுப்பிற்குச் சிறந்த நிவாரணமளிக்கிறது வயிற்று வலியைக் குணப்படுத்கிறது. வயிற்றில் ஏற்படும் எரிச்சலைக் குணமாக்குகிறது. இருமல், கபம்,ஜலதோஷம், தலைவலி, பல்நோய்கள் நிவர்த்தியாகிறது குன்மம் சுவாசம், குடல்விருத்தி நோய், வாதநோய் கரப்பான் நோய் நீங்க பெரிதும் பயன்படுகிறது.

விந்து உற்பத்திக்கு: கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டவர்கள்; இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள் முள்ளங்கிக் கீரையைச் சாப்பிடுவதால் நோயின் தாக்கம் குறவதை உணர முடியும்.

உணவில் முள்ளங்கியைச் சமைத்துச் சாப்பிடுவதால் கண்களுக்குத் தெளிவான பார்வை கிடைக்கிறது ஆண்களின் விந்து கூடுதலாக உற்பத்தியாகிறது.

பிஞ்சு முள்ளங்கியை வாங்கிச் சுத்தம் செய்து சாறு தயாரித்துச் சாப்பிட்டுவந்தால், நீர்க் கடுப்பு நீங்கும்.குடற் புண்கள் நிவர்த்தியாகும். பிஞ்சு முள்ளங்கியில் அயோடின், சிலிக்கான் ஆகியவை சேர்வதற்கு மிகவும் பயனுள்ளதாகும்.


கருச்சிதவைத் தடுக்க:
அடிக்கடி கருச்சிதைவுக்கு உள்ளாகும் பெண்கள் முள்ளங்கிச் சாறு 100 மில்லியில் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், கருப்பை பலம்பெற்றுக் கருச்சிதைவு ஏற்படாமல் பாதுகாக்கும்.


முள்ளங்கிச் சாற்றைச் சாப்பிடுவதால் மூட்டு வலி குறைகிறது.
எலும்புச்சிதைவு ஏற்படாமல் பாகாக்கிறது.


பொடுகு நீங்க: முள்ளங்கிச்சாற்றை குளிக்கும் தண்ணீரில் கலந்து தலைக்குத் தேய்த்து வைத்திருநது, சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால், தலையில் உள்ள பொடுகு நீங்கும். குளிக்கும்போது, பேன்கள் வெளியேறி விடும்.


உணவு செரிமானத்திற்கு:முள்ளங்கி விதையை இதன் எடைக்கு எட்டுப் பங்குத் தண்ணீரில் சேர்த்துக் காய்ச்சி, வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் காலை, மாலை சாப்பிட்டு வந்தால், உணவை மிக விரவில் செரிமானமாக்க உதவும்.

தாது விருத்திக்கு: முள்ளங்கி விதையை நன்கு பொடித்து வைத்துக் கொண்டு வெண்ணெயில் ஒரு தேக்கரண்டி பொடியைச் சேர்த்துக் குழைத்துச்சாப்பிட்டு வந்தால், ஆண்களுக்குச் சக்தியளித்து ஆண்மை சிறப்பாகச் செயல்படும். போக சக்தி நீடிக்கும். முள்ளங்கி விதையப் பொடி செய்து கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தாலும் தாது விருத்தி அதிகமாகும்.


முள்ளங்கி விதையப் பொடி செய்து சம அளவு கற்கண்டு சேர்த்து காலை, மாலை கால் கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால், சுக்கில இழப்பு சரிசெய்யப்பட்டு, தாது விருத்திக் கூடுதலாகும்.


முள்ளங்கி விதைய ஒரு தேக்கரண்டியளவு தூள் செய்து தண்ணீரில் கலந்துகாலல, மாலை குடித்து வந்தால் கடுமையான வெடi;டநோய் குணமாகும்.மருநது; சாப்பிடும்போது பேதி அதிகமானால், மருந்தின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.


சிறுநீர்ப் பையில் அழற்சியும் சிறுநீர் எரிச்சல், நீர்க்கடுப்பு உள்ளவர்கள் முள்ளங்கிச் சாறு100 மில்லியளவு தயாரித்து தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், சிறுநீர் தாராளமாகவும் எரிச்சல் இல்லாமலும் பிரியும். மேகநோய் தொடர்பான உடல் காங்கை தீரும்.


நீரிழிவைக் கட்டுப்படுத்த: பிஞ்சு முள்ளங்கியைத் தேங்காய் திருகுவது போல் திருகி, நிழலில் உலர்த்தி பொடித்து, இதில் தேவையான அளவுநெய், தேன், கற்கண்டு சேர்தது; லேகிய பதத்தில் தயாரித்து வைத்துக் கொண்டு காலை, மாலை, ஒரு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால் நீரிழிவுநோய் கட்டுப்படும்.

முள்ளங்கி விதையைக் கஷாயமாகத் தயாரித்துச் சாப்பிட்டு வந்தால் குடல்வாதம் நீங்கும்.


பற்களின் ஆரோக்கியம்

உடம்புக்கு முடியவில்லைன்னு டாக்டரிடம் போனால், அவர் முதலில் வாயைத்திற என்பார். பற்களின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வார். அடுத்து நாக்கை நீட்டு என்பார். ஒருவரின் உடல் ஆரோக்கியத்தின் பிரதிபலிப்பாக இருப்பது பற்களும், நாக்கும்தான்.



நம் ஆரோக்கியத்தைக் காட்டும் கண்ணாடி என்ற கருத்து பழங்காலம் முதலே இருந்து வருகிறது. இவ்வளவு முக்கியமான பாகங்களான பற்களுக்கு, நாம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்.


காலை எழுந்தவுடன் தூக்கக் கலக்கத்தில் அறைகுறையாகப் பல் விலக்குவது, நாள் முழுவதும் நொறுக்குத் தீனி, இரவு பிரஷ் செய்யாமல் படுப்பது போன்றது பற்களின் ஆரோக்கியத்துக்குச் செய்யக்கூடாத விஷயங்களைச் செய்து வருகிறோம். பற்கள் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே இருதயம் உட்பட மற்ற அனைத்து உறுப்புகளும் சிறப்பாக இயங்கும்.


பல் சுத்தமாக இல்லாவிட்டால், உணவை உட்கொள்ளும்போது,அசுத்தப் பற்களில் இருக்கும் கிருமிகளும் உள்ளே செல்கின்றன. உள்ளே சென்று இரைப்பையையும், சிறுகுடலையும் அடைந்து, உணவைக் கெடுத்து, புளிக்கச் செய்து அஜீரணத்தை எளிதாக உண்டாக்குகிறது.


மேலும் உள்நாக்கையும்,மூக்கையும், காதுகளையும், நுரையீரல்களையும் இந்தக் கிருமிகள் அடைந்து அந்த அங்கங்களில் நோயை உண்டாக்குகின்றன.

ஒருவனுக்குச் சொத்தைப் பற்கள் இருந்தால், அவன் சுவாசிக்கும் காற்று, அப்பற்களிலுள்ள கெட்ட வாயுக்களோடு நிறயைக்கலந்து உள்ளே செல்கிறது. இந்த கெட்ட வாயு ரத்தத்தோடு கலந்து அனைத்து அங்கங்களுக்கும் கெடுதல் ஏற்படுத்தி விடுகிறது. அதனால் குறிப்பிட்ட ஒரு நோய்க்குத் தீவிர சிகிச்சை அளித்து பலனில்லையெனில், பல் மருத்துவரை அணுகும்படி டாக்டர்கள் பரிந்துரைப்பார்கள்.


வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள், சரும நோய், தலைவலி இவற்றுக்கும் பற்களின் ஆரோக்கியத்துக்கும் நேரடியான தொடர்பு உண்டு.

பற்களின் ஆரோக்கியம் என்றால் சொத்தைப் பற்கள் இல்லாமல், கிருமிகள் வளர வழியில்லாமல் சுத்தமாகப் பராமரித்து வருவதும், h.றுகளில் சீழ் இல்லாமல் பராமரித்து வருவதே பற்களின் ஆரோக்கியமாகக் கருதுகிறோம்.

ஒரு பல் அழியத் தொடங்கினால், பக்கத்துப் பல்லும் விரைவில் அழியும்.

ஒரு கூடை மாம்பழங்களில்ஒரு பழம் அழுகியிருந்தால், அதைச் சுற்றியுள்ள மற்றப் பழங்களும் சீக்கிரம் அழுகிப்போகும் இல்லயா?

பற்களின் தன்மையும் இதுவே. அதனால் ஒரு பல்லில் பிரச்னயிருந்தால், அந்த நோய்க் கிருமி அடுத்த பல்லைத் தாக்கும் முன்பு மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சைய எடுத்துக்கொள்வது நல்ல.து பல்நோய்க்கு ஆளானவர்களை நினைக்கும் போது இரக்கம் ஏற்பட்டாலும் அவர்களுடைய தவறுகள நினக்கும்போது கோபம் வரும்.

அவர்களுடய அலட்சியமான பராமரிப்பாலும், கெட்ட பழக்கங்களினாலும் மட்டுமே பல் நோய்க்குஅவர்கள் ஆளாகிறார்கள்.


பற்களை கையில் தேய்ப்பது நல்லதா? பிரஷைக்கொண்டு தேய்ப்பது நல்லதா? பற்பொடியை விட பற்பசை சிறந்ததா?


Flourideகலக்கப்பட்டுள்ள பற்பசையக் கொண்டு மிருதுவான பிரஷ்ஷினால் பல் துலக்குவதே சரியான முறை. பிரஷ்ஷினால் ஒரு முறையில் இரண்டு பற்களை மட்டுமே சுத்தம் செய்ய முடியும். எனவே அடிக்கடி திசைகள மாற்றியபடி பல் துலக்க வேண்டும்.


குறைந்த ஐந்து நிமிடம் பல் துலக்கினால் மட்டுமே பற்களில் படிந்துள்ளகிருமிகள் நீங்கும். இந்தக் கிருமிகள் அதிகப்படியாக உருவாவதற்குக் காரணம், இரவில் பல் துலக்காமல் உறங்கச் செல்வதான். இரவு உணவு உண்டபின் பல் துலக்காமல் படுக்கைக்குச் செல்வதால் பற்களில் அகப்பட்டிருந்த உணவு பொருட்கள் பாக்டீரியாக்களாக உருமாறி ஒரு வித அமிலத்தை வெளியிடுகிறது. இந்த அமிலம்பற்களின் எனாமலைப் பாதிக்கும்.

எனவே ஆரோக்கியத்துக்கு முக்கியப் பங்கு வகிக்கும் பற்களைச் சுத்தம்செய்ய இரவில் இரண்டு நிமிடம் ஒதுக்க முடியாதா என்ன? சிறு குழந்தகளை, சிறு வயதிலிருந்தே இரண்டு வேளை பல் துலக்கவும் ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகு வாய் கொப்பளிக்கவும் பழக்கிவிடுங்கள்.

எலுமிச்சை, சாத்துகுடி, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழவகைகள் பற்களின் ஆரோக்கியத்துக்கு நல்ல. உணவு உண்டபின் இந்த பழவகைகளில் ஒன்றைச் சாப்பிட வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.


இந்த பழங்கள் நார்சத்தை அளித்து உமிழ்நீரை அதிகம் சுரக்கச் செய்துபற்களில் உணவினால் படிந்திருக்கும் சர்க்கரையைக் கரையச் செய்கிறது. சர்க்கரை அயிட்டங்கள் பற்களின் ஆரோக்கியத்தைப் பெரிதும் பாதிக்கும்.


சாக்லெட், ஐஸ்க்ரீம், ஜாம்,ஜெல்லி, இனிப்புகள் போன்றவற்றை, குறைவான அளவில் எடுத்க்துகொள்ள வேண்டும்.இனிப்பு வகைகளத் தனியாக எடுத்துக் கொள்ளாமல் உணவு உண்ணும்போது எடுத்துக் கொள்ளலாம்.சாப்பாடு கடித்துச் சாப்பிடும்போது உமிழ்நீர் சுரக்கப்படுவதால் சர்க்கரையும் இதில் கரைந்து விடும்.


எனவேதான் இனிப்பு உணவுடன் எடுத்துக் கொள்ளலாம் ;. இறைச்சி, பால், காய்கறிகள், கீரைவகைகள், விதைகள் இவை பற்களுக்கு நன்மை தரக் கூடிய உணவுப்பொருட்கள். எனவே, இவை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

BadBreath:: சிலர் பேசினாலே துர்நாற்றம் ஏற்படும். இது பற்களின் பராமரிப்பைக்காட்டிலும் நாக்கைச் சுத்தமாக வைத்துக் கொள்ளாததால் ஏற்படும் துர்நாற்றம். இரவிலும், காலையிலும் நாக்கை அதற்கான ஸ்க்ரேபர் பயன்படுத்தி சுத்தம் செய்தால் நாள் முழுவதும் வாய் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.


பல் துலக்கும் பிரஷ்ஷை இரண்டு மாதத்துக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.

ஒரு வருஷமாக ஒரே பிரஷ்ஷைப் பயன்படுத்தி வருபவர்களும் இருக்கிறார்கள்.பிரஷ்ஷின் ஷேப் மாறத் தொடங்கும் முன்பு மாற்றிவிட வேண்டும். ஒவ்வொரு முறை சளி, காய்ச்சல் வநது; சரியான பின்பு பிரஷ்ஷ மாற்ற மறநதுவிடாதீர்கள்.


சிறு குழந்தைகளுக்குப் புட்டிப் பால் கொடுத்தவுடன் பற்களை ஈரத்துணியால் துடைத்துவிடுங்கள். புட்டிப்பால் கொடுத்துவிட்டு அப்படியே உறங்க வைப்பது நல்லதல்ல. சிறு குழந்தகள் சாக்லெட்டுகளஅதிகம் விரும்பிச் சாப்பிடுபவராக இருந்தால்,சாக்லெட்டு சாப்பிட்டவுடன் பழ வகைகள் ஏதாவது ஒன்று சாப்பிடக் கொடுத்தால் பல் இடுக்குகளில் மாட்டிக் கொண்டிருக்கும் சாக்லெட் விடுபட்டுவிடும்.


காலை, இரவு இருநேரமும் பல் துலக்குவதை பழக்கப்படுத்திக் கொண்டால் மட்டுமே பல் நோய்களிலிருந்து விடுபடமுடியும்.

அயோடின் உப்பின் அவசியம் அறிவீரோ?

சாதாரண உப்பு எது அயோடின் கலந்த உப்பு எது என்ற வித்தியாசத்தக்கண்டுபிடிப்பது எப்படி? பலன்களில் வித்தியாசம் உண்டா?

யூனிசெப் நிறுவனம் அயோடின் உப்புச் சாப்பிட வேண்டியதின் அவசியத்தைஎடுத்துச் சொல்ல ஒரு புத்தகமே வெளியிட்டிருக்கிறது. இனி அந்தப் புத்தகத்திலிருந்து...

• சாதாரண உப்புடன் மிகச் சிறிய அளவில் அயோடின்சத்துள்ள கூட்டுப் பொருள் கலந்து தயாரிக்கப்படும் உப்பு அயோடைஸ்டு உப்பு என்று அழைக்கப்படுகிறது.


இதன் தோற்றம், மணம், சுவை அனத்திலும் சாதாரண உப்புப் போலவே இருக்கும்.இதை உணவுடன் கலந்து சாப்பிடும்போது 150 மைக்ரோ கிராம்அல்ல 15 பி.பி.எம். அயோடின்கிடக்கும்.

அயோடின் பற்றாக்குறையினால் நமக்குப் பலவிதமான குறைபாடுகள் ஏற்படுகின்றன.
• கர்ப்ப காலத்தில் கருச்சிதைவு, குறைப்பிரசவம், குழந்தை ஊனமாகப் பிறப்பு, இறந்து பிறப்பது போன்ற விளவுகள் ஏற்படுகின்றன.குழந்தைப் பருவத்தில் அயோடின் குறைவாய் இருந்தால் முன்கழுத்து தவிர, பல (ஹபோ தராஸ்டிஸம்) ஏற்படுகிறது. அறிவுக்குறைபாடுகள் தோன்றவும் காரணமாகிறது.


• சமவெளியில் வசிக்கும் மக்களை விட, மலைப் பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்குஅயோடின் பற்றாக்குறை அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளன.

இனிமேல் நீங்கள் கடைக்குப் போய் உப்பு வாங்குவதாக இருந்தால், அது அயோடின் கலந்த உப்புதானா என்று பார்த்துவாங்குங்கள்.

சர்க்கரை வியாதியால் கண்களில் ஏற்படும் விழித்திரைநோய், அதற்கான அறிகுறிகள் மற்றும் தீர்வுகள்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு குறிப்பு :
நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியது
1. சர்க்கரை நோயாளிகள்பத்தில் இரண்டு பேர் டயபீடிக் ரெட்டினோபதியினால் பாதிக்கப்படுகிறார்கள்.
2. ஆரம்ப காலத்தில் இந்தநோய்க்கு எந்தவிதமான முன்னறிவிப்பும் இருப்பதில்ல.
3. சர்க்கரை நோயினால் ஏற்படும் கண் பாதிப்பு மிகச்சிறிய அளவில் பாதித்தாலும், நாளடைவில் அது பார்வை இழக்கும்படிச் செய்யும்.
4. இன்று கண் பார்வை இழப்பதற்குச் சர்க்கரை நோய் ஒரு மிகப்பெரிய காரணமாக இருக்கிறது.
5. சர்க்கரை நோய் நல்லகட்டுப்பாட்டில் இருந்தாலும், கண் பார்வையில்பழுது ஏற்பட வாய்ப்பு உள்ளது.
6. முறையான திட்டமிட்டபரிசோதனகள் மூலமும் தக்க சமயத்தில் சிகிச்சையும் எடுத்தால், கண் பார்வையச் சீரமைக்கலாம்.

7. லேசர் சிகிச்சை மூலம்பலருக்குப் பார்வை இழப்பைத் தவிர்க்கலாம்.
8. சர்க்கரை நோய் உள்ளவர்கள் வருடந்தோறும் முழுமையான கண் பரிசோதனை செயது கொள்ள வேண்டும்.
9. அநேகமாக அனைவருக்கும் தக்க சமயத்தில் டயபீடிக் ரெடினோபதி கண்டறியப்பட்டால், நல்ல முறையில் சிகிச்சை பெற்று கண் பார்வை பாதுகாக்கப்படலாம்.


டயாபெடிஸ் மெலிடஸ் எனும் சர்க்கரை வியாதியானது நம் உடலில் சர்க்கரைசேமிப்பையும் மற்றும் அதன் உபயோகத்தையும் சேதப்படுத்கிறது

சர்க்கரை வியாதியானது கண்களில் ஏற்படும் புரை (காட்ராக்ட்), க்ளகோமா, குறிப்பாக கண்ணின் உள்ளே உள்ள இரத்தக்குழாய்களைச் சிதைத்தல் போன்றவற்றுக்கும் காரணமாகிறது. இதன் காரணமாக நமது பார்வையப் பாதிக்கிறது.


விழித்திரை (ரெடினா) என்பது என்ன?
'விழித்திரை என்பதுபோட்டோ கேமராவினுள் இருக்கும் ஃபிலிமைப் போன்றது. விழித்திரையிலுள்ள சிறப்பான செல்கள் பார்வைக்கான தூண்டல்களைப் பெற்று, பார்வை நரம்புவழியாக மூளைக்கு மாற்றியனுப்புகிறது."
விழித்திரையின் மையப்பகுதியில் உள்ள மாக்குலா (Macula) நுட்பமான பார்வைக்கு அவசியமான பகுதியாகும்.'

டயபீடிக் ரெட்டினோபதி என்றால் என்ன?
'சர்க்கரை வியாதியினால் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணில் விழித்திரையில் காணப்படும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் டயபீடிக் ரெட்டினோபதி எனப்படும்.'

டயபீடிக் ரெட்டினோபதி யாருக்கு அதிகமாக வருகிறது?
'நீரிழிவு வியாதியுள்ள யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். நீண்ட நாட்களாக நீரிழிவு வியாதியுள்ள ஆண்கள், பெண்கள் இருபாலாருக்குமே அதிகமாக வருகிறது.நீரிழிவு உள்ளவர்களில் பாதி பேர், அவர்கள் வாழ்நாளில் ஒரு குறிப்பிட்ட அளவு, டயபீடிக்ரெட்டினோபதியினால் பாதிக்கப்படுகிறார்கள்.'

டயபீடிக் ரெட்டினோபதியினால் விழித்திரையில் என்ன நிகழ்கிறது?
'இந்த மாற்றங்கள் விழித்திரையின் சிறிய இரத்தக் குழாய்களில், மக்ரோ ஆன்ஜியோபதி எனப்படும் மாற்றத்தை விளைவிக்கிறது இதனால் இரத்தமும் நீர்க்கசிவும் ஏற்பட்டு, விழித்திரை (ரெட்டினா) வீக்கம் அடைகிறது.

இந்தக் கசிவுகள் ரெட்டினல் இடிமா மற்றும் கடினக் கசிவு, (Hard exudated எனப்படும் லப்போ புரோட்டீன் வஸ்துகளயும் சேமித்து வைக்கிறது. இந்தக் கசிவு விழித்திரையின் முக்கிய பகுதியான மாக்குலாவை பாதிக்கும்போது பார்வை குறையும். படித்தல் மற்றும் நுண்ணிய பொருட்களப் பார்த்தல் கடினமாகும்.'


வேறு ஏதேனும் மாற்றங்கள் டயபீடிக் ரெடினோபதியில் உள்ளனவா?
'டயபீடிக் ரெடினோபதியில் சிறிய இரத்த நாளங்கள் மூடப்படுவதால், விழித்திரைக்கு இரத்த ஓட்டம் குறந்து ரெட்டினல் இஸ்கீமியா ஏற்படுகின்றது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்க, ரெடினா புதிய இரத்த நாளங்கள உருவாக்க முயலுகிறது.இந்த இரத்த நாளங்கள் வழக்கத்திற்கு மாறாக இரத்தகுழாய்கள் எளிதில் உடையக்கூடியது மற்றும் இலகுவாக இரத்த ஒழுக்கினை ஏற்படுத்தும் வகையில் உள்ளவை.

இந்த இரத்த ஒழுக்கு விழித்திரைக்கும் விட்ரியஸ் ஜெல்லுக்குள்ளேயும் ஏற்படலாம். அந்நிலை விட்ரியஸ் இரத்த ஒழுக்கு எனப்படும். இந்த இரத்த ஒழுக்கு தானாகவே சரியாகலாம். அல்லது மீண்டும் மீண்டும் நேரிடலாம். சில நேரங்களில், அடிக்கடி இரத்த ஒழுக்கு நேரிடலாம். இந்த இரத்தநாளங்கள், உடைந்து ரத்தம் கசியும்வரை எந்தவித பாதிப்பயும் ஏற்படுத்தாது.

இதனால் நோயாளிக்குச் சர்க்கரை வியாதியினால் கண் நோய் இருப்பதேதெரியாது. கண்ணில் இரத்தக்கசிவு திடீரென ஏற்படலாம்.

குனிந்து பாத அணிகள அணியும்போதோ, இருமலின் போதோ, மூச்சப் பிடித்துக் கொண்டு எதையாவது தூக்கும்போதோ இந்த இரத்த நாளங்கள் உடையலாம். முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், லேசர் சிகிச்சயானது இந்த இரத்தக் கசிவு ஏற்படும் முன்னரே செய்தால் இந்த இரத்தக் கசிவைத் தவிர்க்கலாம். இரத்தக் கசிவு ஏற்பட்டபின், லேசர் சிகிச்சை செய்வது கடினம்.'


ரத்தக்கசிவு ஏற்படும் முன்னரே நோயின் அறிகுறி இல்லாதநோயாளி எவ்வாறு மருத்துவரை அணுக முடியும்?
'இதனாலேயே கண் மருததுவர்கள்சர்க்கரை வியாதி நோயாளிகளை அவ்வப்போது கண் பரிசோதன செய்யுமாறு வலியுறுத்கின்றனர். கண்ணில்மருந்து விட்டு பாப்பாவை விரியவத்து ரெடினாவை பரிசோதனை செய்தால், புது இரத்த நாளங்கள் இருப்பதை கண் மருத்துவரால் அறிந்து கொள்ள முடியும்.


மேலும் லேசர் சிகிச்சையச் சரியான நேரத்தில் அளித்து ரத்தக் கசிவு, பார்வைக் குறைவு மற்றும் ரெடினல் டிடேச்மேண்டதவிர்க்க முடியும். ரத்தக்கசிவு ஏற்பட்ட பின்னர் ஓய்வாக இருந்தால் ஒரு சிலருக்கு ரத்தம் தானாக கரையக்கூடும்.


இரத்தம் கரையாவிட்டால்,மைக்ரோ சர்ஜரியின் மூலம் இந்த ரத்தக் கசிவை அகற்றலாம். இந்த அறுவை சிகிச்சையின்மூலம் ரெட்டினல் டிடேச்மேண்டயும் சரி செய்யலாம். ஆனால் இரத்தக் கசிவு ஏற்படும் முன்னரேLaserTreatment மூலம் தடுத்தல் நல்லது. இதனால் பார்வைக் குறையும் அபாயத்தையும் Retinal Detachment போன்ற நோயின் இறுதிக் கட்டத்தயும் தடுக்கமுடியும்.

சரியான நேரத்தில் லேசர் சிகிச்சை செய்கொள்ள, ஒவ்வொரு நீரிழிவு நோயாளியும் அவ்வப்போது கண்மருத்துவரை அணுகுதல் நன்று. நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால், கண் நோயை முற்றிலும் தவிர்க்க முடியாது. ஆனால்அபாயகரமான கட்டத்தை அடைவதைத் தவிர்க்கலாம். அல்லது தள்ளிப் போடலாம்.


ரத்தக் கொதிப்பு, நீரிழிவுநோயினால் வரும் சிறுநீரக நோய் ஆகியவற்றுக்கும் சிகிச்சை அளிப்பதால், கண் நோய் விரைவாக மோசமாகாமல் தவிர்க்கலாம்.நீரிழிவு நோயுள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு கண் நோய் விரைவில் மோசமடைந்து பார்வைப் பறிபோகும் வாய்ப்பு உள்ளது. அதனால் இந்தப் பெண்கள் கர்ப்பக் காலத்தில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கண் மருத்துவரை அணுகுதல் அவசியம்.


டயபீடிக் ரெட்டினோபதி,சரியான சிகிச்சை செய்யாவிட்டால் முழுதாகப் பார்வைப் பறிபோகும் அபாயம் உள்ள நோய்.அதே சமயம், சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்தி அவ்வப்போது கண் மருத்துவரை அணுகி ரெட்டினா பரிசோதன செய்து அவருடைய ஆலோசனப்படி நடந்தால், பார்வைக் குறைபாட்டைத் தவிர்க்கலாம்.


இந்த இரத்த ஒழுக்கு நீடித்தால் ஒரு நிலையிலிருநது; வேறு நிலைக்கு மாற்றப்பட்டு ஃபப்ரோவாஸ்குலர்ப்ராலிபரேஷன் எனும் இழை போன்ற திசுக்கள உருவாக்குகிறது.இவை விழித்திரையுடன் இணந்துபின்னர் இழுத்து விழித்திரை பிரிதலை ஏற்படுத்கிற.து இது தசைப் பரப்பிழுப்பு விழித்திரைபிரிதல் (TractionRetinal Detachment - TRD) எனப்படும்.'


டயபீடிக் ரெட்டினோபதியில் பார்வை எவ்வாறு பாதிப்படைகிறது?
'மாக்குலாவில் Macula (ரெடினல்இடிமா (Edema)உருவாகும் போதும், தசைப் பரப்பிழுப்புவிழித்திரை பிரிதல் நிலை மாகுலாவோடு இணந்து ஏற்படும் போதும் அல்லது மாக்குலாவின் முன்புவிட்ரியஸ் இரத்த ஒழுக்கு ஏற்படும் போதும் பார்வைக் குறையத் தொடங்குகிறது'

கண்ணின் உட்புறம் இரத்த ஒழுக்கினை குறிக்கும் அறிகுறிகள்எவை?
'கரும்புள்ளிகள் தெரிதல், படலம் படர்ந்தது போல தெரிதல், திடீரென பார்வை குறைதல்.'

நீரிழிவு நோயாளிகள் எவ்வெப்போது எவ்வாறு பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்?
'உங்களுக்கு நீரிழிவுநோய் இருக்குமானால், நீங்கள் ஒரு விழித்திரைகண் நிபுணரிடம் விரிவாகப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

• டயபீடிக் ரெடினோபதி இல்லை எனில் வருடந்தோறும
• ஆரம்ப டயபீடிக் ரெடினோபதி எனில் ஆறு மாதத்திற்கொரு முறை
• மற்றவர்கள் தங்கள் கண் மருத்துவரின் பரிந்துரைபடி பொதுவாக 4 முதல் 6 மாதங்களுக்கொரு முறை.


ஃபண்டஸ் ஃபுளோரெசின் ஆன்ஜியோ_க்ராஃபி என்றால் என்ன?
'இது மருத்துவமதிப்பீடுசெய்யும் ஒரு ஆய்வு முறையாகும். இரத்தநாளங்களில் ஒரு சாயத்தை ஊசிமூலம் செலுத்தி, விழித்திரையை, ஊதாநிற ஒளியில் புகைப்படம் பிடிப்பதாகும்.
• இது வழக்கத்திற்கு மாறான திரவங்களின் கசிவைக் கண்டறிகிறது.
• இது இரத்தத்திற்கு மாறான இரத்தக் குழாய்களைக் கண்டறிகிறது'


போட்டோ கோயாகுலேஷன் ஏன்?
'இந்தச் சிகிச்சக்கானகாரணம், விழித்திரைக்குள்ஏற்படும் மாற்றங்களைத் தடைசெய்வதற்கும், பார்வைய மீட்டுத்தருவதற்கு உதவுவதேயாகும். விழித்திரையின் சிலபகுதிகளைச் சிதைப்பது, தவறான புதிய இரத்தக்குழாய்களக் கட்டுப்படுத்வதற்கும், விட்ரியஸ் இரத்த ஒழுக்கின் மற்றும் விழித்திரை பிரிதலின் விளவுகளக் குறைப்பதற்கும் உதவுகிறது. இது வழக்கத்திற்கு மாறான கசிவையும் குறைக்கிறது'


லேசர் சிகிச்சை பார்வைய அதிகரிக்கிறதா? லேசர் நோயைக் குணப்படுத்கிறதா?
'அதிகமான நோயாளிகளுக்குலேசர் சிகிசசை பார்வையப் பாதுகாத்து மேலும் பார்வைக் குறைவதை தடுக்க உதவுகிறது பார்வையிழப்பின் சிரமத்தை 50 சதம் வரை குறக்கிறது.இது கரும்புள்ளிகள நீக்குவதில்லை. மேலும், ஏற்கெனவேவிட்ரியஸ் இரத்த ஒழுக்கு ஏற்பட்டிருக்கும் பட்சத்தில், அதையும் சரி செய்வதிலலை. லேசர் சிகிச்சயளித்ததும் நோயின் தன்மை முன்னேற்றமும் கண்டாலும், சிறிதளவு பார்வையிழப்புக்கும் வாய்ப்பு உள்ளது.'


லேசர் பார்வையக் குறைக்குமா?
'சிகிச்சைக்குப் பிறகு சில மணி நேரங்கள் பார்வை மங்கலாகத் தெரியும். பக்கவாட்டுப் பார்வையும், இருட்டுக்குள் பழகுவதும் பாதிக்கப்படலாம்.லேசர் சிகிச்சைக்குப் பின்னரும் சில குறிப்பிட்ட நபர்களுக்குப் பார்வையிழக்கும் வாய்ப்பு உள்ளது என்பதும், அவர்களுக்கு விட்ரியஸ்ஆபரேஷன் தேவைப்படலாம் என்றும், குறிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டியதாகும்.'

விட்ரியஸ் ஆபரேஷனின் பயன் என்ன?

'புதிய வளர்ச்சியடைந்தஅறுவை சிகிச்சை முறையில் விட்ரெக்டமி மற்றும் விட்ரியஸ் மக்ரோ சர்ஜரி மூலமாக 60-70 % வரை இந்த குறையினால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பார்வையில் முன்னேற்றம் கிடக்க வாய்ப்புள்ளது.விட்ரெக்டமி ஆபரேஷனின் நோக்கம், கண்ணின் உட்புறத்தில்உள்ள இரத்ததையும், அசாதாரண பாதிக்கப்பட்ட திசுக்களை நீக்குவது ஆகும்.'


உங்கள் பார்வையைப் பாதுகாக்க நீங்கள்என்ன செய்ய முடியும்?

டயபீடிக் ரெட்டினோபதி நோய்க்கான சிகிச்சையின் வெற்றி ஆரம்பக் கட்டத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சயளிப்பதனாலோ அல்லது கண் டாக்டரின் சிகிச்சையினாலோ நிர்ணயிக்கப்படுவதல்லை.ஆனால் நோயாளியின் நடவடிக்கையும், கவனமும், உணவுப் பழக்கமும் கவனத்தில் கொள்ள வேண்டியது ஒன்றாகும்.

டயபீடிக் ரெட்டினோபதி எத்தகைய அறிகுறிகளுமில்லாமல் வரக்கூடியநோய் என்பதும் நினவில் கொள்ள வேண்டும். ஆனால் ஆரம்பத்திலேயே நோயை அறிந்து கொள்வது பார்வையிழப்பைத் தடுத்துப் பாதுகாக்க உதவும். டயபீடிக் ரெட்டினோபதிக்கான பரிசோதன


சர்க்கரை வியாதி கண்களை எவ்வாறு பாதிக்கிறது?
'சர்க்கரை வியாதி உள்ளசிலருக்கு கண்கள பாதிக்கும் வகையில் ஏற்படும் ஒரு நிலைக்கு விழித்திரை நோய் (ரெட்டினோபதி)என்று பெயர். கண்களின் பின்புறம் இருக்கும் விழித்திரையில் உள்ள ரத்தக்குழாய்களில் ஏற்படும் குறைபாடே இதற்குக் காரணம். இது நம் பார்வையை ஓரளவிற்குப் பாதிக்கலாம். மேலும்பார்வை இழப்பிற்கும் காரணமாகலாம்.'


இந்நிலை எனக்கு ஏற்படுவதை என்னால் தெரிநது; கொள்ள முடியுமா?
'டயபீடிக் ரெட்டினோபதிஎப்போதும் தீவிரமான நிலைக்கு வரும் வரை, நம் பார்வையப் பாதிப்பதில்லை. தீவிரமான நிலையில் சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்படும். தொடர்ந்த பரிசோதன, ஆரம்ப கட்ட நிலையில் நோயைக் கண்டுபிடித்தல், வெற்றிகரமான சிகிச்சை இவையே பார்வை இழப்பிற்கான சாத்தியக்கூறினைக் குறைக்கிறது'


இது முழுமையான பார்வை இழப்பை ஏற்படுத்துமா?
'ஆம். இந்நோயினால்பாதிக்கப்பட்டவர் தொடர்ந்து பரிசோதனகளச் செய்கொள்ளாவிட்டால் இந்நோய் பார்வை இழப்பிற்குக்கொண்டு போய்விடும்.'


கண்கள் எவ்வாறு பரிசோதிக்கப்படுகிறது?
'கண்ணின் பின்புறத்தை இன்டரக்ட் ஆப்தால்மாஸ்கோப் என்னும் கருவியைக் கொண்டு ;. கண்ணின் பாப்பா விரிவதற்காகச் சொட்டு மருந்திடப்படுகிறது கண்ணின் பாப்பா விரிவதற்கு சுமார் 15 நிமிடங்கள் காத்திருந்து, பின்னர் பரிசோதிக்கப்படுகிறது.இது கண்ணின் விழித்திரையை முழுமையாகப் பார்ப்பதற்கு உதவும் வலியேதுமில்லாத முறையாகும்.முழுப் பரிசோதனயும் வழக்கமாக 30 நிமிடங்களுக்குள் செய்யப்படும்.'


பரிசோதனக்கு வரும்போது கொண்டு வரவேண்டியவை என்ன?
'தற்போது அணியும் கண்கண்ணாடிகளைக் (படிப்பதற்கும் தூரத்தே உள்ள பொருட்களப் பார்ப்பதற்கும் உபயோகிக்கும் கண்ணாடிகள்) கண்ணின் பாப்பா விரிந்த பிறகு, கண்களக் கூசச்செய்யும் வெளிச்சத்தில் சிரமமின்றி நடமாட, ஒரு ஜோடிசூரிய ஒளி பாதுகாப்புக் கண்ணாடிகள் கொண்டு வரவேண்டியவை. சர்க்கரை வியாதியுள்ளவரானால் எடுத்துக் கொள்ளும் மருந்துகளையும் மருத்துவ குறிப்பேடு ஏதுமிருக்குமேயானால், அவற்றையும் கொண்டு வருவது நல்லது.


பரிசோதனக்குப் பிறகு என்ன ஆகும்?
'கண்ணின் பாப்பா விரிவதற்காகப் போடப்படும் சொட்டு மருந்து சுமார் நான்கு மணி நேரத்திற்கு அருகே பயன்படுத்தும் வேலைகளை செய்வதற்கும் வாகனங்களை ஓட்டுவதற்கும் சிரமம் ஏற்படலாம். எனவே பரிசோதனக்கு வரும்போது வாகனங்களை ஓட்டி வருவதைத் தவிர்க்கலாம்.

முக்கிய குறிப்பு : பரிசோதனை முடிந்து வீட்டிற்குத் திரும்புவதற்குஒரு உதவியாளர் இருப்பது மிகவும் நல்லது'


பரிசோதனக்குப் பின்னர் என்ன செய்யப்படும்?
'பரிசோதனக்குப் பிறகுமேலும் பரிசோதனைகள் அல்லது சிகிச்சை தேவைப்படுமேயானால், ; ஒரு குறிப்பிட்ட நாளில் விரிவான கண் பரிசோதனைக்கும் லேசர் சிகிச்சைக்கும் வரவேண்டும்.'

சில நேரங்களில் கண்களுக்குச் சொட்டு மருந்திட்ட பின்னர், கண்கள் சகஜ நிலைக்கு மாறுவதில் சிரமம் நேரிடலாம்.ஒரு வேளை, கண்களில் வலி அல்லது சகஜமான நிலையில்லாமலிருப்பதாக உணர்ந்தால், மருந்து கூடத்தைதொடர்பு கொள்ள வேண்டும்.'
நினைவில் கொள்க:

எல்லா வியாதிகளுக்கும் எடுத்துக்கொள்ளும் அதே கவனத்தை, கண்களுக்கும் கொடுக்கவும்.
பார்வை உங்களுக்கு மிக மிக முக்கியம். நீங்கள் சுதந்திரமாக நடமாடவேண்டும் என்றால், வருடாந்திர கண் பரிசோதனைமனதிற்கு நிம்மதி கொடுக்கும்.

1 comments:

Anonymous April 11, 2010 at 9:55 AM  

நல்ல கட்டுரை .

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.




Animated avatar.



"இளையாங்குடி கல்லூரி தந்தை"



மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.








"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்கு







இளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்



உண்மை விளங்கும்.





.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP