என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

சிராஜுதீன் AMJ.SIRAJ , சிஙக‌ப்பூர்.

>> Wednesday, June 24, 2009

இளையாங்குடி பெருமக்களுக்கு,

siraj_deen@niegroup.com , Siraj Deen என்ற ஈ மெயில் விலாசம் கொண்ட சிராஜுதீன் AMJ.SIRAJ , சிஙக‌ப்பூர்,

சிங்கை வாழ் இளையாங்குடிய‌ர்க‌ளால் புற‌க்க‌ணிக்க‌ப்ப‌ட்டு தனித்து விடப்பட்டிருந்த நிலையில் ஜனாப் ஆசாலெவை அலிச‌பூர், ஜனாப் ஹிலால் ஆலம் அவ‌ர்க‌ளால் முக‌வ்ரி கொடுக்க‌ப்ப‌ட்டும் கூட நன்றி மறந்து

சாண் தண்னீரில் மல்லாந்து அடையாள‌ம் காண‌ச் செய்த‌வர்களை ப‌ற்றி புற‌ம் பேசி

இளையாங்குடி சாகிர் உசேன் க‌ல்லூரி வெப் சைட்டில் POWERED BY "TUBUKKU" "டுபுக்கு" என‌ விச‌ம‌த்த‌னமாக‌ கொச்சை படுத்தி திருத்த‌ம் செய்து வெளிவ‌ர‌ச் செய்து பகிரங்க‌ப்ப‌டுத்தி

பட‌ங்களின் மேல் க்ளிக் செய்து பெரிதாக்கி படிக்கலாம்.



மாட்டிக்கொண்ட‌வுட‌ன் இளையாங்குடி குர‌ல் ஆசிரிய‌ர் அல் ஹாஜ் (வாஞ்ஜூர் ) முஹ‌ம்ம‌த‌லி ஜின்னா , ஜனாப் ஆசாலெவை அலிச‌பூர், ஜனாப் ஹிலால் ஆலம் ஆகியோர் மீது வீண் ப‌ழி சும‌த்தி,

வ‌ச‌மாக‌ பிடிப‌ட்ட‌வுட‌ன் க‌ல்லூரி முத‌ல்வ‌ர் , பேராசிரிய‌ர் ஆகியோரிட‌ம் குற்ற‌த்தை ஒப்புக்கொண்டுவிட்டு

இளையாங்குடி குர‌ல் ஆசிரிய‌ர் அல் ஹாஜ் (வாஞ்ஜூர் ) முஹ‌ம்ம‌த‌லி ஜின்னா அவ‌ர்க‌ளுக்கு ம‌ர‌ண‌ மிர‌ட்ட‌ல் ஈ மெயில் அனுப்பிய‌துட‌ன் இணைய‌ த‌ளங்க‌ளில் அவ‌ர் த‌ம் குடும்ப‌த்தை கொச்சை ப‌டுத்த முய‌ன்ற‌ சூழ்நிலையில்
ச‌ட்ட‌ பூர்வ‌மான‌ நியாய‌மான‌ நட‌வ‌டிக்கைக‌ள் த‌ன் மீது எடுக்க‌ப்ப‌ட‌ இருக்கின்ற‌ன‌ என்ற‌றிந்த‌வுட‌ன்

siraj_deen@niegroup.com , Siraj Deen என்ற ஈ மெயில் விலாசம் கொண்ட AMJ.SIRAJ , சிஙக‌ப்பூர்

ஈ மெயில் மூல‌மாக‌ இளையாங்குடி குர‌ல் ஆசிரிய‌ர் அல் ஹாஜ் (வாஞ்ஜூர் ) முஹ‌ம்ம‌த‌லி ஜின்னா அவ‌ர்க‌ளிட‌ம் பொது ம‌ன்னிப்பு கேட்டு எழுதியிருக்கும் க‌டித‌ம் கீழே படித்து தெரிந்து கொள்ளுங்க‌ள்



----- Original Message -----
From: Siraj Deen
To: alielec@singnet.com.sg
Cc: asa_alisaboor@yahoo.com
Sent: Tuesday, June 23, 2009 9:13 PM
Subject: RE: Be carful othewise ...........


அஸ்ஸலமு அழைக்கும் வரஹ்

கடந்த வெள்ளி கிழமை அன்று நான் தவறுதலான ஒரு செய்தியை புரிந்து கொண்டு உங்களுக்கு ஒரு தவறுதலான ஈமெயில் அனுப்பியிருந்தேன் இது ஒரு தவறான உணர்ச்சி வேகத்தில் இந்த மாதிரியான ஈமெயில் அனுப்பி விட்டேன் .

இது உங்கள் மனதை மிகவும் புண்படுத்தியதாக அறிந்து கொண்டேன் அதற்க்காக தங்களிடம் நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். அல்லா உக்காக பிழை பொறுத்து கொள்ளவும். வயதில் சிறியவனான நான் இந்த சம்பவத்துக்கு முன் உங்கள் மனம் புன்படியாக நடந்து கொண்டதில்லை என்பதை தங்கள் அறிவிர்கள் என நம்புகிறேய்ன்.

நமது ஊரின் வளர்ச்சிக்காக தங்கள் தந்தை பின் பற்றி நிங்களும் செய்து வருகிறிர்கள். இந்த மதிரியனன சிறிய தவறுக்காக மனம் தளராமல் தங்கள் பணியெய் தொடர்ந்து செய்து வர அல்லா விடம் தங்களுக்கும் தங்கள் குடும்பத்துக்கும் துஅ செய்கிறேன்.

வஸ்ஸலாம்.



மேலும் ilayangudikural.com இளையாங்குடி குர‌ல்.காம் ன் இணைய‌ த‌ள‌த்தை செய‌ற்ப‌டாம‌ல் மார்ச் மாத‌ இறுதி வார‌த்தில் செய்து விட்டது இந்த‌ AMJ SIRAJ கைங்க‌ரிய‌ங்க‌ளில் ஒன்று.

ச‌ட்ட‌ ந‌ட‌வ‌டிக்கை தொட‌ர்வ‌து ப‌ற்றி ஆலோச‌னை இன்னும் முடிவ‌டைய‌வில்லை.

அல் ஹாஜ் (வாஞ்ஜூர் ) முஹ‌ம்ம‌த‌லி ஜின்னாஇளையாங்குடி குர‌ல் ஆசிரிய‌ர்
.

மேலும் படிக்க...Read more...

இளையான்குடியின் முக்கியஸ்தர்கள்.-- அல்ஹாஜ் மர்ஹூம் வாஞ்ஜூர் பீர் முஹம்மது.

>> Wednesday, June 10, 2009

இளையான்குடியின் முக்கியஸ்தர்கள்.
மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது.

பயோ டேட்டா



வம்சம் : வாஞ்சூர். தந்தை : வாஞ்சூர் முஹம்மது;
தாயார் : பாத்துமுத்து. பிறப்பு : 1914
கல்வி : பர்மா ரங்கூனில். பாசைகள்: தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, உருது, ஹிந்தி, குஜராத்தி, ஆங்கிலம், மலாய்

தொழில்: தோல் பொருள் தயாரித்தல், விவசாயம், மிளகாய் கமிசன் மண்டி. மின்சார நுனுக்க பொருட்கள், மின்சார சாதனங்கள், சிஙகப்பூரில் பிரிட்டிஷ் ரானூவத்தினர்க்கு சப்ளை கண்ட்ராக்டர்.

பதவிகள்: ஐ.ஏன்.பி. பள்ளிவாசல் டிரஸ்டி, தர்ம ஸ்தாபனங்களில், அரசாங்க ஆலோசணை குழுக்களில், கல்வி ஸ்தாபனங்களில் அங்கத்தினர்.
சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்களில் ஒருவர். கல்லூரியின் முதன் முதல் தாளாளர்.

மரணம்: 26.03.1987

அரசியல்: பர்மா ரங்கூனில் அல்லாமா கரீம் கனி அவர்களுடைய அமைப்புகளில் தொண்டூழியம் செய்தவர். இளையாங்குடியில் இந்திரா காங்கிரசை தோற்றுவித்து அதன் தலைவராக செயலாற்றி அன்னை இந்திரா காந்தியிடமிருந்து பாராட்டு பெற்றவர். இளையாங்குடிக்கு வருகை தரும் தலைவர்களுக்கு தன் வீட்டில் விருந்தளித்து உபசரித்தவர்

வாஞ்ஜூர் பீர் முஹம்மது என்ற பெயர் எல்லா சமூகத்தினரிடையும் இளையாங்குடியில் மட்டுமன்றி சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் எதிரொலித்து வந்த ஒரு பெயராக இருந்து வந்தது.

சிவந்த மேனி, சதா சிரித்த அழகிய முகம், பேச ஆரம்பித்தால் ஒட்டு மொத்த சபையையே கவரும் நாவண்மை.. அஞ்சா நெஞ்சர். தேவை ஏற்பட்டால் சீறும் சிங்கம் போன்ற தன் கண் பார்வையினால் அடிக்காமலே அடக்கும் திறன். ஊர் மக்கள் அனைவரும் குறிப்பாக பெண்களும் கல்வியில் திறன் பெற வேண்டும் எனத்தாங்கொனா தாகம். கடுமையான அயராத உழைப்பாளி.

“வாருங்கள் வாஞ்ஜூர் பீர் முஹம்மதிடம் முடிவு கேட்போம்” என்று உள்ளூரிலும் சுற்று வட்டங்களிலும் எந்த சிக்கலான பிரச்ச்சினைகளிலும் நியாயமான நல்லதொரு முடிவை பெற அணுகப்பட்டவர்.

பெண்களிடம் சீதனம் வாங்குவதையும் சீதனம் கொடுப்பதையும் மிக கடுமையாக எதிர்த்ததுடன் நில்லாது தனது ஆறு ஆண் பிள்ளைகள், மூன்று பெண் பிள்ளைகள் திருமணங்களையும் அக்கொள்கைகளிலே நிறைவேற்றியவர்.

தன் பெண்களுக்கு சீதனம் கேட்டவர்களிடம் ' என் பெண் வேண்டுமானால் பெண்ணை கட்டிககொள்" பணம் வேண்டுமானால் பணம் தருகிரேன் பணத்தை கட்டிக்கொள்" என முகத்திலடித்தாற்போல் கூறியவர். அத்துடன் சீதனம் கொடுக்கபடும் , வாங்கப்படும் எல்லா திருமணங்களிலும் கலந்து கொள்ளாது ஊரார் பலரின் வெறுப்புக்கஞ்சாது வாழ்ந்தவர்

நியாயத்தை நிலை நிறுத்த போராடும் பொழுது வரும் பகை, துன்பம், இழப்பு அவதூறு, உடன் இருந்தவர்கள்/இருப்பவர்களின் துரோகம் இவைகளை சிறிதும் சட்டை செய்யாமல் தாங்கிக்கொண்டு தனித்து தனி மரமாக கடைசி வரை போராடி வாகை சூடியவர்.

இக்கொள்கயினால் வெளிக்காட்டாமல் உள்ளுக்குள் அவர் மீது பகை வளர்த்து வந்தவர்கள் ஏராளம் ஏராளம்.

நிறைய தருவதாக வாக்களித்துவிட்டு இறுதியில் அறவே இல்லாமலோ அல்லாது குறைத்தே நிறைவேற்றும் பழக்கத்தை கைக்கொள்ளாது வாக்க‌ளித்தற்கு மேலாகவே எதையும் வலது கை கொடுப்பதை இடது கைக்கு தெரியாமல் நிறைவேற்றி கொடுப்பவர். கொடையாளி.

39 ஆண்டுகளுக்கு முன் இளையாங்குடிக்கு ஒரு கல்லூரி அவசியம் வரவேண்டும் என்ற‌ எண்ணம் ஊர் நல தொண்டர்களிடையே உருவாகிய காலத்தே அதை செயல் படுத்த பல வெளியூர் செல்வந்தர்களிடம் நம் ஊர் பிரமுகர்கள் ஒன்று கூடி அணுகியும் கூடி வராத நிலையில்,

அடுத்தவர்களின் முதுகில் சவாரி செய்யாதவராக‌, வெறும் நாற்காலி மாப்பிள்ளையாக இல்லாமல் இளையாங்குடியில் ஓர் கல்லூரி அமைத்திட வேண்டும் என்ற எண்ணத்திற்கு அச்சாணியாக நின்று அதை செயல் வீராராக பொருளும் உழைப்பையும் தந்து நிறைவேற்றிக் கொடுத்த மாமனிதர்.

அணுகப்பட்ட ஒருவரும் முன் வராத நிலையில் தானே தனித்து கல்லூரி தொடங்க இடத்துடன் கட்டிடமும் கட்டித்தருகிறேன் என்று அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் மட்டுமே முன் வந்த பொழுது சில ஊர் பிரமுகர்கள் மறைமுகமாக இளையாங்குடி கல்லூரிக்கு " வாஞ்ஜூர் பீர் முஹம்மது கல்லூரி " என்று பெயர் வைக்கலாம் என கருத்து தெரிவித்த பொழுது அதை தன்னடக்கத்துடன் மறுத்து விட்டவர்.

அவர் மட்டும் விரும்பியிருந்தால் “ஜாகிர் உசேன் கல்லூரி” என்றில்லாமல் “வாஞ்ஜூர் பீர் முஹம்மது கல்லூரி” என பெயரிடப்பட்டிருக்கும்

அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் சாகிர் உசேன் கல்லூரியை நிறுவ தானே சாகிர் உசேன் காலேஜுக்கு ஆரம்ப கட்டிடம் கட்ட, மெயின் ரோட்டின் முகப்பு இடத்தை 2 ஏக்கர் 78 கிரையம் வாங்கி, இனாமாக எழுதிக் கொடுத்து

அன்றைய மாநில கவர்னரை அழைத்து அடிக்கல் நாட்டி, தானே தன் சொந்த குடும்ப பெயரில் ஒரு கட்டிடத்தை ஜனாப் அல்ஹாஜ் பீர் முஹம்மது குடும்பத்தார் கட்டிடம் என்று முழுமையாக‌ யாருடைய உதவியும்,பொருளும் இல்லாமல், தன் சொந்த பொருளிலும்,உழைப்பிலும் கட்டிக் கொடுத்து

1970 ஜூலை 5 ல் கண்ணியமிக்க காயிதே மில்லத் அல்ஹாஜ் இஸ்மாயில் சாஹிப் அவர்கள் தலைமையில் திறப்பு செய்து அன்றைய கல்வி அமைச்சர் மாண்புமிகு இரா. நெடுஞ்செழியன் அவர்களைக் கொண்டு அதனை கொண்டே இளையாங்குடி சாகிர் உசேன் உசேன் கல்லூரி தொடங்கப்பட்டு,

பட‌ங்களின் மேல் க்ளிக் செய்து பெரிதாக்கி படிக்கலாம்.

இரா. நெடுஞ்செழியன் அவர்களால் “கண்டத்துக்கு கண்டம், நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர்” ஒரு வாஞ்ஜூர் பீர் முஹம்மது போன்றவர்கள் இருந்தால் உலகில் கல்விக்கு பஞ்சமேயில்லை என புகழாரம் சூட்டப்பட்டு,

முதல் தாளாளராக அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் தலைமையில் கல்லூரி நிர்வாகம் தொடங்கியது

அப்பொழுது சென்னை புதுக்கல்லூரியில் பணிபுரிந்து வந்த கேப்டன் அமீர் அலியை கல்லூரி முதல்வராகவும், மற்றும் பாதுஷா உஸ்மான், கமாலுதீன், ராஜ சேகரன் ஆகிய விரிவுரையாளர்களையும் கொண்ட திறமை மிக்க ஆசிரியர் குழுவை அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் நியமித்து கல்லூரியை செயல்படுத்தினார்கள்.

நன்றி மிகுதியால் கல்லூரி முதல்வர் அமீர் அலி அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்களின் குடும்ப போட்டோவை தன் முதல்வர் அறையிலேயே தன் பதவிக்காலம் வரை மாட்டி வைத்து பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 1 1970ல் Pre-University l Level ல் 173 மாணவர்களுடன் ஜனாப் அல்ஹாஜ் பீர் முஹம்மது குடும்பத்தார் கட்டிடத்தில் சாகிர் உசேன் கல்லூரி செயல் பட தொடங்கியது.

பட‌ங்களின் மேல் க்ளிக் செய்து பெரிதாக்கி படிக்கலாம்.


அன்று அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் நம் இளையாங்குடியில் கல்விக்காக விதைத்த "விதை " எல்லாம் வல்ல இறையவனின் நல்லருளால் ஆழமாக‌ வேறூன்றி வளர்ச்சி அடைந்து கொண்டே வருவதுடன் இன்றைய இளம் அறிவாளிகளை பல துறைகளிலும் உருவாக்கிக்கும் பணியை செவ்வனே செய்து கொண்டு வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.
*****
சகோதர‌ர் ஜனாப் ஆலம் 

15 FEBRUARY 2011 ல்
ily.org இணையதளத்தில் இவ்வாறு தன் கருத்தை பதிப்பிருந்தார்.


 பட‌ங்களின் மேல் க்ளிக் செய்து பெரிதாக்கி படிக்கலாம்.


*********
கல்லூரி திற‌ப்பு விழாவின் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்திலும் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்களின் உருவம் அகற்றப்பட்டு பதிலாக பிற நாற்காலி மாப்பிள்ளைகள் உருவப்படங்கள் இணைக்கப்பட்டு கல்லூரி மலர்களில் பிரசுரித்த அறிவு ஜீவிகள், அதை அறிந்தும் அறியாதவர்கள் செயல் பட்ட நிர்வாக செயல் வீரர்கள்!!!

இன்றுவரை திருத்துவதற்கு யாரும் திருந்தவில்லையா?

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று இதிலிருந்தே இளையாங்குடிக்கு அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது செய்ததெற்கெல்லாம் இளையாங்குடி செய்ததென்ன? செய்து வருவதென்ன? மீதியை நீங்களே விள‌ங்கிக்கொள்ளுங்கள் .

யா அல்லாஹ் ‍ சகலத்தையும் பார்த்தும் ,கேட்டும், மறைவானவைகளை அறிந்தும் கொண்டிருப்பவனே. உன்னிடமே இதை விட்டு விடுகிறோம்.
*********

இளையாங்குடி பெண்கள் மேல் நிலைப்பள்ளி தொடங்க திட்டமிடப்பட்டு அதற்கு இடம் கிட்டாமல் இருப்பதை இளையாங்குடி முஸ்லீம் கல்வி டிரஸ்டின் தலைவர் புதுக்குளத்தார் ஜனாப் இபுறாஹிம் அலி அவர்கள், பொருளாளர் ஜனாப் இபுறாஹிம்ஷா அம்பலம் அவர்கள் மூலமாக அறிந்து அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் நிதி உதவு அளித்ததுடன் பள்ளிக்காண கட்டிடம் கட்டி முடியும் வரை தன்னுடய சொந்த கட்டிடத்தை இலவசமாக பள்ளி நடத்திக் கொள்ள அளித்தார்கள்.

இளையாங்குடி பெண்கள் மேல் நிலைப்பள்ளி அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது க்கு சொந்தமான 65 சுல்தான் அலாவுதீன் தெருவிலுள்ள கட்டிடத்திலேயே தொடங்கப்பட்டது.

பின் அப்பள்ளி மறைந்த ஹாஜி T.K . ஹமீது சுல்தான் அவர்களின் தாயாரின் நினைவு கட்டிடத்துக்கு இடம் பெய‌ர்ந்தது.

இளையாங்குடியில் 1914 ல் உதித்து, சுய தொழில்களை செய்து வந்தார் .

அப்பொழுதே பணமே குறி என்று இருக்காமல் பொது சேவையிலும் நாட்டமும் ஆர்வமும் உள்ளவராக இருந்தபடியால் அப்பொழுது ரங்கூனில் இருந்த “அல்லாமா அறிஞர் கரீம் கனி” அவர்களால் ஈர்க்கப்பட்டு அவருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு

அவருடைய இயக்கங்களில் தன்னுடைய ஒய்வு நேரங்களை பயன்படுத்திக் கொண்டு, “இனி வரும் காலங்களில் பர்மாவில் வெளி நாட்டவர்கள் யாவரும் துன்பத்திற்கே ஆளாவார்கள் ஆதலால் தென் கிழக்காசியா (சிங்க‌ப்பூர் மலேயா) சென்று தொழில் செய்யுங்கள்” என்ற “அல்லாமா அறிஞர் கரீம் கனி” அவர்களின் கூற்றை மனதில் பதித்துக் கொண்டார்.

தோல் பை தயாரிக்கும் தொழில் இளையாங்குடியில் தொடங்கி அல்லாமா அறிஞர் கரீம் கனி அவர்கள் தென் கிழக்காசியாவுக்கு சென்று தொழில் செய் என்று கூறியிருந்தபடி 1939ல் இரண்டாம் உலகப் போருக்கு முன் சிஙகப்பூருக்கு வந்து வியாபரம் செய்து கொண்டிருக்கும் வேலையில் யுத்தம் மேகம் சூழ்ந்தபடியால்

பெங்களூரில் தொழில் தொடங்கி பின் சென்னையில் ஜூபிடர் லெதர் வொர்க்ஸ் ,7 முத்துமாரி செட்டி தெரு , மற்றும் 154 அங்கப்ப நாயக்கன் தெருவில் ஜூபிடர் லாட்ஜ், என்ற பயணியர் தங்கும் விடுதியையும் தொடங்கி வரும் காலத்தே மீண்டும் அறிஞர் கறீம் கனி அவர்களின் கூற்று படியே மீண்டும் சிங்க‌ப்பூருக்கு திரும்பி தோல் பை வியாபரத்தை PEER LITTLES என்ற பெயரில் தொடங்கி இறையவனின் அருளால் பெரும் செல்வந்தரானார்.

சிங்க‌ப்பூரில் முதலில் சொந்த‌ தொழில் ஆரம்பித்த, சிங்க‌ப்பூரில் முதலில் குடும்பத்துடன் வசித்த ‌இளையாங்குடியார் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்களே என்பது குறிப்பிடத்தக்கது

சிங்க‌ப்பூரில் 1954‍ல் பேன்ஸி ஸ்டோர் வியாபரத்தையும் தொடங்கி பின் அத்துடன் எலக்ட்ரிகல் வியாபாரத்தையும் இணைத்து விரிவாக்கி 1974 வரை பிரிட்டீஷ் முப்படை ராணுவத்தினர்க்கு எலக்ட்ரிகல் குட்ஸ் சப்ளை கண்ட்ராட்ராக.

V.M.PEER MOHAMED = “ YOU NAME IT WE GOT IT
என்ற சிறப்புடன் சிங்கப்பூரில் தொழில் செய்து ஆங்கிலேயர்களிடம் இங்கிலாந்து வரை V.M.PEER MOHAMED என்ற பெயரை எட்ட வைத்தவர்.
சிங்க‌ப்பூரின் அதி உச்ச நீதி மன்றத்தில் தனக்கு நியாயம் கிடைக்காத ஒரு வழக்கை பிரிட்டனுக்கும் அனைத்து காமன்வெல்த் நாடுகளின் உச்ச நீதி மன்றங்களுக்கும் உச்சமான‌ லண்டணில் உள்ள பிரீவி கவுன்சிலுக்கு (PRIVY COUNCIL) எடுத்து சென்று தனக்கு சார்பான தீர்ப்பு பெற்று சாதனை படைத்த‌ ஒரே இளையாங்குடியர்.

பிள்ளைகளை தொழிலில் நன்கு பழக்கப்படுத்திவிட்டவராக 1962 க்கு இளையாங்குடியில் விவசாயத்தை கவனித்துக் கொண்டும், மிளகாய் கமிஷன் மண்டி நடத்திக் கொண்டும் ஊர் நலனில் முழு சிரத்தை எடுத்து செயலாற்றி வந்தார்.

இளையாங்குடியிலேயே விவசாயத்திற்கு வருமான வரி கட்டியவர்கள் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மதுவும் , தூங்காலயன் சிக்கந்தர் அவர்களும் அண்ணாமலை அவர்களும் செட்டியார் தான்.

இராமநாதபுரம் மாவட்டத்திலேயே அரியாண்டிபுரத்தில் 1 ஏக்கருக்கு ஐ.ஆர்.8 சம்பை நெல் சாகுபடியை அதிகமாக உற்பத்தி செய்து காட்டி 1969 அரசாங்க‌ கெஜட்டில் இடம் பெற்றவர்.

அரியாண்டிபுரத்தில் தனக்கு சொந்தமான 2.ஏக்கர் 70 சென்ட் நஞ்சை நிலத்தை அப்பகுதி தாழ்த்தப்ப்ட்ட ஹரிஜனங்களுக்கு அவர்கள் குடியிருப்புக்காக இனாமாக‌ சாசனம் செய்து கொடுத்துவிட்டார்.

சிவகங்கை மாவட்டத்தில் இளையாங்குடி வட்டத்தில் மல்பெரி செடி வளர்த்து அதன் மூலம் பட்டுப்புழு வளர்த்து சென்னை அகில இந்திய வானெலியில் வ‌ய‌லும் வாழ்வும் நிக‌ழ்ச்சியில் பேட்டி காண‌ப்பெற்ற‌வ‌ர்.

இளையாங்குடியில் 1971 ல் முதன் முதலாக இந்திரா காங்கிரஸ் கட்சியை ஸ்தாபித்து இந்திரா காந்தியிடமிருந்து கடித வாயிலாக அங்கீகாரம் பெற்றவர்.

பட‌ங்களின் மேல் க்ளிக் செய்து பெரிதாக்கி படிக்கலாம்.

ஒரே ஒரு ரூபாய் மட்டுமே ரொக்க இருப்பாக வைத்துக் கொண்டு ஐ.என்.பி நெசவு பட்டடை நிர்வாகம் இருந்த நிலையில் டிரஸ்டியாக பொறுப்பேற்று ,கடந்த கால அத்தனை ஆவணங்களையும் ஒழுங்குடுத்தி கடந்த கால அனைத்து ஊழல்களையும் பகிரங்கமாக்கி , பள்ளி சொத்துக்களை ஆண்டுக்கணக்காக மிக மிக குறைந்த வாடகையில் அனுபவித்துக்கொண்டு,

அவ்வாடகைகளையும் பல்லாண்டுகளாக பாக்கி வைத்துக் கொடாது வந்த அனைவர்கள் மீதும் பாரபட்சம் பாராது வழக்கு தொடர்ந்து அதன் விளைவாக ஏற்பட்ட அனைத்து பகைகளையும் பொருட்படுத்தாது , உச்ச கட்டமாக தன்னை கொலை செய்ய நள்ளிரவில் தன் வீட்டில் வந்த ஜமாஅத்தை சேர்ந்த கொலையாளிகளை தன்னந்தனியே விரட்டி அடித்து , வழக்குகள் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றதுடன்,

அனைத்து நிலுவைகளயும் வசூல் செய்து , வாடகைகளை உயர்த்தி பள்ளியின் வருமான‌த்தை , கையிருப்பை , நிதி நிலைமையை மிக மிக சிறப்பாக அமைத்தார்.

பள்ளி காம்பவுண்டு சுவரை இடித்துவிட்டு கடையையும் அதன் மேலே ரூம்களும் கட்டி பள்ளியின் வருமானத்தை பெருக்கினார்.

அவர் டிரஸ்டியாக செயல் பட்ட காலத்தே உரிமையுடன் தன்னுடைய சுய செல்வாக்கை பயன்படுத்தி கல்கத்தா தென்மலைக்கான் ஜனாப் அப்துல் ரஹீம் அவர்களை நெருங்கி " தென்மலைக்கான் மதுர கவி பாட்சா புலவர் அரபி மதரஸா" க‌ட்ட‌ச்செய்தார்க‌ள்.

மேலும் ஆண்கள் , பெண்க‌ள் ப‌ய‌ன‌டைய‌க் கூடிய‌ ப‌ல‌ ந‌ல்ல‌ திட்ட‌ங்க‌ளையும் முறையாக‌ திட்ட‌மிட்டு செய‌ல் ப‌டுத்தினார்க‌ள்.

நெசவு பட்டடை தொழுகை மேடை பள்ளியின் பூர்வீக சாசன அத்தாட்சிகளை கண்டுபிடித்ததோடல்லாமல் அவைகளை முறைபடுத்தி அரசாங்க அலுவகலங்களில் மறு உறுதிப்படுத்தி. சர்வேயர்களை அழைத்து வந்து பள்ளிவாசலின் நில அளவு எல்லைகளை தெள்ளத் தெளிவாக குறியீடுகள் செய்து பட்டா போட்டு சாசன‌த்தை அமைத்து வைத்து விட்டார்.

அவர் செய்த அச்சாதனையின் பலனாகத்தான் கோயில், தேவஸ்தான‌ம், ப‌ஞ்சாயத்து போர்டு, அரசாங்க‌ பொது நில‌ நிர்வாக‌ங்களின் எந்த விதமான‌தொரு சிறு பிரச்சினை,குறுக்கீடு இன்றி இப்பொழுது இன்றைய‌ INP புதுப் ப‌ள்ளிவாச‌ல் கட்ட‌ப்பட முடிந்த‌து என்ப‌து மறுக்க‌முடியாத உண்மை.

கீழ முஸ்லீம் தெருவின் இறுதியில் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் தன் வயலில் இருந்த 2 பெரிய கிணறு மூலமாக மேல் தொட்டி கட்டி நாலாபுறமும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும்படி செய்து பெண்கள் குளிக்க தனித்தனியாக அறைகள் கட்டிக் கொடுத்தது எல்லாம் அதை அனுபவித்த தாய்க் குலம் அறியும். இது அவர் ஊருக்கு செய்த பல பல காரியங்களில் ஒன்று

அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் ஊருக்கு செய்த தான தர்ம காரியங்கள் அனைத்தையும் பட்டியலிடுவது என்பது அவர்கள் விரும்பாததொரு விசயம்.

அந்த நாளில் இறைவன் சன்னதியில் பதில் கூற வேண்டியிருக்குமே என்பதை மறந்து விட்டு இன்று இளையாங்குடியின் வரலாறு என்றும் மற்ற கல்விகூடங்கள், தர்ம ஸ்தாபனங்கள் வெளியிட்ட, வெளியிடும் பதிப்புகளில் உண்மை வரலாறுகளை மறைத்து அறிந்தும் அறியாதவர்கள் போல் எழுதி தங்களது கயமைத்தனத்தை வாந்தி எடுத்து வைத்திருப்பவர்கள், மேலும் சமூக ஸ்தாபனங்களில் எப்படி எப்படியோ தங்கள் பெயர்களை பொரித்துத்து விட்டோம் என‌ இறுமாந்து பலர் சென்றடைந்து விட்டார்கள் சிலர் நம்மிடையே உல‌வி வ‌ருகின்ற‌னர் என்ப‌து வாச‌க‌ர்க‌ள் அறியாத ஒரு உண்மை..

இளையான்குடி கல்விச் சங்கத்திற்கு அவர் செய்த நிதி உதவி ஏராளம்.அவைகளெல்லாம் த‌ஸ்தாவேஜுக‌ளில் இருந்து "ந‌ல்லோர்க‌ளால்" அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது என்ற‌ பெய‌ர் நீக்க‌ப்ப‌ட்டு நிம்ம‌தி தேடிக்கொள்ள‌ப்ப‌ட்ட‌து..

செய்த நன்மை தீமைகளை அணுவும் குறையாது வல்ல இறையவனின் ஏட்டில் பதிக்கப்பட்டு விட்டது என்ற‌ உண்மையை உணராத அறிவு ஜீவிகள் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்களின் பெயரை எப்படி எப்படியெல்லாமோ அழிக்க முடியுமோ, மறைக்க முடியுமோ அதையெல்லாம் செவ்வனே செய்து,

முழுதும் மறைக்க முடியாத பொழுது அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது தொடங்கினார் அதை இன்னார் முடித்து நிறைவேற்றினார் என்று பிறர் பெயரை இணைத்தும்,

ஹாஜி வி.எம் பீர் முஹம்மது என்ற பெயரை ஹாஜி உ.ற.இ. பீர் முஹம்மது என்பது போல் பல வகைகளில் மாற்றி திருத்தியும்,

இன்றைய இளைய தலைமுறைகள் " வாஞ்ஜூர் பீர் முஹம்மது" என்ற சொல்லுக்கே விளக்கம் தெரியாமல் செய்து விட்டதாக ஆனந்தமடைந்தவர்களாக பலர் சென்றடைந்து விட்டார்கள் சிலர் உலவி வருகிறார்கள். அவர்கள் நெஞ்சே அவர்களை இம்மையில்லாவிட்டாலும் மறுமையில் ?

அவரவர்கள் செய்த நன்மை தீமைகளுக்குரிய பலனை அவரவர்களே அனுபவிக்கட்டும் என தன்னுடைய 73 ம் வயதில் 1987 ல் காலமானார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊண்.
*********************************************
அல்ஹாஜ் மர்ஹூம் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்களையும் அவர்களது மகனார் V.M.P. முஹமதலி ஜின்னா ( வாஞ்ஜூர்- ‍ இளையாங்குடிகுரல் ஆசிரியர்) அவர்களை பற்றியும் ஊர் பிரமுகர்கள் சிலரின் கருத்துக்கள்.

பட‌ங்களின் மேல் க்ளிக் செய்து பெரிதாக்கி படிக்கலாம்.
"உங்களுக்கு எதிரிகள் வேண்டுமா? ஏற்கெனவே இருக்கும் ஒரு நியாயமில்லாத விஷயத்தை மாற்ற முயற்சி செய்யுங்கள்.
தானாக எதிரிகள் தோன்றுவார்கள்'' என்று சொல்வார்கள்.
எதிரிகள் இல்லாதவர்கள் எந்த மாற்றத்தையும் விரும்பாதவர்களாகத்தான் இருப்பார்கள்.



.

மேலும் படிக்க...Read more...

'யார் டாக்டர்?' இந்தக் கேள்வி மிக ஆச்சர்யமானதாகவும்!!!

>> Monday, June 8, 2009

'யார் டாக்டர்?' 'யார் டாக்டர்?'

'யார் டாக்டர்?' 'யார் டாக்டர்?'

'யார் டாக்டர்?'

இந்தக் கேள்வி மிக ஆச்சர்யமானதாகவும், தமிழ்ச் சமுதாயத்திற்கு மிக வேண்டியதாகவும் இருக்கிற ஒரு கேள்வி.


'யார் டாக்டர்?' என்று கேட்டால், நாம் ஒவ்வொருவரும் மிகச் சுலபமாக, நமக்கு ஊசி போடுகிற, மருந்து கொடுக்கிற டாக்டரைத்தான் சொல்வோம்.


இப்படி சிகிச்சை கொடுக்கிறவர்களை டாக்டர் என்று அழைத்தாலும் இந்தப் பட்டத்தை போட்டுக் கொள்கிறவர்கள் இப்போது பல துறைகளிலும் அதிகமாகி 'டாக்டர்' என்ற சொல் படு குழப்பத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது..டாக்டர் என்ற சொல் அல்ல பட்டம் இன்று பல்வேறு நபர்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

முதலில் வருகிறவர்கள் ஆய்வாளர்கள். இவர்கள் தமிழ், பொருளாதாரம், கணக்கு, கச்சேரி என்று ஒவ்வொரு துறையிலும் ஒரு தலைப்பை எடுத்க்துகொண்டு ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து அதற்காக டாக்டரேட் பிஎச்டி என்கிற நிலையைப் பெறுகிறவர்கள்.

இது அந்தத் துறையின் ஒரு தலைப்பில் நுட்பமாக கவனித்து அதில் நிபுணத்வம் அடைந்துவிட்டவர் என்று பல்கலைக் கழகத்தால் அங்கீகரிக்கப்படுகிற நிலை.

இதற்கு 'முனைவர்' என்கிற அழகான தமிழ்ச்சொல் கொடுக்கப்பட்டும் இந்த முனைவர்கள் தமது பெயருக்கு முன்னால் இதைப் போட்டுக்கொள்ள விரும்புவதில்ல. டாக்டர் என்றே பட்டம் சூட்டிக்கொண்டு மகிழ்கிறார்கள்.

டாக்டர் என்ற பட்டத்தை மலினப்படுத்தி தமிழ்ச் சூழலில் உலவவிட்ட பெருமை இந்த முனைவர்களுக்கு உண்டு. இது தேவையில்லாமல் மக்களைக் குழப்புகிற வேலை என்பதை அரசாங்கமும் உணருவதில்ல.

'நெடுநல்வாடயில் நரி' என்று ஒரு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்துவிட்டு பெயருக்கு முன்னால் டாக்டர் என்று போட்டுக்கொள்கிற தேவை என்ன இருக்கிற என்பது தெரியவில்ல?

''சார்... டாக்டர்னு சொல்றீங்க... அப்பாவுக்கு திடீர்னு நெஞ்சுவலி... கொஞ்சம் வந்து பாருங்க...'' என்று நடு ராத்திரியில் பக்கத்து வீட்டுக்காரர் கதவைத் தட்டும்போதான் ''ஹி... ஹி...'' என்று தனது நரிக்கதையைச் சொல்வார்.

இன்று இப்படி பிஎச்டி ஆய்வு செய் கட்டுரை சமர்ப்பிக்கிறவர்கள் நிறைய இருக்கிறார்கள். தொடர்ந்து இப்படி கட்டுரை சமர்ப்பித்து டாக்டர் ஆகி, அதைக் கேட்டுபார்த்து ஒவ்வொருவரும் குழம்பவேண்டுமா? என்பதை அரசு யோசிக்கவேண்டும்.

திட்டவட்டமாக ஆய்வுக்கட்டுரைகள் மூலம் பிஎச்டி பட்டம் அடைகிறவர்கள் 'முனைவர்' என்ற சொல்லத்தான் பயன்படுத்த வேண்டும் என்பது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

அடுத்து வருவது பல்கலக்கழகங்கள் தருகிற டாக்டர் பட்டம். ஒரு துறையில் மேன்மை நிறந்த சாதனைகளைச் செய்தவர், கல்விக் கூடங்களுக்குச் செல்லாதவராக இருக்கலாம். ஆனால் அங்கு செல்லாமலே ஒரு துறைக்கு அளப்பரிய செயல்களைச் செய்திருப்பார்.

அந்தத் துறையில் படித்தவர்களைவிட, படிக்காத அந்த நபரால் அந்தத் துறை பெரும் பயனை அடைந்திருக்கும். அந்தத் துறையில் நிபுணத்துவம் அடைந்தவருக்கு டாக்டரேட் தரவேண்டியது பல்கலக்கழகத்தின் கடமை.

கல்வி கற்காதவர் என்றாலும் அவர் அந்தத் துறையில் நிபுணத்துவம் அடைந்தவர். அந்தத் துறை அவரால் கௌரவம் பெற்றிருக்கிறது என்று பல்கலைக்கழகம் நம்பும்போது அவரை அழைத்து 'கௌரவ' பட்டம் கொடுக்கிறது.

இதன்மூலம் கல்வி பெற்று நிபுணத்துவம் அடைந்தவர்களோடு, கல்வி பெறாமலேயே நிபுணத்துவம் அடைந்த உங்களை, உங்களுக்கு கௌரவ பட்டம் தந்து இந்தப் பல்கலக்கழகம் பெருமைப்படுகிறது என்பதுதான் இதன் பொருள். அதற்காக அதைப் பெயரோடு சேர்த்துக்கொண்டு போகும் இடம் எல்லாம் சொல்வது சிறப்பானது அல்ல.

பத்மஸ்ரீ பட்டத்தை பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்வதோ, அழைப்பிதழிலோ, போஸ்டர்களிலோ பயன்படுத்தக்கூடாது என்கிற விதி இருந்தும் யாரும் பின்பற்றுவதில்லை.

அதைப் போலவே இருக்கும் இந்த கௌரவ டாக்டர் பட்டங்களும் பெயருக்கு முன்பாக டாக்டர் என்று போட்டுக்கொள்ள முடியாதவை. பெரும்பாலும் இந்தப் பட்டங்களச் சுமந்து நிற்கிறவர்கள் பெரிய பெரிய பொறுப்பில் இருக்கிற அரசியல்வாதிகள். அவர்களிடம் போய் யார் சொல்வது?

அடுத்து வருகிறவர்கள் டாக்டர் படிப்பை படித்து முடித்து, ஆனால் மருத்துவத் தொழிலைச் செய்யாமல் வேறு வேலைக்குச் சென்றுவிட்டவர்கள். உதாரணத்திற்கு நடித்துக்கொண்டிருக்கும் டாக்டர் ராஜசேகர். இவர் படித்த டாக்டர் படிப்புதான். ஆனால் வேலை பார்க்கும் துறை சினிமா. நடிக்கிற வேலை தனது என்று தேர்ந்தெடுத்துக் கொண்டுவிட்டவர். ஆனால் டாக்டர் என்று பெயருக்கு முன்னால் போட்டுகக்கொள்கிறார்.

இது சரியா என்று யோசிக்கும்போது, சரியில்லை என்றே தோன்றுகிறது. படிப்பு மருத்துவம்தான் என்றாலும் அது வெறும் பட்டம் அல்ல. மருத்துவத் தொழிலைச் செய்கிறவருக்கான அடமொழி. மருத்துவத் தொழிலைச் செய்யாத ஒருவர் ஏன் டாக்டர் என்ற அடைமொழியைத் தேவையில்லாமல் வைத்துக்கொள்ள வேண்டும்?

அடுத்து வருகிறவர்கள் ஹோமியோபதி, சித்தா, யுனானி போன்ற மருத்துவத் துறையில் பட்டம் பெற்றவர்கள். இவர்கள் எப்படி அழைக்கப்பட வேண்டும்? இந்தப் பெயர்களில்தான்இன்றக்கு பல போலி டாக்டர்கள் தமிழகத்தில் ப்ராக்டிஸ் செய்கிறார்கள். ஆறு மாதம் தபால் வழியில் படித்தால் சில சித்தா, யுனானி விஷயங்களில் டாக்டர் பட்டம் தருகிறார்கள்.

இது மிக மிக மோசமான அபாயகரமான விஷயம். இவர்கள் மக்களை ஏமாற்ற வைத்திருக்கிற ஒரே சொல் 'டாக்டர்' என்பதுதான். இதனைத் தடுக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இவர்கள் டாக்டர் என்று போட்டுக்கொள்வதைவிட ஹோமியோபதி மருத்துவர், சித்த மருத்துவர், யுனானி மருத்துவர் என்று தங்கள் பெயருக்கு கீழே எழுதிக் கொள்ளவேண்டும்.

இவர்களில்தான் நிறைய போலிகள் கலந்திருப்பதால் இவர்கள் ஒவ்வொருவரும் எந்தக் கல்லூரியில் படித்தார்கள் என்பதை கட்டாயம் தங்கள் பெயருக்குக் கீழே ப்ராக்டிஸ் செய்கிற இடங்களில் எழுதி வைக்கவேண்டும் என்பதை அரசு கட்டாயமாக்க வேண்டும். அப்போதான் மக்களுக்கு அவர் சிறந்த ஒரு இடத்தில் நல்ல பயிற்சி பெற்று வந்தவரா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

ஏன் இவர்கள் டாக்டர் என்று போட்டுக்கொள்ளக்கூடாது? இவர்களும் சிகிச்சைதானே தருகிறார்கள்? என்று கேட்கலாம். சிகிச்சை பல விதங்களில் உங்களுக்குக் கிடைக்கலாம். அதற்காக சிகிச்சை தருகிற எல்லோரும் டாக்டர் அல்ல. பல கிருத்துவ ஜெபக் கூட்டங்களில் பல மனிதர்களுடய நோய்கள் தீர்க்கப்படுவதாக சொல்லப்படுகிறது. அவர்களும் நோயைத் தீர்க்கிறார்கள்தானே? அவர்களை ஏன் டாக்டர் என்று சொல்வதில்லை?

பல ஊர்களில் பேய் ஓட்டுகிறவர்கள் இருக்கிறார்கள். இவர் பேய் ஓட்டித்தான் எனக்கு சரியாப் போச்சு என்று சொல்கிற நபர்கள் இருக்கிறார்கள். அதற்காக அவரை ஏன் நீங்கள் டாக்டர் என்று சொல்வதில்லை?

சிசிச்சயை பலர் தரலாம். ஆனால் சிகிச்சை தருகிற எல்லோரும் டாக்டர் அல்ல.முறையான மருத்துவப் படிப்பு என்பது இப்போதைக்கு எண்பது சதவிகிதம் பேரால் நம்பப்படுகிற அலோபதி மருத்துவம்தான். அதைப் படித்து பயிற்சி செய்கிறவர்களே 'டாக்டர்' என்கிற அடைமொழிக்கு_பட்டத்துக்கு தகுதி உடையவர்கள். சித்தா, யுனானி, அக்குபஞ்சர் உட்பட மற்றவர்கள் நேரடியாக தாங்கள் எந்தத்துறை மருத்துவர் என்பதை போட்டுக்கொள்ளலாமே தவிர 'டாக்டர்' என்ற முன் அடைமொழியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும்.

ஏன் இந்த டாக்டர் என்ற சொல்லுக்கு இவ்வளவு எதிர்க்கேள்விகள் என்று நீங்கள் கேட்கலாம்.

தமிழகத்தின் சூழல் அப்படி இருக்கிறது. இங்கு 'லா' படிக்காத ஒருவர் டூப்ளிகேட் வக்கீலாகி கோர்ட்டுக்குச் சென்று வாதாட முடியாது. இன்ஜினீயரிங் படிக்காத ஒருவர் டூப்ளிகேட்டாக கட்டடம் கட்ட முடியாது.

ஆனால் எதுவுமே படிக்காத ஒருவர் டாக்டராக ஆகி நோயாளிகளைக் கவனிக்க முடியும். ஏகப்பட்ட போலி டாக்டர்கள் இருக்கிறார்கள். மக்களை குழப்பி, மயக்கி, ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களை ஏமாறச் செய்வது இந்த 'டாக்டர்' என்ற சொல்தான். இதைப் பயன்படுத்கிறவர்கள் யார் என்பத அரசு கடுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் மக்களுக்கு பல நல்ல விஷயங்கள் நடக்க வாய்ப்பு அதிகரிக்கிறது.

பல சித்தா, ஹோமியோபதி டாக்டர்கள் அலோபதி மருத்துவர்கள் பயன்படுத்கிற ஸ்டெத்தாஸ் கோப்பை பயன்படுத்துகிறார்கள். இது கடுமையாக கண்டிக்கப்படவேண்டிய ஒன்று. அந்தக் கருவியைப் பயன்படுத்தி அவர்களால் இம்மி அளவு கூட ஒரு பிரச்னையைப் புரிந்கொள்ள முடியாது என்று தெரிந்தும் தேவையில்லாமல் மக்களைக் குழப்புகிற, ஏமாற்றுகிற வேலையில் ஈடுபடுகிறார்கள்.

இதைப் போலவேதான் 'டாக்டர்' என்கிற அடைமொழியும்.

மூளை அறுவ சிகிச்சையில் தேர்ச்சி பெற்ற நியுரோ சர்ஜனும் டாக்டர், தபால் மூலம் ஆர்.ஐ.எம்.பி.படிக்கிற (அதுவும் ஆறு மாதம் பயிற்சி?) ஒருவரும் டாக்டர்.

இந்த இருவரும் பக்கத்து பக்கத்து வீடுகளில் 'டாக்டர்' என்று போட்டுக்கொண்டு இந்த தமிழ்நாட்டில் ப்ராக்டிஸ் செய்யமுடியும். இதைவிட அபத்தம், மக்களை ஏமாற்றுகிற அரக்கத்தனம் வேறு எதுவும் இல்லை. இந்த இருவரும் டாக்டர் என்ற ஒரே சொல்லால் அழைக்கப்படுவதை அரசாங்கம் குரூரமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.

டாக்டர் என்கிற ஒரே ஒரு சொல் சமநிலையில் இல்லாத இந்த இருவரயும் சமம் போல பாவிக்க வைக்கிறது. மேலே சொன்ன யார் டாக்டர்? என்ற கேள்வியை அரசாங்கமும், மக்களும் ஒருமுறை திரும்பக் கேட்டுக்கொள்ள வேண்டும்.

''நான் 1977களில் பிரான்சில் சில ஆராய்ச்சி வேலை நிமித்தமாக தங்க நேர்ந்தது. தங்கிய வீட்டின் கதவில் என் பெயரை டாக்டர் க.ப. அறவாணன் என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தேன்.ஒரு முறை பக்கத்து குடித்தனக்காரர்கள் ஒரு ஆள என் வீட்டுக்கு கூட்டி வந்தார்கள்.

தூக்கிவரப்பட்ட ஆளுக்கு திடீரென சுகவீனம் ஏற்பட்டு விட்டதாகவும் அதற்கு உடனடியாக ஏதாவது சிகிச்சை செய்யும்படியும் என்னக் கேட்டுக் கொண்டார்கள்.அப்போதான் விளங்கியது, நான் என் பெயருக்கு முன்னால் டாக்டர் என்று போட்ட தப்பு. அன்றிலிருந்து என் பெயருக்கு முன்னால் டாக்டர் என்று எழுவதை நிறுத்திக் கொண்டேன்.

ஆனால் இன்னும் பலர் தங்கள் பெயருக்கு முன்னால் டாக்டர் என்று போட்டு மக்களை குழப்புகிறார்கள்.

பிஎச்டி (PHD) படித்தவர்கள் எல்லாம் தங்கள் பெயருக்கு முன்னால் டாக்டர் என்று போட்டுக்கொள்கிறார்கள்.

பிஎச்டி என்றால் டாக்டரேட் (doctorate of phiLosophy) ஆஃப் ஃபிலோசஃபி என்று அர்த்தம்.

டாக்டரேட் என்ற சொல்லின் முதல் எழுத்தான டி_ஐயும் இடையில் வரும் ஆர்_ஐயும் சேர்த்தான் Dr என்று சுருக்கி, டாக்டர் என்று போட்டுக் கொள்கிறோம் என்று இந்த மெத்தப் படித்த பிஎச்டி ஆய்வாளர்கள் நியாயம் கற்பிக்கின்றனர்.

மேற்கு நாடுகளில் எல்லா சொற்களையும் சுருக்கி எழுவதில்லை. எதைச் சுருக்க வேண்டும், எதை விரித்து எழுத வேண்டும் என்ற இலக்கண அக்கறை அவர்களுக்கு உண்டு.

வெளிநாட்டவர்கள் போல்தான் சுருக்கி எழுகிறோம் என்று இங்குள்ளவர்கள் சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.

பிஎச்டி_ஐ யாரும் Dr என்று சுருக்கி மேலை நாடுகளில் எழுதிக் கொள்வதில்லை.

நம் தமிழ் கலாச்சாரத்தில் கூட 1950களுக்கு முன்பு வரை பிஎச்டிக்கு நல்ல தமிழ்ப் பெயர் இருந்தது.

அவர்களுக்கு பண்டாரம் என்ற பெயர் இருந்தது. பண்டாரம் என்ற வார்த்தை பண்டம், பணியாரம் என்று இருப்பதாக நினைத்த சில பண்டாரங்கள் அந்த பண்டாரம் என்ற வார்த்தையை உபயோகிப்பதை நிறுத்திக் கொண்டனர்.

பிறகு இலங்கக்காரர்கள் பிஎச்டி என்ற வார்த்தைக்கு நல்லதொரு தமிழ்ப் பெயரை இன்றும் உபயோகித்து வருகின்றனர். அதாவது கலாநிதி என்றழைக்கின்றனர்.

இதையும் நம் தமிழ்நாட்டு பி.எச்டி பண்டாரங்கள் உபயோகிப்பதில்லை. கலாநிதியில் என்ன பணியாரத்தைக் கண்டார்களோ தெரியவில்லை.

பிறகு நம் தமிழ் பிஎச்டிகள் முனைவர் என்ற பெயரைக் கண்டுபிடித்தனர்.

இதையும் உபயோகிப்பதில்லை. தமிழ்ப் பற்றுடையவர்கள் சிலர் முனைவர் ராமநாதன், முனைவர் மகாலிங்கம் என்று போட்டுக்கொள்கிறார்கள்.

நிஜத்தில் இந்த முனைவர் பட்டத்தை பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்வதே சிறப்பானதாக இருக்கும்.

பல்கலக்கழகங்கள் சில பெரிய மனிதர்களுக்கு கொடுக்கும் டாக்டர் பட்டங்கள அவர்கள் ஏதோ மருத்துவம் படித்த மருத்துவர்கள் மாதிரி தங்கள் பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்கிறார்கள்.

பல்கலைக்கழகங்கள் கொடுக்கும் டாக்டர் பட்டத்துக்கு டி.லிட் (D.Litt) டி.எஸ்ஸி (DSC) அதாவது இலக்கியத்துக்கான டாக்டர், விஞ்ஞானத்துக்கான டாக்டர் என்றுதான் அர்த்தம்.

இந்தப் பட்டங்களைப் பெயருக்கு முன்னால் போடுவது சரியல்ல.

வெளிநாடுகளில் பிஎச்டி படித்தவர்கள், தங்கள் பெயருக்கு பின்னால்கூட தாங்கள் படித்த படிப்பின் சுருக்கத்தைத்தான் இட்டுக் கொள்கிறார்கள்.

உதாரணமாக ஸ்டுவர்ட், பிஎச்டி இன் பயோசயின்ஸ், க்ளார்க்_பிஎச்டி இன் அக்ரிகல்ச்சர் என்று தான் போட்டுக் கொள்கிறார்கள்.

எல்லோரும் டாக்டர் என்று போட்டால் நாடு எப்படி குழப்பமடையும் என்று யோசித்துப் பாருங்கள்?'' என்று தன் பேச்சை முடித்தார்.டாக்டர்.கே.பிரகாசம்

மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ்., எம்.டி., மற்றும் ஹோமியோபதி, ஆயுர்வேதா, சித்தா, யுனானி போன்றவற்றைப் படித்து முடித்தவர்கள்தான் தங்கள் பெயருக்கு முன்னால் டாக்டர்ன்னு போட்டுக்கணும்.

சில நிறுவனங்கள் சில நபர்களுக்கு மருத்துவ படிப்பு படிக்காதவர்களுக்கெல்லாம் டாக்டர் பட்டங்கள் கொடுக்கிறது.

ஒரு கன்வன்ஷன் நியதி நிமித்தம் இந்தப் பட்டங்களை கொடுக்கிறார்கள். அவர்கள் கொடுக்கிறார்கள் என்பதற்காக அந்தப் பட்டங்களை வாங்கும் நபர்கள் எல்லா இடங்களிலும் தங்கள் பெயருக்கு முன்னால் டாக்டர்ன்னு எழுதிக்கொண்டு வலம் வருவது ஒரு மரியாதையில்லாத செயலாகும்.

நிறைய நபர்களுக்கு மாலை போடுகிறோம். சால்வை போத்துகிறோம். ஆனால் அந்த மாலை, சால்வையுடன் எப்போதும் ரோட்டில் வலம் வருவது பைத்தியக்காரத் தனத்தைத்தான் காட்டுகிறது.

அதுபோல்தான் ஒரு மரியாதைக்காக கௌரவத்துக்காக கொடுக்கப்படும் டாக்டர் பட்டத்தை எப்போதும் தோளில் சுமந்து திரியும் செயலும் ஆகும்.

பி.எச்.டி. எனும் படிப்புக்கு அர்த்தம் டாக்டரேட் இன் ஃபிலாசஃபி ஆகும்.

இந்தப் படிப்பு முடித்தவர்கள் தங்கள் பெயருக்கு பின்னால் தாங்கள் எந்தத் துறையில் டாக்டரேட் வாங்கியிருக்கிறோம் என்று போடலாமே தவிர பெயருக்கு முன்னால் டாக்டர்ன்னு போடுவது தவறாகும்.

டாக்டரேட் என்றால் தமிழில் முனைவர் என்று பொருள்படும். முனைவர் இராமநாதன் என்று தங்கள் பெயரைப் போடலாம்.

நமது ஜனாதிபதி என்பவர் விஞ்ஞானியே (Scientist) தவிர டாக்டர் அல்ல. அவரையும் டாக்டர் அப்துல் கலாம் என்றே பலர் அழைக்கிறார்கள். இது அப்துல் கலாமால் நிகழ்ந்ததா பொதுமக்களால் நிகழ்ந்ததா என்று தெரியவில்லை.

அரசியல் சாசனத்தில் யார் டாக்டர்ன்னு போடலாம் என்றெல்லாம் வரையறை இல்லை.

நிறுவனங்கள், மருத்துவ படிப்பு படிக்காதவர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதும், அதை தங்கள் பெயருக்கு முன்னால் போட்டுக்கொண்டு வலம் வருவதையும் தண்டிப்பதற்கான சட்டங்கள் நம்மிடையே இல்லை.

ஆனால் இனிதான் இதுபற்றி யோசிக்கவேண்டும்.

மருத்துவம் படித்த டாக்டர்களே இப்படிப்பட்ட மரியாதையில்லாத செயலைப் பார்த்து கண்டுகொள்ளாமல் இருப்பது டாக்டர்களின் பொதுவான அலட்சியப் போக்கையே காட்டுகிறது.

பூனைக்கு யாராவது மணி கட்டத்தானே வேண்டும்.பட்டங்கள் கொடுப்பவர்களுக்கு பெரிய மனசுதான்.

ஆனால் அதை வாங்கி விக்கிரமாதித்தன் போல் சுமப்பவர்களின் மனசு எவ்வளவு சின்னதாக இருக்கு பாருங்கள்!

நுகர்வோர் உரிமைக்காக பல காலமாக போராடி வருபவர் தேசிகன். அவரிடம் டாக்டர் பட்டம் குறித்து கேட்க,

சென்னயில் மட்டும் இப்போதைக்கு 1500 போலி டாக்டர்கள் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் மீது இந்திய மேஜிக்கல் ரெமடீஸ் ப்ராக்டீஸ் ஆக்ட் கிரிமினல் வழக்குகளப் போடலாம். ஆனால், இவரது இப்படிப்பட்ட போலியான டாக்டர்களின் சிகிச்சைக்கு உட்படும் ஒரு நோயாளி, அந்தச் சிகிச்சையால் பாதிப்பு அடையும் போதுதான் அந்த டாக்டர் போலி டாக்டர் என்று தெரிய வருகிறது. பிறகே போலி டாக்டர்களை போலீஸ்காரர்கள் கைது செய்கிறார்கள்.

சர்க்கரை நோயை குணப்படுத்துகிறேன். கான்சரை கீரையில் குணப்படுத்துகிறேன் என்று பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கும் டாக்டர்கள் மேல் நான் வழக்குத் தொடுக்க உள்ளேன்.

மனித உடற்கூறுகளின் செயற்பாடுகளைக் கற்றுக் கொள்கிறவர்களெல்லாம் கூட டாக்டர்கள் என்று போட்டுக் கொள்வது அறிவற்ற தன்மையே.அரசாங்க அனுமதி இல்லாத நிறுவனங்களில் 5 வருடத்துக்கும் குறைவாக படித்தவர்களெல்லாம் டாக்டர் பட்டம் போட்டுக் கொள்வது சட்டப்படி குற்றமாகும்.

6 மாதம் அக்குபஞ்சர் கோர்ஸ் படித்தவர்கள்கூட டாக்டர் என்று போட்டுக் கொள்கிறார்கள்.

இவர்கள் ட்ரெய்னர் என்று ஓரளவு போட்டுக் கொள்ளலாம்.ஒவ்வொரு டாக்டரும் அவர் டாக்டர் என்பதற்கான சர்ட்டிஃபிகேட், அரசு ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் உண்டு.

ஒரு டாக்டர் பற்றி சந்தேகம் உள்ளவர்கள் அவரது ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் குறித்த சான்றிதழை பார்வயிட அனுமதி கோர வேண்டும்.மந்திரத்தால் மாங்காய் பறிக்கலாம் என்று சொல்லும் டாக்டர்களை மக்கள் கூண்டிலேற்ற வேண்டும்.

''தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில், தலைவர்.நம் நாட்டில் யார் யாரெல்லாமோ டாக்டர்கள் என்று பெயருக்கு முன்னால் எழுதிக் கொள்கிறார்கள்.

Ph.d படித்தவர்களுக்கு முனைவர் என்ற அழகான தமிழ்ப் பெயர் உண்டு. அதனைப் பயன்படுத்த விருப்பம் இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள்.

அப்துல்கலாம், சோனியா காந்தி, கருணாநிதி, ஜெயலலிதா, கமல்ஹாசன் போன்றவர்களையும் அவ்வாறே நடைமுறையில் குறிப்பிடுகிறார்கள்.

இதனைத் தவறு என்று சொல்வதை விட, டாக்டர்கள் என்பதற்குப் பதில் மாற்றுப் பெயர்களை வைத்துக் கொண்டால் சிறப்பானது.

தமிழில் முனைவர் என்ற வார்த்தை உள்ள மாதிரி, அவரவர் தாய்மொழிகளில் உள்ள வார்த்தைகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.

அதற்கு மாநில அரசுதான் முயற்சி செய் சட்டம் கொண்டு வர வேண்டும். யாராவது நான் போலீஸ்காரர் என்றோ பிரதமர் என்றோ எழுதிக் கொள்ள முடியுமா?

ஆனால் டாக்டர் என்ற பெயரைப் பயன்படுத்துபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு உயர்நீதிமன்ற உத்தரவில், ''மருத்துவர் படிப்பு படித்து, மாநில கவுன்சிலில் பதிவு செய்து அங்கீகரிக்கபட்டவர்கள் மட்டுமே மருத்துவர்கள்' என்று கூறியிருக்கிறது.

ஒருஅவசரமான சூழ்நிலயில் பி.எச்.டி. பயின்றவர்களால், நோயாளிக்குச் சிகிச்சை அளிக்க முடியுமா?


கட்டுரை----'குமுதம் இதழில் "ரஞ்சித். NANDRI : KUMUDAM.

மேலும் படிக்க...Read more...

புதுக் கம்ப்யூட்டரா! படியுங்கள் கீழே.

>> Thursday, June 4, 2009

புதியதாக டெஸ்க் டாப் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டரை உங்களுக்கென வாங்கியுள்ளீர்களா! பாராட்டுக்கள். அந்த கம்ப்யூட்டர் உங்களுக்கு எந்த வேலைக்கு வேண்டுமானாலும் பயன்படலாம். வீட்டில் பொழுது போக்க, மல்ட்டி மீடியா பார்த்து ரசிக்க, குழந்தைகள் விளையாட, சிறிய அலுவலகங்களில் பயன்படுத்த, சிறிய வர்த்தக காரியங்களுக்கு பயன்படுத்த என நோக்கம் எது வேண்டுமானலும் இருக்கலாம். ஆனால் சற்று தாமதியுங்கள்.


உடனே கம்ப்யூட்டரை இயக்கி இன்டர்நெட் தொடர்பு கொண்டு உங்கள் நண்பர்களுக்கெல்லாம் நீங்கள் கம்ப்யூட்டர் வாங்கிய செய்தியை இமெயிலாக அனுப்ப முயற்சிக்க வேண்டும். அல்லது உங்களுக்குப் பிடித்தமான பாடல்களை அல்லது ஆடல் காட்சிகளை உடனே இயக்கி ரசிக்க வேண்டாம். அந்த கம்ப்யூட்டரில் பாதுகாப்பாக இயங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். அவை எவை என இங்கு பார்க்கலாம்.

1.எமர்ஜென்ஸி டிஸ்க் தயாரியுங்கள்: சில கம்ப்யூட்டர்களுடன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை சிக்கலான நேரங்களில் மீண்டும் பதிந்திட ஓ.எஸ். உள்ள சிடி அல்லது டிவிடியினை வழங்கி இருப்பார்கள். சில நிறுவனங்கள் ரெகவரி சிடி என ஒன்றை வழங்குவார்கள். ஆப்பரேட்டிங் சிஸ்டம் முடங்கிப் போனால் இந்த ரெகவரி சிடியை இயக்கி கரப்ட் ஆன பைல்களை சரி செய்திடலாம். இது போன்ற சிடிக்கள் கொடுக்கப்பட்டால் அவற்றைப் பயன்படுத்தி புதிய கம்ப்யூட்டரில் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அமைத்தவுடன் பத்திரமாக வைத்திட வேண்டும்.

அதனை எங்கு பத்திரமாக வைத்துள்ளீர்கள் என்பதனையும் குறித்து வைக்க வேண்டும். ஒரு சில நிறுவனங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதிந்தே தரப்படுகிறது என்று கூறி அதற்கான விலையையும் சேர்த்தே நம்மிடம் வாங்கி விடுவார்கள். ஆனால் லைசன்ஸ் கீ என்று சொல்லி ஒரு பேப்பர் உரிமை கொடுப்பார்கள். சில நிறுவனங்களோ சிபியு கேபினட்டின் பின்புறம் ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. அதுதான் ஓ.எஸ். லைசன்ஸ் என கூறிவிட்டுச் சென்றுவிடுவார்கள்.

இப்படி ஒன்றும் உங்களிடம் தரப்படவில்லை என்றால் உடனே சிஸ்டத்துடன் வந்துள்ள மேனுவல் எனப்படும் குறிப்பு நூலைப் படித்து எப்படி எமர்ஜென்சி ஓ.எஸ். சி.டி தயாரிப்பது என அறிந்து அதில் குறிப்பிட்டுள்ள வழிகளைப் பின்பற்றி ஒரு எமர்ஜென்ஸி ஆப்பரேட்டிங் சிஸ்டம் சிடி தயரித்துக் கொள்ளுங்கள். ஒன்றுக்கு இரண்டாகத் தயாரித்து வைத்துக் கொள்வதும் நல்லது.

2. பாதுகாப்பு சாப்வேர் இன்ஸ்டால் செய்க: கம்ப்யூட்டரை இன்டர்நெட்டுடன் இணைக்கும் முன் அதில் செக்யூரிட்டி சாப்ட்வேர் தொகுப்புகளை இன்ஸ்டால் செய்திட வேண்டும். நன்றாகச் செயல்படக் கூடிய பயர்வால் மற்றும் ஆண்டி வைரஸ் தொகுப்பு கட்டாயம் பதியப்பட வேண்டும். இவை இல்லாமல் இன்டர்நெட்டில் உலா வந்தால் நிச்சயம் உங்கள் கம்ப்யூட்டர் வைரஸ், மால்வேர் மற்றும் பல வகை கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களால் பாதிக்கப்படும் சூழ்நிலைகள் நிச்சயம் உருவாகும்.

உங்களிடம் அல்லது அலுவலகத்தில் அல்லது நண்பரிடத்தில் உள்ள இன்னொரு கம்ப்யூட்டர் மூலம் பயர்வால், ஆண்டி வைரஸ் மற்றும் மால்வேர் புரோகிராம்களுக்கு எதிரான சாப்ட்வேர்களை டவுண்லோட் செய்து அதனை சிடி அல்லது பிளாஷ் டிரைவில் காப்பி செய்து பின் புதிய கம்ப்யூட்டரில் பதியவும். இதில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் புது கம்ப்யூட்டரைத் தயாரித்து வழங்கிய நிறுவனம் ஏதேனும் இது போன்ற செக்யூரிட்டி சாப்ட்வேர்களில் ஒன்றை பதிந்தே உங்களுக்கு விற்பனை செய்திருக்கும்.

பொதுவாக அத்தகைய சாப்ட்வேர்கள் அவ்வளவு திறனுடம் இருக்காது. எனவே தான் வேறு செக்யூரிட்டி சாப்ட்வேர் களை நாம் புதிய கம்ப்யூட்டரில் பதிக்கிறோம். அவ்வாறு பதியும் முன் கம்ப்யூட்டருடன் வந்த செக்யூரிட்டி சாப்ட்வேர் தொகுப்புகளை நீக்கிவிட வேண்டும்.

3. தேவையற்றதை நீக்குங்கள்: கம்ப்யூட்டருடன் வந்த அனைத்து புரோகிராம்களையும் கவனமாகப் பார்க்கவும். கண்ட்ரோல் பேனலில் "Add/Remove Programs"ஐகானில் கிளிக் செய்தால் இந்த பட்டியல் கிடைக்கும். இதில் ஏதேனும் ட்ரையல் கேம்ஸ், உங்களுக்குத் தேவையில்லாத போட்டோ அப்ளிகேஷன் புரோகிராம்கள், வெப்சைட் டூல்பார்கள் என தேவையற்ற புரோகிராம்களை நீக்கிவிடுங்கள். அதற்கான வசதி அந்த விண்டோவிலேயே கிடைக்கும்.

4. புதிய வெப் பிரவுசர்: உங்கள் கம்ப்யூட்டருடன் வெப் பிரவுசர் புரோகிராம் ஒன்று இணைந்தே தரப்பட்டிருக்கும். இதனைத் தான் நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. மொஸில்லா பயர்பாக்ஸ், குரோம், ஆப்பரா எனப் பல பிரவுசர்கள் உள்ளன. இவற்றில் ஏதேனும் ஒன்றை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். புதிய ஒன்றைப் பயன்படுத்தினாலும் சிஸ்டத்துடன் வந்த பிரவுசரை அவ்வப்போது அப்டேட் செய்திடவும். அப்போதுதான் வைரஸ் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் புரோகிராம்களிலிருந்து முழுமையான பாதுகாப்பு கிடைக்கும்.

5. அனைத்தையும் அப்டேட் : இன்டர்நெட் இணைப்பு கிடைத்தவுடன் இணையப் பக்கங்களைத் தேடிச் செல்லாமல் உங்களிடம் உள்ள வெப் பிரவுசர்கள், ஆண்டி வைரஸ் புரோகிராம் மற்றும் இணையம் சம்பந்தப்பட்ட அனைத்து சாப்ட்வேர்களையும் அப்டேட் செய்துவிடவும். குறிப்பாக அடோப் அக்ரோபட் ரீடர் மற்றும் மல்ட்டி மீடியா புரோகிராம்களை அவசியம் அப்டேட் செய்திட வேண்டும்.

இவற்றுடன் இன்டர்நெட்டிலிருந்து இறக்கப்படும் பைல்களை இயக்கும் புரோகிராம்கள் அனைத்தையும் அப்டேட் செய்வது நல்லது. இந்த புரோகிராம்களில் உள்ள வலுவற்ற கட்டமைப்பின் வழியாக நுழையும் வகையிலேயே வைரஸ்களும் மற்ற மோசமான மால்வேர்களும் எழுதப்படுவதால் இவற்றைக் கட்டாயம் அப்டேட் செய்திட வேண்டும்.

அப்டேட் செய்திடுகையில் அண்மைக் காலம் வரை இத்தகைய வலுவற்ற இடங்களைச் சரி செய்திட தரப்பட்டுள்ள பேட்ச் பைல்கள் இயக்கப்பட்டு உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள புரோகிராம்களின் கட்டமைப்பு சரி செய்யப்படும். இதனால் வைரஸ்கள் வருவது தடுக்கப்படும். மேலே சொன்ன ஐந்து வழிமுறைகளை அவசியம் புதிய கம்ப்யூட்டரை இயக்கி இணையத்தில் நுழையும் முன் மேற்கொள்வது மிக அவசியம்.

மேலும் படிக்க...Read more...

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.




Animated avatar.



"இளையாங்குடி கல்லூரி தந்தை"



மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.








"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்கு







இளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்



உண்மை விளங்கும்.





.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP