என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

எதைச் சொல்வது? யோசித்துச் சொல்வதே உண்மையில் நிலைக்கும்.

>> Wednesday, May 12, 2010

எதை? எதை? சிந்தியுங்க‌ள்!! புகழ்ந்து? இகழ்ந்து? மகிழ்ந்து? உணர்ந்து? பரிந்து? விரித்து? பதட்டத்தில்? மயக்கத்தில்? கலக்கத்தில்? பாசத்தில்? ஆசையில்? புகழ்ந்து சொல்வது பின்னால் சலிக்கும்
இகழ்ந்து சொல்வது எதிர்ப்புகள் வளர்க்கும்
மகிழ்ந்து சொல்வது மனதை மலர்த்தும்
உணர்ந்து சொல்வதே உயர்வுகள் வளர்க்கும்

அறிவுரை சொல்வது அலுத்திடச் செய்யும்
பரிந்துரை சொல்வது தவிர்த்திடச் செய்யும்
விரித்துரை சொல்வது விரயங்கள் செய்யும்
அனுபவ உரையே ஆயிரம் செய்யும்

பதட்டத்தில் சொல்வது பகையை வளர்க்கும்
மயக்கத்தில் சொல்வது மமதை வளர்க்கும்
கலக்கத்தில் சொல்வது கவலைகள் வளர்க்கும்
கவனமாய் சொல்வதே காரியம் நடத்தும்.

நேசத்தைச் சொல்வது நட்பை வளர்க்கும்
பாசத்தில் சொல்வது பழியை மறக்கும்
ஆசையில் சொல்வது வேகத்தைக் கொடுக்கும்
யோசித்துச் சொல்வதே உண்மையில் நிலைக்கும்.
SOURCE: NAMADHUNAMBIKKAI
இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

0 comments:

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.




Animated avatar.



"இளையாங்குடி கல்லூரி தந்தை"



மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.








"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்கு







இளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்



உண்மை விளங்கும்.





.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP