என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

“கோக்” கும் பன்றியின் இறைச்சியும்.

>> Tuesday, November 11, 2008



إِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنزِيرِ وَمَا أُهِلَّ بِهِ لِغَيْرِ اللّهِ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَلاَ عَادٍ فَلا إِثْمَ عَلَيْهِ إِنَّ اللّهَ غَفُورٌ رَّحِيمٌ 173


தாமாக செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்கு தடை செய்துள்ளான் வரம்பு மீறாமலும், வழியச் செல்லாமலும், நிர்பந்திக்கப்படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன், நிகரற்ற அன்புடையவன் திருக்குர்ஆன்.2:173




اَلسَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكةُ
உலக பொதுமறை திருக்குர்ஆனில் அல்லாஹ் நன்கு அறிந்தவவன், ஞானம் மிக்கவன் என்ற சொல்லை அதிக இடங்களில் அல்லாஹ் இடம் பெறச் செய்துள்ளான். ஒவ்வொரு வசனத்தின் முடிவிலும் மேற்கானும் சொல்லுடன் நிறைவு பெற்று அடுத்த வசனத்திற்குச் செல்வதை காணலாம்.



...அல்லாஹ் அறிந்தவன் ஞானம் மிக்கவன்.4:26

அல்லாஹ் ஒவ்வொருப் பொருளையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.4:32

...அல்லாஹ் அறிந்தவனாக, நன்கு அறிந்தவனாகவும் இருக்கின்றான்.4:35 ...அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானம் மிக்கவனாகவும் இருக்கிறான்.4:92

எல்லாம் அறிந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மனித இனம் உண்பதற்கு, உறங்குவதற்கு, மன அமைதி கொள்வதற்கு இன்னும் பிற இயற்கை தேவைகள் மற்றும் உபாதைகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் புவியில் ஏற்படுத்திக் கொடுத்தான்.

அதில் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது எது ? தவிர்க்க வேண்டியது எது ?
மன அமைதிக்கு சிறந்தது எது ? தவிர்க்க வேண்டியது எது ?

என்றத் தகவலையும் புள்ளி விபரத்துடன் தனது திருமறை மூலம் எச்சரிக்கை விடுத்தான்.
இன்னும் அதில் சிலவற்றை பகிரங்க தடை செய்து உத்தரவிட்டான். அல்லாஹ் ஒன்றைக் கூறி தடைவிதித்ததில் சுகம் கிடைப்பதாகவும், ஆரோக்கியம் இருப்பதாகவும் மனித வர்க்கத்திற்கு ஷைத்தான் ஆசையைத் தூண்டி விடுவான். இதற்கு ஆதம்(அலை) அவர்களும், ஹவ்வா (அலை) அவர்களும் உதாரணமாகும்.

எல்லாம் அறிந்த அல்லாஹ் ரப்புல்ஆலமீன் மருத்துவம் உலகுக்கு வராத காலகட்டத்தில் மனிதர்களுக்கு தடை செய்தவற்றில் உள்ள தீமையை ( கொடிய நோய்களை ) இன்று மனித சமுதாயம் கண்டறிந்து அவற்றை உலகுக்கு அறிவித்தள்ளது.

உதாரணத்திழற்கு விபச்சாரத்தை எடுத்துக் கொள்ளலாம்.

விபச்சாரத்தை நெருங்காதீர்கள் அதில் தீமை இருக்கிறது என்றுக்கூறி மனித சமுதாயத்திற்கு தடைவிதித்தான் ஆனாலும் அல்லாஹ்வுடைய தடை உத்தரவை ஷைத்தான மீறச்செய்தான் அதனால் மனிதர்கள் ஆண்,பெண் பாகுபாடின்றி ஷைத்தானுடைய தூண்டுதலினால் மனோ இச்சைக்கு உட்பட்டு விபச்சாரத்தில் வீழ்ந்து அதை நாகரீகமாகவும், பொழுதுப் போக்காகவும் மாற்றிக் கொண்டார்கள்.

அல்லாஹ்வுடைய தடை உத்தரவை மீறி விபச்சாரத்தை நாகரீகமாகவும், பொழுதுப் போக்காகவும் மாற்றிக் கொண்டவர்களுடைய நாடுகளில் எயிட்ஸ் எனும் தீராத, தீர்க்க முடியாத நோய் பரவியது.

விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்! அது வெட்கக்கேடானதாகும். தீயவழியாகவும் இருக்கின்றது. திருக்குர்ஆன் 17:32.

விண்ணில் கால் பதித்து சாதனைப் படைத்தவர்களால் மண்ணில் உருவான எயிட்ஸூக்கு மருந்து கண்டுப் பிடிக்க முடியாமல் விழிப்பிதுங்குகிறார்கள். அறிந்தவனும், ஞானம் மிக்கவனுமாகிய அல்லாஹ் விபச்சாரத்தை நெருங்காதீர்கள் அது தீயவழியாக இருக்கிறது என்றுக் கூறியதை பொடுபோக்காக எடுத்துக் கொண்ட சமுதாயத்தவர்களால் எயிட்ஸ் எனும் நோயை விலக்க சக்தியற்றவர்களாக இருப்பதைக் காண்கிறோம்.

நோய் கிருமிகளை உருவாக்கும் கால்நடைகளின் மாமிசத்தில் உள்ள தீமைகள்.

மனிதர்கள் உண்டு புசித்து உடலில் ஆரோக்கியம் பெறுவதற்காக கால்நடைகளைப் படைத்து அதனுடைய பாலை அருந்துவதற்கும், அதனுடைய இறைச்சியை உணவாக உட்கொள்வதற்கும் அனுமதி அளித்தான்.

கால்நடைகளில் உங்களுக்கு படிப்பினை உள்ளது. அதன் வயிற்றில் உள்ளதிலிருந்து உங்களுக்கு பருகத் தருகிறோம் அவற்றில் உங்களுக்கு ஏராளமான பயன்களும் உள்ளன அவற்றை உண்ணுகின்றீர்கள். திருக்குர்ஆன் 23:21.

அதே கால்நடைகளில் மனிதனுடைய உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கிழைக்கக் கூடிய சில கால்நடைகளை அறிந்தவனும், ஞானம் மிக்கவனுமாகிய அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தடைசெய்தான் அதில் முக்கியமாக பன்றியின் இறைச்சியைக் கூறி தடை செய்தான் பார்க்க

திருமறை வசனங்கள். 4:3, 5:60, 6:145, 16:115 மனித சமுதாயத்திற்காக அல்லாஹ் தடைசெய்த ஒன்றில் நிச்சயமாக தீங்கு இருக்கவேச் செய்யும்.

அல்லாஹ்வுடைய கட்டளைக்கு எதிராக மக்களை தூண்டுவதில் தீவிரமாக செயல்படும் ஷைத்தான் இதில் முஸ்லிம் சமுதாயத்தில் தோல்வியுறவே முஸ்லீமல்லாத சமுதாயத்தினரை (அதிகமாக கிருஸ்தவ சமுதாயம்) தூண்டி விட்டான்.

இஸ்லாமிய எழுச்சியால் மற்ற எந்த மத்ததை விடவும் பெரும் வீழ்ச்சியை தழுவியது கிருஸ்தவ மதம் என்பதால் அதிகபட்சம் இஸ்லாமிய சட்டங்களுக்கு மாற்றமாக நடப்பதை அன்றிலிருந்து இன்றுவரை அவர்கள் கொள்கை(?)யாகக் கொண்டுள்ளனர். அவர்களது கொள்கை(?)யின் அடிப்படையில் அல்லாஹ் தடுத்த விபச்சாரத்தை வெட்க உணர்வுகளை உதிர்த்து விட்டு பகிரங்கமாகச் செய்து அதைப்பார்த்து பிறரும் செய்வதற்காக உலகு முழுவதும் பல்கி பரவச்செய்வதற்கு ஊடகத் துறையை பயன்படுத்தினர்.

அல்லாஹ் தடுத்த பன்றியின் மாமிசத்தை உண்டு புசித்து அதன் மூலம் மூலைக் காய்ச்சல் போன்ற கொடிய நோய்களை உலகுக்குப் பரவச் செய்ததிலும் பெரும் பங்கா(?)ற்றி சாதனை படைத்தவர்கள்.

அவர்கள் கடவுள் என்றும் நாம் இறைத்தூதர் என்றும் கூறுகின்ற ஈஸா(அலை) அவர்கள் உலகுக்கு மீண்டும் வரும் பொழுது பல சீர்திருத்தங்களை செய்வார்கள் அதில் முக்கியமாக பன்றியை கொல்வார்கள் என்று சத்திய தூதர்(ஸல்) அவர்கள் கீழ்கானுமாறு கூறினார்கள் மர்யமின் குமாரர்(ஈஸா) அவர்கள் நீதி செலுத்தும் நடுவராக உங்களிடையே இறங்குவார்கள். அவர்கள் வந்தவுடன் சிலுவையை உடைப்பார்கள், பன்றியைக் கொல்வார்கள், 'ஜிஸ்யா' வரியை(ஏற்க) மறுப்பார்கள். எவரும் பெற முன்வராத அளவுக்கு செல்வம் பெருகி வழியும். இவையெல்லாம் நடக்காதவரை உலக முடிவு (மறுமை) நாள் வராது. என்று இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள். ஆதாரநூல் புகாரி 2476.


அறிந்தவனும், ஞானம் மிக்கவனுமாகிய அல்லாஹ் ரப்புல் ஆலமீனுடைய கட்டளையை மீறி மேல்படி மாமிசத்தை உண்ணுகின்ற சமுதாயத்து மக்களைக் கொண்டே அதனுடைய தீமைகளை கண்டுப் பிடித்து உலகுக்கு அறிவிக்கச் செய்தான்.

1. மேல்படி கால்நடையின் மாமிசத்தில் புழுக்கள் உற்பத்தியாவதை அவர்களே கண்டுப் பிடித்து முதலில் அறிவித்தனர்.

மேல்படி புழுக்களைக் கொண்ட மாமிசம் மனித உடலுக்குள் சென்றதும் மாமிசம் முழுவதும் இரப்பைக்குள் சென்று செரிமானம் அடைந்து விடுகிறது ஆனால் அதனுள் இருக்கும் புழுக்கள் மட்டும் சாகாமல் தங்கி விடுகின்றது. அவ்வாறு தங்கிக் கொண்ட அந்த புழுக்கள் எண்ணற்ற நோய் கிருமிகளை உருவாக்குகிறது அதில் முக்கியமாக மூலை காய்ச்சலை ஏற்படுத்தி மரணத்தை தழுவச் செய்கிறது.

அதற்கடுத்து

1. மேல்படி மாமிசத்தை ஒருப் பாத்திரத்திலிட்டு நன்றாக கொதிக்க விட்டு ஆய்வு செய்த வகையில் மொத்த மாமிசமும் கரைந்து பஸ்பமாகிய பின் கொதித்துக் கொண்டிருக்கும் வெந்நீரில் மாமிசத்தில் இருக்கக்கூடிய புழுக்கள் மட்டும் வீரியமாக நெளிந்து கொண்டிருந்ததை இரண்டாவது கட்டமாக அவர்களே உலகுக்கு அறிவித்தார்கள்.

இன்றும் நமது நாடுகளில் பன்றிகள் வளர்க்கும் இடங்களைச் சுற்றியுள்ள மக்களை மூலை காய்ச்சல் தாக்கி அதிகமான பேர் இறப்பதை அவ்வப்பொழுது ஊடகங்கள் வாயிலாக அறிந்து வருகின்றோம். மூலைகாய்ச்சல் அதிகரிக்கும் பொழுது பன்றிகளை ஒழிக்க ஊராட்சி துறை உத்தரவு பிறப்பிக்கும், இன்றும் இந்தியாவில் ஊராட்சி துறை துப்புரவுத் தொழிலாளர்களுக்கு ஊரின் ஒதுங்குப் புறங்களில் வீடுகளை கட்டிக் கொடுப்பதற்கு முக்கிய காணரம் அவர்கள் பன்றிகளை வளர்ப்பதுவேயாகும்.

ஆசிய நாடுகளில் வளரும் பன்றிகள் மனித கழிவுகளை உண்பதாலும் சேரு, சகதிகளில் உருண்டுப் புரளுவதாலுமே மூலைகாய்ச்சல் போன்ற நோய் கிருமிகளைப் பரப்புகிறது. ஆனால் மேலை நாடுகளில் பன்றிகளுக்கு தனி தொழுவம் அமைக்கப்பட்டு உயர்தர தீவணங்களிட்டு வளர்க்கப்படுவதால் அதனுடைய மாமிசத்தை உண்டு வருகின்றோம் என்றக் கருத்தை பன்றியின் மாமிசத்தை உண்ணும் சமுதாயத்தவர்கள் கூறுகிறார்கள்.

மேலை நாடுகளில் அவ்வாறு தனித்தொழுவம் அமைக்கப்பட்டு உயர்தர தீவணங்களிட்டு வளர்க்கப்படுவதை நாமும் ஊடகங்கள் வாயிலாக கண்டு வருகிறோம் மறுக்கவில்லை அவ்வாறு வளர்க்கப்படுவதால் மட்டும் அதனுடைய இறைச்சியில் வளரும் புழுக்களை ஒழித்து ப்யூர் மட்டனாக மாற்ற முடிந்ததா ? முடியவில்லை ! முடியாது !

என்ன தான் கழுவி குளிப்பாட்டினாலும் காகம் கொக்காகாது உயிரினங்களின் மீது இறைவனுடைய இயற்கை அமைப்பை இதுவரை எவர் மாற்றி அமைத்து சாதனைப படைத்தார்கள் ? கூற முடியுமா ?

2. சமீபத்தில் மேல்படி மாமிசத்தில் இரண்டு பீஸ்களை ஒருத் தட்டிலிட்டு அதன் மேல் 'கோக்' பாணத்தை ஊற்றியதும் மாமிசத்தின் உள்ளே இருந்த புழுக்கள் நெளிந்து மேல் நோக்கி வருவதை வீடியோ மூலம் பதிவு செய்து மூன்றாம் கட்டமாக அதை உண்பவர்களே உலகுக்கு அறிவித்தள்ளார்கள்.

அதன் கிளிப்பை இத்துடன் இணைத்துள்ளோம்.

மனிதர்களின் கைகள் செய்தவற்றின் காரணமாக அவர்கள் செய்தவற்றில் சிலவற்றை அவர்களுக்கு சுவையாகச் செய்வதற்காகவும், அவர்கள் திருந்துவதற்காகவும் கடலிலும், தரையிலும் சீரழிவு மேலோங்கி விட்டது. திருக்குர்ஆன் 30:41.


மேற்கானும் வீடியோ கிளிப்பின் மூலம் மனித சமுதாயத்திற்கு இரண்டு படிப்பினைகள் இருப்பதை கவனிக்கலாம்.

· பன்றியின் மாமிசத்திற்குள் இருக்கும் உயிருக்கே உலை வைக்கும் புழுக்கள்.
· நாம் தினந்தோறும் பருகும் 'கோக்' வகை பாணங்களில் இருக்கும் அமிலத்தன்மையின் வீரியம்.

மேல்படி மாமிசத்தின் மீது ஊற்றும் கோக் பாணத்தின் அமிலத் தன்மையில் எந்தளவுக்கு வீரியம் இருந்தால் உள்ளுக்குள் இருக்கும் புழுவால் நிலை கொள்ள முடியாமல் மேல் நோக்கி வந்திருக்கும் ?

அந்தளவுக்கு அதிகப்பவர் உள்ள அமிலம் கலந்த பெப்சி, கோக் போன்ற மனித வர்க்கத்தை அழித்து பணம் பண்ணும் யூத தயாரிப்புகள் உடல் நலத்திற்கு பெருங்கேடு விளைவிக்கக் கூடியது என்பதை அதனுடைய அமிலத் தன்மைகளின் அளவைக் கண்டு பிடித்து ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதால் இந்தியாவில் தடை செய்யபபடவிருந்ததை மேல்படி யூத கம்பெனிகள் அப்போதைய அமைச்சர் சுஷ்மிதா சுவராஜை முறையாக கவனித்து தடை உத்தரவை வாபஸ் பெறச் செய்தார்கள்.

மேல்படி கோக் தொழிற்சாலையை கேரளாவில் அமைக்கவிருந்ததை கேரள மக்கள் முணைப்புடன் எதிர்த்து ஓட ஓட விரட்டி அத்தார்கள் என்பதை ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம்.

இஸ்ரேல், அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்காத வகையில் கோக் பாணங்களில் அமிலத்தன் அளவைக் குறைத்து தயாரிக்ப்படுவதையும் ஊடகங்களின் வாயிலாக அறிந்தோம்.

இதில் கொடுமை என்னவென்றால் இஸ்ரேல், அமெரிக்கா, ஐரோப்பாவை விட அரபுநாடுகளில் கோக் வகை பாணங்கள் விற்பனையில் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது என்றால் மிகையாகாது.

அவர்கள் செய்து வந்த தீய செயல்களை விட்டும் ஒருவரை ஒருவர் தடுக்காதிருந்தனர் அவர்கள் செய்தது மிகவும் கெட்டது. திருக்குர்ஆன் 5:79


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104

இதன் தொடர்ச்சியை அல்லாஹ் நாடினால் எழுதுவோம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்


0 comments:

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.




Animated avatar.



"இளையாங்குடி கல்லூரி தந்தை"



மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.








"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்கு







இளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்



உண்மை விளங்கும்.





.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP