- அறிமுகம்
- நுழையும் முன்
- துவக்கம்
- ஸலாவுத்தீன் வரலாறு 1
- ஸலாவுத்தீன் வரலாறு 2
- ஸலாவுத்தீன் வரலாறு 3
- ஸலாவுத்தீன் வரலாறு 4
- ஸலாவுத்தீன் வரலாறு 5
- ஸலாவுத்தீன் வரலாறு 6
- ஸலாவுத்தீன் வரலாறு 7
- ஸலாவுத்தீன் வரலாறு 8
- ஸலாவுத்தீன் வரலாறு 9
- ஸலாவுத்தின் வரலாறு 10
- ஸலாவுத்தீன் வரலாறு 11
- ஸலாவுத்தீன் வரலாறு 12
- ஸலாவுத்தீன் வரலாறு 13
- அடிமைகள் வரலாறு 1
- அடிமைகள் வரலாறு 2
- அடிமைகள் வரலாறு 3
- உமய்யாத்கள் வரலாறு 1
- உமய்யாத்கள் வரலாறு 2
- உமய்யாதகள் வரலாறு 3
- உமய்யாத்கள் வரலாறு 4
- அப்பாஸிட்கள் வரலாறு 1
- அப்பாஸிட்கள் வரலாறு 2
- அப்பாஸிட்கள் வரலாறு 3
- அப்பாஸிட்கள் வரலாறு 4
- மங்கோலியர்கள் வரலாறு 1
- மங்கோலியர்கள் வரலாறு 2
- மங்கோலியர்கள் வரலாறு 3
- மங்கோலியர்கள் வரலாறு 4
- மங்கோலியர்கள் வரலாறு 5
- மங்கோலியர்கள் வரலாறு 6
- செல்ஜுக்குகள் சரித்திரம் 1
- செல்ஜுக்குகள் சரித்திரம் 2
- செல்ஜுக்குகள் சரித்திரம் 3
- செல்ஜுக்குகள் சரித்திரம் 4
- செல்ஜுக்குகள் சரித்திரம் 5
- செல்ஜுக்குகள் சரித்திரம் 6
- செல்ஜுக்குகள் சரித்திரம் 7
- ஓட்டோமான்கள் வரலாறு 1
- ஓட்டோமான்கள் வரலாறு 2
- ஓட்டோமான்கள் வரலாறு 3
- ஓட்டோமான்கள் வரலாறு 4
- ஓட்டோமான்கள் வரலாறு 5
- ஓட்டோமான்கள் வரலாறு 6
- ஓட்டோமான்கள் வரலாறு 7
- ஓட்டோமான்கள் வரலாறு 8
- ஓட்டோமான்கள் வரலாறு 9
- ஓட்டோமான்கள் வரலாறு 10
- ஓட்டோமான்கள் வரலாறு 11
- மம்லுக்குகள் வரலாறு
கல்வி ஸ்தாபனங்களில்
>> Monday, August 31, 2009
அறிவுகொண்டு ஆய்ந்தறிவார் அறிவாரே!-
உண்மையைப் புரிவார் புரிந்தால் புவிமேலே-
ஏமாற்றி வாழ்வார் வீழ்வார் மண் மீதே.
1.கல்வி ஸ்தாபனங்களில் துணை விதிகளின் (BY LAW) முக்கியத்துவம்.
இச்செய்தியில் நம் இளையாங்குடி சாகிர் உசேன் கல்லூரிக்கு ஒரு படிப்பினை உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொண்டால் சரி.
2.கல்லூரி பேராசிரியர்களுக்கு கிடுகிடு சம்பள உயர்வு.
3.இல்லாத மாணவர்கள்.தனியார் பள்ளிகளில் மோசடி.
CLICK TO READ. DOUBLE CLICK ON THE PICTURE TO MAKE IT LARGE.
இச்செய்தியில் நம் இளையாங்குடி சாகிர் உசேன் கல்லூரிக்கு ஒரு படிப்பினை உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொண்டால் சரி.
1.கல்வி ஸ்தாபனங்களில் துணை விதிகளின் (BY LAW) முக்கியத்துவம். அமெரிக்கன் கல்லூரி நிர்வாகம். ஆட்சி மன்ற குழுவிடம் ஒப்படைக்க உத்தரவு.
இதன் மூலம் பேராசிரியர்களின் வேலைக்கும் "சம்திங்" கிடுகிடுகிடு என உயருமோ?
2.கல்லூரி பேராசிரியர்களுக்கு கிடுகிடு சம்பள உயர்வு.
3.இல்லாத மாணவர்கள்.தனியார் பள்ளிகளில் மோசடி.
தஃலீம் கிதாப் -- 'அமல்களின் சிறப்பு'கள் படிக்கலாமா?
>> Thursday, August 27, 2009
தஃலீம் கிதாப் -- 'அமல்களின் சிறப்பு'கள் படிக்கலாமா?
குர்ஆனை விட அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு பள்ளிவாயில்கள் தோறும் படிக்கப்படுகின்ற தஃலீம் தொகுப்பு தப்லீக் ஜமாஅத்தினருக்குக் கிடைத்த புதியவேதமாக ஆகிவிட்டது.
ஐயம்: தஃலீம் கிதாப் படிக்கலாமா?
தமிழில் மவ்லவீ நிஜாமுத்தீன் மன்பயீ மொழிபெயர்த்த அத்தொகுப்புக்குப் பெயர் 'அமல்களின் சிறப்புகள்'என்பதாகும். இந்த நூலைப் படிப்பது பற்றித்தான் நீங்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றீர்கள் என்று நம்புகிறோம்.
நூல்களைப் படிப்பதையும் உரைகளைக் கேட்பதையும் இஸ்லாம் தடைசெய்யவில்லை. ஆனால், செயல்பாட்டைப் பொருத்தவரை படிப்பதையும் கேட்பதையும் சிந்தித்துச் செயல்படுமாறு கட்டளையிடுகின்றது. நன்மை-தீமையைப் பிரித்தறிந்து செயல்படுதற்காகவே மனிதனுக்குப் பகுத்தறிவு வழங்கப் பட்டுள்ளது:
"... தங்கள் இறைவனுடைய வசனங்கள் மூலம் நினைவூட்டப் பட்டாலும் செவிடர்களைப்போல், (அகக்கண்) குருடர்களைப்போல் அவற்றின் மீது விழுந்துவிட மாட்டார்கள் (ஆழ்ந்து சிந்தித்துச் செயல் படுவார்கள்)" அல்-குர்ஆன் 25:73.
"சொல்லப் படுகின்ற(எல்லா)வற்றையும் செவியேற்று, அவற்றிலுள்ள அழகியவற்றை (மட்டும்) பின்பற்றும் அடியார்களுக்கு நல்வாழ்த்துச் சொல்வீராக! அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவது இத்தகையவர்களைத்தாம்; இவர்கள்தாம் பகுத்தறிவாளர்கள்" அல்-குர்ஆன் (39:18).
சத்தியத்தை, சத்தியம் என்றறிந்து பின்பற்றுவதற்கும் அசத்தியத்தை அசத்தியம் என்றறிந்து விலகி, அல்லாஹ் விரும்பும் பகுத்தறிவாளர்களாக நாம் செயல்படுவதற்கும் நம் அனைவர்க்கும் அல்லாஹ் அருள் செய்வானாக!
'அமல்களின் சிறப்புகள்' என்ற தொகுப்பில் உள்ள மனித இயல்புக்கு மாற்றமான, ஆதாரங்கள் இல்லாத, நம்பமுடியாத சில கதைகளின் சுருக்கங்களைத் தங்கள் சிந்தனைக்காக இங்குத் தருகிறோம்:
• கையில் காசில்லாமல் ஹஜ்ஜுக்குப் போனவருக்கு நபி (ஸல்) கப்ரிலிருந்து கைநீட்டிப் பணமுடிப்பு வழங்கியது (பக்கம் 925).
• கப்ரிலிருந்து கொண்டே நபி (ஸல்) ஒருவருக்குப் போர்வையைப் பரிசளித்தது (பக்கம் 944).
• பசியாளிக்கு நபி (ஸல்) கிச்சடியும் குழம்பும் கொடுத்தது (பக்கம் 945).
• கப்ரிலிருந்து கொண்டே நபி (ஸல்) ஒருவருக்கு ரொட்டி கொடுத்தது (பக்கம் 797).
• ஷாஹ் வலியுல்லாஹ்வுக்கு நெய்ச்சோறு ஒரு மரவை கொடுத்தது (பக்கம் 799).
• அல்லாஹ்வின் மீது காதல் கொண்டால் மரணம் கிடையாது (பக்கம் 657).
• தொழும்போது ஆப்பரேஷன் - 1 (பக்கம் 143).
• தொழும்போது ஆப்பரேஷன் - 2 (பக்கம் 144).
• பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவு முழுக்க நின்று தொழுது, அதிலேயே இறந்துபோகப் பந்தயம் (பக்கம் 43,44).
• இறந்த பிறகு கபுரில் தொழுத மய்யித் ஸாபித் அல் பன்னானி (பக்கம் 129, தொழுகையின் சிறப்பு-14).
• நாற்பது ஆண்டுகள் தூங்காத பெரியார் (பக்கம் 118, தொழுகையின் சிறப்பு-1).
• அறுபது ஆண்டுகளாக அழுது கொண்டே இருந்த பெரியார் (தொழுகையின் சிறப்பு-2).
• பதினைந்து ஆண்டுகள் படுக்காத பெரியார் (தொழுகையின் சிறப்பு-11).
• எழுபது ஆண்டுகள் இடைவிடாது தொழுத பெரியார் (தொழுகையின் சிறப்பு-15).
• அறுபது ஆண்டுகள் இஷாவுக்கு செய்த ஒளுவோடு ஃபஜ்ருத் தொழுத பெரியார் (தொழுகையின் சிறப்பு-17).
• நாற்பது ஆண்டுகள் இரவில் அழுது, பகலில் நோன்பு வைத்த பெரியார் (தொழுகையின் சிறப்பு-13).
• அரசராகப் பொறுப்பேற்றதால் மனைவியுடன் உறவு கொள்ள மறுத்த அரசர் (தொழுகையின் சிறப்பு-12).
• பதினைந்து நாட்களுக்கு ஒருதடவை மட்டுமே சாப்பிட்ட பெரியார் (தொழுகையின் சிறப்பு-7).
• நாற்பது ஆண்டுகள் இரவு முழுவதும் தொழுது, பகல் முழுதும் நோன்பிருந்தவர் (பக்கம் 132)
• தினமும் முன்னூறு ரக்கத்துக்கள் நஃபில் தொழுத இமாம் (பக்கம் 132)
• 130 வயதுவரை தினமும் இருநூறு ரக்கத்துக்கள் நஃபில் தொழுத பெரியார் (பக்கம் 86)
• ரமழான் மாதத் தொழுகையில் அறுபது தடவை குர்ஆன் ஒதி முத்த இமாம் (பக்கம் 132)
• ஐம்பது ஆண்டுகள் இஷாவையும் சுபுஹையும் ஒரே உளுவைக் கொண்டு தொழுத பெரியார் (பக்கம் 132)
• முப்பது/நாற்பது/ஐம்பது ஆண்டுகள் இஷாவுடைய உளுவைக் கொண்டு சுபுஹைத் தொழுத இமாம் (பக்கம் 132)
• ஒவ்வொரு நாளும் இருநூறு ரக்அத்கள் நஃபில் தொழுத இமாம் (பக்கம் 130).
• ஒவ்வொரு நாளும் ஆயிரம் ரக்அத்கள் நஃபில் தொழுத பெரியார் (பக்கம் 160).
• ஓர் இரவுக்கு ஒரு ருகூ; ஒர் இரவுக்கு ஒரு ஸஜ்தா செய்த பெரியார் (பக்கம் 161).
• நோன்பு துறக்கும்போது வயிறு நிறைய உண்ணக் கூடாது (பக்கம் 62).
• ஸஹரிலும் வயிறு நிறைய உண்ணக் கூடாது (பக்கம் 64).
• கடும் குளிரின்போது உடைகளைக் கழற்றி வைத்துக் கொள்ள வேண்டும் (பக்கம் 64).
• ஸஹருக்கும் இஃப்தாருக்கும் சேர்த்து ஒன்றரை ரொட்டி போதும் (பக்கம் 65).
• ஸஹருக்கும் இஃப்தாருக்கும் பால் கலவாத தேநீர் மட்டும் போதும் (பக்கம் 65).
• சந்திக்காமலேயே சப்பாணியை நடக்க வைத்தவர் (பக்கம் 124).
• தொழுகையில்லாமல் சொர்க்கத்தில் எப்படி காலம் தள்ளுவது? பெரியாரின் கவலை (பக்கம் 45)
இதுபோன்ற கதைகள் 'அமல்களின் சிறப்பு'களில் நிறைந்திருக்கின்றன. விரிவஞ்சி, சுருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறோம்.
மேற்காணும் கதைகளை எழுதிய ஸக்கரிய்யா ஸாஹிப் கூறுகிறார்:
"பெரியார்களுடைய இந்தப் பழக்க வழக்கங்களெல்லாம் மேலெழுந்த வாரியாகப் பார்த்துப் படிப்பதற்கு மட்டுமோ அல்லது அவர்களுக்குப் புகழ் வார்த்தைகள் கூறப்பட வேண்டுமென்பதற்காகவோ எழுதப்படுவதில்லை, எனினும் தன் முயற்சிக்குத் தக்கவாறு அவர்களைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே எழுதப்படுகின்றன. இயன்ற அளவு பூர்த்தியாக்குவதில் முயற்சி எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்"
மனித இயல்புக்கு அப்பாற்பட்ட கதைகளைப் பின்பற்றி வாழ்வது சாத்தியமா? கூடுமா? என்ற கேள்விகள் நம் முன் எழுகின்றன.
மேற்காண்பவை அனைத்தும் இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு எதிரானவை என்பது தெளிவான சிந்தனையோடு அவற்றைப் படித்துப் பார்த்தால் விளங்கி விடும்.
ஆதமின் மக்கள் அனைவரும் தவறு செய்யக் கூடியவர்களே. தவறைச் சுட்டிக் காட்டும்போது திருத்திக் கொள்வதே ஒரு முஸ்லிமுக்கு அழகு.
ஆனால், மார்க்கம் போதிப்பதாகச் சொல்லிக் கொள்ளும் தப்லீக்கிலும் நிலைமை தலைகீழ்தான்.
காட்டாக,
அஷ்ரஃப் அலீ தானவி என்பார் தப்லீக்கின் பிரபல பெரியார்களில் ஒருவர். அவரிடம் நிறைய சிஷ்யர்கள் பைஅத் (ஞான தீட்சை) பெற்றிருந்தனர். ஒருமுறை அவரின் சிஷ்யர்களில் ஒருவர் ஒரு கனவு கண்டார். கனவில் அவருக்கு சக்ராத் - இறுதி நேரம் நெருங்கி மரணத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார். அவ்வேளை கலிமாவை மொழிவதற்காக லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் றஸூலுல்லாஹ் என்று சொல்ல முயல்கிறார்.
ஆனால் அதற்குப் பதிலாக அவரது வாயிலிருந்து, "லாயிலாஹ இல்லல்லாஹ் அஷ்ரஃப் அலீ தானவி ரஸூலுல்லாஹ்" என்றுதான் வருகின்றது. இதனால் திடுக்கிட்டு விழித்த அவர் இது ஷிர்க்கான விடயமாயிற்றே என்று பதைபதைத்து மீண்டும் தூங்கியதும் மீண்டும் அதே கனவு. இப்படியே மூன்று தடவைகள் அதே கனவைக் கண்டதும் அச்சத்தினால் மறுதினம் விழித்ததும் நபியவர்களுக்கு ஸலவாத் சொல்ல முயன்றார். அதற்கும் "அல்லாஹும்ம ஸல்லி அலா நபிய்யினா அஷ்ரஃப் அலீ தானவி..." என்றுதான் நாவிலிருந்து வெளிப்பட்டது. உடனே அச்சத்துடன் பெரியார் அவர்களிடம் வந்து இக்கனவைத் தெரிவித்தார்.
அதற்கு அஷ்ரஃப் அலி தானவி அவர்கள் "இது பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. அது நல்ல கனவுதான். ஏனெனில், நானும் நபி அவர்களுடைய அந்தஸ்த்தில் உள்ளவன்தான் நீங்கள் அஷ்ரஃப் அலி தானவி றஸூலுல்லாஹ் என்று சொன்னால் அதுவும் சரிதான் அதனால் பயப்படத் தேவையில்லை" என்று சொன்னார்கள்.
இந்தப் பிரச்சினை அன்றைய உலமாக்களுக்கிடையில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. மேற்படி ஃபத்வா மார்க்கத்துக்கு முரணானது; குப்ரை ஏற்படுத்தக் கூடியது;
எனவே உடனடியாக அதனை வாபஸ் வாங்க வேண்டுமென அன்றைய அகில இந்திய உலமாக்கள் அமைப்பு கோரிக்கை விடுத்தது.
அதற்கு மறுப்பளித்து தப்லீக் ஜமாஅத்தின் மீதான குற்றச்சாட்டுகளும் பதில்களும் எனும் நூலில் மேற்படி அஷ்ரஃப் அலி தானவியின் பத்வா சரியானதே என ஸக்கரிய்யா ஸாஹிப் நியாயப்படுத்தி எழுதியுள்ளார் (தப்லீக் ஜமாஅத்தின் மீதான குற்றச்சாட்டுகளும் பதில்களும் பக்கம் 144-145).
தப்லீக் பெரியார்களுக்குப் புனித பிம்பத்தை உருவாக்குவதற்காகவும் பல கதைகள் வேறு சில நூல்கள் மூலம் புனையப்பட்டுள்ளன:
"இந்த தப்லீக்கின் அடிப்படை விதிமுறைகளை நான் எனது விருப்பப்படி உருவாக்க வில்லை. அது எனக்குக் கொடுக்கப்பட்டது. அவ்வாறு செய்யுமாறு எனக்குக் கட்டளையிடப்பட்டது" என்று தப்லீக்கின் அடிப்படைகளை வஹீ மாதிரி ஷேக் இல்யாஸ் கூறுகின்றார்.
இதற்கு விளக்கமாக மற்றொரு இடத்தில் அபுல் ஹஸன் அலி நத்வி, "அல்லாஹ்தான் இல்யாஸ் அவர்களுக்கு இந்த விடயத்தை உதிப்பாக்கி அவர்களது இதயத்தில் போட்டான்" என்கிறார். இவை இல்ஹாமாகவோ கனவிலோ அவர்களுக்குத் தெளிவு படுத்தப்பட்டனவாம். (தப்லீக்கே தஹ்ரீக், பக்கம் 57).
மிகப்பெரிய தப்லீக் பெரியார் ஒருவர் இருந்தார்கள். அவர்களிடம் கஷ்புடைய ஞானம் இருந்தது. அதன்மூலமாக அவர்கள் நபி (ஸல்)அவர்களின் முன்னிலையில் பிரசன்னமாகி உரையாடி மகிழ்வது வழக்கம்.
அவர்களிடத்தில் ஷேக் ஸக்கரிய்யா மௌலானா அவர்கள் ஒருமுறை வருகை தந்து, தான் ஒரு பயணம் செய்ய இருப்பதாகவும் அதற்காகத் தங்களிடத்தில் இஸ்திகாராத் தேடுவதற்காக வந்திருப்பதாகவும் தெரிவித்தார்கள்.
இதனைக் கேட்ட ஷேக் அவர்கள் 'ஜக்கரிய்யாவுடைய இதயத்தில் உதிப்பாகும் அனைத்து விடயங்களுமே மேலிடத்திலிருந்தே கிடைக்கின்றன. எனவே இந்தப் பயணத்தை விடவும் சிறந்த ஒரு காரியம் கிடையாது' என்றார்கள். (மஹ்பூபுல் ஆரிபீன் பக்கம் 52).
"ஃபனா எனும் (ஒருவகை மெய்மறந்த) நிலையில் நான் இருக்கும் போதெல்லாம் எந்த விடயத்தை முடிவு செய்வதாயினும் ஷேக் இம்தாதுல்லாஹ்விடம் ஆலோசித்தே செய்வது வழக்கம். பின்பு ஃபனா நிலையின் உயர் அந்தஸ்த்துக்கு வந்ததும் நபி (ஸல்) அவர்களைக் கண்டு ஆலோசித்தே முப்பது வருடங்களாக எந்தவித முடிவையும் எடுத்து வருகின்றேன் ..." என்று தப்லீக் பெரியார் அப்துர் ரஷீத் கன்கோயீ கூறுகிறார். (தீஸ் மஜாலிஸ், பக்கம் 311; மஹ்பூபுல் ஆரிபீன், பக்கம் 57).
"ஜக்கரிய்யா மௌலானா அவர்கள் ஒருமுறை தம் மஜ்லிஸில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது நபியவர்கள் அவ்விடத்தில் சற்று உயர்ந்த மஜ்லிஸில் உட்காந்திருந்தார்கள்
அவர்களுக்கு முன்னிலையில் அழகிய புத்தகங்கள் பல அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவை அனைத்துக்கும் மேலே ஹஜ்ஜின் சிறப்பு என்ற தஃலீம் புத்தகம் இருந்தது. அதற்குக் கீழ் ஸலவாத்தின் சிறப்பும், அதன்கீழ் ஹயாத்துஸ் ஸஹாபா கிதாபும் இருந்தன. அவ்வேளை அங்கே யூஸூப் பின்னூரி அவர்கள் வந்து நபியவர்களும் ஜக்கரிய்யா மௌலானாவும் பேசிக் கொண்டிருப்பதைக் செவியுற்று புன்னகைத்த வண்ணமே சென்றார்கள்" என்று
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கப்ரைச் சுட்டிக் காட்டி, "ஏற்றுக் கொள்ளத் தக்கவையும் ஒதுக்கிக் தள்ளத் தக்கவையும் எல்லா மனிதர்களது கூற்றுகளிலும் உள்ளன - இந்த மண்ணறையில் உள்ளவரின் கூற்றைத் தவிர" என்று இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
மேலே நாம் சுட்டிக் காட்டியுள்ளவை ஏற்றுக் கொள்ளத் தக்கவையா ஒதுக்கித் தள்ளத் தக்கவையா என்பதை இப்போது எளிதாக உங்களால் முடிவு செய்ய இயலும். அவை அனைத்தும் இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு எவ்வாறு முரண்படுகின்றன என்பதைக் கீழ்க்காணும் சுட்டிகளில் உள்ள விரிவான கட்டுரைகள் விளக்குகின்றன:
CLICK AND READ:-
தப்லீக் அன்றும் இன்றும்
http://www.chittarkottai.com/sufiyism/sufiyism8.htm
http://www.chittarkottai.com/sufiyism/sufiyism9.htm
http://www.chittarkottai.com/sufiyism/sufiyism10.htm
http://www.chittarkottai.com/sufiyism/sufiyism12.htm
http://www.chittarkottai.com/sufiyism/sufiyism14.htm
http://www.chittarkottai.com/sufiyism/sufiyism15.htm
http://www.chittarkottai.com/sufiyism/sufiyism16.htm
http://www.readislam.net/tableeq1.htm
http://www.readislam.net/tableeq2.htm
http://www.readislam.net/tableeq3.htm
http://www.readislam.net/tableeq4.htm
http://www.readislam.net/tableeq5.htm
http://www.readislam.net/tableeq6.htm
http://www.readislam.net/tableeq7.htm
http://www.readislam.net/tableeq8.htm
http://www.readislam.net/tableeq9.htm
http://www.readislam.net/tableeq10.htm
http://www.readislam.net/tableeq11.htm
சொல்லப் படுகின்ற(எல்லா)வற்றையும் செவியேற்று, அவற்றிலுள்ள அழகியவற்றை (மட்டும்) பின்பற்றும் அடியார்களுக்கு நல்வாழ்த்துச் சொல்வீராக! அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவது இத்தகையவர்களைத்தாம்; இவர்கள்தாம் பகுத்தறிவாளர்கள்" அல்-குர்ஆன் (39:18).
"சத்தியத்தை, சத்தியம் என்றறிந்து பின்பற்றுவதற்கும் அசத்தியத்தை அசத்தியம் என்றறிந்து விலகி, அல்லாஹ் விரும்பும் பகுத்தறிவாளர்களாக நாம் செயல்படுவதற்கும் நம் அனைவர்க்கும் அல்லாஹ் அருள் செய்வானாக! நன்றி: சத்தியமார்க்கம்.காம்
*******************************
இதையும் படிக்கவும்
தப்லீக் - 1
தப்லீக் - 1
>> Monday, August 24, 2009
தப்லீக்-- தஃலீம் தொகுப்பு. **UPDATED**
குர்ஆனை விட அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு பள்ளிவாயில்கள் தோறும் படிக்கப்படுகின்ற தஃலீம் தொகுப்பு தப்லீக் ஜமாஅத்தினருக்குக் கிடைத்த புதியவேதமாக ஆகிவிட்டது.
தப்லீக் ஜமாஅத்தில் உள்ள மிகப் பாரதூரமான விடயம் என்னவென்றால் இந்த ஜமாஅத்தில் உள்ள சகோதரர்கள் அருள்மறையாம் திருமறையை வாசிக்கத் தயங்குவதும் தாங்கள் மேதாவிகள் மெத்தப் படித்தவர்கள் நபிமார்களின் வாரிசுகள் என்று கருதும் மனிதர்களை அளவு கடந்து புகழ்வதும் அவர்கள் எந்த முகாந்திரமும் இல்லாமல் கூறும் மார்க்கத்தீர்ப்புக்களுக்கு கண்மூடித்தனமாக கிளிப்பிள்ளை போல் தலையசைப்பதுமாகும்.
இரண்டு முழங்களுக்கும் அதிகமாக ஆடையணிந்து ஒரு சில சுன்னாக்களையும் நடைமுறைப்படுத்தி விட்டால் நாம் தூதரை மதித்து விட்டோம் என நம்பிக் கொண்டிருக்கின்றனர்.
தப்லீக் ஜமாஅத்தில் நல்ல சிந்தனையாளர்களும் உண்மையை அறிய விரும்புபவர்களும் கணிசமாக இருக்கிறார்கள் என்று நாம் நம்புவதால் தஃலீம் தொகுப்பில் காணப்படுகின்ற அபத்தங்களையும் பொய்களையும் கற்பனைக் கதைகளையும் அடையாளம் காட்ட விரும்புகின்றோம்.
தொழுகையின் சிறப்பு, ஸதகாவில் சிறப்பு, ரமழானின் சிறப்பு என்றெல்லாம் பல்வேறு தலைப்புகளின் கீழ் தொகுக்கப்பட்ட இவரது நூலில் மிகவும் தந்திரமாக எவருக்கும் சந்தேகம் வராத வகையில் நச்சுக்கருத்துகள் பல புகுத்தப்பட்டுள்ளன.
ஸகரிய்யா சாஹிப் முதலில் சில குர்ஆன் வசனங்களை எழுதுவார். அடுத்து சில ஹதீஸ்களை எழுதுவார். இவர் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தான் இதை எழுதியுள்ளார் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்துவார். அதன் பிறகு சிறப்புகள் என்ற பெயரில் தனது சொந்தச் சரக்குகளை விற்க ஆரம்பித்து விடுவார்.
ஆரம்பத்தில் உள்ள சில பக்கங்களில் இவர் மக்கள் உள்ளங்களில் நல்ல இடத்தைப் பெற்றுவிடுவதால் அடுத்தடுத்து இவர் அளக்கும் கப்ஸாக்களை பாமர உள்ளங்கள் கண்டு கொள்வதில்லை எனவே தான் தஃலீம் தொகுப்புகளில் மலிந்துள்ள அபத்தங்களை நாம் இனம் காட்ட வேண்டியுள்ளது.
சிந்தனையாளர்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் ஒரு சில அபத்தங்களை மட்டும்தான் இனம் காட்டுகிறோம்.
நல்ல நோக்கத்தில் தப்லீக் இயக்கத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர்கள் இந்தக் கற்பனைத் தொகுப்பை தூக்கி எறிந்தால் வெற்றியடைவார்கள்.
தப்லீக் ஜமாஅத்தில் நல்ல சிந்தனையாளர்களும் உண்மையை அறிய விரும்புபவர்களும் கணிசமாக இருக்கிறார்கள் என்று நாம் நம்புவதால் தஃலீம் தொகுப்பில் காணப்படுகின்ற அபத்தங்களையும் பொய்களையும் கற்பனைக் கதைகளையும் அடையாளம் காட்ட விரும்புகின்றோம்.
பயபக்தியுடன் இந்த கப்ஸாக்கள் பள்ளிவாசல்களில் வைத்துப் படிக்கப்பட்டு வருகின்றன. தஃலீம் தொகுப்பை தங்களின் வேதப்புத்தகமாகக் கொண்டாடுவோர் இதை விளக்குவார்களா?
முஸ்லிம்களைப் பண்டார சன்னிதிகளாகவும், துறவிகளாகவும் ஆக்கி அவர்களை முடக்குவதற்காகவே இப்படிபட்ட கதைகளை பொறுக்கி எடுத்து எழுதியுள்ளாரோ என்று என்னத் தோன்றுகிறது அல்லவா?
இறந்தவர்கள் பெயரால் எதை வேண்டுமானாலும் கூறலாம் என்ற அசட்டுத் துணிவில் மார்க்கத்துடன் விளையாடிப் பார்க்கிறது இந்த தஃலீம் தொகுப்பு.
பல்வேறு கப்ஸாக்களை தப்லீக்கின் தஃலீம் தொகுப்பில் நாம் காணமுடிகிறது.
கப்ரில் ஒளி கிடைத்தது என்று கூறுவதென்றால் இவர் செத்துப் பிழைத்து இதைக் கூறினாரா?
கப்ரில் ஒளி கிடைத்ததை இவர் வேறு எந்த வழியில் அறிந்து கொண்டார்? தப்லீக் அறிஞர்கள் விளக்குவார்கள்?
ஏட்டில் எழுதப்பட்டு விட்டால், நம்பித் தொலைக்க வேண்டும் என்ற மனப்பான்மை மக்களிடம் நிலவுவதால் இவ்வாறெல்லாம் மக்களில் பலர் சிந்திப்பதில்லை. குண்டாந்தடியைத் தூக்கிக் கொண்டு கொசு பறக்கிறது என்று கூறினாலும் ஆமாம் என்று தலையாட்டுபவர்களாக மக்கள் இருப்பதால் ஸகரிய்யா சாஹிபுக்கு இந்தக் கதைகளை மார்க்கம் என்ற பெயரால் வியாபாரம் செய்ய முடிகிறது.
நன்மையை ஏவி தீமையைத் தடுக்க வேண்டும் என்று அடிக்கடி போதனை செய்யும் தப்லீக் ஜமாஅத்தினர் எப்படி இதை ஜீரணிக்கிறார்கள் என்பது தான் நமக்கு ஆச்சரியமாக உள்ளது.
நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதென்றால் சமுதாயத்தில் கலந்து வாழ்வதன் மூலமே இது சாத்தியமாகும்.
திருக்குர்ஆனிலும், நபிவழியிலும் அனுமதி உண்டா இல்லையா என்பதைப் பற்றியெல்லாம் கடுகளவும் அக்கறை கொள்ளாமல் தனி நபர்களை அளவுக்கதிகமாக உயர்த்தும் வகையில் அமைந்துள்ள மற்றொரு கதையைப் பாருங்கள்.
முகவரியில்லாத ஒருவர் பகலெல்லாம் நோன்பு வைத்து இரவெல்லாம் நின்று வணங்கியதாகக் கூறப்படுகின்றது. நல்லடியார்கள் என்பதற்கு இதுவே அளவு கோலாகவும் அப்பாவி முஸ்லிம்கள் நம்ப வைக்கப்பட்டுள்ளனர்.
ஷைகுமார்கள் என்ற போர்வையில் முரீதுகளை ஏமாற்றும் எண்ணம் படைத்தவர்கள் தான் இதுபோன்ற நம்பிக்கையை ஏற்படுத்தி மக்களை வழிகெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் முரீதுகளின் செயல்கள் தங்களுக்கு எடுத்துக்காட்டப்படும் என்று பயமுறுத்தி மக்களை அடிமைப்படுத்தவே இது போன்ற கதைகள்.
குர்ஆனும், நபிவழிக்கும் முரணான - தப்லீகின் ஸ்தாபகர் காலத்திற்குப் பின்னர் உள்ளங்களால் தயாரிக்கப்பட்ட இந்த நூலை தப்லீக் ஜமாஅத்தினரும் பொது மக்களும் புறக்கணிப்பார்கள் என்று நம்புவோமாக!!
CLICK AND READ
தஃலீம் கிதாப் -- 'அமல்களின் சிறப்பு'கள் படிக்கலாமா?
தொழுகையா? சொர்க்கமா?
பாவங்களைப் பார்த்த பெரியார்
பணக்காரராகும் வழி என்ன?
சொர்க்க்தில் தொழுகையா?
பிறர் மெச்சுவதற்காக வணங்குதல்
இருநூறு ரக்அத்கள் தொழுத பெரியவர்
மலஜலம் கழிக்காத பெரியார்
கடமை மறந்த கூலிக்காரர்
மண்ணறை நெருப்பைக் கண்ட பெரியார்
கப்ரில் தொழுத பெரியார்
இரவில் உறங்காத பெரியார்கள்
இளையான்குடி கல்வி நிறுவனங்கள்.
>> Monday, August 17, 2009
1. இளை.டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி சிறுபான்மை (MINORITY) அந்தஸ்து பெற்றுள்ளதா ? UPDATED 20.09.09
2. ஐ.டி.ஐ. களில் அரங்கேறும் அவலங்கள்.
zulfi said... August 16, 2009 11:59 AM …
இளையான்குடி முஸ்லிம்களே, நீங்கள் அதிகம் விரும்பும் உங்களுடைய வியாபாரம்,சொத்து மற்றும் குடும்பத்தினருக்கு எதுவும் ஆகிவிடும் என்று அஞ்சுகிறீர்களா?........ நூறு வயது வரை கோழைகளாக வாழ்ந்து எதை சாதிக்க போகிறீர்கள். .......???அநியாயத்திற்க்கு எதிராக குரல் கொடுப்பதை எது தடுத்தது?
1. இளை.டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி சிறுபான்மை (MINORITY) அந்தஸ்து பெற்றுள்ளதா?
இளையான்குடி முஸ்லிம்களே, நீங்கள் அதிகம் விரும்பும் உங்களுடைய வியாபாரம்,சொத்து மற்றும் குடும்பத்தினருக்கு எதுவும் ஆகிவிடும் என்று அஞ்சுகிறீர்களா?
நமது கல்லூரிக்கு சிறுபான்மை தகுதி இல்லையா? என்ன கொடுமைங்க.
இந்திய அரசாங்கத்தால் சிறுபான்மையினருக்கு ஒரு சில உரிமைகளே தரப்பட்டுள்ளன. அதையும் நாம் போராடி பெறத்தவறினால்,பிறகு நமக்குத் தரப்படாத உரிமைகளை எப்படி பெற போகிறோம்.
தன் இரும்புபிடிக்குள் கல்லூரின் நிர்வாகம் இருக்க வேண்டும், தன்னைச் சார்ந்தவர்களுக்கு பதவிகள் தரவேண்டும், தன்னை எதிர்த்தவர்களை இருக்கும் இடம் தெரியாமல் செய்து விட வேண்டும் என்பன போன்ற குணங்களை உடையவர்கள் அட்சி செய்ததால் என்னவோ, நமது கல்லூரி அது தன் வளர்ச்சியை பெறாமலும்,அது தன் உரிமை இழந்தும் உள்ளது என்று நான் சொல்லி பிறர்க்கு தெரியவேண்டிய அவசியம்யில்லை.
சுயநல விரும்பிகள் தலைமை பதவிக்கு வந்தால் அவர்களை சார்ந்து இருக்கும் சமுதாயமும்,நிர்வாகமும் சீர்கெட்டுபோகும் என்பதற்க்கு உதாரணம் இன்றைய தமிழக முஸ்லிகள்.
கண்ணியம் மிகு காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்கள் காலத்தில்,தி.மு.கவினர் 40 இடங்களை முஸ்லிம் லீக்குக்கு ஒதுக்கினர். சமுதாய சிந்தனையாளர் கண்ணியம் மிகு காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்களைப்பற்றி ஒரு வரலாற்று உண்மை சம்பவம், ஒரு முறை அன்றை முதல்வராக இருந்த அண்ணா துரை அவர்கள் காயிதே மில்லத் அவர்களை சந்திக்க அவருடைய விட்டிற்க்கு சென்றுருக்கிறார்.
அவர் எதிர்பார்த்ததுபோல் அல்லாமல் காயிதே மில்லத் அவர்களின் வீடு மிகவும் சிறியதாக தான் இருந்துருக்கிறது. மேலும் உள்ளே சென்றவருக்கு அதிர்ச்சி,ஒரே ஒரு நாற்க்காலி தான் இருந்துருக்கிறது அதற்க்கும் இரண்டு கால்கள் தான், மீதி இரண்டு கால்களுக்கு சுவரை ஆதாரமாக கொண்டு இருந்துருக்கிறது.
கண்ணியம் மிகு காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்களை போன்ற முஸ்லிம் தலைவர்களை தமிழகத்தில் இன்று காண இயலாது.
அவர்களுக்கு பின் முஸ்லிம் லீக்கின் தலைவர்களாக வந்தவர்கள் தங்களுடைய சுயநலத்திற்க்காக முஸ்லிம் சமுதாயத்தை அடமானம் வைத்து ஒரு சில இடங்களை பெற்று பதவி சுகம் அனுபவித்தனர்.
இப்பொழுது ஒன்று அல்லது இரண்டு இடங்களை பெற்றாலும் கூட தங்களுடைய கட்சி சின்னத்தில் தேர்தலில் நிற்க்க இயலாமல் தங்களுடைய கூட்டனியின் கட்சியின் சின்னத்திலே நிற்க்கும் அவலநிலைக்கு வந்துவிட்டனர்.
நமது கல்லூரியின் நிலைமையும் இப்படி தான் சென்று கொண்டிருக்கிறதோ என்னவோ?
அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே அஞ்ச வேண்டிய முஸ்லிம் சமுதாயம்,இன்று பணம் படைத்தவர்களையும்,ஆட்சியாளர்களையும்,ஃபாசிஸ்டுகளை பார்த்து அஞ்சுகின்றனர்.
ரசூல்(ஸல்) அவர்களும்,சகாபக்களும் அவ்வாறு அஞ்சி இருந்தால் இஸ்லாம் இன்று உலகம் எங்கும் பரவியிருக்காது.
இளையான்குடி முஸ்லிம்களே, நீங்கள் அதிகம் விரும்பும் உங்களுடைய வியாபாரம்,சொத்து மற்றும் குடும்பத்தினருக்கு எதுவும் ஆகிவிடும் என்று அஞ்சுகிறீர்களா?
அநியாயத்திற்க்கு எதிராக குரல் கொடுப்பதை எது தடுத்தது?
நான் சொல்லும் அநியாயம் இளையான்குடியில் நடப்பது மட்டும் அல்ல இன்று இந்தியா அளவில் உலக அளவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் அநியாயத்தையும் சேர்த்து தான்.
நூறு வயது வரை கோழைகளாக வாழ்ந்து எதை சாதிக்க போகிறீர்கள்.
*****************************************************************
மேற்கண்ட கருத்தை ஜனாப் முஹம்மது ஸுல்ஃபிகார் (ZULFI) இந்த பதிவுக்காக
க்ளிக் செய்து படிக்கவும்.
இளை.டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி சிறுபான்மை (MINORITY) அந்தஸ்து பெற்றுள்ளதா ?
க்ளிக் செய்து படிக்கவும்.
2. ஐ.டி.ஐ. களில் அரங்கேறும் அவலங்கள்.
ஐ.டி.ஐ. களில் அரங்கேறும் அவலங்கள்.
திருத்த வேண்டிய கடமை யாருக்கு?
>> Saturday, August 1, 2009
இளையாங்குடியில் நடக்கும் வேதனை தரும் நிகழ்வுகள்.BY "ILAYANGUDI ISLAMIC SOCIALISM FORUM",
சுனாமி! இது அலையல்ல... ஆட்கொல்லும் போதை!!,நெய்னாபிள்ளை அப்துல் ரஹிம்,.
இளையான்குடி என்ற பெயருக்கு ஏற்றாற்போல் என்றும் இளமையுடன், மக்களின் மகிழ்ச்சியுடன் வாழ மக்களில் ஒருவனாக இதை எழுதுகிறேன்.
ஏன் இந்த பிறப்பெடுத்தோம் என்று பறவையினமும், விலங்கினமும் வருத்தப்பட்டு இவ்வூர் மனிதப்பிறப்பெடுக்க தவறிழைத்தோமோ? என்று எண்ணிக் கொண்டிருக்கிறது. ஆனால் இன்று பறவையினமே தென்படுவதில்லை இளையாண்குடியில் பள்ளிய்ல வசிக்கும் புறாக் கூட்டங்களே இல்லையென்றாகி விட்டது.
தங்சாவூர், திருநெல்வேலி ஜில்லாவிலிருந்து வந்ததால் என்னவோ அம்மண்ணின் வீரத்துடன் மற்றவர்கள் தவறிழைத்தால் தண்டிக்கும் வகையிலும், எண்ணி வருந்துகையிலே அதை மன்னிக்ககூடிய பெருமையுடன் வாழ்ந்திருந்தனர்.
கால்காசு நேறாத செயலானாதும் அதை கண்ணியத்துடன் சிரத்தை எடுத்து ஊரின் பெருமையை நிலைநாட்டும் வகையிலும் செயல்படுத்தியவர் வாழ்ந்த காலம் போய், சொந்த விருப்பு வெறுப்புகளால் ஒருவருடன் ஒருவர் சேர்ந்து செயல்படாமல் ஊரில் வேற்றுமையை உண்டாக்கி கொண்டிருக்கின்றனர்.
ஊரில் வசிக்கும் மக்களிலே முன்னர் ஒரு வீடு தள்ளியிருருந்தாலும், ஓராயிரம் வீடு தள்ளியிருந்தாலும் மச்சான், மாப்ளே, மருமவனே என்று அழைத்த காலம் போய் ஒருவரக்கொருவர் முகம் கொடுத்து பேச மறுக்கும் காலம் ஆகிவிட்டது. சொந்த பந்தங்களின் முகம் தெரியாமல் வைபவங்களுக்கு அழைக்கவில்லை எனில் அதுவும் தெரியாமல் போகும்! காரணம் என்னவென்று அறிகையிலே சமூக ஒழுக்ககேடுகளும், இறை நம்பிக்கையின் பலகீனத்தால் தான்!
ஆரம்பகாலம்
உழைத்தால் உயர்வு உண்டு என்று எண்ணி கலனியிலே உழைத்து கட்டை உண்டியிலே வியாபாரம் செய்தும் தன்மானத்துடன் பிறர் மானம் காக்க உதவிகள் செய்து வந்த மாண்பு எங்கே? காலம் உருண்டோடியது.
வியாபாரம், தொழில், தொழுகை இல்லவிடினனும் சமூக ஒற்றுமைக்கு வழிகாணும் அமைதி, ஊரின் நலம் என்று முன்னோர்கள் செய்த காரியங்கள் இன்றும் நிமிர்ந்து நிற்கின்றன அவர்களின் பெயர்களின் வாயிலாக!!
ஆனால் இன்று?
கழனியிலே காவலுக்கு நின்றும், சிலம்பு, கு°தியிலே ஒருவனை வீழ்த்தவல்ல பெருமையுடனும், கால்பந்திலே கரை கண்ட பெயருடனும் இருந்த இளைஞர் படை இப்போது எங்கே? கேலிபேச்சுகளும், ஆராவர சேட்டைகளும், மதி மயங்கிய செயல்களும், நபி வழி இல்லா வாழ்க்கையும், முடமான படிப்பு வளர்ச்சியும் அவனை எங்கு கொண்டு செல்லும் . . . ? ? ? ? ?
பெற்றோரின் கவனிப்பின்றி விளையாட்டாய் திரிந்து எல்லாம் அவனை திருப்பி தாக்குகையிலே, அவனின் தன்னம்பிக்கை, செயல்பாடுகள் முடங்கி போகின்றன. இளைஞன் எதிலும் நாட்டமில்லா வாழ்க்கை வாழ்ந்து, ஏதோ சம்பாரித்தோம், அவ்வளவு தான் வாழ்க்கை என்று இருந்துவிடுகின்றான்.
சுயநலம் தலைதூக்குகிறது. ஊரின் அக்கரையில் கவனம் செலுத்துவதில்லை. எதிலும் தைரியத்துடன் இறங்கும் வேலையிலே முடமாகி விடுகிறான். ஒரு நாயைக்கண்டு பயந்தோடும் முடமாக இளைஞன் அப்போது உண்டா ? ? ?
விளையாட்டு புத்தியும், வாலிப சேட்டைகளும், பெண் பித்தமும் அவனை இருளைபோல கவ்வியது எதனால்? ஏன்? பொது சிந்தனை இல்லை, ஒழுக்க மாண்புகள் எங்கே? பிறரை போலவே இருந்து விட்டால் அவன் தனித்தன்மை புலப்படுவது எப்போது? இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாது இருந்தால் நளை அசிங்க செயல்கள் நடைபெறாது என்பதற்கு என்ன உத்திரவாதம்?
சைத்தான் தான் இஞ்ச் இடைவெளி போதும் என்கிறானே? ? குடும்பசூழல், பொறுப்பின்மை, மார்க்க சிந்தனை போன்ற கட்டமைப்புகள் குலைய நம் சந்ததிகளை நாம் காரணமாக்கி விட துணிவோமா? கண்ணிய வான்களா இருந்தால்?
ஏதோ நாம், வாழ்க்கைக்கு ஒரு சம்பாத்தியம், திருமணம், குடும்பம் என்று நம் சுயநலத்திற்கு வாழ்ந்து விட்டு, அந்த சந்ததிகளுக்கும் அதனை சொல்லி கொடுத்து இயந்திர தனமாக வாழ்கிறோம். மார்க்கம், பொதுநலம், ஒழுக்கம் என்ற பொது சிந்தனைகளை குழந்தைகளுக்கு வழங்குகிறோமா?
ஒருவரிடம் கேட்கிறேன் குறிப்பிட்ட இந்த நபர் கடன் வாங்கி இருக்கின்றாரா என்ற ஆம் வாங்கியிருக்கின்றார். வாங்கிய அந்த நபரின் அத்தா கடன் பத்திரத்தில் ஜாமீன் கையெழுத்து போட்டு இருக்கிறார் என்று வெளிப்படையாக கூறினார். அவரை கவனித்ததில் ஒரு பதட்டம், எங்கு தெரிந்து விடுமோ? என்று இப்படியாக ஒரு சந்ததிகளை அல்லவா கெடுத்து கொண்டிருக்கின்றோம். வட்டிக்கு விட்டதை ஆதரிக்க அல்லவா சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.
இவைபோன்ற காயிங்களால் தான் நம் ஊரின் பெயர் தரம் தாழ்ந்து கொண்டிருக்கிறது. மேல்மட்ட அதிகார துஷ்பிரயோகத்தை மட்டும் பாராமல், ஆட்சி அதிகாரம் கெட்டு கொண்டிருக்கிறது என்று ஒருவருக் கொருவர் ஈகோ பார்த்து கொண்டிருக்காமல் ஒரு ஊரின் சமூக ஒற்றுமைக்கு, பாடுபட பொது சிந்தனைகள் வளர வேண்டும்.
விஜயன் தெருவில் வசிக்கும் நபர், என் சொந்தத்தில் ஒருவருக்கு வட்டிக்கு விட்டார் என்று கேள்விபட்டிருக்கிறேன். இதனை கொடுக்கும் நபர் இந்த மார்க்கத்தில் செயல்பட்டு கொண்டு தான் ஒரு இ°லாமியர் என்று கூற கேட்கையிலே ஒரு ஒழுக்க மின்மை, புரிதல் இன்மை, சுயநலம் அல்லவா தம்பட்டம் அடிக்கிறது.
மேலும் தேவூரணி கரையோரம் ஒரு நபரின் இல்லத்தில் xxxxx என்ற நபர் பெண்களை வைத்து விபசாரம் நடந்து வந்தது என்று அறிந்து காவல்துறை நடத்திவந்த நபரை கைது செய்து வைத்திருந்தனர். இப்போது அவர் பெயிலில் வந்துவிட்டார். இவர் ஒரு இ°லாமியர் என்று எண்ணுகையிலே மார்க்க விளக்கங்கள் பொது சிந்தனைகள் ஒருவனின் மனதில் வேரிடவேண்டும் என்று ஆவல் கொள்கிறேன்.
இ.மே. பள்ளி வாசலிலே துப்புரவு வேலைபார்க்கும் ஒருவர் மார்க்கத்திற்கு விரோதமாக, பள்ளிவாசல் வரும் சிறுவர், இளைஞர்களிடம் தப்பாக நடக்க முயற்சிக்கிறார் என்று இளைஞர்கள் வாயிலாக கேள்விபட்டு, பள்ளிவாசலில் அனாச்சாரம் செய்யும் நபரின் கைகளே அப்பள்ளிவாசலை துடைத்து கொண்டிருக்கும் என்று எண்ணுகையிலே எங்கே சென்று கொண்டிருக்கிறோம்.
நூர்தீன் தெருவிலே வசிக்கும் ஒரு நபர் செட்டியார் நபர்களிடம் பணம் கொடுத்து வட்டி வடுகிறார் என்று கேள்விபட்டு, அவருடன் பழகும் நபர்களுக்கு ஏன் இதைக் கேட்க திராணி இல்லை என்று எண்ணத்தோன்றுகிறது. இ.மே.நி. பள்ளியிலே வேலை பார்க்கும் சாலையூரை சேர்ந்த நபரும், இளையான்குடி சேர்ந்த நபரும் சிறுவர்களிடம் தப்பான முறையில் நடக்க முயற்சிக்கின்றனர் என்று கேள்விபடும் பொழுது கல்வி நிலையமா? அது என்று எண்ணத்தோன்றுகிறது.
ஹமிதியா உயர்நிலைப் பள்ளியிலே கடை வைத்திருக்கும் நபர் பல நபர்களுடன் சேர்ந்து பள்ளி முடியும் வேளையிலே, இரவில் காம களியாட்டங்களை நடத்தி கொண்டிரக்கின்றார் என்ற செய்தி சில இளைஞர்களிடம் கேட்டறிந்து அவர்களின் வாயிலாக துப்பறிந்து வெளியிடும் செய்தி இதுவாகும்.
முதலியார் தெருவிலே வசிக்கும் ஒரு இளைஞர் செல் பேச்சினால் பெண் மோகத்தால் முறை கூடா நட்பு கொண்டு பிறகு ஊர்விட்டு சென்று இப்போது திரும்பிவந்துள்ளார்.
இவையெல்லாம் நபர்களின் மேல்கொண்ட வெறுப்பின் உமிழ்வாக என்ன வேண்டாம்.
கண்டும், கேட்டும் அறிந்த செய்தி. இதுபோன்ற காரியங்கள் நடப்பதற்கு என்ன காரணம் என்று அறிகையில் பல சமூக சீர்கேடுகள் தான் காரணம். முறையான மார்க்க போதனைகள் இல்லாமை, குடும்ப வேற்றுமைகள், சைத்தானின் சூழ்ச்சிக்கு இறையாகிறோம் என்றுஎன்னாமல் இதுபோன்ற காரியங்கள் நடைபெறுகின்றன.
தவறுகள் சுட்டிக்காட்டப்பட வேண்டும். மார்க்க விளக்கம் முழுமையாக கிடைக்கவேண்டும். இந்த சீர்கேடுகளை இப்பொழுதே வெளிப்படுத்தவில்லை எனில் சந்ததி அழிவிற்கும், சீர்கேட்டிற்கும் இட்டு செல்லும். பிறகு ஏன் சுனாமி வியாபாரம், முறைகேடான சமூக உறவுகள் பெருகாது? வேறுபாடுகள் தோன்றாது?
செய்திகள், தகவல்கள் கிடைத்துக் கொண்டிருக்கும் உண்மைகள் வெளிப்படுத்த ஆயத்தமாகி இருக்கிறோம்.---BY "ILAYANGUDI ISLAMIC SOCIALISM FORUM",
******************************
நெய்னாபிள்ளை அப்துல் ரஹிம், சிங்கப்பூர்.
க்ளிக் செய்து படிக்கவும்.
சுனாமி! இது அலையல்ல... ஆட்கொல்லும் போதை!!
நன்றி பாச உணர்ச்சி பிள்ளைகளிடம் உண்டா?
தாய் தந்தையரிடத்திலே நன்றி பாசம் காட்டக்கூடிய உணர்ச்சி பிள்ளைகளிடம் உண்டா?
தாய், தந்தையரிடத்திலே நன்றி காட்டக் கூடிய பாச உணர்ச்சி இன்றைக்குக் குடும்பங்களிலே உண்டா?
நாம் பணம் சம்பாதிக்கலாம். ஆனால் அந்தப் பணம் நமக்காக மட்டுமல்ல; பணத்தை நமக்கு மட்டுமே வைத்திருந்தால் என்ன ஆகும்? கவலைதானிருக்கும்
தன்பெண்டு, தன் பிள்ளை, என்று ஒரு குறுகிய வட்டத்திலே நிற்கக் கூடாது. தொல்லுலக மக்கள் எல்லாம் நம்மக்கள் என்று சொல்லி எங்கே சங்கடப்படுகிறார்களோ அவர்களுடைய துயரத்தைப் போக்க வேண்டும்.
. உங்களிலே மிகப் பெரும்பாலோர் அறிவீர்கள். நாம் ஒருவரைப் பார்த்து இரங்குவது என்பது வேறு. ஆனால் அவர்களுடைய நிலையிலேயே நம்மை ஆளாக்கிக் கொள்வது, தக்க-வைத்துக்கொள்வது என்பது வேறு.
SYMPATHY சிம்பதி- EMPATHY.எம்பதி
உதவி செய்வதிலே கூட இந்த இரண்டிற்கும் வேறுபாடு இருக்கிறது. சிம்பதி என்று சொல்லும்பொழுது அதற்கு என்ன பொருள்? நாம் அவரைப் பார்த்து பரிதாபப்படுகிறோம் என்று அர்த்தம், அதற்குப் பெயர் சிம்பதி.
ஆனால், அதைவிட சிறந்த சொல் ஒன்று உண்டு. ஆங்கிலத்திலே எம்பதி என்ற சொல். சிம்பதி என்ற சொல்லுக்கும் எம்பதி என்ற சொல்லுக்கும் என்ன வேறுபாடு என்றால், சிம்பதி என்பது வெறும் இரங்குதல். பரிதாபப்படுதல் அய்யோ அவர் இப்படி இருக்கிறாரே என்று நினைப்பது, அது ஓரளவு தான்.
ஆனால், எம்பதி என்ற சொல் இருக்கிறதே_ துன்பப்பட்டவர் இடத்தில் அவராகவே மாறி, அவரிடத்தில் இருந்து நம்மை வைத்துப் பார்ப்பது-.
.நாம் அந்த இடத்திலே இருந்தால் நமக்கு அப்படி ஏற்பட்டிருந்தால், என்ன ஆகியிருக்கும்? ஆகவே நாம் உதவ வேண்டாமா? என்று நினைக்கின்ற பொழுது தான் அவன் உயர்ந்த மனிதனாகிறான். சிறந்த மனிதனாகிறான். எப்பொழுதும் மற்றவர்களாலே மதிக்கக் கூடிய மனிதன் ஆகின்றான்.
எதை வைத்து மனிதனை அளக்க வேண்டும்?
மனிதர்கள் எதை வைத்து அளக்கப்பட வேண்டும் என்று சொன்னால், பணத்தால் அல்ல; அல்லது பட்டத்தால் அல்ல; அல்லது அவர்களுடைய பெருமைகளால் அல்ல. அவர்களுடைய தொண்டினால் மனிதர்கள் அளக்கப்பட வேண்டும். தெண்டினால் அவர்கள் எவ்வளவு உயர்ந்திருக்கிறார்களோ, அந்த அளவிற்குத் தான் அவர்கள் சிறந்த மனிதர்கள். மாமனிதர்களாக இருக்க முடியும்.
புகழ்வேட்டை என்பது வரக்கூடாது. புகழ்_-தானே இவரை அடையாளம் கண்டு வரவேண்டுமே தவிர, புகழை நோக்கி நாம் போகக் கூடாது. அந்த வகையிலே ஒரு கருத்து மனிதனுக்கும், மிருகத்திற்கும் இருக்கின்ற வேறுபாடு என்ன? மனித குலம் பெற்ற பயன் என்ன?
எல்லோருக்கும் பகுத்தறிவு இருக்கிறது. ஆறாவது அறிவு இருக்கிறது. வளர்ச்சி மனிதனுக்கு ஓங்கிக்கொண்டேயிருக்கிறது.
நேற்றைய விஞ்ஞானம் இன்றைக்குப் பழையதாகப் போய்விட்டது. இன்றைக்கு மின்னணுவியல் யுகம். எனவே தான் இதை எல்லாம் நினைத்துப் பார்க்கிற பொழுது இந்த வளர்ச்சியினாலே மனித குலம் பெற்ற பயன் என்ன? முன்னேற்றம் என்ன? ஆக்கரீதியான பயன் என்ன? என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.
மனித சுபாவம் என்னவென்று பார்த்தால், ஜீவன்களுக்கு இல்லாத சுபாவமுள்ளவனாக இருக்கின்றான்.
நாய்க்காகிலும் நன்றி விசுவாசமென்பது மிகவும் உண்டு. நன்றியைக் கொஞ்சம் கூட மறக்காமல் நாய் தன் எஜமானனிடம் விசுவாசத்துடன் இருக்கும் தன் எஜமானன் தன்னை விட்டு வெளியே சென்று விட்டு வந்த பிறகும் தன் நன்றியின் அறிகுறியாக எட்டித்தாவி வாலை ஆட்டிக் கொண்டு துள்ளிக்குதித்து, மேலே விழுந்து விளையாடுவதற்கு முயற்சிக்கும்.
மனிதனோ நாயைப் போல நன்றி விசுவாசம் உடையவன் அல்லன்.
நன்றி காட்டுவது என்பது அரிதிலும் அரிது. அதிலும் பிள்ளைகளை நாம் இப்பொழுது நிறைய படிக்க வைக்கின்றோம்.
ஒரு சிறிய உதாரணம்.. ஒருவர் பெரிய வீடு கட்டினார். வீடு திறப்பு விழாவிற்கான அழைப்பிதழ்களை எல்லாம் கொடுத்தார். பெரிய உத்தியோகத்தில் இருக்கிறவர். தன்னுடைய நண்பர்கள் எல்லாம் வந்தார்கள். வீட்டிற்குப் பெயரோ அன்னை இல்லம்.....!
அவருடைய வீட்டிற்கே அன்னை இல்லம் என்று பெயர் வைத்திருந்தார். எல்லோரும் அந்த அழைப்பிதழைப் பார்த்து அவருடைய புதுமனை விழாவிற்கு வந்திருந்தார்கள்.
அந்த இல்லத்துக்காரர் வந்திருந்த முக்கிய பிரமுகர்களுக்கு ஒவ்வொரு அறையாகக் காட்டினார். வீடு சிறப்பாகக் கட்டப்பட்டிருக்கிறது என்று பாராட்டினார்கள். அதிலே ஒருவர் கேட்டார். அன்னை இல்லம் என்று நீங்கள் பெயர் வைத்திருக்கின்றீர்களே, இவ்வளவு பெரிய பாசத்தை தாய் மீது நீங்கள் வைத்திருக்கின்றீர்கள். அதனால் தான் அன்னை இல்லம் என்றே பெயர் சூட்டியிருக்கின்றீர்கள்.
ஆகவே, உங்களுடைய தாயாரைப் பார்க்க வேண்டும் என்று கேட்டபொழுது,அந்த புதிய இல்லத்துக்காரர், அவர் முதியோர் இல்லத்தில் இருக்கிறார் என்று பதில் சொன்னார்.
இது கற்பனை அல்ல. வாழ்க்கை ஒரு பக்கம் உயர்ந்திருக்கிறது. சம்பளங்கள் கை நிறைய கிடைக்கிறது. பணம் இருக்கிறது. ஆனால் தன்னுடைய தாயிடத்திலே, பெற்றோரிடத்திலே நன்றி காட்டக் கூடிய பாச உணர்ச்சி பல குடும்பங்களிலே இருக்கிறதா? என்று பார்க்கின்ற நேரத்திலே நீங்கள் எத்தனையோ உதவிகளை செய்கிறீர்கள். இடையிடையே அதை நீங்கள் வலியுறுத்த வேண்டும்.
ஏனென்றால் நோய்களிலே பெரிய நோய் அறியாமை மற்றும் இது போன்ற சிக்கல்களான நிலைகள்தாம். ஆகவே அதைச் சொல்லுகிறார்கள்.
நாயைத் தன் எஜமானன் எவ்வளவு அடித்தாலும், உதைத்தாலும் அதே நாய் தன்னுடைய எஜமானனிடம் அன்பு காட்டுவதைக் காணலாம். சோறு போடாவிட்டாலும், நாய் விசுவாசம் காட்டும்.
ஆனால், மனிதன் அப்படி அல்லன். மனிதனுடைய இயல்பு தன்மை என்ன?
மனிதன் அப்படி அல்ல. என்ன நன்மை அடைந்தாலும் ஒரு தீமை நேர்ந்துவிட்டாலும் முன்பு அடைந்த நன்மைகளை மறந்து தீமையை மட்டும் எடுத்துக்கொள்வான்.
நாம் எத்தனை நண்பர்களைப் பார்க்கின்றோம். எத்தனையோ உதவிகளைத் தொடர்ந்து செய்திருப்பீர்கள். ஒரே ஒரு உதவியை நீங்கள் மறுத்தீர்கள் என்று சொன்னவுடனே பல உதவிகள் செய்தது அவருக்கு நினைவுக்கு வராது. எட்டாவது உதவியை நீங்கள் செய்யவில்லையே அதை மட்டும் தான் சொல்லிச் சொல்லிக் காட்டக் கூடிய, சுட்டிக்காட்டக்
கூடிய உணர்வோடு இருப்பார்கள்.
எனவே, மனிதனுக்கு சகலமும் சுய நலம். வியாபாரமுறை.
மனிதனுக்கு துரோகம் என்பது இயல்பு என்ற நிலையிலே இப்படி இருக்கிறார்கள்.
பூமிக்கு மேல் மைல் கணக்கில் தூரத்தில் பறக்கும் பருந்து பூமியில் கிடக்கும் சிறிய வஸ்துகளை அது கண்டுபிடித்து விடுகிறது.
கரும்பை பயிர் செய்ய யானைக்குத் தெரியாது
நம்முடைய கண் பருந்தின் கண்களைவிட பெரிது நம் கண் உருவத்தில் பெரிதே தவிர, பறவைக்குள்ள கண்ணின் சக்தியைவிட அதிகம் சக்தி கொண்டதில்லை.
பருந்தின் கண்களுக்கு தனி சக்தி இல்லை. மனிதன் கரும்பை உற்பத்தி செய்கிறான். ஆனால் யானைக்குக் கரும்பைத் தின்பதற்குத் தான் தெரியும். கரும்பை பயிர் செய்யத் தெரியாது.
எவ்வளவு அழகான கருத்து என்பதை நன்றாக நினைத்துப் பாருங்கள்.
மனிதன் பிறருக்குத் தொண்டு செய்து வாழ்வதையே குறியாகக் கொண்டுள்ளான். ஆனால் இந்தக் குறிக்கோள் மற்ற ஜீவனுக்கு இல்லை. எனவே தொண்டு செய்து அதன் விளைவாக மனிதன் புகழ் ஈட்டுவதிலே அவனுக்குத் தனி சிறப்பாகும். தொண்டின் மூலமாக கிடைக்கின்ற பெருமை தான்
அதைப் பார்க்கும் பொழுதுதான் உங்களுடைய தொண்டின் சிறப்புத் தெரிகிறது.இவ்வளவு பேர் சேர்ந்து அற்புதமான ஒரு புதிய சமுதாயத்தை இதற்கு விதிவிலக்கான சமுதாயத்தை உருவாக்குவதற்கு நாம் திட சித்தத்தோடு உறுதி எடுத்துக்கொண்டு நாம் தொண்டாற்ற வேண்டும்.
மருத்துவம்
மருத்துவ டிப்ஸ்
அரைக் கீரையை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வர, உடல் வலிமை பெறும்; தலைமுடியும் நன்கு வளரும்.
அகத்திக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர, குடல் புண்கள் குணமாகும். வாரம் ஒரு முறை உண்பதால், வயிற்றில் காணப்படும் புழுக்கள் அழியும்.
பசலை மற்றும்.....
பசலை மற்றும் வெந்தயக் கீரையை சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் குறையும்.
புளிச்சக் கீரையில் அதிக இரும்பு சத்து இருப்பதால் உடல் பலவீனமானவர்கள் உண்டு வந்தால் உடல் பலம் பெறும்.
தூதுவளைக் கீரை சளிக்கு மருந்தாக அமையும், அதனை துவையல் செய்து சாப்பிடலாம்.
கறிவேப்பிலையை உணவு பதார்த்தத்தில் இருந்தாலே தூக்கி எறியும் பழக்கம் கொண்டவர்கள் இருக்கும் போது, பச்சை கறிவேப்பிலையை மென்று திண்ணலாம் என்கிறார்கள் ஆராய்ச்சி நிபுணர்கள்.
கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டு வந்தால் பரம்பரை நரை முடி பிரச்சினை ஏற்படாது.. கண்பார்வை குறைபாடும் ஏற்படாது.
கறிவேப்பிலையை அரைத்து விழுதாகவோ அல்லது சாறு எடுத்தோ உண்டு வந்தால் நுரையீரல், இதயம் மற்றும் ரத்தம் தொடர்பான நோய்களே நம்மை அண்டாது.
கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவும்.
கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.
நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம்
கறிவேப்பிலையை பறித்து பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
கறிவேப்பிலைக்கு இருக்கும் மருத்துவ குணங்களைப் படித்தால் இனி எப்போதும் கறிவேப்பிலையை தூக்கி எறிய மாட்டீர்கள்.
உடல் உஷ்ணமாக இருப்பவர்களும், உஷ்ணமான இடத்தில் வேலை செய்பவர்களுக்கும் கறிவேப்பிலை தான் உரிய மருந்தாகும்.
அதாவது, கைப்பிடி அளவு கறிவேப்பிலையை நன்கு அரைத்து அதன் சாற்றை, 100 கிராம் தேங்காய் எண்ணையில் சேர்த்து மிதமான சூட்டில் நன்கு காய்ச்சவும்.
இந்த எண்ணெயை ஆற வைத்து ஒரு பாட்டிலில் ஊற்றி மூடி வைக்கவும். இந்த எண்ணெயைத் தொடர்ந்து தலைக்குத் தடவி வர உடல் உஷ்ணமா அப்படி என்றால் என்ன என்று கேட்பீர்கள்.
இப்படி செய்து வந்தால் இளம் வயதில் நரை வராது. கண் பார்வையின் சக்தி அதிகப்படும்.
செய்து பாருங்கள்.. நல்ல பலன் கிட்டும்.
வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
பொதுவாக பாகற்காய் உடலுக்கு உஷ்ணத்தைக் கொடுக்கும். பாகற்காயில் இரண்டு வகைகள் உண்டு. பொடியாக இருக்கும் பாகற்காயை மிதி பாகற்காய் என்றும், நன்கு பெரிதாக நீளமாக இருப்பதை கொம்பு பாகற்காய் என்றும் அழைக்கிறார்கள்.
பாகற்காயை நாம் எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். புளியுடன் சேர்த்து பாகற்காயை சமைப்பது சிறந்தது என்று சொல்லப்படுகிறது.
நீரிழிவு வியாதி உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அவர்கள் மட்டுமல்லாமல் ஜூரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றில் பூச்சித் தொல்லை இருப்பவர்களும் பாகற்காயை உண்ணலாம்.
வாயுத் தொல்லை என்பது பொதுவாக 35 வயதைக் கடந்த அனைத்து தரப்பினருக்குமே இருக்கக்கூடிய ஒரு இன்னல் எனலாம்.
ஒரு சிலருக்கு சிறிய அளவு உருளைக்கிழங்கை சாப்பிட்டாலே இந்த வாயுத் தொல்லை ஏற்படும். வேறு சிலருக்கு பருப்பு மற்றும் அவற்றில் செய்யப்படும் பதார்த்தங்களினால் வாயுத் தொந்தரவு உருவாகும்.
வாயுத்தொல்லைக்கு ஏற்ற அருமருந்து வெள்ளைப் பூண்டு.
முடிந்தால் அப்படிய 4 பல் பூண்டை தோலுரித்து சாப்பிடலாம். அல்லது அடுப்பில் வைத்து கருகும் அளவுக்கு சுட்டு, பின்னர் அதன் தோலை உரித்து பாலுடன் சேர்த்து உண்ணலாம்.
வாயுத்தொல்லை இருப்பவர்கள் பூண்டு சாப்பிட்ட உடனேயே அதில் இருந்து விடுபட்டதை உணரமுடியும். வேண்டுமானால் பூண்டு காரம் போக, மோர் அருந்தலாம்.
பொதுவாக உணவுக்குப் பயன்படுத்தும் குழம்பில் வெள்ளைப்பூண்டை அன்றாடம் சேர்த்துக் கொள்வது சிறந்தது.
பெண்கள் குழந்தை பெற்ற பின் அதிகளவு சோர்வு இருக்கும் என்பதால், வாரத்திற்கு 2 அல்லது 3நாட்கள் பூண்டு குழம்பை சாதத்துடன் கொடுப்பார்கள். தவிர தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு பூண்டு மிகவும் சிறந்ததாகும்.
எனவே பூண்டை அன்றாடம் சிறிதளவாவது சேர்த்துக் கொள்ளப் பாருங்கள்.
மஞ்சள் ஒரு கிருமி நாசினி
மஞ்சளையும் வேப்ப இலைகளையும் அரைத்து அம்மை நோய் வந்தவர்களுக்குத் தேய்த்து தலைக்கு நீராட்டப் பயன்படுத்துவார்கள்.
அம்மை நோய் வந்தவர்களைச் சுற்றி மஞ்சள் நீரைத் தெளிப்பதால் நோய் பரவாமல் தடுக்கலாம்.
மது வகைகள், பழச்சாறு போன்றவற்றிலும் மஞ்சள் சேர்க்கப்படுகிறது. இது பசியைத் தூண்டுவதோடு செரிமானத்திற்கும் உதவும் மருத்துவ குணம் கொண்டது.
மேலும் உடலுரம் தரும். ரத்தத்தை சுத்தப்படுத்தும், குடற்பூச்சிகளைக் கொல்லும். நீரிழிவு மற்றும் தொழுநோயைக் கட்டுப்படுத்திக் குறைத்திடும். சரும நோய்களைப் போக்கக்கூடிய சக்தி மஞ்சளுக்கு அதிகம் உண்டு.
மஞ்சள் கரிப்பொடியை பற்பொடியாய் உபயோகித்தால் பல் நோய்கள் குணமாகும்.
மஞ்சளின் சத்து எண்ணெய் உட்கொண்டால் கல்லீரலில் பித்தநீர் சுரப் பதையும் கட்டியாவதையும் குணப்படுத்திவிடும்.
கலப்படமில்லாமல் மஞ்சள் தூள் கடைகளில் கிடைப்பது அரிதுதான். சுத்தமான விரலி மஞ்சளை வாங்கி வீட்டிலோ, மெஷினிலோ அரைத்து வைத்துப் பயன்படுத்துங்கள்
அன்னாசி
சீரண உறுப்புகளை வலுப்படுத்தும் அன்னாசி
மஞ்சல் காமாலையை விரைவில் குணப்படுத்தும் ஆற்றல் அன்னாசி சாறுக்கு உண்டு. இரத்தமிழந்து பலவீனமாக இருப்பவர்களுக்கு அன்னாசி மிகசிறந்த மருந்து. பித்த சம்பந்தமான கோளாறுகள் காரணமாக காலை வாந்தி, கிறுகிறுப்பு, பசி மந்தம் போன்றவற்றை நீக்குவதில் அன்னாசி சூரன்.
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாக அன்னாசி உதவும். ஒரு பக்கத் தலைவலி, இருபக்கத் தலைவலி கண், காது, பல், தொண்டை சம்பந்தமான அனைத்து நோய்களையும். வாய்ப்புண், மூலைக்கோளாறு, ஞாபக சக்தி குறைவு போன்றவை தேனும் அன்னாசிப்ழமும் சேர்த்து செய்யப்படும் அன்னாசிப்பழ சர்பத்தை 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் விரைவில் குணம் தெரியும்.
அன்னாசிப்பழம் அதிக சூடு, சீதபேதி, வயிற்றுவலி ஏற்படுத்தும் எனபது மூட நம்பிக்கை, மாம்பழம், ஆரஞ்சு பழங்களில் உள்ள அதே 14 கலோரி தான் அன்னாசியிலும் உள்ளது இது நாம் தினமும் பயன்படுத்தும் புலியின் அளவான 82 கலோரியைவிட மிகக்குறைவு. இரத்தத்தைச் சுத்தி செய்வது, சீரண உறுப்புகளை வலுப்படுத்துவது, மலக்குடலைச் சுத்தப்படுத்துவது அன்னாசியின் சிறப்பு.


